என் மலர்
நீங்கள் தேடியது "Public Demand"
- சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- திட்டக்குடி பகுதிகளில் அரசு கேபிள் சேவை முடக்கப்பட்டது.
- அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டார பகுதிகளில் சிறுமுலை, பெருமுலை, திட்டக்குடி, தர்மகுடிகாடு, கோழியூர் ,தொள்ளார்குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் இணைப்பு பெற்று டிவி பார்த்து வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் சுமார் 24 மணி நேரம் அரசு கேபிள் நோ சிக்னல், இணைப்பு கிடைக்கவில்லை இதனால் கேபிள் சேவை முடங்கியதால் பொதுமக்கள் நாட்டு நடப்புகளை அறிய முடியாமலும் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு சேனல்களை பார்க்க முடியாமல் உள்ளதால் அரசு உடனடியாக தொடர்ந்து அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
- கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும் தார்சாலை பெரியபாபுசமுத்திரத்தில் மண் சாலை போல மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மிக மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
- இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் பிரதான சாலையில் பெரும் அளவில் விபத்துகள் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் இலத்தூர் உள்ளிட்ட பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்லவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளது.
- 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தாழ நல்லூர் கிராமத்தை ச்சேர்ந்த பொதுமக்கள் 250 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவியது. இதில் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி தாசில்தார் கார்த்திக்கை நேரில் சந்தித்து தங்கள் முறையாக பட்டியலை தயார் செய்து அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திக் உறுதியளித்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தாழநல்லூர் கிராமத்திலேயே தகுதியுடைய பயனாளிகள் வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறோம். ஆனால் அதிகாரிகள் சிலர் வெளியூரைச்சேர்ந்த சிலருக்கு எங்கள் ஊரில் பட்டா கொடுக்க முயற்சி ப்பதாக தெரிந்ததால் தாசில்தாரை சந்தித்து முறையிட்டோம் என தெரிவித்தனர். திடீரென தாலுக்கா அலுவலகத்தில் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர்.
- ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை.
கடலூர்:
கடலூர் அரசு மருத்துவமனை அருகே கடந்த பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றனர். இதன் காரணமாக இங்கு அமைக்கப்பட்டு இருந்த பயணியர் நிழற்குடையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர். மேலும் சாலையில் பொதுமக்கள் நிற்காமல் இருந்ததால், இந்த பகுதியில் பாதிப்பும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சாலை ஓரத்தில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் நின்று தினந்தோறும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்கடக்க நீண்ட நேரம் நின்று பஸ்ஸில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வெயில் மற்றும் மழையில் நிற்பதால் மீண்டும் மீண்டும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே அமைத்திருந்த நிழற்குடையை எந்தவித காரணமும் இன்றி அகற்றியதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சமாக இதனை பார்க்க நேரிடுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அபிராமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பகல் நேரங்களில் மட்டும் டாக்டர்கள் மருத்துவம் பார்க்க வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமப் படுகின்றனர்.
அபிராமம் மற்றும் நத்தம், பாப்பனம், விரதக் குளம், அச்சங்குளம் டி.வல்லகுளம் காடனேரி உள்பட்ட 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவதற்காக நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமுதிக்கோ, 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடிக்கோ செல்லும் அவலநிலை உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-
அபிராமத்தை சுற்றி கிராமங்கள் அதிகமாக உள்ளன. நத்தம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. பிரசவம், காய்ச்சல், இரவு நேரங்களில் பூச்சி, பாம்பு, போன்ற விஷ ஜந்துகள் கடிபட்டு அவசரமாக ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது டாக்டர்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நோயாளிகளை கமுதிக்கோ, பரமக்குடிக்கோ, மதுரைக்கோ கொண்டு செல்லும்போது உயிர் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அவசர விபத்து சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள், பாம்பு கடி போன்ற விஷ ஜந்துகள் கடிக்கு தேவையான மருந்துகள் இங்கு இல்லாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனை தடுத்த நிறுத்து வதுடன் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு நிரந்தரமாக 24 மணி நேரமும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
- கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் 40ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
- திருமணம் போன்ற விசேஷ நாட்களில் வாகன எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.
பல்லடம் :
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில், ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. குடிநீர் குழாய் இணைப்புகள் உடனடியாக சரி செய்யப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அதனை சரி செய்ய குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகின்றது.ஆனால் இன்னும் குழியை சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன அந்தப்பகுதி வளைவான பகுதி என்பதால் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே குழாய் உடைப்பு பணிகளை விரைவாக செய்யவேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- பேரூராட்சி தலைவர் சம்பவ இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு 2 இடத்தில் வேகத்தடைஅமைக்க உத்தரவிட்டார்.
- அதன்படி 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 16-ல் தங்கநகரம் செல்லும் தார்சாலைவழியாக பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக செல்கின்றனர். இந்த ரோட்டில் பலமுறை வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த இந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று இப் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முகமதுஆபித் உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். பேரூராட்சி தலைவர் சம்பவ இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு 2 இடத்தில் வேகத்தடைஅமைக்க உத்தரவிட்டார். அதன்படி 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
இதைப்போல கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தெருவிளக்கு, குடிநீர் குழாய் சரி செய்தல் போன்றவற்றிற்கு நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தால் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆலோசனையின்படி, பேரூராட்சி தலைவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரச்சினையை தீர்வு செய்கிறார். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுபகுதியிலும், அடிக்கடி நேரில் சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
- துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
- ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது.
சென்னை:
வடசென்னையின் முக்கிய பகுதியாக திகழ்வது பேசின் பாலம்.
வடசென்னை பகுதி வாசிகள் மட்டுமின்றி, மாதவரம், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களும் இந்த பாலத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
வால்டாக்ஸ் ரோடு மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்பவர்களும் பெரியமேடு, வேப்பேரி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழியாகவே வருகிறார்கள். பேசின் பாலம் அருகில் உள்ள நடைபாதை வழியாக சென்று அருகில் உள்ள பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் நடை பாதையை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அவசரத்துக்கு சாலையோரமாக வண்டியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துவிட்டு செல்வதை பெரும்பாலானோர் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.
இதனால் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதிலும் சிறுநீர் கழிப்பவர்களை மட்டும் கட்டுப்படுத்துவது என்பது சவாலாகவே உள்ளது.
இது தொடர்பாக பேசின் பால பகுதியை அதிகமாக பயன்படுத்தும் பொதுமக்கள் சிலர் கூறும்போது, நடை பாதையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தடுப்பு வேலிகள் போன்று அமைத்தால் அது பலன் அளிக்கும்.
அதே நேரத்தில் கழிவறை கட்டி கண்காணித்தாலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும் என்றனர். சிறுநீர் கழிப்பதால் வீசும் துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க நடை பாதை உடைந்தும் காணப்படுகிறது. இதனை சரி செய்து மக்கள் சிரமமின்றி நடைபாதையில் நடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
- நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் புதியம்புத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
புதியம்புத்தூருக்கு மேற்கே உள்ள 60 கிராம மக்களும் தூத்துக்குடிக்கு இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். மதுரை 4 வழிச்சாலையில் தூத்துக்குடி வரும் லாரிகள் டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக குறுக்கு சாலையில் இருந்து ஓட்டப் பிடாரம் வழியாக இந்த ரோட்டில் தான் தூத்துக்குடி செல்கின்றன. மேலும் சிலர் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எந்த நேரமும் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஏற்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் மேலமடம்சந்திப்பில் இருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சில மின்கம்பங்களை ரோட்டின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
புறவழிச்சாலை
போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஊருக்கு வடபுறம் புறவழிச்சாலை அமைப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து இந்த பைபாஸ் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் நடுவக்குறிச்சியில் இருந்து மேலமடம் இசக்கி அம்மன் கோவில் வரை உள்ள 80 அடி ஓடையில் மண் நிரப்பி பைபாஸ் ரோடு அமைத்து புதியம்புத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
- மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பகுதி களில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் அகற்றப்படாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வரு கிறது. குறிஞ்சிப்பாடி சிகா மணி ரைஸ் மில் தெருவில் ஒரு மாதமாக சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து தற்போது பல மாவட்ட ங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அது போல நேற்று குறிஞ்சிப்பா டியை அடுத்த கல்குணம் கிராமத்தில் அரசுப் தொடக்க பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் இறந்து விட்டார்.
இந்நிலையில் பேரூ ராட்சி பகுதிகளில் தெருக்க ளில் செல்லும் வாய்க்கால்க ளில் கழிவு நீர் தேங்கி நிற்ப தால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வார்டு பகுதியில் சாக்கடை கழிவு நீர் அகற்ற துப்புரவு பணியாளர்களை துரிதமாக செயல்பட வைக்க வேண்டும் என்பதே குறிஞ்சிப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.