என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private bus"

    • ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
    • நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வெளியூர் சென்றவர்கள் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சென்னை திரும்புகிறார்கள்.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 5 லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.

    கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு பஸ்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது தவிர சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், ரெயில் நிலையங்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பயணம் செய்தனர். மேலும் ஆம்னி பஸ்களிலும் கடைசி நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தி பலர் பயணம் செய்தனர்.

    இந்த நிலையில் பண்டிகை விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் 1-ந் தேதி புத்தாண்டு முடித்து விட்டு பலர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்கள்.

    அனைத்து ரெயில்களிலும், எல்லா வகுப்பு பெட்டிகளும் நிரம்பிவிட்ட நிலையில் சிறப்பு ரெயில்களிலும் இடமில்லை. அதனால் மக்கள் கூடுதல் பஸ் சேவைக்காக காத்து உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30, 31-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடஏற்பாடு செய்யப்படுகிறது.

    மேலும் ஆம்னி பஸ்களில் அந்த தேதியில் பயணம் செய்ய இடங்கள் நிரம்பி வருகின்றன. ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை, திருப்பூர் நகரங் களில் இருந்து சென்னைக்கு சங்கம் நிர்ணயித்த கட்ட ணத்தை விட அதிகமாக கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.

    மதுரை, கோவையில் இருந்து ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.2581 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.3500 வரை வசூலிக்கிறார்கள். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் அரசு நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே நிர்ணயித்து இயக்குகிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பது முறையற்ற செயல். தேவையை அறிந்து அதற்கேற்ப பல மடங்கு கட்டணம் உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும்.

    இதே போல பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ. 2700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை விட கூடுதலாக வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரின் பக்கவாட்டில் மோதியது.
    • பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோப் கட்டி பஸ்சை பின்னோக்கி கொண்டு வந்தனர்.

    மங்கலம் :

    சோமனூர் பகுதியில் இருந்து திருப்பூர் வரை மங்கலம் வழியாக தனியார்பஸ் இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று சோமனூரில் இருந்து மங்கலம் நோக்கி தனியார்பஸ் வந்துகொண்டிருந்தது.பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    மாலை 6:30 மணியளவில் தனியார்பஸ் பரமசிவம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரின் பக்கவாட்டில் மோதியது.இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது பற்றி தகவல் அறிந்து மங்கலம் போலீசார்,மின்வாரிய அதிகாரிகள்,சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி,பள்ளபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோப் கட்டி பஸ்சை பின்னோக்கி கொண்டு வந்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.  

    • நெல்லை சந்திப்பில் இருந்து தெய்வநாயக பேரிக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.
    • பஸ் மூன்றடைப்பு அருகே தோட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அதே ஊரை சேர்ந்த பாலு மற்றும் 6 பேர் சேர்ந்து பஸ்சை வழிமறித்து நிறுத்தினர்.

    களக்காடு:

    நெல்லை சந்திப்பில் இருந்து தெய்வநாயக பேரிக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.

    தகராறு

    சம்பவத்தன்று இந்த பஸ்சை நெல்லை வண்ணார் பேட்டை இளங்கோநகர் கீழத்தெருவை சேர்ந்த கணபதி aமகன் காளி சரவணன் (33) ஓட்டிச் சென்றார்.

    பஸ் மூன்றடைப்பு அருகே தோட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அதே ஊரை சேர்ந்த பாலு மற்றும் 6 பேர் சேர்ந்து பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் பஸ்சில் வண்ண மின் விளக்குகளை போட்டு வரக்கூடாது என்று கூறி டிரைவர் காளி சரவணனிடம் தகராறு செய்தனர். மேலும் லைட்டு களையும் அடித்து உடைத்தனர். அத்துடன் டிரைவருக்கும் மிரட்டல் விடுத்தனர்.

    இதுபற்றி அவர் மூன்ற டைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக பாலு உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

    • அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு தினமும் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பஸ்களும் பெரும் அளவில் இயக்கப் பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கால அட்டவணையை பின்பற்றா மல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவதாக தனியார் பஸ் டிரைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் வழக்கம்போல் சென்னிமலை பஸ் நிலை யத்துக்கு வந்தது. அந்த பஸ் கண்டக்டர் அங்கு பயணி களை ஏற்றி கொண்டிருந்தார்.

    அப்போது அதே நேர த்தில் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது.

    இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தனியார் பஸ்சை வழிமறித்து ஏன் முன் கூட்டியே செல்கிறீர்கள் என டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ் டிரைவரிடம் நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் காலை, மாலையில் முன்கூட்டியே செல்கிறீர்கள் என்றும், உங்கள் பஸ்சின் கால அட்டவணையை கொடுங்கள் என்றும் கேட்டனர்.

    இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு பஸ்களிலும் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 2 பஸ்களும் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    இதுபோன்ற நேர பிரச்சனை காரணமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் அடிக்கடி அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    • அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.
    • இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை ம்றறும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாபநாசத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இருப்பினும் அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.

    இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    பஸ்சின் உள்ளே மாணவர்கள் நின்று செல்லும் நிலையில், முன், பின் படிக்கட்டுகளிலும் சுமார் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களின் புத்தக பைகளை டிரைவரே வாங்கி வைத்து கொள்கிறார். அதனால் கண்டிரக்டர், டிரைவர் உதவியுடனே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அம்பை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

    • தனியார் பஸ்கள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.
    • மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மதுரை:

    நாமக்கல்லை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு அனுமதி பெற்று தனியார் பஸ்சை இயக்கி வருகிறேன். எனது பஸ், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 3.24 மணிக்கு புறப்பட தமிழக அரசு போக்குவரத்து கழகம் நேரம் ஒதுக்கி உள்ளது.

    இதேபோல் எனக்கு அடுத்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கரூருக்கு செல்ல வேண்டிய தனியார் பஸ் மதியம் 3.55 மணிக்கு புறப்பட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே 3.14 மணிக்கு இயக்கப்படுவதால் எனக்கும், மற்ற அரசு பஸ்களுக்கும் 17 ஆண்டுகளாக வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தனியார் பஸ்கள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு ஆவணங்களின்படி சரியாக உள்ளதால் தனியார் பஸ்களை உரிய நேரத்தில் இயக்க வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கரூரைச் சேர்ந்த மற்றொரு பஸ் உரிமையாளர் சுவாமி அப்பன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தனியார் பஸ் இயக்கும் நேரத்தை முறைப்படுத்தாத திருச்சி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி கார்த்திகேயராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குறிப்பிடும் தனியார் பஸ் நேரத்தை மாற்றி முன்னதாக இயக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பின்னர் திருச்சி மாவட்ட மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.
    • டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்சின் டிரைவராக வீரபாண்டி பிரிவை சேர்ந்த மனோஜ்குமார்(வயது24) என்பவரும், நடத்துனராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு சாவடியூர் புதூரை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு பஸ்சை மனோஜ்குமார் ஓட்டி கொண்டு இருந்தார். பஸ்சில் 6 பயணிகளும் இருந்தனர்.அப்போது, காரமடை அடுத்துள்ள கெண்டேபாளையம் பகுதியில் சென்ற போது, சாலையின் குறுக்கே இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தினர்.

    அப்போது, இருசக்கர வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் கூறினார். இதனால் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ்சின் மீது இளைஞர்கள் பேருந்தின் மீது சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

    மேலும், டிரைவர் மனோஜ்குமார் மீது கல்வீசி தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியாகினர். உடனடியாக சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த காரமடை சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மனோஜ்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொண்டேபாளையத்தை சேர்ந்த ரகுராம்(21), கவுதம்(20), சுதாகர்(24), கவிமணி என்ற பகவதி(21), சுதி ஆனந்த்(22), புங்கம்பாளையம் பிரிவை சேர்ந்த நவீன்குமார்(19) ஆகியோர் தான் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனியார் பஸ் டிரைவர்கள் மோதியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
    • பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் மதுரை மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் எதிரே டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வங்கிகளும் இயங்கி வருகிறது.

    வெளியூர் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தி முந்திச் செல்வதில் தனியார் பஸ் டிரைவர்களுக்க அடிக்கடி தகராறு இருந்து வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தனியார் பஸ் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றியது. இந்த பஸ்சை கள்ளிக்குடிடய அடுத்துள்ள குராயூரை சேர்ந்த பிச்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சுக்கு அடுத்து மற்றொரு தனியார் பஸ் சிவகாசிக்கு மதுரையில் இருந்து வந்தது. இதை சோளங்குருணியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டிவந்தார்.

    ஏற்கனவே முன்னால் சென்ற பஸ், திருமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட பின்னால் வந்த பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்தார். அவர் வேகமாக சென்று ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பிச்சை ஓட்டி வந்து நிறுத்திய பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக பிச்சை மற்றும் 2-வதாக வந்த பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ்(41) ஆகியோர் ஏன் பஸ்சை எடுக்கவில்லை என்று கூறி பிச்சையுடன் தகராறு செய்தனர். 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் பிச்சை, தன்னை மற்றொரு பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் ஜெயராஜ் ஆகியோர் இரும்பு ராடு கொண்டு தாக்க முயன்றதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நிலையம் எதிரேயே தனியார் பஸ் டிரைவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திருமங்கலம் போலீசார், தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ்ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பினர், பயணிகள் வலியுறுத்தினர்.

    • 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது.
    • உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3436 பஸ்கள் தினமும் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

    8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் மேலும் 1000 பஸ்களை "கிராஸ் காஸ்ட் ஒப்பந்த" அடிப்படையில் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான பஸ்களை இயக்கவும் அதற்கான செலவை ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

    "உலக வங்கி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 500 பஸ்களும் 2025-ம் ஆண்டில் 500 பஸ்களும் தனியார் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

    'கிராஸ் காஸ்ட்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் பஸ்களை தனியார் வழங்கவும், டிரைவர், கண்டக்டர் மற்றும் பராமரிப்பு செலவு, உதிரிபாகங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    சென்னையில் பஸ்களை அதிகரிப்பதன் மூலம் பயணிகள் அதிகளவில் பயணம் செய்யவும் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் வழி வகுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் ஆலோசனை குழு அமைக்க டெண்டர் விடப்படுகிறது. இக்குழு இத்திட்டத்தில் உள்ள சாதக-பாதகங்களை ஆய்வு செய்து போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, இத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

    விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு தான் எந்த அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என்பது தெளிவாக தெரியவரும் என்றனர்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், தனியாருக்கு போக்குவரத்து கழகத்தை கொடுப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இதனை கருதுகிறோம். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு கொடுத்து நாசப்படுத்திவிட்டனர். அந்நிலை தமிழகத்தில் வேண்டாம் என்றார்.

    • முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.
    • புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம் , சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    கடலூர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்கத்திற்க்கு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போதிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. இதனால் புதுவையில் இருந்து கடலூருக்கு பஸ்கள் இயக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன்படி புதுவை பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்கள் புதுவை-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது. முள்ளோடை பகுதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் கடலூர் செல்ல ஆட்டோக்களுக்கு காத்திருந்தனர்.

    ஆட்டோவில் செல்ல முடியாதவர்கள் நடந்தே கடலூருக்கு சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் அதிகளவு கூட்டம் இருந்தது.

    மேலும் புதுவையில் இருந்து கடலூர் வழியாக விருதாச்சலம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

    • திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது. இதையடுத்து திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார். மேலும், அதில் வந்த பயணிகள் வேறு பஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் மோதி பயணி பலியானார்.
    • தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். சம்பவத்தன்று பஸ் நிலையத்தில் உள்ள 8-வது பிளாட்பாரம் அருகே 42 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்ேபாது அந்த வழியாக வந்த தனியார் பஸ் கவனக்குறைவாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தர். உடனே அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் பஸ் மோதி இறந்தவர் டேனியல் ஜேசுதாஸ்(47) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×