என் மலர்
நீங்கள் தேடியது "police"
- சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்தார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
- கூடுதல்போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும், 24 மணி நேர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்தார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் கோகுல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண்குமார் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு மதுரை தாழ்த்தப்பட்டோர் நல கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தண்ட னையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் ஐகோர்ட் கிளையில் மேல் முறையீடு செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பிலும் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி கள் ரமேஷ் ஆனந்த், வெங்க டேசன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்ப டுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. எனவே சுவாதி பயம் இல்லாமல் கோர்ட்டுக்கு வருவது உறுதி செய்து, அவரை நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன்
சுவாதிநேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதற்கிடையே கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள சுவாதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீ
சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல்
போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும், 24 மணி நேர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது.
- சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
சேலம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது. சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்த எழுத்து தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா கூறியுள்ளதாவது: -
நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினை கொண்டு வராதவர்கள் மையத்திற்குள் அனும திக்கப்பட மாட்டார்கள். அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்ப தார்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnusrb.tn.gov.in) இருந்து அழைப்பு கடித நகலை பதிவிறக்கம் செய்து, தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வுக் கூட நுழைவு சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படங்கள் இல்லா மல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி அல்லது பி பிரிவு அதிகாரியிடம் சான்று
ஒப்பம் பெற்று வரவேண்டும்.
விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலை கொண்டு வர வேண்டும். செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எந்தவித எலக்ட்ரானிக் உப கரணங்களும் அறைக்குள் எடுத்து வரக்கூடாது. கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாகொண்டு வரவேண்டும். வேறு எந்த வித சொந்த உடமைகளை கொண்டு வர கூடாது. 22 தேர்வு மையங்களிலும் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து தேர்வு கண்காணிக்கப்படும்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
- கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு புகார்கள் வந்ததன.
- பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் நால்ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக, சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் மகளிர் போலீசார் நால்ரோடு பகுதியில் கைக்குழந்தைகளுடன் இருந்த கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி , ரோசன்பாய் ஆகிய 2 பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணிடம் நகை பறித்த போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையர்கள் சிக்கினர்.
- 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் போலீசுக்கு கிடைத்தது.
மதுரை
மதுரை திருப்பாலை, பொன்விழா நகரை சேர்ந்தவர் அகி லாண்டேசுவரி (வயது 39). இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சம்பவத்தன்று அகிலா ண்டேசுவரி ஓட்டலில் சாப்பாடு வாங்கிவிட்டு வீடு திரும்பி ெகாண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின் தொடர்ந்து அகிலாண்டேசுவரி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்த வழக்கில் தொடர்பு டைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் இருவரும் 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த மூன்றுமாவடி மகாலட்சுமி நகர் உப்பிலி மாடசாமி என்ற மருது(25), வளர்நகர், அம்பலகாரன்பட்டி செல்வம் மகன் நவநீதன் (23) ஆகியோரை ேபாலீசார் கைது செய்தனர்.
- இரவு ஆட்டுமந்தை காவலுக்காக படுத்திருந்தனர்.
- அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த கருப்பம் புலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வைத்திருக்கும் ஆட்டு மந்தையை, வேதாரண்யம் அடுத்த மணியன் தீவில் கடற்கரையில்மேய்ச்சவுக்கு விட்டுதங்களும் அங்கேயே கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர்.
நேற்று இரவு ஆட்டுமந்தை காவலுக்கு படுத்திருந்தனர்.அப்பொழுது அதிகாலை அங்கு ஆடுகளைபிடிக்க வந்த நரி அங்கு தூங்கிகொண்டி ருந்த கருப்பம்புலத்தை சேர்ந்த மணியன் (வயது 75), காசிநாதன் (70) ஆகிய இருவரையும் கடித்தது. இதில் இருவரும் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு நரி அங்கிருந்து ஓடிவிட்டது.இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- காவல் நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது
- வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று தூய்மை பணி மேற்கொள்வது வழக்கம் அந்த வகையில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார்கள் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் போலீஸ் நிலையம் உள்ளே ஒட்டடை அடிக்கப்பட்டு ஒழுங்கற்ற முறையில் இருந்த பொருட்களை ஒழுங்கு படுத்தப்பட்டதுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் கைது சிறையை தூய்மைப்படுத்தியும், புகார் அளிக்கப்படும் தாய்மார்களின் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்களை ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் தேவையற்ற பொருட்களை வெளியேற்றியும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்லாமல் பாலங்களை பொலிவுற செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
- பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகள் 2 நாட்களாக வாடிய நிலையில் காணப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்லாமல் பாலங்களை பொலிவுற செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் அவை ஒளிரும்போது வாகனஓட்டிகளை கவரும் விதத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மேம்பாலங்களின் கீழ் பகுதி தூண்களை அழகுப்படுத்தும் விதமாக சமீபத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின்பேரில் சிறிய அளவிலான பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகள் 2 நாட்களாக வாடிய நிலையில் காணப்பட்டது.
இதனை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சீனிவாசன் போக்குவரத்தை சரி செய்யும் பணிக்கு இடையில், மேம்பால தூண்களில் வாடிய நிலையில் இருந்த செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து போக்குவரத்து காவலரை பாராட்டினர்.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
மதுரை
மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- அரசு பள்ளி ஆசிரியர் முருகையா உள்பட 7 பேரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
- ஒரே கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கிராமங்களில் நேற்று ஒரே நாளில் 7 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
ரூ.15 லட்சம் கொள்ளை
புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அந்தோணி (வயது 57), பொன்சிவ ராமச் சந்திரன்(40), ஆலங்குளம் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் முருகையா(49), அதே பகுதியில் வசிக்கும் லாசர்(39), வீரபுத்திரன்(40), காந்தி நகரில் உள்ள மனோஜ் பிரபாகரன், திருமணி ஆகியோரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
மொத்தம் 7 வீடுகளிலும் கொள்ளை யடிக்கப்பட்ட நகை, ரொக்கப்பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து வீட்டு கதவுகளும் ஒரே விதமாக உடைக்கப்பட்டிருந்ததால், ஒரே கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என போலீசார் கருதுகின்றனர்.
2 தனிப்படைகள் அமைப்பு
இதுதொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். இதே காம ராஜ் நகர் பகுதியில் கடந்த மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் வீட்டில் ஒரு கும்பல் ரூ. 20 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.
அதுகுறித்து இதுவரை துப்பு துலங்காத நிலையில் போலீசாரின் மெத்தன போக்கால் தற்போது 7 வீடு களில் திருட்டு நடந்துள்ள தாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
- முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
- ‘பைக்’ ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என துணை கமிஷனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அபராதம்
அவ்வழியாக வரும் வாகனங்களில் அரசு விதிமுறைகள்படி நம்பர் பிளேட்டுகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா?, அரசு விதிமுறைகள் படி வாகனங்கள் பயன்படுத்தப் படுகிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் நம்பரை எழுதாமல் பெயர்கள் எழுதப்பட்டிருந்த வாகனங்களை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
இதேபோல் ஏர்- ஹாரன் உள்ளிட்டவைகள் பயன்படுத்திய வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களாக இதே போல் நடைபெற்று வரும் வாகன தணிக்கையில் நம்பர் பிளேட் முறையாக வைக்கப்படாத 250 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
துணை கமிஷனர் எச்சரிக்கை
இந்த நிலையில் புத்தாண்டு தொடர்பாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை மாநகர் பகுதிகளில் புத்தாண்டு தினத்தை ஒட்டி 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழா காலங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு அதி கரிக்கப்படும். புத்தாண்டு அன்று 'பைக்' ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வசதியாக திருப்பூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார்.காவலர்கள் பணியில் சிறந்து விளங்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், நாள் முழுவதும் சுறு, சுறுப்பாக இயங்கவும் தினசரி உடற்பயிற்சி செய்யும் வகையில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
- 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நாகை மீனவர்களுக்கு தகவல் கிடைத்து.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட மீனவர்கள் மீன்வளத்தை பெரிதும் பாதிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நாகை துறைமுகத்தில் நடைபெற்ற 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் நடுக்கடலில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நாகை மீனவர்களுக்கு தகவல் கிடைத்து.
அதனை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் திரண்டு அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் நாகை முதல் கோடியக்கரை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி மாநில மீனவர்களை சிறைபிடிப்பதாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து நடுக்கடலுக்கு செல்ல தயாராக இருக்கவேண்டுமென துறைமுக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.
காரைக்கால் மீனவர்களின் விசைப்படகுகளை, நாகை மீனவர்கள் சிறைபிடிக்க தயாராகி வருவதால், அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நாகை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.