என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loan"

    • படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கும்.

    பெரம்பலூர்

    தமிழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் உள்ள கடன் திட்டங்களுக்கு வங்கியின் மூலம் கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8925533976, 8925533977 என்ற செல்போன் எண்களிலோ அல்லது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பயனாளிகளுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது
    • மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின்படி வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில், அரசு திட்டங்களுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை, ஆட்சியரகத்தில் கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இம்முகாமில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறு தொழில் மானிய கடன்கள், மகளிர் சுயஉதவி குழு கடன்கள், கல்விக்கடன்கள், வாகன கடன்கள், சாலையோர வியாபாரிகளுக்கான கடன்கள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குதல் திட்டத்திற்கான கடன்கள், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட கடன்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கான கடன்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை கடன்கள், ஊரக வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நபர்களுக்கான தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 47 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 40 நபர்களுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான காசோலைகளையும் என ஆகமொத்தம் ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இம்முகாம் மூலமாக வங்கி கடன் இணைப்புகளை பெற்ற அனைத்து நபர்களும் உரிய முறையில் முதலீடு செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

    • அரியலூர் மாவட்டத்தில் 12,768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது
    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு வங்கி கடன் ஒப்புதல்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியோடு மற்ற வங்கிகளும் இணைந்து முதல் 3 வாரத்தில் 12 ஆயிரத்து 768 பயனாளிகளுக்கு ரூ.150.58 கோடி மதிப்பில் முன்னூரிமை துறை கடனாக வழங்கி உள்ளது.

    இதில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் 12 ஆயிரத்து 498 பயனாளிகளுக்கு ரூ.137.54 கோடியும், மாவட்ட தொழில் மையம் திட்டங்களில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.34.06 லட்சமும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.35.54 லட்சமும் மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 1 பயனாளிக்கு ரூ.10 லட்சமும், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக திட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ.54.38 லட்சமும், 91 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.13 கோடியும், பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி திட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சமும், முத்ரா திட்டத்தில் 57 பயனாளிகளுக்கு ரூ.77.15 லட்சமும், 22 பயனாளிகளுக்கு கல்வி கடன் ரூ.95 லட்சமும், 18 பயனாளிகளுக்கு வீட்டுக்கடன் ரூ.3.69 கோடியும் மற்றும் இதர கடன்களாக 23 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடியும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் பரிமளா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லயனல் பெனடிக்ட், ரிசர்வ் வங்கி மாவட்ட முன்னோடி அலுவலர் வெங்கடேசன், நபார்டு மாவட்ட வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வெங்கடேசன் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்களும் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • 16 மகளிர் குழுவினருக்கு ரூ.15.60 லட்சத்துக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் இரும்புதலை அருகே தென்னஞ்சோலை கிராமத்தில் பகுதிநேர பொதுவிநியோக அங்காடி தொடக்கவிழா நடைபெற்றது.

    அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றியகவுன்சிலர் வள்ளிவிவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இரும்புதலை ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு பகுதிநேர அங்காடியை திறந்து வைத்து அத்தியாவசிய பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இரும்புதலை தொடக்க வேளாண் வங்கி சார்பில் 16 மகளிர் குழுவினர்க்கு ரூ.15.60 லட்சத்துக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் (பொதுவிநியோக திட்டம்) ஆனந்தகுமார், வட்ட வழங்கு அலுவலர் சிவக்குமார், இரும்புதலை தொடக்க வேளாண் வங்கி செயலர் சாமிநாதன், மாவட்ட கவுன்சிலர் ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணவேணி கருப்பையன், கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமானுல்லா, ஊராட்சி மன்ற துணைதலைவர் மங்கையர்கரசி, ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள். கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர்.
    • கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது37). பனியன் நிட்டிங் நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில்தனக்கு தெரிந்த கணபதிபாளையத்தை சேர்ந்த ராஜா (44),திண்டு க்கல்லை சேர்ந்த பாபு (53) ஆகியோர் தொழில் நிமித்தமாக ரூ.5 கோடி குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆவண செலவுக்காக ரூ.20 லட்சம் கேட்டனர். நான் ரூ.19 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம்அனுப்பி வைத்தேன். கடன் கிடைக்கா விட்டால் ஆவணசெ லவுக்கான பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்கள்.அதன்பிறகு அவர்கள் கடன் தொகையை பெற்றுக்கொடுக்கவில்லை.

    நான் அனுப்பி வைத்த பணத்தையும் திருப்பி க்கொடுக்காமல் ஏமாற்றி, எனக்கு கொலைமி ரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார். புகாரை பெற்ற போலீசார் ராஜா, பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது
    • கொரோனா காலத்தில் வேலையிழந்து நாடு திரும்பியோர்

    அரியலூர்:

    தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பின்னர் நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

    உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    திட்ட தொகையில் பொதுப்பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும்.

    அரசு மானியமாக திட்ட தொகையில் 25சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் சரி செய்யப்படும். கடன் வழங்கப்பட்ட பின், ஆறு மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையினை வங்கியில் செலுத்த ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையினை திரும்ப செலுத்த வேண்டும்.

    கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூர் என்ற விலாசத்தில் நேரிலோ அல்லது 8925533925, 8925533926 என்ற கைப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் வளர்மதி தகவல்

    ராணிப்பேட்டை:

    கோவிட்-19 (கொரோனா) பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்" என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.

    அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பரவலினால் 01.01.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழகம் திரும்பியவராக இருக்க வேண்டும், குறைந்தது 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,பொது பிரிவினருக்கு வயது 18 க்கு மேலாகவும் 45 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    சிறப்பு பிரிவினருக்கு (பெண்கள், SC, ST, BC, MBC, சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு) வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் ஆகவும் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சம் வரை திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும்.

    பயனாளர்கள் பங்காக பொது பிரிவு பயனாளர்கள் எனில் திட்ட தொகையில் 10 சதவிகிதம் மற்றும் பெண்கள், இடஒதுக்கீட்டு பிரிவினர் உள்ளட்ட சிறப்பு பிரிவினர் எனில் 5 சதவிகிதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். அரசு, திட்டத் தொகையில் 25 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டம், மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/meap என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தினை இரு நகல்களாக சமர்பிக்க வேண்டும்.

    எனவே, இந்த வாய்ப்பினை வெளிநாடுகளிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், தொழில் துவங்க ஆர்வமும் கொண்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வளர்மதி அழைப்பு விடுத்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.5, தேவராஜ் நகர்,ராணிப்பேட்டை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது கீழ் கண்ட தொலைபேசி எண்கள் 04172-270111/270222. மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    • ஆவின் பாலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.
    • ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடனுதவி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்களை கொள்மு தல் செய்து, ஆவின் பாலகம் அமைத்து வரு வாய் ஈட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்ட த்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும்,18 முதல் 65 வயதுடையவராகவும், விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெறாதவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பாக இணையதள முகவரி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என இதில் அவர் இவ்வாறு கூறினார்.

    • கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம், ஐதரபாத்தில் உள்ள முசி ஆறு அருகே கடந்த 17ம் தேதி அன்று பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த உள்ளூர் குடிமைப் பணியாளர்கள் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியையும், உடல் பாகங்களையும் கண்டுபிடிக்க 8 போலீஸ் குழுக்களை அமைத்தனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில், ஐதரபாத்தை சேர்ந்த 48 வயது நபர் 55 வயதான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததும், ரூ.7 லட்சம் கடனை கேட்டதற்காக பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (தென் கிழக்கு மண்டலம்) சி.எச்.ரூபேஷ் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட நபர், உள்ளூர் நிதி முகவராக இருந்த 55 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் செலுத்த வேண்டிய ரூ.7 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு அந்த பெண் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர் பெண்ணை கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றுள்ளார்.

    பின்னர், அந்த நபர் பெண்ணின் தலையை துண்டித்து, உடற்பகுதியில் இருந்து கால்கள் மற்றும் கைகள் மற்றும் உறுப்புகளை வெட்டி, தனது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வந்துள்ளார்.

    பின்னர், மே 15ம் தேதி பெண்ணின் தலையை கருப்பு கவரில் வைத்து முசி ஆறு கரை அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார்.

    மேலும், அந்த நபர் தான் தங்கியிருந்த பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்" என்றார்.

    • சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப் படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்க ளுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞ ர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00, 000 மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு (ஆண்,பெண்) 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000, திட்டம் 2-ன் கீழ் ஆண்க ளுக்கு 8 சதவீதம், பெண்க ளுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர் களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் 10 நபர் முதல் 20 நபர் வரை ஒருவருக்கு ரூ.1,00,000 கடன் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் 10 நபர் முதல் 20 நபர் வரை ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில் நுட்பக்கல்வி பயில்பவர் களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் 3 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.20,00 ,000 வரையிலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்ப டுகிறது.

    எனவே மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மை யினர்கள் கடன் விண்ணப்பங்களை கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானசான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்டஅறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்கு வரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆணவங்கள் சமர்ப்பி க்கப்பட வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பித்து விண்ணப்பி க்கலாம்.

    மேற்குறிப்பிட்ட திட்டத்தி ன் கீழ் அனைத்து சிறு பான்மை ஒயின மக்கள் கடனுதவி பெற்று பயனடை யுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • டாப்செட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    அரியலூர்:

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் தனி நபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்களுக்கான நுண் கடன், ஆண்களுக்கான நுண் கடன் மற்றும் கறவை மாட்டு கடன் ஆகிய பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:-

    விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது காலக்கடன்/தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 6 சதவீதம் முதல் 8 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 லட்சமும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.

    நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடவர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டிற்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 லட்சமும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தில் ஆடவர், மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. டாப்செட்கோ திட்டத்தில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு கிளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். மேற்படி திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் கடன் பெற்று பயன்பெறலாம், என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×