என் மலர்
நீங்கள் தேடியது "poison"
- நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.
- மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன.
நெல்லை:
மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலக் கருங்குளம் பகுதி. இங்கு விவசாய தோட்டங்கள் அதிகம் இருப்பதால் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.
இறந்து கிடந்த 20 நாய்கள்
இந்நிலையில் இன்று காலையில் மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இவற்றில் பல நாய்கள் நீர்நிலைகளின் அருகே இறந்து கிடக்கிறது.
எனவே அந்த நீர்நிலைகளில் விஷம் கலக்கப்பட்டு அதை குடித்ததால் நாய்கள் இறந்ததா? அப்படி என்றால் அந்த நீரை மற்ற விலங்குகள் குடித்து அசம்பாவித சம்பவம் நிகழும் முன்பாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டும், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாண்டியனுக்கும் வாஞ்சிநாதனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- பாண்டியன் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது68) விவசாயி. இவருக்கும், இவரது மகன் வாஞ்சிநாதன்(39) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பாண்டியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சங்கராபுரம் சிறப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பார்க் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 26). இவரை கடந்த 9-ந் தேதி இவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
- அதை தொடர்ந்து, குடும்பத்தினர் கிருஷ்ணராஜை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பார்க் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 26). இவரை கடந்த 9-ந் தேதி இவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கிருஷ்ணராஜ் எலி மருந்து சாப்பிட்டு மயங்கினார்.
அதை தொடர்ந்து, குடும்பத்தினர் கிருஷ்ணராஜை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா (வயது 36). இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார். இதை பார்த்த போலீசார், உடனடியாக ஓடி வந்து, அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தான், கந்தம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். 20 மாத தவணையில் கட்டுவதாக வாங்கியிருந்தேன்.
இதையடுத்து 10-வது தவணையில் முழு பணத்தையும் அவரிடம் கொடுத்தபோது பணத்தை வாங்க மறுத்து 20 தவணையும் முடிந்த பிறகு தான் வீட்டின் பத்திரத்தை தருவேன் என கூறினார். பணத்தை வாங்கி கொண்டு பத்திரத்தை கொடுங்கள் என கேட்டபிறகும் அவர் தர மறுத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சாணி பவுடரை குடித்து விட்டேன். பத்திரத்தை தர மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ெதரிவித்தார்.
இதையடுத்து போலீசார், அலமேலு மங்கையை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
- மாணவியை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று காலை மாணவி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவர் மனவேதனை அடைந்து விஷத்தை குடித்தார். பின்னர் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வகுப்பறையில் இருந்த போது மாணவி வாந்தி எடுத்தார். இதனை பார்த்த ஆசிரியர் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது மாணவி விஷம் குடித்ததாக கூறினார்.
இது குறித்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தங்களது மகளை மீட்டு செக்கனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மாணவியை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பகுதியை சேர்ந்த சிலர் உணவு கொடுத்து வந்துள்ளனர்
- யாரோ மர்ம நபர்கள் நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.
திருப்பூர்:
திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ஜே. ஜே. நகரில் 20க்கும் மேறபட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான நாய்கள் சுற்றி வருகின்றன.
அவற்றிக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் உணவு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 10க்கும் மேற்பட்ட நாய்கள் திடிரென்று வாந்தி எடுத்தபடி உயிரிழந்த்தாக கூறப்படுகிறது. அதே போல் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளும் இறந்து கிடந்துள்ளன. இது அந்த பகுதி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது; -எங்கள் பகுதியில் நிறைய தெருநாய்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய்கள் அங்கேங்கே வாந்தி எடுத்தப்படி சுருண்டு விழுந்து இறந்தது. யாரோ மர்ம நபர்கள் நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்று இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம்.
இது குறித்து விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
- கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவிந்தகுடி கம்மாள தெருவை சேர்ந்தவர் மணி.
இவரது வினோத் (வயது 33).
இவர், உடையாளூர் தபால் அலுவலகத்தில் தபால் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
அவர் பணிபுரிந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தபால் அலுவலக மேலதிகாரிகள் அஞ்சலக கணக்கு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
கடந்த 31-ந் தேதி வினோத், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்தார்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார்.
அதில், எனது மகன் வினோத், அஞ்சலக கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ேமலும் அதிகாரிகள் மூன்று தவணைகளாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை வாங்கி சென்று விட்டனர்.
மேலும் அவர்கள் எனது வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.
இது தவிர எனது மகன் உடையாளூரை சேர்ந்த 2 பேரிடம் ரூ.14 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக அவர்களும் வட்டியுடன் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டுவதாக எனது குடும்பத்தினரிடம் வினோத் தெரிவித்துள்ளார்.
தபால் அதிகாரிகள் எனது மகனை அழைத்து சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து வி்ட்டார்.
எனவே எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தினை குடித்து சம்பத்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
- சம்பத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்,
காரமடையை அடுத்துள்ள மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலையூர் துரைசாமி கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி(60).இவரது மனைவி ஜெயமணி(56).
இந்த தம்பதிக்கு விமலா(36) என்ற மகளும், சம்பத்குமார்(34) என்ற மகனும் உள்ளனர்.
சம்பத் குமாருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்து காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த களைக் கொல்லி பூச்சி மருந்தினை குடித்து சம்பத்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து அவரை மீட்ட ஜெயமணி 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் காரமடை ஆர்.வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(48). இவரது மனைவி சுபிதா(37).பிரகாஷ் காரமடையை அடுத்த பெட்டதாபுரம் தண்ணீர் பந்தல் பகுதியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.
சிப்ஸ் கடை மூலமாக போதிய வருமானம் கிடைக்காததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரி கிறது. இதனால் விரக்தி யடைந்து நேற்று காலை விஷம் குடித்து தற்கொ லைக்கு முயன்றார்.
அவரை மீட்ட மனைவி சுபிதா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
2 தற்கொலை சம்ப வங்கள் தொடர்பாக கார மடை இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
- பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுதா (வயது34) இவர் நேற்று அதிகாலை விஷம் குடித்தார். இதனையடுத்து அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பெற்றோர் வேறு கல்லூரியில் சேர்க்காததால் வேதனை
- வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள டி.காளிபாளையத்தை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.
இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு அந்த கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை.
எனவே அவர் தனது பெற்றோரிடம் வேறு ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். ஐ.டி. சேர்க்குமாறு கடந்த 2 மாதங்களாக கூறி வந்தார்.
பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வந்ததால் மாணவி சேர நினைக்கும் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருந்ததால் அதே கல்லூரியிலேயே படிக்குமாறு மாணவியிடம் கூறி வந்தனர்.
இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவே தனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறுது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது.
- சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (42).
இவர் புதன் சந்தையில் கால்நடை மருந்து கடை வைத்துள்ளார். இவர் தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சேந்தமங்கலம் அடுத்த முத்துக்காப்பட்டி பெரியசாமி கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக நேற்று சுதாகரின் உறவினர்கள், நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
மாலை கிடா வெட்டு விருந்து நடைபெற்றது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது. இதனால் அவர்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் சுதாகர் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீட்டும் கிடா விருந்துக்கு திரும்பினார். இந்நிலையில் அவரை அதிகளவு விஷ வண்டுகள் கடித்ததாக தெரிகிறது.
இதனால் உடலில் வேகமாக விஷம் பரவியதில் கிடா விருந்து பந்தலில் மீண்டும் சுதாகர் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர் கதறி அழுதனர்.
இதனிடையே மற்ற 11 பேரும் நாமக்கல், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடா விருந்து நிகழ்ச்சியில் விஷவண்டு கடித்து மருந்து கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சேர்மதுரைக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
- வெறுப்படைந்த சேர்மதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.
நெல்லை:
மேலப்பாளையம் சிவராஜபுரம் அன்னை நகர் தெருவை சேர்ந்தவர் சேர்ம துரை (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது மனைவி தருவை யில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து சேர்மதுரை நேற்று மாலை மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்காக தருவைக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியை சமாதானம் செய்ய முயன்ற போது அவர் கணவருடன் வர மறுத்து ள்ளார். இதில் வெறுப்படைந்த சேர்மதுரை மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சேர்ம துரை இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.