என் மலர்
நீங்கள் தேடியது "rain"
- 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக திடீரென்று பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.
உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு மழையில் கரைந்து விடாமல் பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மழையால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான உப்பு தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர்.
இந்த திடீர் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.
- ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது.
சேலம்:
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியதால் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதேபோல சேலம் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி , கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.
கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
தலைவாசல் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்த நிலையில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று காலை முதலே மேகங்கள் சூழ்ந்து கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தமுடன் குதூகலம் அடைந்தனர்.
5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாததால் ஏற்காடு மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றனர். மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நத்தக்கரையில் 67 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆனைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியகோவில் 47, வீரகனூர் 43, சங்ககிரி 13, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனீஸ்பேட்டை 10.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 362.7 மி.மீ. மழை கொட்டியது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், வெண்ணந்தூர், நாமகிரி பேட்டை, குமாரபாளையம், மங்களபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு, கொல்லி மலை, பரமத்திவேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் மற்றும் மங்களபுரத்தில் 22.6, மோகனூர் 2, நாமக்கல் 15, பரமத்திவேலூர் 4, புதுச்சத்திரம் 22, ராசிபுரம் 21.8, சேந்தமங்கலம் 18, கலெக்டர் அலுவலகம் 12.5, என மாவட்டம் முழுவதும் 191.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
- சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் நேற்று அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.
அதிலும் குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவானது. இதுதவிர சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும், பல இடங்களில் 100 டிகிரியை நெருங்கியும் வெப்பம் பதிவானது. நேற்று பெய்த மழையால் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அதிகபட்சமாக தஞ்சையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னையில் நேற்று மிதமான மழை பெய்தது. காலையில் சூரியன் தென்பட்டாலும், சற்று நேரத்தில் மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கியது. ஓரிரு இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாலங்காட்டில் 2.4, சோழவரத்தில் 1.4, பூண்டியில் 1.5 செ,மீ. மழை பதிவாகி உள்ளது.
- சென்னையில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
- நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பலத்த மழை.
சென்னையில் அதிகாலை முதலே கருமேகம் சூழ்ந்து இருந்தது. இதனால் மழை பெய்வதற்கான அறிகுறி இருந்து வந்தது.
மேலும், சென்னையில் இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் வடபழனி, அடையாறு, மெரினா, மயிலாப்பூர், மணலி, திருவொற்றியூர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் சென்னையில் மழை பெய்து வருகிறது.
- தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- 5 மணிக்கு மழை நின்றாலும் 7 மணி வரை குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து இருந்தது.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை முதல் தொடங்கியது.
மழை வருகிற 4-ந் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
அதன் காரணமாக புதுவையில் 3 மணியிலிருந்து நகர பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 2 மணிநேரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நகரப் பகுதியில் வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர்,வெங்கட்டா நகர், செல்லான் நகர், இளங்கோ நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாததால் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்றது. 5 மணிக்கு மழை நின்றாலும் 7 மணி வரை குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து இருந்தது.
8 மணிக்கு முழுமையாக வடிந்தது.ரெயின்போ நகரில் சிறிய மழைக்கு கூட நீர் தேங்குவதை தடுக்க ரூ.10 கோடி மதிப்பில் பொது பணித்துறை சார்பில் சில நாட்களுக்கு முன் தான் பணி தொடங்க பூமி பூஜை போடப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.
- திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சன்னியாசிகுப்பம் பகுதியில் அமைந்துள்ள சுப்ரீம் கம்பெனி அருகே தொடர் மழை பெய்ததன் காரணமாக தார் சாலை திடீரென பள்ளமானது.
- இதனை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சன்னியாசிகுப்பம் பகுதியில் அமைந்துள்ள சுப்ரீம் கம்பெனி அருகே தொடர் மழை பெய்ததன் காரணமாக தார் சாலை திடீரென பள்ளமானது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே அவ்வழியாக சென்று வந்தனர். இதையடுத்து அப்பகுதி பொது மக்கள் எம்.எல்.ஏ. அங்காளனிடம் உடனடியாக சாலையை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அப்பகுதிக்கு அங்காளன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சாலையை உடனடியாக சரி செய்ய பொதுப்பணி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குஉத்தரவு பிறப்பித்தார்.
பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் பொதுப்பணித்துறை ஊழியர்களைக் கொண்டு சாலையை சரி செய்யும் விதமாக பள்ளத்தில் கருங்கல், சக்கைகளை கொட்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இப்ப பணியின் போது அங்காளன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
- மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
- ட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
அனுப்பர்பாளையம்:
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் ராசாதாத்தா கோவில் அருகே வருவாய்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. இந்த குட்டையின் பரப்பளவு 4.82 ஏக்கராகும். கடந்த 2 மாதமாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் குட்டையை சுற்றி பச்சை பசேலென மரங்கள் பசுமையாக அமைந்துள்ளது. ஆனால் குட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீைமக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெரிய அளவிலான குளம், குட்டைகள் இல்லாத நிலையில் 4 ஏக்கர் பரப்பளவிலான குட்டையை பராமரித்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நெல்லை மாநகரப் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
- மழை பெய்தாலே அங்குள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் நெல்லை, தச்சநல்லூர் பகுதிகளில் பெரும்பான்மையான பணிகள் முடிவடைந்த நிலையில் மாநகரப் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக டவுன் ஆர்ச் முதல் மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் வரையிலும் மிகவும் மோசமாக இருந்த சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காட்சி மண்டபத்தில் தொடங்கி பேட்டை குளத்தாங்கரை பள்ளிவாசல் வரையிலும் உள்ள சாலை மேடு, பள்ளங்களாக காட்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த சாலை எப்போது சீரமைக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடந்து செல்வதற்கு கூட முடியாத அளவுக்கு இந்த சாலை இருப்பதாகவும், சிறிய அளவு மழை பெய்தாலே அங்குள்ள பெரிய அளவு பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அய்யூப் நெல்லை மற்றும் பேட்டை நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- சென்னையில் நேற்று மாலை முதல் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. காலை வேளையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. காலை வேளையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது.
திருப்பூர் :
திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், காந்திநகா், மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது. மழையின் காரணமாக பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், பணிமுடிந்து சென்ற தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.மேலும் திருப்பூரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டிமீட்டர் மழை பதிவானது.
- இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான். இதனால் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் வருணபகவான் கருணை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி- 14.60, வாலிநோக்கம்-29.40 கமுதி- 76.20 பள்ளமோர்க்குளம் - 22 முதுகுளத்தூர்-25 பரமக்குடி -57.80 ஆர்.எஸ்.மங்கலம்-106.80 மண்டபம் -27.70 ராமநாதபுரம்-25.20 பாம்பன்-32.40 ராமேசுவரம்-40.20 தங்கச்சிமடம்-25.40 தீர்த்தாண்டத்தனம் -35 திருவாடானை -29.80 தொண்டி-53.70 வட்டாணம் -38 மாவட்டம் முழுவதும் 639.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தொண்டி பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியது. நள்ளிரவு 11 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்தபடி இருந்தது.
இன்று காலை வரை தொண்டியில் 53.7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவாடானை பகுதியிலும் நீண்ட நேரம் மழை பெய்தது. இந்த மழை தற்போதைய விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்–பட்டிருந்த ரப்பர் படகு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
- பேரிடர் காலங்களில் பேரூராட்சியில் இருக்க வேண்டிய தளவாட பொருட்–களான மண்–மூட்டைகள், மரக்கம்புகள், மரமறுக்கும் எந்திரம், ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பேரூ–ராட்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் கூடுதல் கலெக்டர்ர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பேரூராட்சி பகுதியில் குறைந்த அளவு பாதிப்படையக்கூடிய பகுதிகள் மற்றும் மழைக்–காலங்களில் அப்பகுதியில் உள்ளவர்களை பாது–காப்பான இடங்களில் தங்க வைப்பது தொடர்பாக, பேரிடர் காலங்களில் பேரூராட்சியில் இருக்க வேண்டிய தளவாட பொருட்–களான மண்–மூட்டைகள், மரக்கம்புகள், மரமறுக்கும் எந்திரம், ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பேரூராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்–பட்டிருந்த ரப்பர் படகு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், செயல் அலுவலர் ராஜதுரை, தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத்தலைவர் கலைவாணி சப்பாணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.