என் மலர்
நீங்கள் தேடியது "Mp"
- பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-
- கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.
புதுச்சேரி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-
கடந்த 40 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தித் துறையில் நமது நாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. உணவு தானியங்கள் குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அறுவடைக்குப் பின், இந்திய உணவுக் கழகம் அல்லது பிற தனியார் சந்தைக் குழுக்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை அடையும் வரை, அவற்றின் பாதுகாப்பான சேமிப்பு பெரும் கவலைக்குரிய செயலாக உள்ளது.
கொள்முதல் மையங்கள் உணவு தானியங்களை விலைக்கு வாங்கும்பொழுது இழப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஒரு கவலைக்குரிய செய்தி ஆகும். துரதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மழைக் காலங்களில் ஆயிரக்கணக்கில் அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் குவிக்கப் பட்டுள்ளன.
கொள்முதல் மையங்களில் குறைந்த செலவில் கொட்டகைகளை நிறுவுவதன் மூலம் இத்தகைய இழப்பை எளிதில் தவிர்க்கலாம். இதன் மூலம் அரசுக்கு அதிக நிதிச்சுமை இல்லாமல் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும்.
எனவே,கொள்முதல் மையங்களில் சேமிப்பு வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு மூலம் கிடங்குகளையும் குளிர்பதனக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில், பிரதான சாலையில் இருந்த காமராஜர் சிலை, மாற்று இடத்தில் நிறுவ உள்ள நிலை யில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நான்கு வழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்காக, அம்பா சமுத்திரம் சாலையில் உள்ள வேன் நிறுத்துமிடம் பகுதியில், மாற்று இடத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, சிலை அமைப்புக் குழு சார்பில், அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
சிலை அமைப்பு குழுத் தலைவர் ஜாண்ரவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞான திரவியம், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடார், ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, கே.ஆர்.பி. பிரபாகரன், தொழிலதிபர் டி.பி.வி.கருணாகர ராஜா, நெல்லை மண்டல வியா பாரிகள் பேரமைப்பு சங்கத் தலைவர் டி.பி.வி.வைகுண்ட ராஜா, தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், காங்கிரஸ் வடசென்னை- கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம், தொழிலதிபர்கள் மாரிதுரை, செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி போஸ், யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், பா.ஜ.க. அன்புராஜ், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் பழனிசங்கர், மாவட்டச் செயலாளர் கணபதி,
பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா, திமுக நகரச் செயலாளர் நெல்சன், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், நகரத் தலைவர் தாமஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா,சுந்தரம், சுபாஷ், சமக.நகர செயலாளர் ஜெயபாலன் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சுரேஷ் சொக்கலிங்கம் மயில்,சிலை அமைப்புக் குழு அலெக்ராஜா, நிக்சன், செந்தில், அருமைராஜ், தமிழரசன், ஆசீர் சாம்சன், குமார், சதன்ராஜ், அமரா வதி ஜெகன், ஜெயபால், தங்க ராஜ், மார்க்கெட் சைமன், ரமேஷ் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். பர்வீன்ராஜ் நன்றி கூறினார்.
- கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார்.
- திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி :
அவிநாசி அடுத்த அம்மாபாளையத்தில், கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார். அவரிடம், கண்டக்டர் அவிநாசி, தெக்கலுாருக்குள் பஸ் செல்லாது என கூறி இறங்க சொன்னார். செல்வி இறங்குவதற்குள் அஜாக்கிரதையாக டிரைவர் பஸ்ஸை நகர்த்தியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த செல்வி பலியானார். பல்வேறு சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பஸ்ஸை இயக்கிய கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் படி கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவிநாசி வந்த நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் கோவையிலிருந்து செல்லும் பஸ்களும், சேலம், ஈரோடு, திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் பயணிகளை இறக்கி, ஏற்றி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.பி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
- மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை 2ம் இடத்தை பெற்றுள்ளது.
- பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள பிற மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் வந்து செல்கின்றனர். மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
பழமையான இந்த மருத்துவமனையில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது பொது மக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யலாம், பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
- பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு 20.06.2023 அன்று எழுதியுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடிதம் எழுதிய கையோடு 30.6.2023 அன்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
முதலமைச்சர், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இப்பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 உடனடியாக புது டெல்லிக்கு படையெடுத்து, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி:
அசாமின் சில்சார் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரது வீட்டில் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியை சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். இதற்காக ராஜ்தீப் ராய் எம்.பி.யின் வீட்டில் ஒரு பகுதியில் அந்த பெண், தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் 10 வயது மகன் நேற்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினான். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் வீடியோ கேம் விளையாட அவனது தாய் மொபைல் போன் கொடுக்காததால் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது.
- முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்-மந்திரி பினராய்விஜயன் தலைமையில் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நவ கேரள சதஸ் பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்கு கேரள மாநில காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள தலைமை செயலகம் நோக்கி, இளைஞர் காங்கிரசாரும், மாணவர் அமைப்பினரும் நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, தண்ணீர் புகைவீச்சு போன்றவற்றில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நவ கேரள சதசின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில காங்கிரஸ் சார்பில், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே சென்ற போது திடீரென வன்முறை வெடித்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி யடித்தனர். அப்படியும் வன்முறை கட்டுக்குள் வராததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களை தொண்டர்கள் பத்திரமாக மீட்டு சென்றனர். பின்னர் எதிர்கட்சி தலைவர் சுதாகரன், ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கலவரம், சாலைமறியல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் எம்.பி.க்கள் சசிதரூர், கொடிக்குன்றில் சுரேஷ், அடூர் பிரகாஷ், கே.முரளீதரன், ஜெபி மாதர் மற்றும் ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியது தொடர்பான புகாரில், முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 16-ந்தேதி நவ கேரள சதஸ் பயணம், ஆலப்புழாவில் இருந்து அம்பழப்புழா தொகுதிக்கு சென்றபோது பொது மருத்துவமனை சந்திப்பில் நின்ற இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அஜய் ஜூவல், மாணவர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஏ.டி.தாமஸ் ஆகியோர் முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் பிடித்து அங்கிருந்து அகற்றி உள்ளனர். அப்போது முதல்-மந்திரியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரி அனில்குமார், மற்றொரு பாதுகாப்பு அதிகாரி சந்தீப் ஆகியோர் வேனில் இருந்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேரும், ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலப்புழா தெற்கு போலீசார், விசாரணை நடத்தி பாதுகாப்பு அதிகாரிகள் அனில்குமார் மற்றும் சந்தீப் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 326, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
- ஆக்ஷன் ஹீரோவாக பல வெற்றி படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி
- பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சரும் பங்கேற்கலாம் என தெரிகிறது
மலையாள திரையுலக முன்னணி நடிகர்களாக பல தசாப்தங்களாக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.
ஆனால், 90களில் அவர்கள் இருவருக்கும் இணையாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், குணசித்திர வேடங்களில் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி.
65 வயதாகும் அவர், சில வருடங்களாக நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
2016ல் ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக பாராளுமன்றம் சென்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேரளாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்.
சுரேஷ் கோபியின் மகளான பாக்யாவிற்கும் தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவின் புகழ் பெற்ற இந்து கோயிலான குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் வரும் 17 அன்று திருமணம் நடைபெற உள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் (Greenfield Stadium) ஜனவரி 20 அன்று நடைபெறும்.
இந்நிலையில், தங்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்குமாறு சுரேஷ் கோபி தனது குடும்பத்தினருடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் வைத்தார்.
இதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
முன்னதாக மோடி, காலை 08:00 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பிறகு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கொச்சி செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருமணத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.
திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என சில நாட்களாக செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடித்த "தீனா", சரத்குமார் நடித்த "சமஸ்தானம்", விக்ரம் நடித்த "ஐ" உட்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் சுரேஷ் கோபி.
- எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
- 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.
இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
- தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
திருச்சி:
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரம்மாண்ட மாநாடு நடை பெறுகிறது. அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சா ரியார், திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்மு ருகன் எம்எல்ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறு ப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் கொள்கிறார்கள்.
மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதையொட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. தற்போது அந்தப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மாநாடு நுழைவு வாயில் பகுதி முந்தைய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவில் பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். முகப்பில் கட்சித் தலைவர் திருமாவளவனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார். முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார். பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார்.
முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திறக்கப்பட்ட கலைஞர் சிலையை பார்வையிடுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று கலெக்டர் பிரதீப் குமார் மாநாடு பந்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மத்திய அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் எழுப்பினேன்.
- மத்திய அரசு வழங்கும் மானியத்தில் கர்நாடகா மற்றும் கன்னடர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சிவக்குமார் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கும்போது தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வட இந்தியாவுக்கு திருப்பி விடுவதால் தென் இந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. வளர்ச்சி நிதி சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் மீது புகார் செய்தனர். அதில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக சத்தியபிரமாணம் செய்துள்ள எம்.பி. பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். எனவே அவர்மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இதற்கிடையே பெங்களூரு பன்னார்கட்டாவில் காவிரி குழாய் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டி.கே.சுரேஷ் கூறியதாவது:-
மத்திய அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் எழுப்பினேன். மத்திய அரசின் பாரபட்சமான கொள்கைக்கு எதிராக தமிழகம் உள்பட தென் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் குரல் எழுப்பி உள்ளன. மத்திய அரசிடம் மாற்றான் தாய் மனப்பான்மையை கைவிட சொன்னேனே தவிர நாடு பிரிவினை பற்றி பேசவில்லை.
மத்திய அரசு வழங்கும் மானியத்தில் கர்நாடகா மற்றும் கன்னடர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. கன்னடர்களின் குரலாக இதை பேசினேன். ஆனால் எனது அறிக்கை நாட்டை பிரிப்பது போல் திருத்தி வெளியிடப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி வரிப்பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரூ.50ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்படுகிறது. மாநில வருமானத்தில் 17 சதவீதம் கிடைக்கிறது. வரி வருவாயில் 337 சதவீதம் உத்தர பிரதேசத்திற்கும், 430 சதவீதம் பீகார் மாநிலத்திற்கும் வழங்கப்படுகிறது. இந்த அநீதியை சரிசெய்து சட்டப்படி அரசுக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நான் எங்கும் கூறவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் கன்னடர்களின் சுய மரியாதைக்காக சிறை செல்லவும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தெலுங்கானாவில் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன.
- காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி. சீட் கேட்டு வருகின்றனர்.
தெலுங்கானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோர் மேடக் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர்.
மேலும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் தேர்தலில் சீட் பெற போட்டி போட்டு வருகின்றனர். தெலுங்கானாவில் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட 309 பேர் விருப்பம் தெரிவித்து மனு அளித்து உள்ளனர்.
ஒரு சில கட்சி நிர்வாகிகள் தங்களுடைய பலத்தை காண்பிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி ஊர்வலமாக சென்று விருப்ப மனு அளித்து வருகின்றனர்.
இதேபோல் சந்திரசேகர ராவ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி. சீட் கேட்டு வருகின்றனர்.
இதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேல் இடத்திற்கு அனுப்பி வைத்து அதில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து சீட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தெலுங்கானா மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவி வருவதால் பரபரப்பாக உள்ளது.