என் மலர்
நீங்கள் தேடியது "project"
- கொள்ளிடம் ஆற்று படுகையில் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது.
- நீரேற்று நிலையம் சமீபத்தில் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று படுகையில் திருவெறும்பூர் கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இது திருச்சி மாவட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இந்த நீரேற்று நிலையம் மூலமாக தினமும் 17 ஆயிரத்து 296 மில்லியன் லிட்டர் குடிநீர் திருச்சி மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட திருவெறும்பூர், காட்டூர் மற்றும் அரியமங்கலம் பகுதியில் உள்ள 6 மாநகராட்சி வார்டு மக்களுக்கும், துவாக்குடி நகராட்சி சேர்ந்த அனைத்து வார்டு மக்களுக்கும், கூத்தப்பார் பேரூராட்சி மக்களுக்கும்,
அது மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள 90 குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையம் சமீபத்தில் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 22-ந்தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து தற்காலிகமாக அதனை சீரமைக்கும் பணிக்காக ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரை ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லும் பாலம் கடந்த அக்டோபர் 14-ந்தேதி சேதம் அடைந்தது. மேலும் ஆற்றில் ஏற்பட்ட வலுவான நீரோட்டம் காரணமாக ஏற்பட்ட அரிப்பினால் பாலத்தின் தூண்களில் ஒன்றும் கீழே விழுந்து விட்டது.
இதனால் பாலத்தில் இருந்து நீர்வழிப் பாதை சேதமடைந்தது.பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்காலிகமாக சீர் செய்து அக்டோபர் 20-ந்தேதி முதல் குடிநீர் விநியோகிக்கும் பணியை தொடங்கினர். ஆனால் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் மறுபடியும் அக்டோபர் 22-ந்தேதி பாலம் மேலும் சேதம் அடைந்ததால் குடிநீர் விநியோகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
அதை சரி செய்த பிறகு அக்டோபர் 23-ந்தேதி மீண்டும் தண்ணீர் விநியோகத்தை தொடங்கினர். ஆனாலும் பாலத்தில் மேலும் இரண்டு தூண்கள் கீழே இறங்கி விட்டதால் அவர்களால் அதை தொடர முடியவில்லை. பின்னர் பல தொழில்நுட்ப வழிமுறைகளை கையாண்டு சீரமைத்து ஓரளவுக்கு தண்ணீர் உபயோகித்தை தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டால் மேலும் இந்தத் திட்டம் தடைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் நிரந்தரமாக மேற்கண்ட குடிநீர் திட்ட பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சேதுமடைந்த இரும்பு குழாய்கள் தற்காலிக நடவடிக்கையாக அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் குழாய்களாக மாற்றப்பட உள்ளன. மேலும் சில பணிகளை உடனடியாக மேற்கொள்ள இருப்பதாகவும், முதற்கட்ட மதிப்பீட்டின்படி ரூ.3 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்தனர்.
- பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
- நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை பூளவாடி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வகையில் நூலக வார விழாவையொட்டி, பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் வீடுதோறும், சிறு நூலகம் அமைப்பதற்கான பணிகளை துவக்க தீர்மானிக்கப்பட்டது.மேலும், இத்திட்டத்துக்கு மாணவர்கள் சிறு தொகை சேமிக்க, நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தில் இணைய 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முடிவில் கிளை நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.
- மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
- மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 500 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவுகள் சேகரமாகிறது. மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் காய்கறி கழிவுகள் மூலம் நுண் உரம் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
காய்கறி கழிவு உள்ளிட்ட மக்கும் கழிவுகளை மாற்று சக்தியாக மாற்றி பயன்படுத்த 12 ஆண்டுக்கு முன் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் துவங்கியது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது வெற்றி பெறுவதில் சிக்கல் இருந்த நிலையில், கைவிடப்பட்டது.
இதனால் பயோ- கியாஸ் உற்பத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக 1.60 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றது.மேலும் சில மாறுதல்கள் செய்து, இங்கு உற்பத்தியாகும் பயோ கியாசை சிலிண்டர்களில் நிரப்பி, அம்மா உணவகம் மற்றும் மாநகராட்சி சத்துணவு மையங்களில் பயன்படுத்த முடிவானது. ஆனாலும் மையம் முழுமையாக இயக்கப்படாமல் வீணானது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சத்தமின்றி விலகியது.
இவ்வாறு பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இம்மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில், நவீன தொழில்நுட்பத்தில் புதிய கருவிகள் பொருத்தி சி.என்.ஜி., கியாஸ் உற்பத்தி துவங்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட அளவிலான வாகனங்கள் இந்த கியாஸ் மூலம் இயக்கப்படும். இதனால் கிடப்பில் உள்ள மையம் செயல்படுவதோடு கணிசமான அளவு வாகன எரிபொருள் மீதமாகும் என்றார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை ஆலயம் திட்டம் தயாரித்துள்ளது. கோவில்களில் சேகரமாகும் மக்கும் குப்பையை உரமாக்கி நந்தவனங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவில்களில் உள்ள கோசாலை மாடுகளின் கழிவுகள், அன்னதான கூட கழிவு, பூமாலை, துளசி, தோட்ட கழிவு, காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளை கொண்டு, மக்கும் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பசுமை ஆலயம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இணை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இணை கமிஷனர் குமாரதுரை தலைமை வகித்தார். மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஐ.டி.சி., நிறுவனம், ஆர்.டி.ஓ., டிரஸ்ட், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் நிறுவனத்தினர் பங்கேற்று பசுமை ஆலய திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினர். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், பசுமை ஆலயம் திட்டம் செயல்படுத்தப்படுமென இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டுக்கு ெரயில்வே துறையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
- மயிலாடுதுறை ெரயில்வே நிலையத்தில் பயணிகளுக்காக தானியங்கி படிக்கட்டு வசதிக்கான ஒப்புதல்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ெரயில் நிலையத்தில் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ெரயிலை மீண்டும் நிறுத்தத்துக்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி தென்னக ெரயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் தலைமை வகித்தார். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு தமிழகத்திற்கு கூடுதலாக ெரயில் திட்டங்களை ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி கொடியசைத்து சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் நின்று செல்வதை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
பாபநாசம் பொது மக்கள் மற்றும் இங்குள்ள அரசியல் தலைவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு ெரயில்வே துறையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும், இந்த ெரயில் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மயிலாடுதுறை ெரயில்வே நிலையத்தில் பயணிகளுக்காக தானியங்கி படிக்கட்டுகளை வசதிக்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கி உள்ளார்.இந்தியா முழுவதும் உள்ள ெரயில்களில் பயோ டாய்லெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி காலத்தில் ெரயில்வே துறை பல சாதனைகளை புரிந்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே பல நிதிகளை வழங்கி வருகின்றார். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ள கோரிக்கைகள் நியாயமானது தான். கடல்பாசி என்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். நம்முடைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடல்பாசியை உற்பத்தியை பெருக்குவதற்கு மீனவ சகோதரிகள் பயன்பெறும் வகையில் கடல்பாசி பூங்கா ராமநாதபுரம், மண்டபம் பகுதிக்கு வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்கள்.இந்த திட்ட மதிப்பீடு தற்போது பரிசீலனை உள்ளது.
இதேபோல் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு,மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் நிதியின் கீழ் தமிழகத்திற்கு மட்டும் இரண்டு ஆண்டுகளில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் நிதியை ஒதுக்கி உள்ளோம்.
சென்னை, திருவொற்றியூரில் 150 கோடி ரூபாயில் தற்போது நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணி 90 சதவீதங்கள் முடிந்துள்ளன. செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்துக்கு இடையே மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம்.
இந்தியாவில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களை வளப்படுத்தும் விதமாக விசாகப்பட்டினம், ஒரிசா, கொச்சின், சென்னை காசிமேடு ஆகிய 4 துறைமுகங்களும் சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் செய்வதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
- கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்டபணிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 21 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிதண்ணீர் பிரச்சனை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் லாரியில் விற்பனை செய்யப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர முயற்சியால், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா நிருபர் களிடம் கூறியதாவது:-
கீழக்கரை நகராட்சியில் நாள்தோறும் 53.20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப் படுகிற சூழ்நிலையில் தற்போது 8 லட்சம் லிட்டர் அளவுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். தமிழக மக்களின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதில் தன்னிகரற்று விளங்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூபாய் 2883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தி னை செயல்படுத்த ஆணை யிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலா ளரும், சட்டமன்ற உறுப்பினரு மான காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் மேற்கொண்ட தீவிர முயற்சியால் கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்ட பணிக்காக 211. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் 12,10,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்படு கிறது.
கீழக்கரை நகரில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக குடிநீர் பைப்லைன் வசதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்பட தொடங்கினால் மக்களுக்கு தேவையான அளவை விட கூடுதலாக குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது, இதற்கான திட்ட மதிப்பீடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கீழக்கரையில் குடிநீர் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெ க்டர் முத்துலட்சுமி தலைமையில் ஆய்வு நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நகராட்சி பொறியாளர் அருள், நகர்மன்ற கவுன்சிலர்கள் ஷேக் உசேன், நசுருதீன், எஸ்.கே.வி.சுகைபு தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு பேசியதாவது,
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி, நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.
விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு பயிர் கடன் ரூ.4961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1238.07 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, இதர விவசாய கடன்கள் ரூ.136.90 கோடி, விவசாயத்துக்கான கடன் மொத்த மதிப்பீடு ரூ.6452.27 கோடியாகவும், சிறுகுறு நடுத்தர தொழில் கடன் ரூ.3657.75 கோடி, ஏற்றுமதி கல்வி மற்றும் கடன் வசதிக்கான கடன் மதிப்பீடு ரூ.294.79 கோடி ஆகும்.
அடிப்படை கட்டுமான வசதிக்கான கடன் ரூ.66 கோடி ஆகும். மகளிர் சுய உதவி குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் ரூ.757.80 கோடி என அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து அதற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப் படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.
வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவில் முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் ரமேஷ், முன்னாடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- அனைத்து மாணவர்களும் செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார்கள்.
- மாணவர்களும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வருகை தருவதுபாராட்டுக்குரியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் காடுவெட்டி கிராமத்தில் இல்லம் தேடிக்கல்வி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இல்லம் தேடிக் கல்வி மையத்தைதன்னார்வலர் ஷர்மிலி கடந்த 1 வருடங்களாக 30 மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றார். அதனை சேத்திருப்புபள்ளி தலைமை ஆசிரியர் கண்காணித்து மாணவர்களை உற்சாகப்படுத்திவருகிறார்.
ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ்மையத்திற்கு தேவையானவசதிகளை செய்து வருகிறார்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுடர் மணி, அருள், சுப்பிரமணியன், ஜோதிமணி மற்றும் ஊர் முக்கியஸ்த ர்கள்அனைவரும் மையம் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டமான இல்லம் தேடிக்கல்வி திட்டம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கியுள்ளதுஎன்று பள்ளி தலைமை ஆசிரியர் பாலு கூறினார்.
மேலும் இதன் விளைவாக 30 மாணவர்களும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வருகை தருவதுபாராட்டுக்குரியது என்றும் அனைத்து மாணவர்களும் செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார்கள்.
செய்தி த்தாள் வாசிப்பதன் மூலம் அனைத்து அறிவுகளையும் சேர்த்து வருகின்றனர்.மாணவர்களின் பெற்றோர்கள் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தைம பாராட்டி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
- ரூ.2,883 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்துக்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நடந்தது.
- அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தர விட்டுள்ளார்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதேபோல் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தர விட்டுள்ளார். இதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:- தலைவர் செஹானாஸ் ஆபிதா:- நகராட்சி பகுதியில் நிலவும் நிறை, குறைகளை நேரடியாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்க வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடிக்காமல் வலைத்த ளங்களில் நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி கமிஷனர், அலுவலர்கள் மீது தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தனிப்பட்ட பேச்சை நிறுத்த வேண்டும்.
கவுன்சிலர் சேக் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் முகமது ஹாஜா சுகைபு:- கீழக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அரசு மருத்து வமனையில் புதிய பாதை ஏற்படுத்த மருத்துவ நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
1- வது வார்டு பாதுஷா: கீழக்கரை நகராட்சியாக தரம் உயர்த்திய பிறகும் கீழக்கரை கோரிக்கைகளை இதுவரையிலும் நிறை வேற்றப்படாததால் வருகின்ற நகர் சபா கூட்டத்திற்கு கலந்து கொள்ள போவதில்லை என்று கூறினார்.
இதேபோல் கவுன்சி லர்கள் முகம்மது காசிம், பவித்ரா, சப்ராஸ் நவாஸ், நசுருதீன் உள்ளிட்டோர் சாக்கடை வசதி, அடிப்படை வசதிகள், வரிவசூல் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கூட்டத்தில் நகராட்சி முன்னாள் வாகன ஓட்டுநர் அய்யப்பனுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் நகராட்சி பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், மேலாளர் தமிழ்ச்செல்வன், இளநில உதவியாளர் உதயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
- வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில் துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார், வேளான் உதவி அலுவலர் பவித்ரா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேபிசரளா பக்கிரிசாமி, சுஜாதா ஆசைத்தம்பி மற்றும் மூத்த விவசாய முன்னோடிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
- தலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 2022-23-ம் நிதியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுக்குள் இ-சேவை மையத்தில் இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.புதிதாக விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, தந்தையின் கல்வி மாற்று சான்று, தாயாரின் கல்வி மாற்று சான்று, 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் குடும்பப் புகைப்படம், குழந்தைகளின் பிறப்பு சான்றுகள் அசல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யவும்.இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வைப்பு தொகை ரசீது பெற்று 18 வயது முதிர்வடைந்த அனைத்து பயனாளிகளும் முதிர்வு தொகை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே 2001-04 வரை பதிவு செய்து வைப்புத்தொகை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளும் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- திருப்புல்லாணி பகுதியில் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புல் லாணி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கோரைக்கூட்டம் ஊராட்சி தன்ரம்பல் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர், தினைக்குளத்தில் சைக்கிள் நிறுத்தம், மரைக்கா நக ரில் நிழற்குடை, பெரிய பட்டினத்தில் 63 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், ரேசன்கடை, வண்ணாங் குண்டு ஊராட்சி நேருபுரம் கிராமத்தில் கலையரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தினைக்குளத்தில் கலையரங்கம் கட்டவும், வண்ணாங்குண்டு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் அடிக்கல் நாட்டினார். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைத்து கிரா மங்களிலும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மின்வாரிய செயற்பொ றியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சோமசுந்தரம், ராமநாதபுரம் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், ஊராட்சி துணைத் தலைவர் புரோஸ் கான்.
எஸ்.டி.பி.ஐ. நகர் தலைவர் மீராசா, நகர் செயலாளர் பீர் மைதீன், எஸ்.டி.டி.யூ. நகர் தலைவர் இஜாஸ், ஹக் அம்பலம், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகர்மன்ற உறுப்பினர்கள் நசீருதீன், மீரான் அலி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், பெரியபட்டினம் தி.மு.க. செயலாளர் அன்சாரி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அபிபுல்லா, ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தன், டி.கே.குமார், ரகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபால கிருஷ்ணன், திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி.திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலை வர் கஜேந்திரமாலா முத்துகி ருஷ்ணன், வண்ணாங் குண்டு ஊராட்சி தலைவர் தியாகரா ஜன், ஜமாத் தலைவர் நிஜாப் கான், தி.மு.க.நிர்வாகி பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிர்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் நெல் சாகுபடிக்கு பின், தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிர்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பயறு வகை சாகுபடி செய்வதால், சாகுபடி செலவு குறைவாகவும், 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.ஒரு ஏக்கருக்கு, 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயறு வகை பயிர்கள் பயிரிடுவதால் மண் வளம் மேம்படுகிறது. இப்பயிர்கள் வாயு மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது. இதன் வாயிலாக, மண் வளம் அதிகரித்து, அடுத்து பயிர் சாகுபடியின் போது, விளைச்சல் அதிகரிக்கிறது.எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.