என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marathon"

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
    • பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி என்.பி.ஏ. நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநல பணி திட்டம் மற்றும் விளையாட்டு துறை சார்பில் தூய்மை இந்தியா மற்றும் வலிமையான இந்தியா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    மாரத்தானை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆல்ப்பிரட் எபனேசர், கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • உப்பூர் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அருகே ரோட்டரி கிளப்ஆப் கோல்டன் மற்றும் உப்பூர் அமிர்தாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடத்தியது.

    ரோட்டரி கிளப் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கலங்காப்புலி விலக்கு ரோட்டில் இருந்து தொடங்கிய போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் அமிர்தாஸ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் வரை சென்று நிறைவடைந்தது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளியின் திட்ட சேர்மன் ஜான்பிரிட்டோ, பள்ளி தாளாளர் அன்புமலர் பாண்டியன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று காலை சேலம் காந்தி ஸ்டேடியத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    இதை துணை கமிஷனர்கள் ராதா–கிருஷ்ணன், மாடசாமி, லாவண்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மினிமாரத்தான் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து 4 ரோடு, புதிய பஸ் நிலையம், ஏ.வி.ஆர் ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ரோட்டரி சங்கங்கள் குறைந்தபட்சம் 100 நபர்களை நிகழ்ச்சியில் பங்கு பெற வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
    • அனைவரும் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக மாற்றுங்கள் என்றார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் அமையவுள்ள இலவச புற்றுநோய் சிகிச்சை கட்டடத்துக்கு நிதி திரட்டி உதவும் வகையில் வருகிற ஜனவரி 8-ந் தேதி திருப்பூர் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க பல நிறுவனங்கள் அவர்களுக்கான நுழைவு கட்டணத்தை செலுத்த ஆர்வமாக முன்வந்துள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

    திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். திருப்பூர் அனைத்து ரோட்டரி சங்கங்கள், தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை, காங்கயம், மேட்டுப்பாளையம், வெள்ளகோவில், காரமடை, சோமனூர், அன்னூர் உள்ளிட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களும் மாபெரும் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.

    ரோட்டரி சங்கங்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 100 நபர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வைப்பதாக உறுதியளித்துள்ளனர். 3 நாட்களில் 3,000க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். 15 ஆயிரம் பேரை நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:- சமூக நலன் காக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியினை மக்கள் மத்தியில் முழுதாக கொண்டு சேர்க்கும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளோம். ஏழை, எளிய புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு கட்டப்படும் இலவச புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தன்னார்வத்தோடு பங்கேற்று நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். 500, ஆயிரம் ரூபாய் என்பது சாதாரணம் இல்லை. அது முகம் அறியாத ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் மகத்தான சேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். அனைவரும் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக மாற்றுங்கள் என்றார்.

    • 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா்.
    • போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா். வெற்றி திருநாளான இந்நாளை கொண்டாடும் வகையில் ராணுவம் சாா்பில் ஆண்டுதோறும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி 'ரன் வித் சோல்ஜா்' என்ற தலைப்பில் நடைபெற்றது. போட்டியை மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

    5 கி.மீ., 12.5. கி.மீ. என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் போா்டு, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 800க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • கந்தர்வகோட்டையில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், தெற்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் கலையரசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது.


    • மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் 4 வகையாக நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 11-வது மாரத்தான் பந்தயம் இன்று நடந்தது. நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கிலும் இந்த பந்தயம் நடத்தப்பட்டது.

    ஆண்கள், பெண்களுக்கான இந்த மாரத்தான் ஓட்டம் 4 வகையாக நடத்தப்பட்டது. முதலில் முழு மாரத்தான் போட்டி நடந்தது. இந்த பந்தயம் 42.195 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 32.186 கிலோ மீட்டர் (16 வயதுக்குட்பட்டோர்) தூரத்துக்கு ஓட்டம் நடந்தது. மினி மாரத்தான் (21.097 கிலோ மீட்டர்) 10 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் பந்தயம் நடந்தது.

    4 பிரிவுகளில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முழு மாரத்தான் பந்தயம் நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. சாந்தோம், அடையாறு, மத்திய கைலாஷ், டைட்டல் பார்க், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே முடிவடைந்தது.

    21 கிலோ மீட்டர் தூரத்துக்கான மினி மாரத்தான் ஓட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

    இந்த போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பந்தயம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே நிறைவடைந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திர பாபு இதில் பங்கேற்றனர். 10 கிலோ மீட்டர் தூர பந்தயம் காலை 6 மணிக்கு நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. சாந்தோம், அடையாறு வழியாக தரமணி சென்றடைந்தது.

    மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்
    • மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர். இந்த போட்டியில் முதல் பரிசை திருவண்ணாமலை மாவட்டமும், இரண்டாமிடத்தை சேலம் மாவட்டமும், மூன்றாமிடத்தை கரூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர் வல்லரசு பெற்றார். மூன்றாமிடம் பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர், உடற் கல்வித்துறை இயக்குநர் உள்பட அனைவரும் பாராட்டினர்.

    • மாணவிகளுக்கு விழிப்புணர்வு மராத்தான் போட்டியை நடத்தியது.
    • சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.

    புதுச்சேரி:

    சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் புதுவையில் ஜி 20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார் போட்டை அர்ஜூனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் உழந்தை கீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு மராத்தான் போட்டியை நடத்தியது.

    போட்டியில் வெற்றி பெற்ற சீனியர், ஜூனியர் மாணவ- மாணவிகளுக்கும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாரி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ( பெண்கள்) சிவராம ரெட்டி, டாக்டர் வெற்றி செல்வம், ஜோதி சிலம்பம் சத்ரிய குருகுலம் நிறுவனர் டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன், பாத சிகிச்சை வல்லுனர் டாக்டர் கருணாகரன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை அதிகாரி ரவி, புதுவை தொழில் நுட்ப கல்லூரி பேராசிரியர் ஆனந்த நடராஜன், மையத்தின் செயலாளர் செல்வம், பொருளாளர் கார்த்திகேயன் துணை தலைவர் இன்ப சேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினார்கள்.

    விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவேகானந்தர் பிறந்த நாளை யொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.

    தேசிய நல் ஆசிரியர் விருது பெற்ற அரவிந்தராஜா நன்றி கூறினார்.

    • கோவை மாநகர போலீஸ் நிலையங்களில் நடைபெற்றது.
    • போலீஸ், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகர போலீஸ் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.

    இந்த மாரத்தானானது அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கி.மீ. நடைபெற்றது. இதில் போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், துணை கமிஷனர் சிலம்பரசன் உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோன்று கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டம் பாலக்காடு ரோடு இடையர்பாளையம் பிரிவில் இருந்து கோவைப்புதூர் பிரிவு வரை நடைபெற்றது.

    மாரத்தான் ஓட்டத்தை தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா சாலை பாதுகாப்பு குறித்த பேசினார். அதனை தொடர்ந்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் குனியமுத்தூர் போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.உக்கடம் போலீசார் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர போலீஸ் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார்.
    • 6,300 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தார்.

    சிட்னி :

    ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார்.

    ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு வாழ்நாள் கனவில் கவனத்தை திருப்பினார். மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார். மேலும் 106 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த இங்கிலாந்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை கேட் ஜேடனின் சாதனையை முறியடிக்கவும் அவர் விரும்பினார்.

    அதன்படி 5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஒரு முனையில் இருந்து நாட்டின் தெற்கு எல்லையை இலக்காக கொண்டு தனது மாரத்தான் ஓட்டத்தை முர்ரே தொடங்கினார்.

    ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதிக்கும் பேரழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மாரத்தான் ஓட்டத்தை நடத்தினார். தொடர் மாரத்தான் ஓட்டத்தால் உடல் சோர்வு, உடலில் கொப்புளங்கள், கால் வீக்கம் போன்ற பல பிரச்சினைகளை சந்தித்தபோதும் முர்ரே மாரத்தானை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடினார். அதன்படி அவர் 150 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி 6,300 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தார்.

    இதன் மூலம் கேட் ஜேடனின் சாதனையை முறியடித்து, அதிக நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடிய பெண் என்கிற உலக சாதனையை முர்ரே படைத்துள்ளார்.

    • திருச்சி உழவர் சந்தையில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது
    • இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    திருச்சி:

    திருச்சி ரீகேப் இந்தியா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் 16 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மாதவிடாய் சுகாதாரம் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ரீகேப் இந்தியா சாரிட்டபிள் டிரஸ்ட் இன் தலை–வர் தலைவர் மற்றும் அறங்காவலர் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு, சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சுப சோமு, மாவட்ட துணை தலைவர் மலைக்கோட்டை, ஜங்ஷன் கோட்டத் தலை–வர் பிரியங்கா பட்டேல், பிரிவு பஜார் மைதீன், வெல்லமண்டி பாலசுப்பிர–மணியன், வீரேஸ்வரம் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நந்தினி சக்திவேல் நன்றி கூறினார்.


    ×