என் மலர்
நீங்கள் தேடியது "New Education Policy"
- நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
- முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை அனுப்பி உள்ளது. அதில்,
* புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் கடந்த ஆண்டு 2ம் வகுப்பு வரை பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.
* நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
* ப்ரீ கேஜிக்கு 3 வயதும், எல்கேஜிக்கு 4 வயதும், யுகேஜிக்கு 5 வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.
* முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
- ‘ஸ்ரீ பள்ளிகளை’ தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.
- புதிய கல்விக்கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் ஸ்ரீ பள்ளிகளாகும்
பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் தேசியக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி 'ஸ்ரீ பள்ளிகளை' தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ்நாட்டில் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது மெல்ல மெல்ல பாஜகவின் புதிய கல்விக்கொள்கையை நுழைப்பது தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.
புதிய கல்விக்கொள்கையின் அனைத்து கூறுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி திட்டம்தான் ஸ்ரீ பள்ளிகளாகும். அதனை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திமுக அரசு புதிதாக குழு அமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை, ஒன்றியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு ஒற்றை மயத்தையும், காவிக்கொள்கையையும் திணிக்கும் பொருட்டு மோடி அரசால், எதேச்சதிகாரப்போக்கோடு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றெனக் கூறி, புதிதாக மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்க கடந்த 2022ஆம் ஆண்டு சூன் 1 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு.
ஆனால் ஓராண்டுக்குள் தேசியக் கல்விக்கொள்கைக்கு சாதகமாக மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதாக குற்றம் சுமத்தி, அக்குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் விலகியது திமுக அரசு உருவாக்கவுள்ள கல்விக் கொள்கையின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையின் கூறான இல்லம் தேடிக்கல்வியை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியதும், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்ததும், பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை விமர்சித்ததற்காக ஆசிரியர் உமாமகேசுவரியை அண்மையில் பணி இடைநீக்கம் செய்து தண்டித்ததும் திமுக அரசின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியது.
தற்போது அத்தனை சந்தேகங்களையும் உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை முற்று முழுதாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த 'ஸ்ரீ பள்ளிகளை' தொடங்கும் திமுக அரசின் முடிவு பாஜகவின் கைப்பாவையாகவே திமுக செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.
மாநிலத் தன்னாட்சியென வாய்கிழியப்பேசும் திமுக, மாநில அரசின் தன்னுரிமையைக் காவுகொடுத்து, பாஜக அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா? சனாதனத்திற்கு எதிரானது திராவிடமென முழங்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கல்வியைக் காவிமயமாக்க எப்படித் துணைபோகிறார்? இதுதான் சமூகநீதி ஆட்சியா? இதுதான் இருளகற்றும் விடியல் ஆட்சியா? இந்துத்துவ பாஜக அரசு முன்வைக்கும் ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் உங்களது பாசிச எதிர்ப்பா முதல்வரே?
இதுதான் ஆரியத்தைத் திராவிடம் வீரியமாக எதிர்க்கின்ற முறையா? ஒன்றிய அரசு மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த ஒரு துரோகம் போதாதா? மக்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? இந்திய ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; திராவிட ஆட்சியின் மூலவரான அறிஞர் அண்ணா அவர்களுக்கே செய்யும் கொடுந்துரோகமாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் திமுக அரசு இனியாவது தனது தவற்றை உணர்ந்து, பாஜகவின் வர்ணாசிரம கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, சமூகநீதி அடிப்படையில் தனித்துவமிக்க மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது.
- இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது.

காலை உணவு திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
என்ன ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் நம் அரசு உடனடியாக அதை கவனத்தில் எடுத்து தீர்த்து வைக்கிறது. நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம்.
பொய் செய்திகள் மூலம் ஒரு சில கருத்துக்கு வாசகங்கள் உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கிற மக்கள் விரோத சக்திகளின் அஜண்டா எந்த காலத்திலும் நடக்காது.
ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பயனபெறக் கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக காலை உணவுத் திட்டம் நமது திராவிட மாடல் அரசுக்கு நீடித்த புகழை தேடித்தந்துள்ளது.
நாம் தொடங்கிய பின்புதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த ஊரிலேயும், எந்த பள்ளியிலும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது.
உங்கள் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி கவனமாக பார்த்துக் கொள்வீர்களோ அந்த மாதிரி, அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சாப்பாட்டையும் கவனமாக சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
நான் ஆய்வுக்கு வெளியூர் போகும்போது ஏதாவது ஒரு பள்ளிக்கு திடீரென்று செல்கிறேன். அங்கிருக்கும் பிள்ளைகளுடன் பேசுகிறேன். காலை உணவு எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன். அந்த உணவை நானே சாப்பிட்டும் பார்க்கிறேன்.
அமைச்சர் உதயநிதி கூட சுற்றுப்பயணம் போகும் போதும், நிகழ்ச்சிகளுக்கு போகும்போதும் இந்த மாதிரி ஆய்வு செய்வதை பார்க்கிறேன். மற்ற அமைச்சர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். எ
எனவே மற்ற அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட கலெக்டர்களும், அதிகாரிகளும் அவரவர் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் திடீர் திடீரென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரொம்ப பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட மாடல் அரசையும், என்னையும் பொருத்த வரைக்கும் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று நினைக்கி றோம். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடையை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி.
நீட் தேர்வை நான் எதிர்க்கத் தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் எதிர் கேள்வி கேட்டனர். ஆனால் இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கிற முறைகேடுகளை பார்த்து உச்சநீதிமன்றமே கேள்வி கேட்கிறது.
மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகிறது. பல முதல்-அமைச்சர் கள், தேசிய தலைவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசிய லுக்காக இப்போது நெருக்கடி நிலையை பற்றி பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறது.
ஆனால் நாம் அவர்களி டம் கேட்கும் கேள்வி, நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநில பட்டிய லுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா? நம்மை பொருத்தவரை நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை தேவையற்றது.
அதனால்தான் எதிர்க்கிறோம். ஒரு பக்கம் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்துகிறோம். இன்னொரு புறம் மாணவர்களின் நன்மைக்காக பள்ளிக்கல்வி, கல்லூரிகள், உயர்கல்விகளுக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம். எனவே தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
நான் திரும்பவும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும். மாணவச் செல்வங்களே படியுங்கள். நீங்கள் உயர படியுங்கள். நீங்கள் உயர உங்கள் வீடும் உயரும். இந்த நாடும் உயரும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- இந்தியாவை முன்னேற்றும் இலக்கின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கைக்கு வித்திட்ட மோடியின் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிட்டு சிலாகித்தார்.
- கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப்பபோவதில்லை என்பதை மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 55 மாவட்டங்களில் பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் திட்டத்தை நேற்று காணொளி காட்சி வாயிலாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2047 க்குள் இந்தியாவை முன்னேற்றும் இலக்கின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கைக்கு வித்திட்ட மோடியின் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிட்டு சிலாகித்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் நடந்த பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் தொடக்க நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ பன்னலால் ஷக்யா, படித்து டிகிரி வாங்குவதால் எந்த பயனும் இல்லை, மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பஞ்சர் கடை போட்டு பிழைக்க வேண்டும் என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, நாம் இன்று பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸஸை தொடங்கி வைக்கிறோம். கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப்பபோவதில்லை என்பதை மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். டிகிரி வாங்குவதால் எந்த பயனும் இல்லை, எனவே மாணவர்கள் குறைந்தபட்சம் மோட்டார் சைக்கிள் பஞ்சர் கடை போட்டு பிழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது.
- தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.
தேசிய கல்விக்கொள்கையை [2020] ஏற்காததால் 2024-25 நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை மத்திய அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. தாமதமின்றி மாணவர்கள் நலனுக்காக இந்த தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சென்றடைய வேண்டும். தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.
சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம். பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும், அதனை ஏற்க நாங்கள் தயாராக இல்லை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை.
சிவகிரி:
மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி அருகே நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ளையர்களை எதிர்த்து வீரவாள் சுழற்றி போரிட்ட மாமன்னர் பூலித்தேவரின் வீரமும், திமிரும் தமிழர்களாக எங்களுக்கும் உண்டு. பீரங்கியும், துப்பாக்கியையும் எதிர்த்து வெறும் வாளையும், வேலையும் கொண்டு யுத்தம் செய்த பெரும் பாட்டனார் பூலித்தேவர்.
திரை உலகத்தில் மட்டுமல்லாது, பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறையை பொறுத்தவரையில் குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த துறையிலும் இதுபோன்று நிலை ஏற்படக்கூடாது.
தற்போது கேரவன் போன்ற வாகனங்களில் கூட காமிராக்கள் அமைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடிப்பது அநாகரிகமான செயல். இது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காது என்பதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
உலகிற்கே அறிவை கடன் கொடுத்த மக்கள் நாங்கள். புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை. குல கல்வி முறையை மறுபடியும் ஊக்குவித்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கை ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசியக் கல்விக் கொள்கையை, மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது
- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அரசு பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுகள் தனிக்கொள்கையை கடைபிடிக்க வகை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பி.எம்ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டதால், ஒருங்கிணைந்தக் கல்வித் திட்டத்தின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை வழங்காமல் பல மாதங்களாக மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதை காரணம் காட்டி மத்திய அரசு நிதியை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என்று பல தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிபட தெரிவித்திருக்கிறது.
ஆனால், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைத் தான் மத்திய கல்வி மந்திரியின் கருத்துகள் காட்டுகின்றன. மும்மொழித் திணிப்பு என்ற போர் தமிழகத்தின் மீது 80 ஆண்டுகளுக்கு மேலாக தொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் போரில் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு மக்கள் தான் வென்று வருகின்றனர். 1963-ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்த போது, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடிக்கும்; இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
பொதுப்பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில், தேசிய அளவிலான கல்விக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. அதன்படி கடந்த காலங்களில் பல மாநிலங்கள் தங்களுக்கென்று தனிக் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளன. இப்போதும் கூட தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்து இன்னும் செயலாக்கம் செய்யாமல் வைத்திருக்கிறது. இது மாநில அரசின் உரிமை. இதை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அந்த நிதி தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு தானே தவிர, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காகவோ, முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவோ வழங்கப்படும் வெகுமதி அல்ல. அதனால், தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டிற்கான நிதியையும் இணைத்து மத்திய அரசு குழம்பிக் கொள்ளக் கூடாது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. எனவே, நியாயத்தையும், மாநில அரசின் உரிமைகளையும் மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மொழி அரசியல் செய்து வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மும்மொழி கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு என்பது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக திட்டங்களை வகுக்கவும், கொள்கைகளை உருவாக்கவும் மோடி அரசுக்கு மக்கள் அதிகாரம் வழங்கியிருக்கிறார்கள். அதன்படியே மோடி அரசு பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்து வருகிறது அதில் ஒன்றுநான் புதிய தேசிய கல்விக் கொள்கை
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அரசு பள்ளிகளை மேம்படுத்த பிஎம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ) மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்திற்கான நிதி மட்டும் என்று திமுக அரசு கேட்கிறது. திட்டத்தை செயல்படுத்தினால் தான் சட்டப்படி நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறி இருக்கிறார். இதை வழக்கம்போல திரித்து, மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவினர் செய்து வருகின்றனர்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க சொல்வது, இந்தி திணிப்பு. என்றும் மும்மொழி கொள்கை திணிப்பு என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். இது அப்பட்டமான பொய். புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி எங்கும் திணிக்கப்படவில்லை. தாய்மொழி, ஆங்கிலம், அதற்கு அடுத்து மாணவர்கள் விரும்பும் மொழி என்றுதான் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெலுங்கு கன்னடம் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கோடிக்கணக்கில் வசிக்கிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் அவர்கள், தங்கள் தாய்மொழியை கற்க முடியும். அந்த வாய்ப்பை திமுக அரசு ஏன் மறுக்கிறது? அப்படி மறுப்பது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்லவா?
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று திரும்பத் திரும்ப திமுக அரசு கூறுகிறது அதன் மூலம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை இல்லாமல் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சிக்கின்றனர்.
தமிழகத்தில் பல பத்தாண்டுகளாகவே மும்மொழி கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் மும்மொழி கொள்கை இருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளிகள் அனைத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றும் பள்ளிகள் தான். முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தான். திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்கிறது. சில பள்ளிகளில் நான்காவது மொழியாக சமஸ்கிருதம், பிரெஞ்சு ஜெர்மன் போன்ற மொழிகளையும் வைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பட்டியலின் பழங்குடியின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழி கொள்கை கூடாது என்கிறது திமுக அரசு. இது. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் அல்லவா! அரசு ஒரு கொள்கையை உருவாக்கினால், அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு கொள்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கொள்கை என இருந்தால் எப்படி சமத்துவம் உருவாகும்! சமூக நீதி கிடைக்கும்?
குறைந்தபட்சம் திமுகவினர். தங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளிலாவது இரு மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்க வசதிகளை ஏற்படுத்தி விட்டு ஏழ மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை, மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்தாலும், அதை தடுப்பது சமுக அநீதி இதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பழி போட்டு மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்க நினைத்தால். அது இனி வெற்றி பெறாது. இதனை உணர்ந்து தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும். மும்மொழிக் கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" என அமைச்சர் தெரிவித்தார்.
- நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்” என அமைச்சர் சொன்னார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "கல்வி நிதி விடுவிப்பு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்தபோது, "மும்மொழிக் கொள்கையை ஏற்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்? கல்வியில் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள். நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்" எனச் சொன்னார்.
இவ்வளவு உத்வேகமாக பேசிவிட்டு, "PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்.. 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார். இதைத்தான் நமது முதலமைச்சர் 'BLACK MAIL' எனக் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.
- தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது.
- காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆளும் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் போலீசாரால் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார்.
புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினால் தமிழகத்திற்கு வேண்டியதை மோடி நிச்சயம் செய்வார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர். எனவே மீண்டும் மொழிப்போர் என பொய் பிரசாரம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.