என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain flood"

    • 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மழை காலத்தில் ஏற்படும் பாதிப்பு களை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக 23 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது அவர்களை தங்க வைக்க 26 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 24 பெண்கள் உட்பட மொத்தம் 239 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    வருவாய்த் துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பல்துறை அடங்கிய 6 குழுக்களும், உள்வட்ட அளவில் 20 குழுக்களும் அலுவலர்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த குழுக்களில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட 11 துறைகளின் அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை அவர்களது துறை தலைமைக்கு தெரியப்படுத்தி உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

    மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண். "1077" மற்றும் 0416-2258016 ஆகிய தொலைபேசி எண்களில் மழை வெள்ள பாதிப்புகளை தெரிவிக்கலாம்.

    இந்த மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கவும், அவற்றின் நிலை குறித்து கண்காணிக்கவும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சார்புத் துறை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில்

    கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.0416-2220519.

    காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம்- 0416-2297647,

    அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம்-9445461811. கே.வி.குப்பம் வட்டாட்சியர்

    அலுவலகம்- 9629472352, குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் 04171-221177 மற்றும் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் 04171-292748 பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இந்த தொலைபேசி எண்களிலும் தெரிவிக்கலாம்.

    இவை அந்தந்த தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நிலையில் கண்காணிக்கப்படும்.

    மழை வெள்ளம் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், மழை காலங்களில் மின்சாதன பொருட்களை பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.

    தேவையான அளவிற்கு மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குளம், குட்டை மற்றும் ஏரி ஆகிய நீர்தேங்கியுள்ள பகுதிகளில் விளையாடவோ, செல்பி புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் ‘மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்’ என்று யாழினியிடம் கேட்டார்.
    • இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    போரூர்:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தி என்கிற யாழினி. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் அசோக் நகர் 135- வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    இவர் கடந்த 2-ந்தேதி அசோக் நகர் 3-வது அவின்யூவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய சென்றார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் 'மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்' என்று யாழினியிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி யாழினி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்து வந்த தி.மு.க வட்ட செயலாளர் செல்வகுமார் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற என்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவருக்கு உடந்தையாக முன்னாள் தி.மு.க கவுன்சிலர் கோ.சு.மணியும் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். ஆகவே இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதேபோல் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வகுமாரும் கே.கே.நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார் பம்பு மூலம் நீரை வெளியேற்றும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்டு வந்தேன். மழையின் போது இந்த பக்கமே வராத கவுன்சிலர் யாழினி சம்பவத்தன்று வந்து ஆட்களை வைத்து ஆய்வு செய்வது போல செல்போனில் படம் பிடித்தார்.

    இதுபற்றி கேட்ட போது, 'நீ யார்' என்று கேட்டு என்னையும் உடன் இருந்த நிர்வாகிகளையும் தகாத வார்த்தைகளால் பேசிய கவுன்சிலர் யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ஆகவே யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இரு தரப்பினர் கொடுத்த புகார் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மழைவெள்ளம் ஆற்றுபடுகையில் செல்லும் வகையில் ஷட்டர்கள் திறப்பு
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அருகே செய்யாறு அணைக்கட்டு ஆற்று கால்வாய் பாச னம் பெறும் 147 ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் ஆற்றுப்படுகையில் வெளி யேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணிதுறையினர் தெரிவித்தனர்.

    பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செல்லும் செய்யாற்றுப்படுகை யில் நூற்றாண்டு கண்ட அணைக்கட்டு அமைக் கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பக்க கால்வாய் அமைக்கப் பட்டு மழைக்காலங்க ளில் ஆற்றுப்படுகையில் வரும் வெள்ள நீர் இந்த கால்வாய் வழியே திரும்பி அனுப்பப்பட்டு சுமார் 147 ஏரிகள் நிரம்பும் வகை யில் அமைக்கப்பட்டுள் ளது.

    இந்நிலையில், கடந்த வாரம் மாண்டஸ் புயல் தாக்கத்தால் திருவண்ணா மலை மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இத னால் ஆற்றுப்படுகையில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனை தொடர்ந்து அணைக்கட்டு பகுதியில் : ஆற்று கால்வாய் வழியே தண்ணீர் திருப்பி விடப் பட்டது. இதன் மூலம் ஆற்று கால்வாய் பாச னம் பெறும் சுமார் 147ஏரிகளும் நிரம்பி வழிந்தது.

    இதுகுறித்து பொதுப்பணிதுறையினர் கூறுகை யில், 'ஆற்றுக்கால்வாய் வழியே பயன் பெறும் ஏரி கள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகிறது.இதனால் கடந்த 2 நாட்களுக்கு மேலாக அணைக்கட்டில் உள்ள பக்க கால்வாய் ஷட்டர் கள் அனைத்தும் மூடப் பட்டு மழைவெள்ள நீர் ஆற்றுப் படுகையில் செல் லும் வகையில் ஷெட் டர்கள் திறக்கப்பட்டுள் ளது.

    மேலும் ஆற்றுக்கால் வாய் வழியே செல்லும் பாசன நீர் அனைத்து ஏரி களும் நிரம்பி இறுதியில் மதுராந்தகம் ஏரி நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், மழைநீர் செல்லாத கால்வாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
    • திட்டத்திற்கு சுமார் ரூ. 7 கோடி செலவாகும். இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.

    சென்னையில் இந்த ஆண்டு பருவமழையின் போது வெள்ளம் தேங்காமல் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டிரோன்கள் மூலம் வெள்ளம் தேங்கும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வெள்ளம் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் தேங்கும் தாழ்வான இடங்கள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், மழைநீர் செல்லாத கால்வாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஆற்றின் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் உடனடியாக அகற்றப்படும்.

    அடையார், கோவளம், கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆற்று பகுதிகளிலும் வெள்ளம் தேங்காமல் தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். டிரோன்கள் மூலம் வெள்ளம் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மாநகராட்சியில் நீர் நிலை எச்சரிக்கை பற்றிய சென்சார்கள் உள்ளன. ஆனால் டிரோன் கண்காணிப்பு விரைவான மீட்பு பணிக்கான தகவல்களை வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'டிரோன் மூலம் செய்யப்படும் ஆய்வுகள் தாழ்வான பகுதிகளை உடனே தெரிந்து கொள்ள உதவும்.

    மேலும் மழைநீர் வடிகால்களில் பாதிப்புகளையும் சரிசெய்ய முடியும். இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 7 கோடி செலவாகும். இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

    கடந்த ஆண்டில், அம்பத்தூரில் 16 இடங்கள், அண்ணாநகரில் 10 இடங்கள் உள்பட மாநகராட்சி முழுவதும் மொத்தம் 37 வெள்ளப் பகுதிகளை சென்னை மாநகராட்சி கண்டறிந்தது. இதில் 28 இடங்களில் 2 அடிக்கும் குறைவாக தண்ணீர் தேங்கியது. இந்த முறை அந்த பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்தித்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதில் காவலர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்துவரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி தலைமை காவலர் தயாளன் கூறும்போது,

    வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது என்று கூறினார்.

    • 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த மழையும் பெய்தது. புயலால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்தன.

    சூறாவளி புயல் மழைக்கு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.

    • கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.
    • இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியும், ஆற்று வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    எனினும் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான ஒருசில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 3 இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் கிராமத்தில் ஆரணி ஆற்று வெள்ளம் காரணமாக தரைப் பாலம், சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவர்கள் பழவேற்காடு பகுதிக்கு படகுகளில் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அவர்களது படகு பயணம் நீடித்து வருகிறது. ஆரணி ஆற்றில் வெள்ளம் இன்னும் குறையவில்லை. தண்ணீர் குறைந்த பின்னரே சாலைகள் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று தெரிகிறது. ஒரு வாரமாக தங்களை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை, நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்

    இதேபோல் கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த கேசவ புரம், பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. அதனை ராட்சத மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள். மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தும் மழைநீர் வடியாமல் இன்னும் தேங்கி நிற்கிறது.

    பழவேற்காடு அடுத்த தாங்கள் பெரும் புலம் ஊராட் சிக்கு உட்பட்ட தாங்கல், பெரும் புலம், இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து தடைப்பட்டதால் டிராக்டரில் உணவு மற்றும் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமையில் வழங்கப்பட்டு வருகின்றன. பழவேற்காடு அண்ணா மலைச்சேரி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. மீன்வளத்துறை சார்பில் கணக்கெ டுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    • மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன.
    • காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை கடலில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை எண்ணை கசிவு படர்ந்துள்ளது.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அனைத்து இடங்களும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழையின் காரணமாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்தது. அப்போது மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. மேலும் எண்ணை படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்து இருந்தது. இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதியிலும் அதிக அளவு எண்ணை கழிவுகள் கடலில் கலந்து படர்ந்து உள்ளன. இதனால் கடல் நீர் மாசுபடுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதோடு கச்சா எண்ணை படலம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை கடலில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை எண்ணை கசிவு படர்ந்துள்ளது.

    இந்த பகுதி மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெறும் என்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கடலில் பரவி உள்ள எண்ணை கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர்.


    இதுதொடர்பாக கடலோர காவல்படை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், மிச்சாங் புயலுக்கு பின் ஏற்பட்ட வெள்ளத்தில் எண்ணெய் கசிவு கலந்தது குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை சுமார் 20 கி.மீட்டர்வரை எண்ணெய் கசிவு படர்ந்து உள்ளது. இந்த கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் எனும் எண்ணெய் கரைப்பான் நேற்று தெளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இன்று பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள 9 பேர் கொண்ட குழுவினர் எண்ணூரில் எண்ணை படர்ந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வெள்ளம்.
    • தடுப்புச் சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக படி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதையும் கோவில் நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையின் ஒரு பகுதியில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 12 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை யொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு மலை ப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் இன்னும் ஒரு வாரம் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    • அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாராபுரம் கிராமத்தில், காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சுமார் 150 மீட்டர் சாலை முற்றிலும் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்வதற்கு பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்வதாகவும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத மோசமான சூழ்நிலை இருப்பதால் தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி, காட்டாற்று வெள்ளத்தினால் சாலை அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் ஆகியும் தற்போது வரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அவரச மருத்துவத் தேவைக்குக்கூட தூத்துக்குடி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் முத்துக்குமாரபுரம் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
    • சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி ரெயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மழை நீர் சூழந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ரெயில் நிலையம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய தொடங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.

    அதேபோல் சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது. அப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயணிகள் கூறும்போது, தாங்கள் 5 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் மூலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

    • மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
    • கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கோழிப்பண்ணை நடத்தி 5 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

    மேலும் கோழிப்பண்ணைக்கு கடந்த 2 நாட்களாக செல்ல முடியாத நிலையில் இன்று காலையில் மனோஜ்குமார் சென்று பார்த்தபோது அங்கு அனைத்து கோழிகளும் உயிரிழந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனோஜ் குமார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்பகுதியில் கிடங்கு தோண்டி இறந்த கோழிகள் அனைத்தையும் புதைத்துள்ளார். அதேபோல் சிலோன் காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமார் 7 ஆயிரம் கோழிகளும், கவர்னகிரியில் பொன்பெருமாள் என்பவர் நடத்தி வரும் கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து கோழி பண்ணை நடத்தி வருபவர்கள் கூறுகையில், வங்கிகளில் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்த நிலையில் அதிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் உயிரிழந்தது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொகை பெற்று தந்தால் மட்டுமே மீண்டும் இத்தொழிலை செய்ய முடியும் என தெரிவித்தனர்.

    ×