என் மலர்
நீங்கள் தேடியது "Mahashivaratri"
- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றப்பட்டது.
- புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகாசிவராத்திரி விழா விமரிசை யாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா நாளை (11-ந்தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நாளை அதிகாலையில் 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் அபிஷேகங்கள் ராமநாதசாமிக்கு நடை பெறும். பின்னர் காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் ராமநாதசாமி சன்னதிக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடி யேற்றப்படும்.
12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மாசி மகா சிவராத்திரியில் தினசரி ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை வழிபாடுகள் நடைபெறும்.
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் கோவிலின் உபகோவிலான கெந்தமாதன பர்வத வர்த்தினி அமைந்துள்ள மண்டகப் படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
மகாசிவராத்திரியன்று (18-ந்தேதி) இரவு வெள்ளி ரதம் புறப்பாடும், 19-ந் தேதி தேரோட்டமும் நடை பெறும்.
20-ந் தேதி அமாவாசை யை முன்னிட்டு ராமநாத சாமி-பர்வத வர்த்தினி அம்மன் உள்பட பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து புறப்படாகி காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
- மகாசிவராத்திரியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
- கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோச மங்கை மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீபரதகலா அகாடமி இணைந்து 5-வது ஆண்டு கலை விழா நாட்டியாஞ்சலி நடந்தது.
சிவராத்திரி நாட்டி யாஞ்சலி கலை நிகழ்ச்சி களை ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் ஆா்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியாா் தொடங்கி வைத்தார். இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை நாட்டியாஞ்சலி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கலைஞா்கள் பரதநாட்டியம், நாதசங்கமம், குச்சுப்புடி நடனம், சிவபூஜை உள்ளிட்ட பொருள்களில் பரதநாட்டியம் ஆடினா். பக்தர்கள் விடிய,விடிய விழித்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய பால், பன்னீா், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருள்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் விடிய, விடிய மகா சிவராத்திரி விழா பூஜைகள் நடந்தது. மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, வாகனங்களில் குலதெய்வ வழிபாட்டுக்காக ராமநாதபுரம் கிராமப் பகுதிகளுக்கு பக்தர்கள் வந்தனர். இதனால் கிராம பகுதிகளில் சிவராத்திரி விழா களைகட்டியது.
- பழம்பெருமை வாய்ந்தது கோப்பினேஷ்வர் திருக்கோவில்.
- 5 அடி உயரம், 5 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கம்.
கோவில் தோற்றம்
மும்பையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நகரம், தானே. மும்பையின் நன்கு வளர்ச்சி அடைந்த புறநகர் பகுதிகளில் ஒன்றாகவும் இந்த நகரம் திகழ்கிறது. இங்கே சுற்றிலும் கடைகளும், காய்கறி மண்டிகளும் சூழ்ந்த ஒரு நெருக்கடியான வீதியில் அமைந்திருக்கிறது, பழம்பெருமை வாய்ந்த கோப்பினேஷ்வர் திருக்கோவில்.
கி.பி. 810-ம் ஆண்டு முதல் 1240-ம் ஆண்டு வரை, தானே பகுதியை ஆட்சி செய்த சில்ஹாரா வம்ச அரசர்கள், இந்தக் கோவிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள், சிறந்த சிவ பக்தர்களாகவும் இருந்துள்ளனர். கி.பி. 1760-ம் ஆண்டு மராட்டிய மன்னர் சர் சுபேதார் ராமோஜி மகாதேவ் என்பவர், இந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்து கட்டியிருக்கிறார். அதன்பின்னர் 1879-ம் ஆண்டு பொதுமக்களால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
சந்தை வீதியில் நின்று பார்த்தால் இந்த ஆலயத்தை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் ஆலயத்தின் நுழைவு வாசல், மிகவும் குறுகலான தலைவாசல் ஆகியவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளது. சாதாரணமாக அந்த வீதியில் செல்லும்போது, அதுவும் ஒரு கடை என்பது போல் கடந்து சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. நன்றாக உற்று நோக்கும் போதுதான், அது ஒரு ஆலயம் என்பதையே நாம் உணர முடியும்.
ஆனால் நுழைவுவாசலைக் கடந்து உள்ளே சென்றால், அந்த ஆலயத்தின் பிரமாண்டமே வேறு விதமாக நம்மை வியக்க வைக்கும். அந்த அளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் ஆலயங்களில் ஒன்றாக இந்த கோப்பினேஷ்வர் கோவில் திகழ்கிறது.
கோவிலுக்குள் நுழைந்ததும் மிகப்பெரிய நந்தி நம்மை வரவேற்கிறது. அதை வணங்கிச் சென்றால், மகா மண்டபத்தை அடையலாம். ஆலயத்தில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளின் போதும், இந்த மண்டபத்தில்தான் சொற்பொழிகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இந்த மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள சில படிகளை இறங்கிச் சென்றால், இத்தல இறைவனான கோப்பினேஷ்வர், சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்தி 5 அடி உயரம், 5 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கமாகும். கோவில் வளாகத்தை ஒட்டி மசுண்டா ஏரி இருக்கிறது.
இந்த ஏரியில் இருந்து தானாகவே மேல் எழும்பி வந்த சிவலிங்கத்தைத்தான், இத்தல கருவறையில் சில்ஹாரா வம்ச அரசர்கள் பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்த சிவன் கோவில்களில் உள்ள லிங்கங்களில், இத்தல லிங்கமே பெரியது என்கிறார்கள்.
இந்த கோவில் வளாகத்தில் சிவன் சன்னிதி தவிர, இன்னும் பல சிறுசிறு சன்னிதிகளும் இருக்கின்றன. அவற்றில் காளிகாதேவி, ராமர், சீதளாதேவி, உத்தரேஷ்வர் (காசி விசுவநாதர்), காயத்ரி தேவி, மாருதி, பிரம்மதேவர், தத்தாத்ரேயா் ஆகியோர் தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளனர்.
இந்த ஆலயத்தில் `ஷ்ரவண சோம்வார்' என்று அழைக்கப்படும் ஆடி மாத திங்கட்கிழமைகள், அனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற பண்டிகைகள் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன.

மகா சிவராத்திரி விழாதான் இங்கு நடைபெறும் விழாக்களில் வெகு விமரிசையாக நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். அந்த தினத்தில் கோவில் வெகு அழகாக அலங்கரிக்கப்படும். மகாசிவராத்திரி தினத்தில், தானே நகரமே விழாக்கோலம் பூண்டு, தங்களின் காவல் தெய்வமான கோப்பினேஷ்வரை வழிபட்டு நிற்கிறது.
இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு, பகல் 12 மணி வரை பக்தர்கள் தங்களின் கைகளாலேயே பால் அபிஷேகம் செய்யலாம். அதோடு வில்வ இலைகளும், மலர்களும் தூவி வழிபடலாம். 12 மணிக்கு மேல் பால் அபிஷேகம் செய்ய அனுமதி கிடையாது. மனதில் எந்தக் கவலை இருந்தாலும், இத்தல இறைவனை வழிபட்டால் அதில் இருந்து விடுபடலாம் என்பது பக்கதர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
- உபவாசம் இருந்து இரவு முழுவதும் சிவ பூஜை செய்யலாம்.
- சிவாலயங்களுக்குச் சென்று சிவபூஜையை தரிசனம் செய்யலாம்.
சிவனின் ராத்திரி= சிவராத்திரி, சிவனுக்கான இரவு, ஆகவே, அன்று (8-ந்தேதி) சூரியன் மறையும் நேரம் முதல் மறுநாள் (9-ந்தேதி) சூரிய உதயம் வரையுள்ள காலமே மகா சிவராத்திரி காலம் எனப்படும். மகா சிவராத்திரி தினத்தன்று கோடி சூர்ய பிரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மகாலிங்கமாக முதன் முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம்.
* விண்ணும் மண்ணும் நிறைந்து ஜோதி ஒளிப்பிழம்பாக நின்ற சிவ பெருமானின் அடிமுடி காண முடியாமல் பிரம்மன் திகைத்த நாள்
* சிவபஞ்சாட்சர மகாமந்திர ஜபத்தை முறையாக குருவின் மூலம் உபதேசம் செய்து கொள்ள- சிவபஞ்சாட்சர மந்திரத்தை ஜபம் ஹோமம் செய்து சித்தி செய்ய மகா சிவராத்திரி தினம் சிறந்த நாள். மனிதராகப் பிறந்த அனைவரும் வருகிற சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
விரதம் என்பது 1. உபவாசம், (சாப்பிடாது இருத்தல்) 2. பூஜை, 3. ஜாகரணம் (தூங்காது இருத்தல்) ஆகிய மூன்று செயல்களுடன் கூடியது.
சிவராத்திரி அன்று உணவு உட்கொள்ளாமல் (சக்தியற்றவர்கள்) பால், பழம் முதலியவற்றை மட்டும் சாப்பிட்டு விட்டு) உபவாசம் இருப்பதாலும், முயற்சியுடன் பகலிலும், இரவிலும் துாங்காமல் கண்விழிப்பதாலும் சிவலிங்கத்தை பூஜை செய்வதாலும் அழிவற்ற, குறைவற்ற அனைத்து போகங்களையும் அனுபவிப்பதுடன் இறுதியில் சிவலோகமும் கிட்டும் என்பது ஐதீகம். ஆகவே வருகிற 8-ந் தேதி இயன்றவர்கள் உபவாசம் இருந்து இரவு முழுவதும் சிவ பூஜை செய்யலாம். அதன்பிறகு அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்ற அங்கு நடைபெறும் சிவபூஜையை தரிசனம் செய்யலாம்.
அன்று இரவு முழுவதும் தனது வீட்டு பூஜையறையில் அல்லது அருகில் உள்ள சிவன் கோவிலில் மண்ணாலான அகல் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு நெய்தீபம் (அகண்ட தீபமாக) ஏற்றி வைக்கலாம்.
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.
2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரை தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
3. ஓதிக்கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.
4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.
5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.
6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும்.
7. எருக்க மலர் மாலைகளை பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.
8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏந்தி அவன் புகழைப் பாட வேண்டும்.
9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.
இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.
- மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
- மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.
இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.
இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
- பிப்ரவரி 26-ந்தேதி மகா சிவராத்திரி.
- 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு
சென்னை:
கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மகா சிவராத்திரி விசேஷமாக கொண்டாடப்பட உள்ளது.
தென் கைலாய பக்தி பேரவையின் சார்பில் கொண்டாடப்படும். இந்த விழாவில் பொது மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாக கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காக ரத யாத்திரை தொடங்கி உள்ளது.
4 திசைகள் நோக்கி இந்த ரத யாத்திரை செல்கிறது. கடந்த 22-ந்தேதி பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், சிரவை ஆதீனம் குமரகுருபா சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

இந்த ரதங்கள் மகா சிவராத்திரி வரையிலான 2 மாதங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது.
இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு வழங்க திட்டமிட்டுள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங் களுக்கு ஆதியோகி ரதம் இன்று வருகை தர உள்ளது. சென்னைக்கு வருகிற 30-ந் தேதி வருகிறது. ஜனவரி 10-ந் தேதி வரையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணா நகர், புரசைவாக்கம், நங்க நல்லூர் உள்ளிட்ட இடங் களுக்கு ரதம் செல்கிறது.
ஆதியோகி ரதங்கள் திட்டமிட்டபடி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ந்தேதி மகா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோகா மையத்தை சென்றடையும்.
இதனுடன சிவ யாத்திரை எனும் பாத யாத்திரையையும் சிவசங்கர பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 தேர்களை இழுத்தபடி வருகிறார்கள் என்று தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேரலை செய்யப்பட உள்ள 50 இடங்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
- சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது.
- மூன்றாம் கால பூஜையை லிங்கோத்பவ காலம் என்று அழைப்பர்.
முதல் கால பூஜை - இரவு, 6:30- 9:30pm;
இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30pm;
மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30am,
நான்காம் கால பூஜை அதிகாலை, 3:30-6:00 am..
மகா சிவராத்திரி:
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மகாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
மகா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேஷமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூஜைகளின் போது எவற்றை எல்லாம் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் யாமம்:
இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் யாமம்:
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் யாமம்:
இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காம் யாமம்:
இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு - பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக.
- அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 28-ந்தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்தாண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே சதுரகிரிக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பஸ் கார், வேன் மூலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரமான தாணிப்பாறையில் தங்கி அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சிவராத்திரி என்பதால் நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிய தொடங்கினர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர்.
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பக்தர்கள் ஏராளமானோர் உற்சாகமாக மலையேறினர். சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கூட்டம் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாரை சாரையாக சென்றனர். 4 முதல் 5 மணி நேரம் நடந்து சென்று பக்தர்கள் சுந்தர, சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு கோவில் பகுதி மற்றும் அடிவாரத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகள் நடைபெற்றன. இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இரவில் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
- ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார்.
- ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார். மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்தும், திரைத்துறை உள்பட அனைத்து துறைகளில் இருந்தும் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோவை பீளமேட்டில் இன்று காலை புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார். மதியம், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் இன்று மாலை சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்தை சென்றடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கு துவங்கிய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.
பின்னர் ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அவர் வழிபட்டார்.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு ஈஷா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார். நாளை காலை, ஈஷாவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தரபிரதேசம் செல்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3,000 போலீசார், மாவட்ட பகுதியில், 4,000 போலீசார் என மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார்.
- 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் பனைவெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்தது சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர்.
இன்று அதிகாலை வரை நடந்த இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்திருந்தனர்.
மகா சிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.