என் மலர்
நீங்கள் தேடியது "liquor bottles"
- கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
- இதில் பேசிய எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா, ஆண்களுக்கு 2 மதுபாட்டில் கொடுக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபையில் சமீபத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில் கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா பேசியதாவது:
கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை 3 முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் வரியை மீண்டும் உயர்த்தினால் எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?
மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது.
மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம்.
அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்? என தெரிவித்தார்.
கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.
- களக்காடு அருகே உள்ள வி.கே.நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது
- நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 64 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வி.கே.நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணி புரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவில் பணி முடிந்ததும் 3 பேரும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 64 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரத்து 600 ஆகும்.
இதுபற்றி கடையின் மேற்பார்வையாளர் சுத்தமல்லியை சேர்ந்த முரளி (வயது 52) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் தேவிப்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர்.
- அங்குள்ள சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது.
நெல்லை:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் தேவிப்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது. அவரை விசாரித்தபோது, ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் இந்திரா காலனியை சேர்ந்த தவம்(வயது 46) என்பதும், மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- கீழக்கரையில் கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை நடக்கிறது.
- ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை
கீழக்கரையில் அரசு மதுபான கடைகள் இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கீழக்கரையில் மது விற்பனை களைகட்டி நடந்து வருகிறது.
கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை போல் அமைத்து கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பனை நடக்கிறது.
மேலும் பெண்கள் நடந்து செல்லும் பல்வேறு பாதைகளில் மது பிரியர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர். இதனால் கீழக்கரையில் ரோந்து பணியில் போலீசார் உள்ளனரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் உறக்கத்தில் உள்ளனர். மேலும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து தலைமை இடத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தும் கோர்ட், வழக்கு, விசாரணைக்கு பயந்து எவ்வித புகாரும் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்.
இதுசட்ட விரோத மான மதுபான விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
- மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த மருங்குளம் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தஞ்சை அடுத்த ராவுசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 26) என்பதும், மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையிட்டனர்.
- சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை போலீசார் வழி மறித்தனர்.
தஞ்சாவூா்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு பொலிரோ வேனை போலீசார் வழி மறித்தனர்.
இதனைப்பார்த்த அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.
அதில் 2400 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வாகனத்தில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நிரவி குமரன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி (வயது 22), காரைக்கால் இலத்தியூர் முதலியார் தெருவை சேர்ந்த ஜெயபால் (40), மேல பொன்னேரி மேட்டுத் தெருவை சேர்ந்த ராஜப்பா (32) ஆகிய 3 பேர் என்பதும், காரைக்கால் நிரவி பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த போலி மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகணபதி, ஜெயபால், ராஜப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 2400 மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரைக்கால் பகுதி போலீசாரிடம் தகவல் தெரிவித்து அங்கு உள்ள போலி மதுபான ஆலையம் மூட வைத்தனர்.
தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டுக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். உடனே போலீசாரை கண்டவுடன் வேனில் வந்தவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர்.
உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து வாகனத்தில் சோதனை செய்தனர். சோதனையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதுவை மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக புதுவை மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- மவுனகுருசாமி:விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மண் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
- இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலி விதைகளைத் தடுக்க வேண்டும்.
உடுமலை:
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடுமலை ஆர்டிஓ அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.உடுமலை தாசில்தார் கண்ணாமணி,ஆர்டிஓ. நேர்முக உதவியாளர் ஜலஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
மவுனகுருசாமி:விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மண் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இதனைத் தடுக்க வேண்டும்.திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கதையாக உள்ளது.இதற்கு பராமரிப்புப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் சரியாக பணி செய்யாதது காரணமா என்பது குறித்து ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.சின்னாருக்கு மேல் வனப்பகுதிக்குள் அரசியல் உள்நோக்கத்தோடு சில வேலைகள் நடைபெறுகிறது.அதனைத் தடுக்க வேண்டும்.
பெரியசாமி:மசக்கவுண்டன் புதூர் அருகில் தென்னை நார் தொழிற்சாலை அமைப்பதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.கோர்ட் உத்தரவை மதிக்காமல் மின் வாரியம் மின் இணைப்பு வழங்கியுள்ளது.உடனடியாக மின் துண்டிப்பு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் மின் கம்பியில் சுருக்கு போட்டு தூங்குவோம்.தரமற்ற மக்காச்சோள விதைகளால் ஏக்கருக்கு 21 மூட்டை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலி விதைகளைத் தடுக்க வேண்டும்.
ராமசாமி:காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்களால் பெருமளவு இழப்பு ஏற்படுகிறது.ஆனால் காட்டுப்பன்றியால் ஏற்பட்ட சேதத்துக்கு மட்டுமே வனத்துறை இழப்பீடு வழங்குகிறது.காலம் தவறி ஜனவரி மாதம் பூக்கும் பருவத்தில் பெய்த மழையால் நெல் சாகுபடியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
பாலதண்டபாணி:மருள்பட்டி பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளது.அதனை மீட்டுத்தர வேண்டும்.104 ஏக்கர் பரப்பளவில் உள்ள மருள்பட்டி குளத்திற்கு நீர் வரத்து பெறக்கூடிய நீர்வழித்தடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும்.கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு ஏக்கர் மக்காசோளத்தட்டை ரூ .5 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.ஆனால் உடுமலையில் கொழுமம் சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில போலீசார் அந்த வாகனங்களை நிறுத்தி ரூ .100 வசூல் செய்கின்றனர்.மேலும் காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்துகின்றனர்.இதனால் ஏற்படும் காலதாமதத்தால் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே விவசாய வாகனங்களை தடுத்து நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.அமராவதி சர்க்கரை ஆலையில் அரவைக்காக 2 ஆயிரத்து 650 ஏக்கர் கரும்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் மார்ச் மாதம் சரியான படி அரவை துவங்குமா என்ற சந்தேகம் உள்ளது.அதனை தெளிவுபடுத்த வேண்டும்.
மதுசூதனன்:அரசு மூலம் உற்பத்தி செய்யப்படும் அசோஸ்பைரில்லம்,பாஸ்போ பாக்டீரியா போன்றவை வேளாண்மைத்துறை மூலம் 50 சதவீதம்மானியத்தில் வழங்கப்படுகிறது.அதே நேரத்தில் தனியார் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதே பொருட்கள் தோட்டக்கலைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.மானியம் என்ற பெயரில் வெளிச்சந்தையை விட அதிக விலைக்கு இனக்கவர்ச்சிப்பொறி,கடப்பாரை,மண்வெட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.பயன்படுத்த முடியாத பொருட்கள் வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை ஒருங்கிணைத்து விரிவான கூட்டம் நடத்த வேண்டும்.உரக்கடைகளில் யூரியா கேட்டால் நானோ யூரியா வாங்கச் சொல்கிறார்கள்.இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.மக்காச்சோளத்துக்கு செஸ் வரி விதிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளத்துக்கு 1 சதவீதம் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது.மேலும் மக்காச்சோளத்தை தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்துக்கு ரகசிய விற்பனை செய்வதற்குப் பதில் பொது ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்.குமரலிங்கத்தில் கணவர் தேனீ கொட்டி இறந்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு விதவை சான்று,முதல் திருமண சான்று வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலரால் கடும் அலைக்கழிப்பு ஏற்பட்டுள்ளது.புரோக்கரைப் பார்த்தால் தான் காரியம் நடக்கும் என்ற நிலை உள்ளது.
சேனாதிபதி:கோவில் நிலங்கள் பல இடங்களில் தனி நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக செல்லப்பம்பாளையம் கரட்டுப்பெருமாள் கோவிலுக்குச்சொந்தமான 25 ஏக்கர் நிலம்தனி நபருக்கு பட்டா செய்யப்பட்டுள்ளது.
கோபால்: கலெக்டர் உத்தரவை மீறி விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு பாண்ட் பேப்பரில் ஒப்பந்தம் கேட்கிறார்கள்.விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதை எளிமைப்படுத்தாமல் அலைக்கழிக்கப்படும் நிலையில் வணிக நோக்கத்துக்காக எடுப்பவர்கள் தங்கு தடையில்லாமல் எளிதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்காரம்: மது அருந்துபவர்கள் பிஏபி. வாய்க்கால்,இட்டேரி போன்ற இடங்களில் உடைத்து வீசுவதால் விவசாயிகளும் கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எரிசனம்பட்டி மின்வாரிய அலுவலகம் 2 கிமீ தூரம் தள்ளி இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.எனவே பழைய இடத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெகதீஸ்ஜே: ஜே. என். பாளையம் முதல் பாலாறுதுறை வரை உள்ள சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது.இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது.தேங்காய் உரிக்கும் எந்திரத்துக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் கூடுதல் மானியம் வழங்க வேண்டும்.
ஸ்ரீதர்:குடிமங்கலம் ஒன்றியத்தில் அரசு சிமெண்டுக்கு பணம் கட்டினால் வருவதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகிறது.தற்போது பதிவு செய்வதற்கே மறுக்கிறார்கள்.பெதப்பம்பட்டி நால் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
- 180 மி.லி. கொண்ட 96 மது பாட்டில்கள் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது.
- காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் பெருங்கடம்பனூர் - சிக்கல் சாலையில் உள்ள குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் காரைக்கால் பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட வெளி மாநில 90மிலி கொண்ட 1920 மது பாட்டில்களும், 180மிலி கொண்ட96 மது பாட்டில்களும் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயமும் இருந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்த நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த தென்னரசன் (வயது 57), வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெரு காளியப்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த யாசர் அரபாத் (35), காரைக்கால், தருமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் (47), காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த கருணாகரன் (43) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
- சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
- வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் கமலாநகர் பகுதியில் உள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மதுபானங்கள் அதிக அளவில் பதுக்கி வைக்க ப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் சம்மந்தப் பட்ட வீட்டினை ரகசியமாக கண்கா ணித்தனர்.
அப்போது வெளி நபர்கள் அந்த வீட்டிற்கு வந்து செல்வது உறுதியானது. இதையடுத்து வீட்டிற்குள் நுழைந்த போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் வெளிமாநில மதுபானங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து மதுபானங் களை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் சட்ட விரோதமாக மதுவிற்ற முனிசிபல்காலனி ஜான்சி நகரை சேர்ந்த சதீஸ்குமார் (32), கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த முரளிதரன் (27) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- சப் -இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- மது பாட்டில்கள் கடத்திய சண்முகராஜ், சவுந்தர பாண்டியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
சங்கரன்கோவிலை அடுத்த அய்யாபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்களை சோதனை செய்ததில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 100 மது பாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து களப்பாக்குளத்தை சேர்ந்த சண்முகராஜ் (வயது 29), சவுந்தர பாண்டியன் (35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மருந்து கொத்தலரோட்டை சேர்ந்த விஜயகாந்த், மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த பெருமாயி என்பது தெரியவந்தது.
இதன் பின்னர் தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.