என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan Temple"

    • திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
    • வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
    • இந்த கோவில் நாகபட்டிணம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது.

    சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் முருக பெருமான் திருக்கோவில்களில் மிக முக்கியமானது. காரணம் ஆறுபடை வீடிற்கு அடுத்தபடியாக, ஏழாவது படை வீடாய் இருக்கும் அளவு முக்கியத்துவம் பெற்றது என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோவில் ஆச்சர்யமான அமைப்பாக முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

    இந்த கோவில் தமிழகத்தில் நாகபட்டிணம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், நாகபட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார்.

    அதன்படியே இன்றைய கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு. அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்பது நம்பிக்கை.

    சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தில் எழுந்தருளும் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.

    இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுகிறது. இங்கிருக்கும் முருக பெருமானிடம் ஒரு அதிசயம் நிகழ்வதுண்டு. அதாவது சுரபத்மனை வதைக்க இந்த இடத்தில் தான் முருக பெருமான் சக்தி தேவியிடம் வேல் வாங்கினார் என்கிறது புராணம். எனவே இங்கிருக்கும் அம்பால் வேல் நெடுங்கண்ணி என்று அழைக்கப்படுகின்றனர். சூர சம்ஹார நடைபெறும் நாளில் இங்கே அம்பாளிடம் இருந்து முருகன் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அவ்வாறு அவர் வேல் பெறும் ஒவ்வொரு முறை முருகனுக்கு வியர்ப்பதை கண்கூடாக கண்ட பக்தர்கள் பலர் உள்ளனர்.

    இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.

    இந்தக் கோயிலில் முருகப் பெருமான் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அதனால், சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    • இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.
    • முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும்.

    பழமையான கோவில்

    தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள இக்கோவில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும். இக்கோவில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என முன்னர் அழைக்கப்பட்டது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    ராஜகோபுரம்

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    தல வரலாறு

    தேவர்கள், தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார்.

    அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியதாக வரலாறு கூறுகிறது.

    திருச்செந்தூர் சிறப்பு

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப் பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீரவாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைவித்த தாரகாசூரன், சிங்கமுகன், சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவாச்சாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன்,சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப் பெருமானைப்பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப் படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும். அப்போது தான் முருகன் என்பவன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதபூமி திருச்செந்தூர். இது திருநெல்வேலியிருந்து சுமார் 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நக்கீரர் வாக்குப்படி இது முருகனின் ஆறுபடை வீடுகளுள் 2-வது படைவீடாகும். இத்தலத்தில் ஓயாமல் கடல் அலைகள் சுழன்று அடிப்பதால் அலைவாய், திருச்சீரலைவாய் என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் முருகன் சூரனை அழித்து வெற்றி பெற்ற காரணத்தால் ஜெயந்திபுரம் என்றும் செந்திலாண்டவன் கொலுவிருந்து ஆட்சி செய்வதால் செந்திலம்பதி என்றும் இத்தலம் பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளது.

    இத்தலத்தில் சூரசம்ஹார விழாவினைக் காணக்கண்கோடி வேண்டும். மேலும் முருகன் அவதரித்த வைகாசி விசாக நாளும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படும் பெருவிழாவாகும். முருகப் பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்து வரும் போது தமது படைகளுடன் இந்த திருச்செந்தூர் தலத்தில் வந்து தங்கினார். இங்கு தேவ சிற்பி விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கிய செந்திலாண்டவனை தேவகுருவாகிய வியாழபகவான் வந்து பூஜித்தார்.

    அந்த குருபகவானிடமே அசுரர்களின் வரலாறுகளை முருகன் விரிவாகக் கேட்டறிந்தான். அதனால்தான் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    முருகன் வீரபாகுவைத் தூதனுப்பி சூரபத்மனுக்குப் பல அறிவுரைகள் கூறினார். அவன் அவற்றைக் கேட்கவில்லை.

    இதனால் சூரபத்மன் மீது முருகன் போர் தொடுத்தார். கடைசியில் பல மாயங்கள் புரிந்து கடலில் பெரிய மாமரமாய் நின்ற சூரனை தம் வேலால் பிளந்து, ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை சேவல் கொடியாகவும் கொண்டு பகைவனுக்கும் அருள் புரிந்தான் செந்தில் வேலவன்.

    மும்மூர்த்தி முருகன்

    திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.

    நான்கு உற்சவர்கள்

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    சந்தனமலை

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும். இக்கோவில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

    மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோவிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    சக்கரம் கொடுத்த பெருமாள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

    முருகனின் திரு உருவங்கள்

    1. சக்திதரர், 2. கந்தசுவாமி, 3. தேவசேனாதிபதி, 4.சுப்பிரமணியர், 5.கஜவாகனர், 6.சரவணபவர், 7.கார்த்திகேயர், 8.குமாரசுவாமி, 9.சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளிகல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 15. கிரவுஞ்ச பதனர், 16. சிகிவாகனர்.

    பஞ்சலிங்க தரிசனம்

    முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. வெளியிலிருந்தபடி முருகரைத் தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடப்புறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலப்புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.

    • வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
    • விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்படுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வேலுமணி நகர் சக்தி விநா யகர் கோவிலில் பிள்ளையார்பட்டியில் நடப்பது போல் தினமும் கணபதி ஹோமம், மற்றும் மாதம் தோறும் 54 சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கோவில் வளாக த்தில் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக பெரு மானுக்கு கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி வரும் 30-ந்தேதி மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹா ரயாகம், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடை பெற உள்ளது.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூர சம்ஹார விழா நடைபெற உள்ளது. பின்னர் சாந்தி அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 6.30 மணிக்கு வள்ளி தேவசேனா ஆறு முகப் பெருமான் வெள்ளி க்கவசத்தில் அருள் பாலிக்கிறார் . இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்.ஏ, என்.ஆறு முகம், கே.நாகலட்சுமி, 11-வது வார்டு கவுன்சிலர் ஏ.என்.முத்துரமணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்படுகிறது. வரும் 31-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி தேவ சேனா ஆறுமுக பெரு மானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை 11-வது வார்டு கவுன்சிலர் ஏ.என்.முத்துரமணன் தலை மையில் கோவில் நிர்வாக த்தினர் செய்து வருகின்றனர் .

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • நாளை காலை தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடை பெறும்.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை யிலும், மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.

    கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் சத்யகிரீஸ்வரர் முன்னி லையில் சூரனை அழிக்க கோவர்த்தன அம்பிகையிடம் நவரத்தினங்கள் பதித்த வேலை பெற்றார்.

    கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 6 மணி அளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெற உள்ளது. விழாவையொட்டி முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் மீது அமர்ந்து ரத வீதிகள் சுற்றி வந்து சொக்கநாதர் கோவில் முன்பு வீரபாகு தேவருடன் எழுந்தருளுவார்.

    அங்கு சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடை பெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திண்டல் மலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், திண்டல் மலையில் உள்ள வேலாயுத சுவாமி கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

    இதில் 2 கோவில்களிலும் தினந்தோறும் சிறப்பு யாகம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னிமலையில் நேற்று வினை தீர்க்கும் வேலவன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதற்காக சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு மேல் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டது.

    அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது நான்கு ராஜ வீதிகளிலும் முருக பெருமான் பல்வேறு வாகனங்களில் சென்று சூரர்களை வதம் செய்கிறார்.

    இறுதியில் வான வேடிக்கைகள் முழங்க முருகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதேபோல் திண்டல் வேலாயுத சாமி கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    • 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் திருக்கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும்.
    • திருக்கல்யாண உற்சவமும், திருமண விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடத்தில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வருடம்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் திருக்கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும்.

    இதன்படி நேற்று பல்லடத்தில் உள்ள தண்டாயுதபாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு, யாகபூஜைகளும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அன்னை பார்வதியிடம் சக்திவேல் பெறும் வரலாற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் வேலாயுதத்துடன் போர்க்களம் புகும் முருகப்பெருமான், அசுரர்களை வதம் செய்து, சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னிடம் சேர்த்து கொண்டு, ஜெயந்திநாதராக கோவில் திரும்பினார்.பின்னர் சாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மலர், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடைபெற்றது இதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று திருக்கல்யாண உற்சவமும், திருமண விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று ஏடு கொடுக்கும் விழா நடந்தது.
    • விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று ஏடு கொடுக்கும் விழா நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று ஏடு கொடுக்கும் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு காலையில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பின்பு கோவில் ஆஸ்தான மண்டபத்தில் கோயில் ஓதுவார் முத்து விநாயகம் நடராஜர், சிவகாமி அம்மன் முன்பு தேவார பாடல் பாடி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தேரோட்டம் நடந்தது.
    • நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.



    தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்-தெய்வானை.

     திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலை யில் தங்கமயில் , தங்க குதிரை , வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுப்பிரமணியசாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தேரோட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கட்டுப்பாடு களுடன் நடந்தது. கொரோனா பரவல் தடை நீக்கப்பட்ட பின் இன்று நடந்த கார்த்திகை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை 11.30 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்த ருளினர். அதனைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா கோஷம் எழுப்ப பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்ப ரங்குன்றம், மதுரை திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருப்பரங்குன்றத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கார்த்திகை தீபத்திரு நாளான இன்று மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு அதன் பின் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் திருப்பரங்குன்றம் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    சரியாக மாலை 6 மணிக்கு மலை மேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் குவிந்தனர். மகாதீபம் ஏற்றப்பட்ட பின் வீடுகளில் தீபம் ஏற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை கொளுத்தப்படும். இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை (7-ந் தேதி) தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.

    கார்த்திகை திருவிழாவை யொட்டி மலை மற்றும் ரத வீதிகளில் நூற்றுக்க ணக்கான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.


    • இந்த திருக்கோவிலுக்கு தனித்துவம் உண்டு.
    • ஒரு நாளுக்கு ஆறு முறை இத்தல இறைவன் அபிஷேகம் காண்கிறார்.

    முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தனித்துவம் உண்டு. போகர் என்னும் தலைசிறந்த சித்தரால் நவபாஷாணத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது, இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சிலை. இதற்கு செய்யப்படும் அபிஷேக நீர் அருமருந்தாக இருப்பதாக சொல்கிறார்கள்.

    நவபாஷாண சிலையைச் செய்ய, சுமார் 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம், போகர். இந்த சிலையின் நெற்றியில் உள்ள ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் அனைத்தும் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.

    முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய நான்கு பொருட்களால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர், அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருட்களில் சந்தனமும், பன்னீரும் மட்டும்தான் முருகப்பெருமானின் தலை முதல் அடி வரை முழுவதுமாக அபிஷேகம் செய்யப்படும். மற்றவை அனைத்தும் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்பட்டு விடும்.

    ஒரு நாளுக்கு ஆறு முறை இத்தல இறைவன், அபிஷேகம்- அலங்காரம் காண்கிறார். ஒரு முறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யப்பட்டு விட்டால், அடுத்த அபிஷேக நேரம் வரை, முருகப்பெருமானுக்கு மாலை சாற்றுவது, பூக்களால் அச்சனை செய்வது என்று எதுவும் செய்யப்படுவது இல்லை.

    முருகப்பெருமானின் புகழ் பாடியவர்களில் முக்கியமானவர், அருணகிரிநாதர். இவர் ஆரம்ப காலத்தில் தவறான வழியில் சென்று, அதில் இருந்து மீள முடியாமல் மனம் வருந்தினார். பின்னர் தற்கொலை செய்து கொள்வதற்காக திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரை தடுத்தாட்கொண்டு காப்பாற்றி, தன்னைப் பற்றி பாடல்கள் பாடும்படி செய்தார். முருகப்பெருமானைப் பற்றி, அருணகிரிநாதர் பாடிய பாடல்கள், 'திருப்புகழ்' என்ற பெயரில் புகழ்பெற்று விளங்குகிறது.

    பழனி முருகனின் கையில் ஒரு தண்டாயுதம் இருக்கும். மதுரையில் மீனாட்சி அம்மனின் கையில் இருப்பது போல, முருகப்பெருமானின் தண்டாயுதத்திலும் கிளி ஒன்று இருக்கிறது. இந்த கிளி, அருணகிரிநாதரின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. முருகனால் புகழ்பெற்று விளங்கிய அருணகிரிநாதரின் மீது, சம்பந்தாண்டான் என்ற புலவன் பொறாமை கொண்டான். ஒரு முறை பிரபுடதேவராய மன்னனுக்கு ஏற்பட்ட நோயை தீர்க்க யாராலும் முடியவில்லை. அப்போது சம்பந்தாண்டான் நயவஞ்சகமாக, தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை பறிந்து வந்தால்தான், மன்னனின் நோயை குணப்படுத்த முடியும் என்றான். அருணகிரிநாதரால் மட்டுமே இது முடியும் என்று கூறினான்.

    அதைக் கேட்டதும் அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை மூலமாக தன்னுடைய உடலில் இருந்து உயிரை ஒரு கிளி மீது செலுத்தி, விண்ணுலகம் சென்றார். அவர் வருவதற்கு முன்பாக சம்பந்தாண்டான், கோபுரத்தின் மீது இருந்த அருணகிரிநாதரின் உடலை எடுத்து எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர், கிளி ரூபத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அருள் செய்து, கிளி உருவத்தில் இருந்த அவரை தன்னுடைய தண்டத்திலேயே இருத்திக்கொண்டாராம்.

    • புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.
    • ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் முருகன் கோவில். குடவரை கோவிலான இங்கு ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பு சித்திரை 1-ந்தேதி மூலவருக்கு தங்க கவசமும், ஆங்கில வருட பிறப்பு நாள் அன்று மூலவருக்கு வெள்ளிக் கவசமும் சாற்றப்படுவது வழக்கம்.

    நாளை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கருவறையில் உள்ள சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாற்றுபடியாகிறது. இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்படும்.

    உற்சவர் சன்னதியில் உள்ள உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெறும். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
    • சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது.

    சென்னிமலை

    ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூச விழா தான் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

    15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் சுமந்து வந்து முருகனை வணங்கி செல்வர்.

    பக்தி பரவசத்துடன் மேள தாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.

    இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேரோட்டம் கடந்த 5-ந் தேதி காலை தொடங்கி சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை 5.45-க்கு நிலை சேர்ந்தது. இந்த நிலையில் இன்று இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது.

    நாளை இரவு தெப்போற்சவம் பூதவாகனக்காட்சி நடக்கிறது. நாளை மறுநாள் மகாதரிசனம் அன்று காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது.

    அதை தொடர்ந்து இரவு 7.40 மணிக்கு நடராஜ பெருமானும். சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி இரவு முழுவதும் நடக்கும்.

    இதை காண சென்னிமலை நகரில் லட்சக்க னக்காண பக்தர்கள் கூடுவர். தொடர்ந்து 10-ந் தேதி அதிகாலை 5 மணி வரை சுவாமி திருவீதி நடக்கும். இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×