என் மலர்
நீங்கள் தேடியது "palm seeds"
- மண்டபம் அருகே மானாங்குடியில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.
- காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.
காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பனை மர விதைகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முஹமது சலாவுதீன், மாவட்ட தலைவர் ராஜ கோபால், துணை தலைவர் பத்ம நாபன், ராமநாதபுரம் நக ராட்சி தலைவர் கார்மே கம், துணை தலைவர் பிர வீன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், இருமேனி ஊராட்சி தலை வர் சிவக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன், ராம நாதபுரம் நகராட்சி கவுன்சி லர் ஜஹாங்கீர் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதைதொடர்ந்து மானாங்குடி ஊராட்சி நாக நாதர்கோவில்- சின்னுடை யார்வலசை வரை ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையை மக்கள் பயன் பாட்டிற்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இதில் ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன், துணை தலைவர் புஷ்பம் மேகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்குமார், உஷா நந்தினி, ரஞ்சிதம், ஜோதி, நித்யா, ஊராட்சி செயலர் கருணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
- திருத்துறைப்பூண்டியில் 1 லட்சம் பனைவிதைகள் நடும் பணி தொடங்க உள்ளது.
- பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார், முசிறி விதை யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் பணி இந்த வாரம் இறுதியில் (செப்டம்பர்) தொடங்க உள்ளது.
இதற்காக பனை விதைகள் சேகரிப்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.
இந்த பணியை சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பணிகள் முடிந்த பிறகு நெடுஞ்சாலைகள், ஆற்றங்கரைகள், குளம், வாய்க்கால், ஓடை, பள்ளி, கல்லூரி, கோவில் வளாகங்க ளில் பனை விதைகள் நடும்பணி தொடங்கும்.
இப்பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சேவை அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.
இப்பணி முழுக்க மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பனை விதைகள் நடும் தொடக்க விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
- நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பை யூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரி யம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி, சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாரா யணன் வழிகாட்டுதலின் படி பனை விதை நடும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வ நாதன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், பனைமர வாரிய ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கலா கணேசன்,
சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் பி.ஜி.ஜெகன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முரு கன், சாயல்குடி பேரூர் கழக செயலாளர் ஜெயபால், நகர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் குலாம் மைதீன், ஆப்பனூர் ஆறுமுக வேல், கோவிந்தராஜ், அண்ணாமலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநி திகள், பனைமர தொழிலா ளர் நலவாரியம் சார்ந்தோர், மற்றும் பொதுமக்கள், தமிழ் நாடு நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.
- பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழாவில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னமாரிமுத்து, வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வமணி, சுமதி இம்மானுவேல், செந்தூர்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், துணை அமைப்பாளர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் பால்பாண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித்குமார், வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனா மேரி, ஒன்றிய துணை செயலாளர் புனிதா, ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன், மீனவர் அணி துணை அமைப்பாளர் மரியசிங்கம், தொண்டரணி துணை அமைப்பாளர் சிம்மராசி, கிளை செயலாளர்கள் ராஜபாக்கியம், நல்லமுத்து, சரவணன், கண்ணன், முனியசாமி, அழகர்சாமி, ஆதிநாராயணன், சேவியர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்பப்பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சுயம்புலிங்கசுவாமி கோவில் கடற்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நாட்டுநல பணி திட்ட மாணவ -மாணவிகள் பனைவிதைகளை விதைத்தனர்.
திசையன்விளை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி சார்பில் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் கடற்கரையில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மேஜர்ராஜன் தலைமை தாங்கினார். உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், கல்லூரி தமிழ் துறை தலைவர் நிர்மலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நாட்டுநல பணி திட்ட மாணவ -மாணவிகள் பனைவிதைகளை விதைத்தனர். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலபணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளியப்பன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
- எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் மாணவிகளுக்கு பனை விதைகளை நடும்முறை குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் திருச்செந்தூர் பகுதி பனை வாரியத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதை நடும் பணியின் ஒரு பகுதியாக வீரபாண்டி யன்பட்டிணம் அருகில் உள்ள ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரி முதல்வர் முனைவர் பொ. ஜெயந்தி வழிகாட்டுதலின்படி பனை விதைகளை நடும் பணி நடைபெற்றது.
5 ஆயிரம் பனை விதைகள்
அதற்கு முதற்கட்டமாக கல்லூரி மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து அவற்றை ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரியின் நாட்டு நலப்பணி த்திட்ட மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும்பணியில் பனை வாரிய தனிச்செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாணவிகளுக்கு பனையின் இன்றியமையாமை குறித்தும், வருங்கால சந்ததியினருக்கு பனை பயன்படும் விதம் குறித்தும் இன்றைய தலைமுறை யினரின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார். எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் மாணவிகளுக்கு பனை விதைகளை நடும்முறை குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எல்-பாஸ் விழிப்பு ணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், மாவட்ட பொறுப்பாளர் காமராசு நாடார், பனை வாரிய தனிச்செயலாளர் ஜெபராஜ் டேவிட், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, கவுன்சிலர் சுகு, திருச்செந்தூர் பனை வாரிய உறுப்பினர்கள் ஆன்டோ, பிரிட்டன், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஜான்சி ராணி, முனைவர் சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.
- வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணி நடந்தது.
- பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அ. டயானா ஷர்மிளா தலைமையில், பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
இதில் வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் எம். பொன்னுசாமி, கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய் துறை அலுவலகர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது.
- இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் ஏரியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் வரவேற்றார். அரிமா வட்டார தலைவர் ஜவஹர், டாக்டர் பொன்னம்பலம், பொருளாளர் கலைஞர்புகழ், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தேன்மொழி சண்முகம், ஊராட்சி செயலாளர் குமரேசன், தலைமையாசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் ரமேஸ், பா.ம.க. ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, மக்கள் நலப் பணியாளர் தனபால், கிராம உதவியாளர் கணேசன் மற்றும் அம்மாசி ஆகியோர் கொண்ட குழுவினர் 2ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். முடிவில் பிரவீன் நன்றி கூறினார்.
- நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- நட்டாத்தியின் தென்புறம் கண்ணான்டி விளை வரை நட்டாத்தி- பட்டாண்டி விளை மெயின் ரோட்டின் ஓரங்களிலும் பனை விதைகள் நடப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பஞ்சா யத்துக்கு உட்பட்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 1,200 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். ஏரல் நகர செயலாளர் திரவியம், நகர தலைவர் பாஸ்கர், மாவட்ட தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நட்டாத்தியின் தென்புறம் கண்ணான்டி விளை வரை நட்டாத்தி- பட்டாண்டி விளை மெயின் ரோட்டின் ஓரங்களிலும் பனை விதைகள் நடப் பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீவை குண்டம் வடக்கு தொகுதி தலைவர் அருண் ஆறுமுகம், தொகுதி பொருளாளர் இஸ்ரவேல், தெற்கு தொகுதி பொறுப் பாளர்கள் ஐகோர்ட் ராஜா, ஐசக், கணேசன். கருங்குளம் ஒன்றிய செயலாளர் சந்தனராஜ், மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை இணை செயலாளர் பேச்சிராஜா, ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் சுடலைக்கண்ணு, சுடலைமுத்து, கருங்குளம் ஒன்றிய துணை தலைவர் சண்முகவேல், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் காசிபாண்டியன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சேது, ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய இணை செயலாளர் வாசிம், துணை செயலாளர் ஆறுமுகம், சாயர்புரம் நகர இணை செ யலாளர் ஆரோக்கியமணி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் சங்கர், சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சிவராமமூர்த்தி, ஏரல் நகர இணைச் செயலாளர் ஆத்திராஜ், ஏரல் நகர துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனைமர விதைகள் நடும் விழா நடைபெற்றது.
- திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டு அப்பணியை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத்தின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எல்பாஸ் விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனை மர விதைகள் நடும் விழா நடைபெற்றது. நாடார் வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி ஆணையர் கண்மணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் ஆசிரியர் பயிற்றுநர்கள் நபில் புஹாரி, ஜெகதீஸ்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டு அப்பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்செயலர் டாக்டர் எஸ்.யாபேஷ், நாடார் வியாபாரிகள் சங்க செயலர் செல்வக் குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர் அழகேசன், துணைச்செயலர்கள் சத்தியசீலன், பால கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எல்பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் நன்றி கூறினார்.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ.4.10 லட்சம் செலவில் ஏரிக்கரை கரைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது.
புதுச்சேரி:
பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கல் ஏரியைதூர்வாரி, கரைகளை சீரமைத்து, பாக்கியலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் உட்புகுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், தனியார் நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதியின் மூலமாக காட்டுக்குப்பம் ஏரியை கரைகளை சீரமைத்திட முன் வந்தது.
இதையடுத்து ரூ.4.10 லட்சம் செலவில் ஏரிக்கரை கரைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது.தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதி சுற்றிலும் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் சுகுமார், மனிதவள துறை பொது மேலாளர் சோன் செரியன், முதன்மை அதிகாரி விவேக் கண்ணன், கலந்து கொண்டு பனை விதை நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜன், இளநிலைப் பொறியாளர் நடராஜன், காட்டுக்குப்பம் பாக்கியலட்சுமி நகர் குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏரியின் கரையை மேம்படுத்தி தந்த செந்தில்குமார்
எம்.எல்.ஏ.மற்றும் தனியார் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- கடலோர கிராமங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் சுனாமி புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, காமேஷ்வரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களை பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
பிரதாபராமபுரம், விழுந்த மாவடி, காமேஸ்வரம், , நாகூர் பட்டினச்சேரி, வேட்டைக்காரன் இருப்பு, உள்ளிட்ட 24 மீனவர் கிராமங்களில் 7.1/2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டு இருப்பதாகவும் இப்பணியில் கல்லூரி மாணவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தன்னார்வு அமைப்பினர் ஈடுபட்டதா கவும் இதன் மூலம் வரும் காலங்களில் கடற்கரை ஓரம் இயற்கை பேரிடர் இருந்து பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
குறிப்பாக பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள கடற்கரைப் பகுதியில் ஆய்வுமேற்கொண்ட கலெக்டர் 4 ஆண்டுகளில் இந்த கிராமத்தில் மட்டும் 5 லட்சம் பண விதைகள் நடப்பட்டு தற்போது நன்கு வளர்ந்திருப்பதாகவும், இதில் 90% மரக்கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து இருப்பதாகவும் அடுத்த கட்டமாக உள் கிராமங்களில் தமிழ்நாடு கிரீன் விஷன் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்தார்.