என் மலர்
நீங்கள் தேடியது "python"
- தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம்.
- ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.
இந்தோனேசியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 52 வயதான ஜஹ்ரா என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ரப்பர் தோட்டத்துக்கு தேடி சென்றனர். விடிய விடிய தேடியும் ஜஹ்ரா கிடைக்கவில்லை.
இந்நிலையில் மறுநாள் ரப்பர் தோட்டத்திற்கு அருகே 16 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தது. அந்த பாம்பின் வயிறு மிகவும் வீங்கிய நிலையில் காணப்பட்டது. இதைப்பார்த்த ஜஹ்ராவின் உறவினர்கள் ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு கொன்று விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை அடித்துக்கொன்று பாம்பின் வயிற்றை கிழித்தனர். அப்போது பாம்பின் வயிற்றுக்குள் ஜஹ்ரா பிணமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இந்தோனேசியாவில் நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.
- தகவல் தெரிவித்தும் வனத்துறை அதிகாரிகள் வரவில்லை
- பொதுமக்களே பிடித்து காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள போடிப்பேட்டை கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்று உள்ளது.
அப்போது சுமார் இரவு 9 மணி அளவில் மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை சாப்பிட கடையை நோக்கி வந்துள்ளது. திடீரென அதனைப்பார்த்த கடையின் உரிமையாளர் பாம்பு, பாம்பு என கூச்சலிட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் வனத்துறை அதிகாரிகள் நாங்கள் வர முடியாது நீங்களே பிடித்து காட்டில் விட்டு விடுங்கள் என சாமர்த்தியமாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து அருகே இருந்த காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர். இரவு நேரத்தில் ஊருக்குள் 7 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
- வெங்கடேசுக்கு சொந்தமான விவசாய தோட்டம் நவரைபத்து பகுதியில் உள்ளது.
- தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஷ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அருகே உள்ள நவரைபத்து பகுதியில் உள்ளது. இன்று காலை வெங்கடேஷ் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு பணகுடியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
- 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. அவர் நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ராசிபுரம் வனத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மலைப் பாம்பை உயிருடன் பிடித்தனர். பிறகு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதி யான காப்பு காட்டில் உயிருடன் விட்டனர்.
- பொன்னமராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு கோழியை விழுங்கியது
- தீயணைப்புதுறையினர் மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் சிவாஜிகணேசன் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை முழுங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தூத்தூர் கிராமத்திற்கு சென்று கோழியை முழுங்கி அப்பகுதி மக்களை அச்சுறுத்திய பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர் . பின்னர் அந்த மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.
- ஆலங்குளம் செல்லும் சாலையில் அணைந்தநாடார்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
- நேற்றிரவு அந்த பள்ளி அருகில் மெயின்ரோட்டின் குறுக்காக 12 அடி நீள மலைபாம்பு சென்றது
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ளது இடைகால் கிராமம். இங்கு இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் அணைந்தநாடார்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு அந்த பள்ளி அருகில் மெயின்ரோட்டின் குறுக்காக 12 அடி நீள மலைபாம்பு சென்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் அம்பை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
- முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக மலைப்பாம்புகள் பிடிபட்டு வருவது அதிகமாகி வருகிறது.
- மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது.
முக்கூடல்:
முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக மலைப்பாம்புகள் பிடிபட்டு வருவது அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் இன்று பாப்பாக்குடி அருகிலுள்ள செங்குளம் வாய்க்கால் பகுதியில் இடைகாலை சேர்ந்த சுடலைமணி என்பவர் மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது. வலையில் மீனுக்கு பதிலாக மலைப்பாம்பு சிக்கியதை பார்த்தவர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையில் இருந்து வந்த வேட்டை தடுப்பு காவலர் முருகனிடம் ஒப்படைத்தனர்.
இந்தப் பகுதிகளில் பாம்பு, கரடி, மான், மிளா, காட்டுப்பன்றிகள் அடிக்கடி வருவதால் காட்டுப்பகுதிக்குள்ளும், ஆற்றில் குளிக்க செல்பவர்களும், குளங்களுக்கு செல்பவர்களும் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக இரவு நேரங்களில் இப்பேற்பட்ட இடங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
- ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள நத்தம் பகுதியில் பிரபு பாண்டியன் என்பவரது தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு புகுந்தது.
- வனத்துறை அதிகாரிகள் தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள நத்தம் பகுதியில் பிரபு பாண்டியன் என்பவரது தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு புகுந்தது. விவசாயிகளான பேரூர் முத்துராமலிங்கம், வசவபுரம் முத்து, கார்த்திக், சவுந்தர்பாண்டி, சங்கர் ஆகியோர் மலைபாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் வன சரகர் பிருந்தா உத்தரவின்பேரில், வனத்துறை அதிகாரிகள் வெள்ளபாண்டி, கந்தசாமி, காசிராஜன் ஆகியோர் தோட்டத்தில் பிடிபட்ட மலைபாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
- சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அலெக்ஸ் செல்வன் லாவகமாக பிடித்தார்.
- பிடிபட்ட பாம்பு திருக்குறுங்குடி அடர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் ஒரு மலைப்பாம்பு கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் செல்வன் சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் வனஅதிகாரி யோகேஸ்வரன் தலைமையிலான வனகாவலர்கள் செல்வமணி, அண்ணாதுரை ஆகியோர் பிடிபட்ட பாம்பை திருக்குறுங்குடி அடர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். அப்போது ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் ஆல்வின் சேவியர், ஷேக், ஆப்தமிரா சேம் சகாப்தின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
- மலைப்பாம்பு வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள திம்மராயம்பாளையம் சுதா நகரில் ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பினை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சிறுமுகையை ஒட்டியுள்ள அடர் வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.
இதுகுறித்து பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் கூறுகையில் திம்மராயம்பாளையம் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி மான், பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாகவே வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கி உள்ளன.
தற்போது பிடிப்பட்டுள்ள மலைப்பாம்பு 8 அடி நீளம் கொண்டது.சுமார் 10 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு சிறுமுகை வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.
- ஒடுகத்தூர் வனத்துறை பிடித்தனர்
- காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரராஜா இவருக்கு செந்தமாக மாந்தோப்பு உள்ளது.
வழக்கம்போல இவர் மாந்தோப்பில் மாங்காய்களை பறிப்பதற்காக நேற்று மாலை மாந்தோப்பிற்கு சென்றுள்ளார்.
அப்போது சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊர்ந்து கொண்டு மா மரத்தின் அடியில் இருந்துள்ளது. இதனை பார்த்த தாமோதரன் அலறி அடித்து ஓடி உள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருகே இருக்கும் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் வருவதற்குள் மலைப்பாம்பு மாமரத்தில் ஏறியது.
பின்னர் வந்த ஒடுகத்தூர் வனத்துறை 40 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள சானாங்குப்பம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
- வயலில் கிடந்த மலைப்பாம்பு பிடிப்பட்டது
- வனத்துறையினர் மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.
புதுக்கோட்டை:
திருமயம் அருகே மாவூர் கிராமத்தில் அறிவழகன் என்பவரின் வயலில் நேற்று காலை தொழிலாளர்கள் மூலம் களை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்குள் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அவர்கள் சத்தம் போட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த மலைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.