என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panguni uthiram"

    • தேரோட்டம் ஏப்ரல் 4-ந் தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 7 மணி அளவில் அங்குள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடி மரத்திற்கும், சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜைகள் நடக்கிறது. 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனையை தொடர்ந்து 7.35 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • தேரோட்டம் 4-ந்தேதி நடைபெறுகிறது.
    • 7-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகன் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    மேலும் கோடைவெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்த காவடி எடுத்து வந்துஅபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும். சிறப்பு வாய்ந்த இத்திருவிழா வருகிற 29-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் மலைக்கோவிலில் உச்சிகாலத்தில் காப்பு கட்டு நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி தினசரி தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியாலான காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளிரதத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 4-ந்தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • 26-ந் தேதி அய்யா முத்து பல்லக்கில் ஊர் உலா வருதல் நடக்கிறது.
    • 31-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    முள்ளுவிளை மேற்கம்பதி பெருநெல்குடிவிளை நாராயணசாமி தேவஸ்தான பங்குனி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    நாளை மறுநாள் இரவு 8 மணிக்கு அய்யா சப்பர வாகனத்திலும், 26-ந் தேதி மதியம் 3 மணிக்கு அய்யா முத்து பல்லக்கில் ஊர் உலா வருதலும், இரவு 8 மணிக்கு அய்யா முத்து பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி இரவு 8 மணிக்கு அய்யா காமதேனு வாகனத்திலும், 28-ந் தேதி அய்யா சர்ப்ப வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

    29-ந் தேதி இரவு 7 மணிக்கு சமய வகுப்பு ஆண்டு விழா நிறைவும், பரிசு வழங்குதலும், 8 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் எழுந்தருளலும், 30-ந் தேதி இரவு 8 மணிக்கு அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    31-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளலும், ஏப்ரல் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு பகவதி அம்மன் திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பும், 8 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெறும்.

    2-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் வடவீதி ஊர்வலம் வருதலும், 3-ந் தேதி காலை 8 மணிக்கு தென் வீதி சந்தன குட ஊர்வலமும், நண்பகல் 12½ மணிக்கு தேரோட்டமும் நடைபெறும்.

    பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி சிங்காரி மேளமும் பரிசு வழங்குதலும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் மதியம் 1 மணிக்கு அன்ன தர்மம் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • இந்த திருவிழா ஏப்ரல் 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந்தேதி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரிஅருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடை பெறுவது வழக்கம். அதே போல இந்தஆண்டுக்கான பங்குனி தேரோட்ட திருவிழா வருகிற 24-ந்தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்ததிருவிழாஅடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி 1-ம் திருவிழாவான நாளை (24-ந்தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு முட்டப்பதி திருபாற் கடலில்அய்யாவழிபக்தர் கள்தீர்த்த மாடி பதமிடும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கி றது. இரவு 7.30 மணி க்குஅய்யா கருட வாகனத் தில்எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதா ளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 25-ந்தேதி முதல் 7-ம் திருவிழாவான 30-ந்தேதி வரை தினமும் பணிவிடைகள், உச்சிப்படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு7-30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் 4 மற்றும்5-ம்திருவிழா அன்று இரவு 7-30மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 6-ம் திருவிழா அன்று இரவு 7-30 மணிக்கு சர்ப்ப வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 7-ம் திருவிழாஅன்றுஇரவு7-30 அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    8-ம் திருவிழா வான 31-ந்தேதி இரவு அய்யா வைகுண்டசாமி முட்டப்பதி கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்றுஅதிகாலை 4 மணி க்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்ப டிப்பும் நடக்கிறது. பகல் 12மணிக்குஉச்சிப்படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு 11 மணிக்குஅன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழா வான அடுத்த மாதம் (ஏப்ரல்) 1 மற்றும் 2-ந்தேதிகளில் இரவு7-30மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம்வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (4-ந்தேதி) அதிகாலை திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தாஆர்.பாலசுந்தர ம், தர்மகர்த்தா ஆர்.செல்வராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • நாளை உற்சவபலி தரிசனம், முளபூஜை, புஸ்பாபிஷேகம் நடக்கிறது.
    • 29-ந்தேதி ராமபிரானுக்கு தங்க அங்கி சார்த்துதல் நடக்கிறது.

    தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் 1744-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டப்பட்ட ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு பூஜைகள், தொடர்ந்து கோவில் மேல்சாந்தி மனோஜ் வெங்கிடேஸ்வர ஐயர் முன்னிலையில் இடைக்கோடு புதுப்பள்ளி மடம் தந்திரி ஸ்ரீதரருநாராயணரு பூஜைகளை நடத்தினார். காலை 8 மணிக்கு கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் சுதர்சனகுமார், கோவில் ராமயோத்தாஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தொடர்ந்து களபாபிஷேகம், சாயரட்சை பூஜை, இரவில் திருவிளக்குபூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவானது 30-ந்தேதி வரை நடக்கிறது.விழா நாட்களில் தினமும் திருப்பள்ளி எழுச்சி, கணபதி ஹோமம், உஷபூஜை, தீபாராதனை, நவகலகபூஜை மற்றும் காலை, இரவு வேளைகளில் சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் நாளை (சனிக்கிழமை) காலை உற்சவபலி தரிசனம், இரவு முளபூஜை, புஸ்பாபிஷேகம், 27-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நாகருக்கு பொங்கல் வழிபாடு, 29-ந்தேதி மாலை 5.30 மணிக்கு ராமபிரானுக்கு தங்க அங்கி சார்த்துதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 30-ந்தேதி காலை 6 மணிக்கு பசுவும் கன்றுடன் சாமி கனிகாணுதல், தொடர்ந்து சாமிக்கு வெள்ளி முகம் சார்த்துதல், மாலை 5.30 க்கு சாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், இரவு 8 மணிக்கு ஆராட்டு தொடர்ந்து வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்ரீராமயோத்தாஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • 3-ந்தேதி தேரோட்டம், சப்தவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.

    பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரு கொடிமரத்தில் கொடியேற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பஜனை, தோல்பாவை கூத்து, இன்னிசை கச்சேரி, வாகன பவனி போன்றவை நடைபெறுகிறது.

    விழாவில் 29-ந்தேதி காலை 6 மணிக்கு அனுமார் வாகனத்தில் சாமி பவனி வருதல், 8 மணிக்கு மரப்பாணி பூஜை, உற்சவபலி, இரவு 9.30 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சாமி பவனி வருதல் ஆகியவை நடைபெறுகிறது.

    30-ந்தேதி காலை 6 மணிக்கு கற்பக விருஷ வாகனத்தில் சாமி பவனி வருதல், மாலை 6 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மண்டகப்படி, இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியருளுதல், 10 மணிக்கு கருட வாகனத்தில் சாமி எழுந்தருளுதல் நடக்கிறது.

    7-ம் நாள் விழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி காலை 6 மணிக்கு பல்லக்கில் சாமி பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 9.30 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி பவனி வருதல், 2-ந் தேதி காலை 5.30 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி பவனி வருதல், இரவு 7 மணிக்கு நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு பூ பந்தல் வாகனத்தில் நடராஜமூர்த்தி பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

    3-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தவர்ண நிகழ்ச்சி மற்றும் வெள்ளி கருட வாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 4-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி ஆராட்டு துறைக்கு எழுந்தருதல், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மது சூதனப்பெருமாள் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • இந்த விழா 26-ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 4-ந்தேதி ஓடுக்கு பூஜை, பொங்கல் வழிபாடு, வாணவேடிக்கை நடக்கிறது.

    நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. அதன்படி விழாவின் முதல்நாளான நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 4.30 மணிக்கு அபிஷேகம், கணபதி ஹோமம், 5 மணிக்கு அம்மச்சியார் பொட்டல் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து யானை மீது கொடி பவனி வருதல், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு உஷபூஜை, 730 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

    தொடர்ந்து 8 மணிக்கு நடைபெறும் இந்து சமய மாநாட்டுக்கு மாலதி சிவன் குத்துவிளக்கேற்றுகிறார். மாதா அமிர்தானந்தமயி மடம் பிர.நீலகண்டாம்ருத சைதன்யா சுவாமி, சாமிதோப்பு குரு சிவச்சந்திரன், சென்னையை சேர்ந்த முரளி வேலப்பதாஸ் சுவாமிகள் ஆன்மிகவுரையாற்றுகிறார்கள். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசுகிறார். காலை 8.30 மணிக்கு பஜனை, 9 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனி, 10.30 மணிக்கு கருமன்கூடல் சிவசுடலைமாட சாமி கோவிலில் இருந்து அம்மனுக்கு பூஜை பொருட்கள் எடுத்து வருதல், 11 மணிக்கு களபாபிஷேகம், கலசபூஜை, 12 மணிக்கு அலங்கார சிறப்பு பூஜை, பகல் 12.05 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பஜனை, 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, தேவி பூஜை நடக்கிறது.

    திருவிளக்கு பூஜையை கருமன்கூடல் தங்களம் மனோகர் தொடங்கி வைக்கிறார். இரவு 8.30 மணிக்கு அன்னதானம், பட்டிமன்றம் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, பகல் 11.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பஜனை, இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 8-ம் நாளான அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டைக்காடு கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வருதல், 6 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கான பேச்சு மற்றும் பாட்டுப்போட்டிகள் நடக்கிறது.

    3-ந்தேதி காலை 8.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 10 மணிக்கு ஆயில்ய பூஜை வழிபாடு, மதியம் 1 மணிக்கு யானை மீது சந்தனகுடம் பவனி, மாலை 5.30 மணிக்கு வளர்பிறை பிரதோஷ வழிபாடு ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 4-ந்தேதி காலை 7 மணிக்கு கடலுக்கு சென்று நீராடி புனித நீர் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவ-மாணவிக்கு பரிசு வழங்குதல், 10 மணிக்கு கொடை அலங்கார பூஜை, 11 மணிக்கு கொடை விழா, அதிகாலை 2 மணிக்கு ஓடுக்கு பூஜை, தொடர்ந்து பொங்கல் வழிபாடு, வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நீலகண்டன் நாடார், குமரேசன், சடையன், நாகராஜன் மற்றும் செயற்கழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இன்று காப்பு கட்டும் உற்சவம் நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கிராம தேவதைகளான அய்யனார் மற்றும் செல்லியம்மன் சாமிகளுக்கு காப்பு கட்டும் உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் காலை 9 மணி அளவில் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

    விழாவில் வருகிற 3-ந்தேதி தேரோட்டமும், 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி 4-ந்தேதி அதிகாலையில் உற்சவமூர்த்திகள் விருத்தாசலம் திருமுதுகுன்றத்தில் எழுந்தருள உள்ளனர். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.

    பின்னர் மாலையில் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியும், அதைத்தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் பழனியம்மாள், சரக ஆய்வர் கோவிந்தசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
    • 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 5 மணியில் இருந்து 6 மணிக்குள் சன்னதிக்கு முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சி கால சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சிகால பூஜையும், 11 மணிக்கு சப்பரத்தில் உற்சவ அய்யனார் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    6-வது திருநாளான 31-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 10-ம் திருநாளான 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    அன்று காலை 10.30 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து 2 மணிக்கு பக்தர்கள் சுவாமிக்கு நேமிசங்கள் செலுத்தி வழிபடுகின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வந்த போதிலும், இந்த கோவிலுக்கு உகந்த திருவிழாவாக பங்குனி பெருவிழா போற்றப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இந்த விழா அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.

    திருவிழா முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர்கள் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது.

    நாளை (27- ந்தேதி) விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது. இதேபோல தினமும் இரவு 7 மணியளவில் விதவிதமான வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி நகர உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த (ஏப்ரல்) மாதம் 1-ந்தேதி கைப்பாரமும், 5-ந்தேதி பங்குனி உத்திரமும், 6-ந்தேதி சூரசம்கார லீலையும், 7-ந்தேதி பட்டாபிஷேகமும், 8-ந்தேதி திருக்கல்யாணமும், 9-ந்தேதி கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது.
    • 6-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 7 மணியளவில் அங்குள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெறுகிறது.

    முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு காலசந்தி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. காலை 7.35 மணிக்கு சுவாமி வள்ளி-தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை வந்தடைந்த உடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, நடைபெறுகிறது. 6-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் இரவு 7 மணிக்கு ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 4-ந்தேதி சாமி கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழாவின் நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.45 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, சாமி வாகனத்தில் பவனி வருதல், கதகளி, தேவார பஜனை, திருவாதிரைக்களி, ராமாயண பாராயணம் போன்றவை நடைபெறும். வருகிற 31-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு கிராதம் கதகளி ஆகியவை நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் நடக்கிறது.

    ஆராட்டு ஊர்வலம் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக நடைபெறும். ஆராட்டு விழா முடிந்த பின்பு கோவிலுக்கு சாமி திரும்புதல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    ×