என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliamentary elections"

    • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.
    • தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள்.

    மதுரை:

    மதுரையில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்க அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர். தி.மு.க. என்றாலே ஊழல் என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. ஒரு கட்சி என்பது அனைத்து மதத்துக்கும் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற கட்சி என்று தி.மு.க. கூறிக்கொண்டு, இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகிறது.

    தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. எனவே பொதுமக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 2023-ம் ஆண்டில் அ.ம.மு.க.வின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான், அவர்களுடன் சிலர் இருந்தனர்.

    அ.தி.மு.க. செயல்படாமல் இருப்பதற்கு மேற்கண்ட 2 பேர் மட்டும்தான் காரணம். தமிழகத்தில் அ.ம.மு.க. எதற்காக தொடங்கப்பட்டது? என்பதை மேற்கண்ட 2 பேரும் புரிய வைத்து உள்ளனர். ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். சசிகலா ஏன் மவுனமாக உள்ளார்? என்பது பற்றி, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பெற்று விடவேண்டும் என்கிற முனைப்பில் வியூகம் அமைத்து செயலாற்றி வருகிறார்.

    இதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ச்சியாக கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த அவர் கடந்த 4-ந்தேதி செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்தார்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாநகரில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    அங்குள்ள தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 117 பேர் பங்கேற்றனர். செயற் குழுவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 25 பேரும், நிர்வாக குழுவை சேர்ந்த 5 பேரும் கலந்து கொண்டனர்.

    துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மூகாம்பிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    • பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.
    • தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    மதுரை

    பாரதீய ஜனதா கட்சியின் பொருளாதர பிரிவு மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தஞ்சா வூரில் நடந்தது. இதில் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை தலைமையேற்ற பின் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. சாதாரண மக்களும் பா.ஜ.க.வின் கொள்கை களை புரிந்து கொள்ளும் வகையில் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பாமர மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலை மிக எளிய தலைவராக இருந்து மக்கள் பயன்பெறும் வகையில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 590 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றி ரண்டு வாக்குறுதிகளை தவிர மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பி வருகிறது.

    தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வு குறித்தும், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை விளக்கி பேசி வருகிறார். இந்தியாவில் 3-வது முறையாகவும் மோடி பிரதமராவது உறுதியாகி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் செலவுகள் அதிகம் ஏற்பட்டு அரசு பணிகள் செய்வதில் தொய்வு ஏற்படு கிறது. எனவே பாராளு மன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அதனை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துக்கள் பாரம மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    அவ்வாறு தேர்தல் நடக்கும் பட்சத்தில் இந்தியா வல்லரசாவது உறுதி. தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஜீ, பொருளாதார பிரிவு துணைத்தலைவர்கள் டாக்டர்கள் தேவ்ஜில், நாகராஜன் மற்றும் வெங்கடேஷ், ராஜசேகர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
    • வாக்காளர்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, விவி பேட் எந்திரத்தில் பார்த்து கொள்ளமுடியும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்காக புதிய விவி பேட் எந்திரங்களை கொள்முதல் செய்து மாநிலம் வாரியாக தேர்தல் கமிஷன் அனுப்பி வருகிறது.வரும் 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் விவி. பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

    வாக்காளர்கள், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, விவி பேட் எந்திரத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளமுடியும். வாக்காளர்களுக்கு நம்பகத்தன்மையை அளிக்கும் இந்த எந்திரங்கள் தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது :- ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்வது முக்கியமான பணியாக உள்ளது. அதன்படி வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணியை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது என்றனர்.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி.
    • வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 40 நாட்கள் 70 நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஏற்பாடு செய்துள்ளார். மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா என்ற தலைப்பில் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்று வருகிறது. அயனாவரத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி. மு.க. மகளிர் அணி சார்பில் சுதா தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சர் பி. கே. சேகர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம். பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. இந்த வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.

    ஜாதி, மதம், இனம் அனைத்தும் ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்ற நம் இந்தியா, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயகம் பறிக்கப்பட்டு மக்களின் வெறுப்பு அரசியலாக ஒன்றிய அரசு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை மீட்டெடுக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான், வழக்கறிஞர் மதிவதனி, ஏ. வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.
    • சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பல்வேறு தலைப்புகளில் எழுந்த கேள்விகளுக்கும் விடையளித்தார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

    ராகுல்காந்தி குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்துள்ளது. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தை அவமானப்படுத்தி உள்ளார். அதற்காகவே அவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி உள்ளது.

    2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதி பதவி தானாக காலியாகி விடும் என்று நமது நாட்டின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இதற்காக பா.ஜ.க. தலைவர்களை ராகுல் தொடர்ந்து குறை கூறி வருகிறார்.

    அவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமானால் மீண்டும் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். அதைவிடுத்து அடம்பிடித்து கொண்டிருந்தால் எந்த பலனும் இல்லை.

    நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் தோழமையுடன் உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அந்த தோழமை தொடரும் தமிழ்நாட்டில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கொண்டுள்ள கூட்டணியும் தொடர்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா இருக்கிறது.

    நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு குறி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். இப்போதுகூட ராகுல் பதவி இழப்பு விஷயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.

    ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத மற்ற கட்சி தலைவர்களை அவர்கள் எந்த அளவுக்கு குறிவைத்து செயல்பட்டனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.

    சி.பி.ஐ. மூலம் எனக்கு மிக கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. மோடிக்கு இருந்த நல்ல பெயரை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு எனக்கு அந்த அழுத்தத்தை கொடுத்தனர். ஆனால் அதற்கு பணியவில்லை.

    நான் அப்போது குஜராத் மந்திரியாக இருந்ததால் என்மீதும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை அமைப்புகள் அனைத்தையும் அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் மிக மிக மோசமாக, தவறாக கையாண்டது.

    காங்கிரஸ் அரசு எங்களுக்கு எதிராக ஒரு சிறு ஊழல் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை. எனவேதான் விசாரணை அமைப்புகளை தூண்டி விட்டு எங்களை சிக்க வைக்க முயற்சி நடந்தது. கடைசியில் சி.பி.ஐ. மூலம் என்னை கைது செய்யவும் வைத்தனர்.

    என்னை கைது செய்வதற்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் சரியான விளக்கமான பதிலை சொன்னேன். ஆனால் அவர்கள் மோடி பெயரை குறிப்பிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் உண்மையைத்தான் சொன்னேன்.

    சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை. கருப்பு சட்டை அணிந்து கொண்டு அலையவில்லை. சபை நடவடிக்கைகளை முடக்கவில்லை. கடைசியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

    ஆனால் விசாரணை அமைப்புகளை எங்களுக்கு எதிராக தூண்டிவிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அதே காரணத்தை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் வெற்றிபெறும். தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    சுதந்திரப் போராட்ட வீரர் சவார்கர் பற்றி ராகுல் அவதூறாக பேசுகிறார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை இப்படி அவமரியாதை செய்யக்கூடாது. அவர்கள் கட்சி மூத்த தலைவர்கள் இதுபற்றி ராகுலுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    • ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    • வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.

    திருப்பதி:

    மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்து வருகிறது.

    ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்து சென்ற பிறகு அங்கு ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் பாஜக உள்ளது. ஆனால் ஆந்திராவில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யானின் ஜனசேனா கட்சியுடன் இணைந்து கடந்த தேர்தலை சந்தித்தது. பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.

    இந்நிலையில் பாஜகவுடன் பிரபல திரைப்பட நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் மிகுந்த நெருக்கமாக உள்ளார். இதனால் பாஜக, ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.

    கட்சி தொடங்கிய கடந்த 10 ஆண்டுகளில் ஜனசேனா கட்சிக்கு நகர்ப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது.

    பவன் கல்யாண் செல்லும் இடங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    அதே நேரம் கிராமப்புறங்களில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் அந்தப் பகுதிகளில் கட்சியை பலப்படுத்த பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.

    ராயலசீமா பகுதியில் அவரது கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பவன் கல்யாண் கடும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்.

    பவன் கல்யாண் கட்சியால் தெலுங்கானா, ஆந்திராவில் 40 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது பா.ஜ.க. பவன் கல்யாண் கட்சி தொண்டர்களிடம் உற்சாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
    • நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு, ஏப். 26-

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை கீழ்பவானி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்கால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பல நூறு கிராமங்களுக்கு விவசாயம் மற்றும் குடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலை காங்கிரீட் கால்வாயாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த 2 வருடங்களாக மீண்டும் காங்கிரீட் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், காங்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் துறை அமைச்சரிடம் பல சுற்று பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வரும் மே மாதம் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினர் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் வாய்க்காலில் காங்கிரீட் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

    வாய்க்கால் தொடங்கும் முதல் மைல் பகுதியில் இருந்து வாய்க்காலின் இருபுறமும் உள்ள புதுப்பாளையம், புங்கம்பாடி, வெள்ளியம்பாளையம்,

    வள்ளியரச்சல், சுந்தரபுரி, வெள்ளியங்காடு, ஆவாரங்காட்டு வலசு, காளி வலசு, மருதுறை, 100-வது மைலில் உள்ள சிவியார்பாளையம்,

    திட்டுப்பாறை, சின்னக்கவுண்டன் வலசு, சிக்காம்பாளையம், பரஞ்சேர்வழி கிராமம், நத்தக்காட்டு வலசு மற்றும் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் காங்கிரீட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் கடலூர் மாநகர திருப்பாதிரிப்புலியூர் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேவல்குமார், மாநில மீனவர் அணி இணை செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மூத்த முன்னோடி களின் துணையோடு திருப்பாதிரிப்புலியூர் பகுதி சார்பில் 12,500 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பூத்கமிட்டி அமைத்தல், வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோ சிக்கப்பட்டது.  இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணி மேகலை தஷ்ணா,வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், தலைமை கழக பேச்சாளர் புலிசை ஆர்.சந்திரஹாசன், பகுதி நிர்வாகிகள் வெங்கடேசன், நாகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய லாளா் ஏ.ஆர்.சி.நாகராஜன் நன்றி கூறினாா்.

    • ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள்.
    • தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

    கோவை:

    கோவை சின்னியம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

    எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் மவுனம் காத்து இருக்காமல் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்.

    தமிழகத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதனை சீர் செய்ய வேண்டும். கொங்கு மண்டல பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வாழை பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    மேலும் தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கேட்டு வரும் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விளம்பர பேனர்களை வைப்பதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

    அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் 15-ந் தேதி மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் மிக பிரமமாண்டமாக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துகட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள், வைத்தியலிங்கம் இல்ல திருமணவிழாவில், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் சந்தித்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க, த.மா.கா மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.
    • பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம்.

    சென்னை:

    தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தை பெறும் போது தான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.

    பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.

    அப்போது தான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

    பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியாண வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகள் இருக்கிறார்கள். இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி தொடங்கப்படுகிறது. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை.

    ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகாவில் பிராமணர்கள் நலனுக்காக நலவாரியம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அது போன்று எந்த அமைப்பும் தமிழகத்தில் இல்லை.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம்.

    அதை வைத்து அடுத்த சட்ட மன்றதேர்தலில் பிராமணர்கள் கட்சி கூட்டணி அமைத்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது.

    பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் பிரதமர் மோடியிடம் அது பற்றி எடுத்துச் சொல்லி விட்டு அதன் பிறகே பா.ஜனதாவில் இருந்து வெளியேறுவேன்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மோடியின் புகழை உயர்த்தி பிடித்து, கட்சியை வளர்க்க முற்படாமல் வீண் விளம்பரங்களை தான் செய்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

    • வருகிற 23-ந் தேதி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
    • டெல்லியில் அடுத்தடுத்து நடந்த ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் சில அதிரடி மாற்றங்களுக்கும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முதல்கட்ட ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கிவிட்டது.

    குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணக்கிடும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் மாவட்டம் வாரியாக மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக உள்ளன. எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் செய்து வருகிறார்.

    வருகிற 23-ந் தேதி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதில் 15 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாடு முழுவதும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பொது வேட்பாளரை நிறுத்தி பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுக்க உள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி இருக்கிறது.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த சில தினங்களாக டெல்லியில் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ள வேண்டிய கூட்டணி மற்றும் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து அவர் பட்டியல் தயாரித்துள்ளார். இதன் அடிப்படையில் கூட்டணி ஒப்பந்தங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதால் கூட்டணியில் சில புதிய கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா இருவரும் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், கர்நாடகாவில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று தெரிகிறது.

    அதுபோல அகாலிதளம் கட்சியும் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைய சம்மதித்துள்ளது. தெலுங்கானாவில் சந்திர சேகரராவ், ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆகியோர் காங்கிரசுடன் சேரமாட்டார்கள் என்பதால் அந்த மாநிலங்களிலும் வேறு வகையான கூட்டணிக்கு பா.ஜனதா ஆலோசித்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் அடுத்தடுத்து நடந்த ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் சில அதிரடி மாற்றங்களுக்கும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஆட்சியிலும், கட்சியிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்வதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்று அவர் கருதுகிறார்.

    அதன்படி மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்யலாமா? என்று பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். வருகிற 22-ந் தேதி மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக மத்திய மந்திரி சபையில் அவர் மாற்றம் செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சில மூத்த மந்திரிகளின் நிர்வாகப் பணிகளில் பிரதமர் மோடிக்கு ஏற்கனவே அதிருப்தி உள்ளது. அவர்களை மந்திரி சபையில் இருந்து விலக்கி விட்டு புதியவர்களை நியமிக்க ஆலோசித்து வருகிறார். நீக்கப்படும் மத்திய மந்திரிகள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    வேளாண்மை, விமானப் போக்குவரத்து, நிதி, நீர்ப் பாசனம், சுற்றுச்சூழல், மின்சாரம், ஊரக மேம்பாடு ஆகிய அமைச்சகங்களில் மாற்றங்கள் செய்ய மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப மந்திரி சபை மாற்றங்கள் அமையும் என்று சொல்கிறார்கள்.

    மந்திரி சபை மாற்றம் முடிந்ததும் நாடு முழுவதும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் மாற்றங்கள் செய்ய பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், சத்தீஷ்கர், கேரளா ஆகிய 10 மாநிலங்களில் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நலீம்கத்தில் பதவி காலம் நிறைவு பெறுகிறது. எனவே புதிய தலைவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபோல மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி பிரகலாத்சிங் படேல் நியமனம் செய்யப்படுவார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சவுகானுக்கும், தற்போதைய மாநில தலைவர் வி.டி.சர்மாவுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. எனவே சர்மாவுக்கு பதில் மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேலை கொண்டு வந்து தீரவேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார்.

    தென் மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு கூடுதல் கவனம் செலுத்த அமித்ஷா தீர்மானித்துள்ளார். எனவே தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் சஞ்சய் குமாரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் குமாருக்கு தேசிய அளவில் பதவி கொடுத்துவிட்டு புதிய மாநில தலைவரை நியமிக்க உள்ளனர்.

    இதைத் தவிர பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்களை மேலும் அதிகப்படுத்தவும் ஆலோசித்து வருகிறார்கள். எனவே காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் அதே நேரத்தில் பா.ஜனதாவும் அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×