என் மலர்
நீங்கள் தேடியது "materials"
- ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.
அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.
திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.
ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.
அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.
- அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
- பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் உள்ள கிராமங்களில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் ,காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சித் தினத்தன்றும் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வார்டு தோறும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் பகுதி சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.
அதன்படி உள்ளாட்சி தினமான இன்று தமிழகத்தில் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
மேலும் முதல் முறையாக தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என இரண்டு நகராட்சிகள் மற்றும் வல்லம், சுவாமிமலை உள்பட14 பேரூராட்சிகளிலும் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த பகுதி சபை கூட்டங்கள் நடந்தன. தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
துரை. சந்திரசேகரன் எம் .எல் .ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு வரவேற்றார்.
கூட்டத்தில் 1 வார்டு 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தன. பொதுமக்கள் சேர்ந்து ராமானுஜம் என்பவரை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசிய விவரம் வருமாறு:- சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேகத்தடையும். பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உடற்பயிற்சி கூடமும்.
நவீன கழிப்பிடமும்,சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைத்தும். அங்கன்வாடிக்கு புதிய கட்டிடமும் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி பேசினர்.
ஆசிரியர் ஒருவர் பேசும்போது, நகராட்சி பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். போதிய அளவில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
அப்போது 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசும்போது:-
நான் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்ய வேண்டும். பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மாணவியின் பேச்சை அனைவரும் ரசித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சை மாநகராட்சி 25-வது வார்டு உட்பட்ட பகுதியான கீழ ராஜவீதி மணிகர்ணிகேஸ்வரர் கோவிலில் நடந்த பகுதி சபை கூட்டத்துக்கு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்கள் தங்களது வார்டு சம்பந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
- பழைய டயர்கள் கொசு உற்பத்தியாகும் பொருட்களை வைத்து கொள்ளக் கூடாது.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்க ரைவட்டம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையுடன் இணைந்து அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன் தலைமையில், அதம்பை சுகாதார ஆய்வாளர், எஸ், ராமநாதன் மற்றும் குழுவினர் இணைந்து ஊராட்சியில் இயந்திரம் மூலம் கொசு மருந்து 6 வார்டுகள் முற்றிலும் அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கை, மற்றும் வீடுகளில் ஆங்காங்கே கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும் வீட்டின் அருகே பழைய டயர்கள் கொசு உற்பத்தி ஆகும் பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.
- பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
இதனால் பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த
2017-ம் ஆண்டுபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில், தற்போது வகுப்பறைகள் இயங்கி வருகின்றன.
பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
- திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு புளியக்குடியில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தற்போது உள்ள அங்காடியில் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் ரெயில்வே இருப்புப் பாதையை கடந்து நடந்து செல்ல வேண்டி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே வடக்கு தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேறாததால் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு
புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
பொதுமக்களின் இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறிந்தார்.
- காலதாமதமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் மின் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ரேசன் கடையில் உள்ள அரிசி, கோதுமை, உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறி ந்தார்.
தொடர்ந்து, பணியாளர்க ளிடம் காலதாம தமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவி ட்டார்.
ஆய்வின்போது மன்னா ர்குடி கோட்டா ட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் வழங்கல்.
- காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறினர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருப்பாலைத்துறை ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிறுவனர் ஓ.எஸ்.ஜெ. சார்பாக தில்லையம்பூர் முதியோர் காப்பகத்திற்கு அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆபீதீன் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், பள்ளி முதல்வர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் முதியோர் காப்பகத்திற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, உள்பட 40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை முதியோர் இல்ல நிர்வாகியும், காப்பாளருமான எஞ்ஜினியர் நடராஜனிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பேசும்போது, பிறருக்கு உதவும் மனப்பாண்மை நாம் வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவ வேண்டுமென மாணவர்களை கேட்டுக்கொண்டனர்.
இறுதியில் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் காலை உணவுகளை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பறிமாறி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை.
- கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரகிரி மலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்வார்கள்.
திருப்பணிகள்
கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை. கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மலை மீதுள்ள குமரகிரி முருகனை தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் ஸ்ரீ ஆய்வு
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ கோவிலில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த கோவில் திருப்பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் பணிகள் முடிய பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் , கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த நாட்களில் அம்மாபேட்டை, உடையாபட்டி, பொன்னம் மாப்பேட்டை உட்பட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காவடி எடுத்து வந்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்வார்கள். திருப்பணிகள் காரணமாக திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது.
வருகிற ஏப்ரல் மாதம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் இந்த கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனால் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு செல்லும் மலை சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையையும் உடனே சீரமைக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- மளிகைக் கடையில் சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
- கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்ப டையில் குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
உடுமலை:
உடுமலை கபூர்கான் வீதியிலுள்ள உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் கோவிலில் அன்னதானம் செய்வதற்கு மளிகைப்பொருட்கள் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் கொடுத்த பட்டியலில் இருந்த அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஒரு வாடகை ஆட்டோவில் ஏற்றி ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் பகுதியில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பொருட்களை இறக்கி வைத்த அந்த நபர் மேலும் சில பொருட்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை கொண்டு வந்து கொடுத்து விட்டு மொத்தமாக பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மளிகைக் கடை உரிமையாளரும் கடைக்கு சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்துள்ளார். அங்கே அந்த நபரையும் காணவில்லை, மளிகைப் பொருட்களையும் காணவில்லை. கோவிலில் இருந்தவ ர்களிடம், இன்னும் சில கோவில்க ளுக்கு பொரு ட்களை பிரித்து கொடுக்க வேண்டியி ருப்பதாகக் கூறி பொருட்களை ஒரு காரில் ஏற்றி கொண்டு அந்த நபர் தப்பிச் சென்று ள்ளார்.நூதன முறையில் ஏமாற்றி மளிகைக் கடையில் சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து மளிகைக் கடை உரிமையாளர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்ப டையில் குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.
- பெண்களுக்கான அழகு பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
தஞ்சாவூர்:
நெகிழி இல்லா தஞ்சை மாவட்டம் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை பெரியக் கோவில் வளாகத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியில் வைக்கபட்டு இருந்த பொருட்களை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கண்காட்சியில் சணலால் தயாரிக்கப்பட்ட பை, பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட சாப்பாடு மற்றும் டிபன் தட்டு, கால்நடைகளின் தீவனமான தவிடு கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட டீ கப் மற்றும் ஸ்பூன், வண்ண காகிதங்களால் ஆன சுவர் அலங்காரப் பொருட்கள்.
பனை ஓலை கொண்டு செய்யப்பட்ட கம்மல், நெக்லஸ், கீ செயின், ஆரம் உள்ளிட்ட பெண்களுக்கான அழகுப் பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
நெகிழியை விட இந்த பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் நெகிழி பயன்படுத்தி வரும் நோய்க்கு செலவு செய்யும் தொகையை விட குறைவுதான்.
அனைவரும் நெகிழி இல்லா மாவட்டமாக தஞ்சாவூர் விளங்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.
- புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்து பேசினார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த இடையூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி தலைமையா சிரியர் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் இடையூர் ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் அருணா கலந்து கொண்டு மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்தும், பல் பராமரிப்பு குறித்தும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்தும், வாய்வழி புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார்.
இதனை மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், பல் மருத்துவ உதவியாளர் பொன்னரசன், ஆசிரியை சசிகலா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.
- சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
- சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40). விவசாய கூலி தொழிலாளி.
இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், திடீரென இன்று காலை அவரது வீடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதனை கண்ட கிராமமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் என சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து கூரை வீட்டில் தீ வைத்தது யார்? எப்படி தீ பிடித்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.