என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain water"

    • தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கரூர் நகரப் பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது
    • குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்தது.

     கரூர்:

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு லேசான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வெங்கமேடு, தாந்தோணிமலை, சுங்ககேட், கரூர் ஜவகர் பஜார் உட்பட பல்வேறு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து வடிகால்களில் சென்றதோடு ஒரு சில பகுதிகளில் குடியிருப்புகளிலும் புகுந்தது.

    • கனமழையால் மழைநீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது.
    • ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் வடிய வைக்கும் பணி.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தோட்ட மானியத்தில் சில மாதங்களுக்கு முன்பு மயான சாலை பேவர் பிளாக் முலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்கால்கள் பகுதி சாலை போடப்பட்டதால் குறுகியது.

    தற்பொழுது பெய்து வரும் கனமழையால் மழை நீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது இதனால்பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டன மேலும் விசப்பூச்சிகள், பாம்புகள் வருவதால் பேரூராட்சி நிர்வாகம் விரைவாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை குறுக்கே வடிகால் குழாய்களை அமைத்துமழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் மயிலாடுதுறை சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு வெட்டி மழை நீர் வடிய வைக்கப்பட்டது.

    • தேங்கிய மழைநீரை அகற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.
    • தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.

    மழைநீர் அகற்றும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ெரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    மழையால் ெரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலா ளர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனை கேள்விப்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ராட்சத மின்மோட்டார்களை வர வழைத்து தேங்கிய மழைநீரை துரிதமாக வெளியேற்றி பாதையை ஒழுங்குபடுத்தினர்.

    நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி மழைநீர் வெளியேறி செல்லும் நீரோடையின் அடைப்பை நீக்கி மழைநீர் தங்குதடையின்றி செல்ல உரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.

    இதுகுறித்து எம்.எல்.ஏ. வும், நகரசபை தலைவரும் கூறுகையில், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை மழை காலங்களில் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள ப்படும்.

    மாணவர்கள், மில் தொழிலாளர்கள் இனி அச்சமின்றி கணபதியாபுரம் தரைபாலத்தை கடந்து செல்ல வழிவகை செய்து தரப்படும் என்றனர்.

    • நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.
    • பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் உடுமலை சாலையில் உள்ளது தினசரி காய்கறி மார்க்கெட். இந்த சந்தை முன்பு பழைய பஸ் நிலையமாக இருந்தது. 1986-ம் ஆண்டு முதல் காய்கறி சந்தையாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இங்கு தினசரி ஆயிரம் கிலோவிற்கு மேல் காய்கறி குப்பைகள் தேங்கி விடுகின்றன. இந்த சூழ்நிலையில் அருகிலேயே நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தம் மற்றும் நகராட்சியின் குடிநீர் தொட்டி ஆகியவை அமைந்துள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் இங்கு குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை இரண்டு முறை அள்ளுவதால்குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் குப்பைகள் ரோட்டில் அடித்துச் செல்லப்பட்டு மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகின்றன. இதனை உடனடியாக தீர்க்க வேண்டும் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைக்காரர்கள் கூறி வந்த நிலையில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த தாராபுரம் தி.மு.க. நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம் சாலை மறியல் செய்ய வேண்டாம் .உங்களுக்கு உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கும் சாக்கடை வசதி மழைநீர் தண்ணீர் வெளியே செல்வதற்கு உண்டான வசதி அனைத்தும் செய்து தரப்படும் எனக் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது .இது குறித்து மார்க்கெட் தினசரி மார்க்கெட் கடைக்காரர் டேவிட் கூறிய போது, இங்கு மழை நீர் தேங்கி விடுகின்றது .மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து வருகிறது .இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் .பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வடக்கு ரத வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
    • தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து உதவி கமிஷனர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வடக்கு ரத வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த ரத வீதியில் லேசான சாரல் மழை பெய்தாலே குளம் போல தண்ணீர் தேங்கி கிடக்கும். இதனால் அந்த பகுதியில் சாலையோர கடை வைத்திருப்பவர்களும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணும் படி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ரா மனிடம் அறிவுறுத்தினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான பணியாளர்கள் இன்று வடக்கு ரத வீதியில் தேங்கி கிடந்த மழைநீரை மாநகராட்சி லாரியை கொண்டு மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து உதவி கமிஷனர் வெங்கட்ராமன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அப்பகுதி யில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் தேங்கி கிடந்த மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக அந்த நீரில் மருந்து தெளிக்கும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
    • வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லோடு லாரி சர்வீஸ் சாலை துவக்கத்திலேயே பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருச்சிக்கு செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் திருப்பி அனுப்பியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் சுமார் 5 மணி நேரம் நகரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தற்போது வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இரவு முழுக்க மழை பெய்து கொண்டே இருந்த சூழ்நிலையில் சர்வீஸ் சாலை முழுக்க மழை நீர் தேங்கி நின்றததால் அதில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    • பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது.
    • 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

    பல்லடம் :

    பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    நேற்று முன்தினம் காலை முதல் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தவண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. தொடர்மழையால் பல்லடம் அண்ணாநகர் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் இரவு முழுவதும் மழைநீரை வெளியேற்றியபடி இருந்தனர். நகராட்சி ஊழியர்கள், மழைநீர் தேங்கியுள்ள அண்ணாநகரில் மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். இதே போல பல்லடம் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீர் பாதித்த இடங்களை, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினர். பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
    • கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

    வெள்ளகோவில்:

    தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கன மழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தன. வெள்ளகோவில் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளகோவில் நகர் பகுதியில் குமாரவலசு, கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி மழை நீர் தேங்கி இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    • இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து செல்கின்றனர்.
    • வடிகால் அமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமதாஸ் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால்இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து செல்கின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் இந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. தேங்கி உள்ள மழை நீரால்அவர்களும் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வடிகால் அமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி உள்ளது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லைஎனபொதுமக்கள் கூறினர்.

    • பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
    • அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் முதல் குளத்துப்பாளையம் வழியாக அணைப்புதூர் வரை செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையில் தினசரி பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக குளத்துப் பாளையம் பெரிய தோட்டம் பகுதி அருகில் ரோட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

    எனவே அப்பகுதி மக்கள் பள்ளமான அந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்று கூறி ரோட்டில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊராட்சி தலைவர் கோமதி, துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி, தங்கபாண்டி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அந்த ரோட்டில் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
    • ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள துறைமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பின்னர் பொதுமக்கள் அந்த ஓடையில் அடைப்பை சரி செய்ததையடுத்து மழைநீர் வடிந்தது. மேலும் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையின் கிழக்குப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், ரோஸ்நகர், ரெங்காநகர் ஆகிய பகுதியில் இருந்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் அதிகரித்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரோவர் சாலையில் வெள்ளந்தாங்கியம்மன் ஏரிக்கு செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக சென்ற மழைநீர் சாலையில் புகுந்தது. இதனால் அந்த வழியாக கார்கள், மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மெதுவாக அப்பகுதியை கடந்து சென்றனர்.

    ×