என் மலர்
நீங்கள் தேடியது "Mahatma Gandhi"
- ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல் அண்ணாமலை பாசாங்கு காட்டுகிறார்.
- பாடுபடும் ஏழை மக்களின் உழைப்புக்கான ஊதியத்தை கேட்டுதான் நாங்கள் போராடுகிறோம்.
100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுகவினரின் போராட்டத்தை விமர்சித்து தமிழக அபாஜாக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
1) மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ரூ.39,339 கோடியை ஒதுக்கியுள்ளது. ஸ்டாலின் அவர்களே, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நீங்கள் செய்த ஊழலை விசாரிக்க சிபிஐக்கு ஒப்புதல் அளிப்பீர்களா?
2) அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
3) மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்துவதற்கான தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்ற போகிறீர்கள்?
இந்நிலையில், "உழைக்கும் மக்களின் உரிமைகளில் கீழ்த்தரமான அரசியல் செய்வதை பாஜகவும் அண்ணாமலையும் நிறுத்த வேண்டும்" என்று அண்ணாமலையின் விமர்சனத்துக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "அவதூறுகளின் அரசனாகிய அண்ணாமலையே, இதுதான் உண்மை!
தமிழ்நாட்டு அரசியலில் களங்கமாக நிற்கும் அவதூறுகளின் அரசன் அண்ணாமலை திராவிட மாடல் அரசின் மீது அவதூறு பரப்புவதும் பிறகு பல்டி அடிப்பதும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு. அந்த வரிசையில் இப்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சிக்கியிருக்கிறார்.
100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகப் பொய்யைப் பரப்பி, அதனை நிறுவ முயன்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை. 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4,034 கோடியைத் தராமல், நாட்களை உயர்த்தவில்லை என ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல் பாசாங்கு காட்டுகிறார்.
2024 மக்களவைத் தேர்தலுக்காக மார்ச் 20-ம் தேதி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்துவோம் எனச் சொன்னோம். திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு மார்ச் 28-ம் தேதி அவசர அவசரமாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது ஏன்? திமுக தேர்தல் அறிக்கையில் நாட்களின் எண்ணிக்கையை உயர்த்துவோம் எனச் சொன்னவுடன் முந்தி கொண்டு ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதே திமுகவின் சாதனைதான். நாட்களை உயர்த்துவதும் ஊதியத்தை உயர்த்துவதும் ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடக்கக்கூடியது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தார்?
பாடுபடும் ஏழை மக்களின் உழைப்புக்கான ஊதியத்தை கேட்டுதான் நாங்கள் போராடுகிறோம். அந்தப் போராட்டத்தையே சிதைக்கும் வகையில் பாஜக நிர்வாகியை விட்டு அதில் குழப்பத்தை ஏற்படுத்த அண்ணாமலை முயற்சி செய்தார். ஆனால் அது அம்பலப்பட்டதும் அடுத்தடுத்து பொய்களைப் பரப்பி வருகிறார்.
தமிழ்நாட்டை விட அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் குறைவான நிதியைப் பெற்றுள்ளதாக அண்ணாமலை தவறான புள்ளி விவரங்கள் அளித்திருக்கிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தைப் பொறுத்தவரை எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்படுத்தி உள்ளது, எந்த மாநிலம் சரியாகச் செயல்படுத்தவில்லை என்பதுதான் முக்கியம். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ஆட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிக மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம்.
இந்தியாவிலேயே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். தமிழ்நாட்டில்தான் 86 சதவீதம் பெண்களுக்கு இந்த வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில் 29 சதவீதத்துக்கு மேல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் மாற்றுத்திறனாளிகள். நாட்களை உயர்த்துவதும் ஊதியத்தை உயர்த்துவதும் ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடக்கக்கூடியது.
இந்த ஆண்டு தமிழ்நாடு நிர்ணயித்த 'மனித உழைப்பு நாட்களான' 20 கோடி நாட்களைக் கடந்து 24 கோடி நாட்களைத் தொட்டுள்ளது. இதை 35 கோடியாக உயர்த்தித் தரவேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பே ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஏற்கனவே அளிக்கப்பட்ட வேலைக்குச் சுமார் ரூ 1056 கோடி நிதியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று உழைத்த உழைப்பாளிகளின் ஊதியத்தைதான் நாங்கள் கேட்கிறோம். இது எங்களது உரிமை. எங்களது உரிமைப் போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெறுவதால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தினமும் ஒரு பொய்யைப் பரப்பி அதில் சுகம் கண்டு வருகிறார் அண்ணாமலை.
சிபிஐ என்ன, எந்த விசாரணை அமைப்பையும் சந்திக்கத் தயார். அதற்கு முன்பு முதலில் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கட்டும். உழைக்கும் மக்களின் உரிமைகளில் கீழ்த்தரமான அரசியல் செய்வதை பாஜகவும் அண்ணாமலையும் நிறுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
- திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 1170 இடங்களில் இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தர மறுக்கிறது.
முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் ? மகாத்மா காந்தி என்கிற பெயர் இருப்பதனாலேயே பணம் தர மறுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயரை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தியை சுட்டதே இவர்கள்தான்.
நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து அளவான குடும்பம் என்று 1970களில் இருந்து நல்ல திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.
மக்கள் தொகை குறைந்து இருந்தாலும், கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கிறோம். வேலை வாயப்பு, உற்பத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் நம்பர் ஒன். சாலை வசதி என அனைத்திலும் முன்னிலையில் இருக்கிறோம். இதுதுான் திராவிட மாடல்.
ஆனால் வட மாநிலங்களில் 16, 17 பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்த்து ஆளாக்க முடியாமல் இங்கு வந்துவிடுகிறார்கள்.
ஆரம்பத்தில் பானிப்பூரி, சுண்டல் என விற்றுவந்தவர்கள் தற்போது பயிர் நடவு செய்ய வந்துவிட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி நம்மை பார்த்து இந்தி படியுங்கள், படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.
- காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர்.

வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது
இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.
ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார்.
சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார்.
- சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மனு
சியோனி:
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் விகாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக, கடந்த 5ம் தேதி சிஎம் ரைஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு மாணவர், மகாத்மா காந்தியை விமர்சனம் செய்யும் வகையில் கவிதை வாசித்தார். வன்முறையின் போது மகாத்மா அமைதியாக இருந்ததாக அந்த கவிதையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடுவதாக அமைந்தது.
மாணவர் இவ்வாறு மகாத்மாவுக்கு எதிரான வாசகத்துடன் கவிதை வாசித்தபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்
இந்நிலையில், அந்த மாணவரை வழிநடத்திய ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி முதல்வர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக பொறுப்பு என்றும், அவர்களின் சித்தாந்தம் மகாத்மா காந்தியை அவமதிக்க குழந்தைக்கு கற்றுக்கொடுத்திருப்பதாகவும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் குரானா விமர்சித்தார்.
தன் மீதான விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ முன்மம், இந்த சம்பவம் பள்ளி குழந்தைகள் தொடர்புடையது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார். குழந்தைகளை அரசியலுக்கு இழுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
- மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
- கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக காந்தி மிகப்பெரும் போராட்டம் துவங்க இந்த சம்பவம் துவக்கமாக அமைந்தது.
- ஜூன் 9ம் தேதி வரை ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறது
புதுடெல்லி:
மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
இது நடந்து 130 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு நடத்தப்படவிருக்கும் நினைவு நிகழ்ச்சிகளில், இந்திய கடற்படை பங்கேற்கிறது. இதற்காக கடற்படையின் போர்கப்பலான ஐ.என்.எஸ். திரிசூல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு சென்றடைந்தது. பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் டர்பன் நகருக்கருகே அமைந்துள்ளது.
இந்திய சுதந்திரத்தின் முக்கியமான தருணங்களையும் நிகழ்வுகளையும், நினைவு கூறும் விதமாக, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்னும் பெயரில் இந்திய கடற்படை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஐ.என்.எஸ். திரிசூல் போர்கப்பலின் டர்பன் நகர பயணமும் அமைந்துள்ளதாக இந்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
ஜூன் 6 முதல் 9 வரை இக்கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் 1893ம் வருடம் நிகழ்ந்த அச்சம்பவத்தை நினைவு கூறவும், இந்திய-ஆப்பிரிக்க உறவுகளில் ஒரு புத்தாக்கம் உண்டாக்கவும் இயலும். அப்பொழுது காந்தியின் நினைவுத்தூணுக்கு மலர்களால் அஞ்சலி செலுத்தப்படும். மேலும் அந்த சில நாட்களில், பல தொழில்முறை மற்றும் சமூக நிகழ்ச்சிகளிலும் இக்கப்பல் பங்கேற்கும்.
1893ம் வருடம் தாதா அப்துல்லா என்பவருக்கு வக்கீலாக ஆஜர் ஆவதற்காக பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி டர்பன் நகருக்கு வந்திறங்கினார். ஜூன் 7, 1893 அன்று பிரிட்டோரியா செல்லும் வழியில் முதலில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் வரும் பொழுது, முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், ஒரு ஐரோப்பிய பயணியின் தூண்டுதலால், பரிசோதகரால் இறக்கி விடப்பட்டார்.
நிறவெறி உச்சத்தில் இருந்த அக்காலத்தில், முதல் வகுப்பு பயணம் வெள்ளையரல்லாதவர்களுக்கும், கூலி வேலை செய்பவர்களுக்கும் மறுக்கப்பட்டிருந்தது.
காந்தி இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக மிகப்பெரும் போராட்டம் துவங்கவும், பின்னாளில் சத்யாகிரக போராட்டம் நடத்தவும் இந்த நிகழ்ச்சியே துவக்கமாக அமைந்தது.
1997ம் வருடம் ஏப்ரல் 25 அன்று முன்னாள் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலா தலைமையில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான விழாவில், மறைந்த காந்திக்கு "ஃப்ரீடம் ஆஃப் பீட்டர்மாரிட்ஸ்பர்க்" விருது வழங்கப்பட்டது. அப்பொழுது அடக்குமுறைக்கு எதிரான காந்தியின் தியாகத்தையும், ஈடுபாட்டையும் மண்டேலா நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தொவிக்கப்பட்டுள்ளது.
- மகாத்மா காந்தி பிறந்த நாள்-கதர் சிறப்பு விற்பனை விழா அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
- 409 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வா தாரமாக தலா ரூ.5000 வீதம் வருடந்தோறும் வழங்கப் பட்டு வருகிறது.
மதுரை
மதுரை, மேலமாசி வீதி யில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் இன்று தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் காந்தியடி கள் பிறந்த நாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற் பனை விழா நடைபெற்றது. விழாவில் வணிகவரி மற் றும் பதிவுத்துறை அமைச் சர் பி.மூர்த்தி, தக வல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியா கராஜன் ஆகியோர் காந்திய டிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தனர்.
காந்தியடிகளால் கிரா மப்புற ஏழை, எளிய மக்க ளுக்கு ஆண்டு முழுவ தும் வாழ்வளிக்க வேண்டு மென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி வட்டம் அன்னமார்பட்டியில் கிராமிய நூற்பு நிலையம் 1-ம், உசிலம்பட்டி கதர் உபகிளை மற்றும் மேலமாசி வீதியில் கதர் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன.
கிராமிய நூற்பு நிலையத் தில் 25 ராட்டைகள் மற்றும் கதர் உபகிளையில் 15 தறிக ளும் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்க ளின் வாழ்க்கைத்தரம் மேம் படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்படும் அண்ணல் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைப்பிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகி றது.
மேலும் கதர் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு கதர் ரகங்கள் குறியீடு ரூ.75 லட்சத்தில் கதர் ரகங்கள் ரூ.49.99 லட்சமும் மற்றும் கிராமப் பொருட்கள் குறி யீடு ரூ.65.00 லட்சத்தில் ரூ.24.28 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்பாண்ட தொழி லாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகை யாக 409 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வா தாரமாக தலா ரூ.5000 வீதம் வருடந்தோறும் வழங்கப் பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்ப னையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவ லகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள், நகராட்சிகள், பேரூ ராட்சிகள், அரசு மருத்துவ மனை வளாகங்களில் ஆகிய இடங்களில் 02.10.2023 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படுத் தப்படுகிறது.
அரசு துறைகளில் பணி யாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடி கள் செயல்படும்.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத் திற்கு கதர் விற்பனை குறியீ டாக ரூ.1 கோடியே 80 லட்சம் நிர்ண யிக்கப்பட்டுள் ளது. இக்கு றியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழி யர்கள், ஆசிரியப் பெரு மக்கள் உள்ளிட்ட அனைவ ரும் இத்தொழிலில் ஈடுபட்டி ருக்கும் நுாற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்து ழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
விழாவில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநக ராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலா நிதி, மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்கு நர் சுதாகர் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை
- காந்தியின் கோட்பாடுகளே அரசியல் அமைப்பின் அடித்தளம் என்றார் பிரியங்கா
கடந்த அக்டோபர் 7 முதல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசாவில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இந்நிலையில், ஐ.நா. கூட்டமைப்பின் பொதுச்சபையில் (UNGA) நேற்று முன் தினம் ஜோர்டான், "காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்க உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசியமான தேவைகளும் தங்கு தடையற்று கிடைக்க வேண்டும்," என்றும் கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.
ஜோர்டானின் தீர்மானத்திற்கு ஐ.நா. உறுப்பினர் நாடுகளில் 120 நாடுகள் ஆதரவும், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன.
இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
"இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் அதிர்ச்சிகரமானது. ஆனால், அது குறித்து தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெறவில்லை. பொதுமக்கள் காசாவில் கொல்லப்படுவதும் கவலையளிக்கும் செயல். இதனால் இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது" என இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து ஐ.நா. சபைக்கான இந்திய துணை நிரந்தர தூதர் யோஜ்னா படேல் (Yojna Patel) தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கண்டித்துள்ளார்.
அவர் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:
'தன் கண்ணை பிடுங்கியவனின் கண்ணை பிடுங்க வேண்டும் எனும் எண்ணமும், செயலும், உலக மக்கள் அனைவரையும் குருடர்களாக்கி விடும்' என தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருந்தார். அகிம்சையும், உண்மையுமே நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளம். உணவு, குடிநீர், மருந்து, தொலைத்தொடர்பு, மின்சாரம் அனைத்தும் காசா பொது மக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஜோர்டானின் போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தில் பங்கேற்காததன் மூலம் நம் நாடு எந்த உயர்ந்த எண்ணங்களை தாங்கி பல காலங்களாக நிலை நிற்கிறதோ அவை அனைத்திற்கும் எதிரான நிலைப்பாட்டை இப்போது இந்தியா எடுத்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு. இந்த முடிவிற்காக ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்.
இவ்வாறு பிரியங்கா கூறினார்.
+4
- இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காடையாம்பட்டி:
இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காடையாம்பட்டி
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க கோரியும், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீவட்டிப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காடையாம்பட்டி மேற்கு வட்டார தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய கவுன்சிலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காடையாம்பட்டி கிழக்கு வட்டார தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், நகரத் தலைவர் ஹரிசந்திரன், கிராம கமிட்டி தலைவர் பழனி தேவன், நிர்வாகிகள் பெருமாள், தர்மலிங்கம், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்காடு
ஏற்காட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஏற்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தாரமங்கலம்
தாரமங்கலம் சந்தைப் பேட்டை அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு. மாவட்டத் துணைத் தலைவர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி செல்வம், நிர்வாகிகள் லக்ஷ்மன், தட்சிணாமூர்த்தி, மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி
சங்ககிரியில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்குமார் தலைமை வகித்தார். சங்ககிரி வட்டார தலைவர் சரவணன், நகர தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மாவட்ட பொது செயலாளர்கள் நடராஜன், பழக்கடை ராமமூர்த்தி, சின்னுசாமி, மூத்த நிர்வாகிகள் அங்கமுத்து, ஆறுமுகம், இஸ்மாயில், காமராஜ், சந்திரன், ஜெகநாதன், பஸ் ஆறுமுகம், விஸ்வநாதன், கிரி, ரவி, பரமன், மளிகை குமார், மாணவர் காங்கிரஸ் அகில், வெர்ஸிலி, இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, தேவூர் நாகேந்திரன், பொன்சித்தையன், அரசிராமணி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து துண்டுப் பிரசுரத்தை கிராமப்புற மக்களிடையே விநியோகித்தனர்.
- மகாத்தா காந்தி கடந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்.
- பிரதமர் மோடி இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசும்போது மகாத்மா காந்தி- பிரதமர் மோடி ஆகியோரை ஒப்பிட்டு கூறினார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசும்போது "மகாத்மா காந்தி கடந்த நூற்றாண்டின் மாமனிதர். பிரதமர் மோடி இந்த நூற்றாண்டில் சிறந்த மனிதர்.
உண்மை மற்றும் வன்முறையைற்ற வழியில் ஆங்கிலேயர் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தார். பிரதமர் மோடி நாம் பார்க்க விரும்பிய வளர்ச்சியில் நாட்டை கொண்டு வந்துள்ளார்." என்றார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கம் பதிவில் "மகாத்மா காந்தியுடன் நீங்கள் ஒப்பீடு செய்தது வெட்கக்கேடானது சார். ஒருவரை உயர்த்தி பேசுவதற்கு ஒரு எல்லை உண்டு என்று நாம் எல்லோருக்கும் தெரியும். தற்போது அந்த எல்லையை நீங்கள் மீறிவிட்டீர்கள். உங்களது பதவி மற்றும் நிலைக்கு இப்படி துதி பாடுவது மதிப்பை சேர்க்காது" எனத் தெரிவித்துள்ளார்.

ஜக்தீப் தன்கர் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளுநராக இருந்தார். அப்போது அதிகாரம் யாருக்கு என்பதில் மம்தா பானர்ஜிக்கும்- இவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன்
- காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்-ன் 127 ஆவது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. நேதாஜி உருவாக்கிய இந்திய தேதிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டிற்கு விடுதலை அளித்ததாக கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு வி்ளக்கம் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, "நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தன. காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை.
தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன். ஆங்கிலேயருக்கு எதிரான நேதாஜியின் படைகள் நமது விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு முக்கியதுவம் அளித்தன. இதுமட்டும் இல்லாமல் நேதாஜியின் பங்களிப்பு இல்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் கூடுதல் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் " என தெரிவித்துள்ளார்
- தேச தந்தை காந்தியை, பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்துகிறார்கள்.
- காந்தி பிறந்தநாளை சுவிட்ச்பாரத் என அழித்தல் வேலை ஆரம்பமானது.
மகாத்மா காந்தி நினைவு நாள் அன்று வரும் 30ம் தேதி மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு அனைத்து மதத்தினருக்கும் மரியாதை கொடுத்தவர் காந்தி.
ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை, அதனாலேயே அவர் பலியானார்.
தேச தந்தை காந்தியை, பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்துகிறார்கள்.
காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது வன்மம் கலந்த நோக்கம்.
காந்தி பிறந்தநாளை சுவிட்ச்பாரத் என அழித்தல் வேலை ஆரம்பமானது.
அக்டோபர் 2ல் ஊர்வலம் நடத்தி திசைதிருப்ப முயற்சித்த ஆர்.எஸ்.எஸ் முயற்சியை தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.