என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "recruitment"

    • விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிவிண்ணப்பிக்கலாம்.இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.18,536 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    இதில் விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி (பிசிஏ) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணியானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதனை அடிப்படையாக கொண்டு எந்தவிதமான அரசுப் பணியும் கோர இயலாது.

    ஆகவே, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபா்கள் கல்விச் சான்று நகல்கள், அனுபவச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு டிசம்பா் 10 ந்தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • விருதுநகர் மாவட்டத்தில் ரேசன்கடையில் காலியாக உள்ள 146 விற்பனையாளர்கள்-18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு 15-ந் தேதி முதல் நடக்கிறது.
    • 04562- 290769 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    விருதுநகர்

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற ப்பட்டுது.

    அவை பரிசீ லிக்கப்பட்டு, தற்காலி கமான தகுதியான விண்ண ப்பதாரர்க ளுக்கான நேர்முக தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பின்புறம் உள்ள அரசு தொழில் மற்றும் பட்டாசு மையத்தில் நடைபெற உள்ளது.

    எனவே நேர்முக தேர்விற்கான அனுமதி சீட்டு விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழி www.vnrdrb.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு தபால்வழி அனுப்பி வைக்கப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேங்கள் ஏற்பட்டால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் 04562- 290769 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
    • சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறைக்கு உதவியாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளுக்கு ஊர்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 67 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்புவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு ஈரோடு அருகே ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

    இதில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

    அதில் 169 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகு, உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் உயரம், எடை பார்க்கப்பட்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் தேர்வு செய்யப்ப ட்டார்கள். அவர்களின் நன்னடத்தை விவரங்களை சரிபார்த்த பிறகு காலியாக உள்ள 67 இடங்களில் 58 ஆண்கள், 9 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு பணி நடக்கிறது.
    • இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விமானப் படையில் Medical Assistant (Male Candidates) பணிக்கு, சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தை சேர்்ந்தோர்்களுக்கான, ஆட்சோ்ப்பு பணி சென்னை தாம்பரத்தில் உள்ள எண் 8, Airman Selection Centre, Air Force Station-ல் வருகிற 1.2.2023 முதல் 9.2.2023 வரை நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டை சேர்ந்த வா்களுக்கு 1.2.2023, 2.2.2023 மற்றும் 7.2.2023, 8.2.2023 ஆகிய தேதிகளில் மேற்கண்ட ஆட்சோ்ப்பு பணி நடைபெற உள்ளது. மணமாகாத ஆண்கள் 27.6.2002 முதல் 27.6.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும். மணமான ஆண்கள் 27.6.1999 முதல் 27.6.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

    கல்வித்தகுதியில் 10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருடங்களுக்கான Vocational Course, Non-vocational பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    10, பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50சதவீதம் மதிப்பெண்கள் தோ்ச்சி பெற்று, கூடுதலாக டிப்ளமோ,B.Sc (பார்மசி), படிப்பில் தோ்ச்சி பெற்று 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    உடற்தகுதியில் Medical Assistant பணிக்கு 152.2 செ.மீ உயரமும், மார்்பளவு 5 செ.மீ விரிவடைய வேண்டும். Visual Acutely 6/36 each eye, Correctable to 6/9 each eye எனவும் not exceeding + 3.50 D including Astigmatism, Colour vision CP -III எனவும் இருக்க வேண்டும்.இது தொடா்பான கூடுதல் தகவல்களை பெற www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
    • கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்க ளுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெய சீலன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கிராம உதவி யாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    அவர்களுக்கான அடிப்ப டை பயிற்சி வகுப்பு இன்று தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு நடைபெறும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் 3 நாட்கள் ஒருங்கிணைப்பு பயிற்சியும், 27 நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் பல்வேறு அலுவலர்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் கிராம உதவியாளர்களின் பணிகள், வருவாய்த்துறை யின் கிராம அளவிலான திட்டங்களை செயல் படுத்துதல், கிராம நிர்வாக அலுவலருக்கு உதவி செய்தல், கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு தொ டர்பாக பிரச்சனைகளை ஆரம்ப கால கட்டங்களின் கண்டறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தல், கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பினை கிராம உதவியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கிராமங்க ளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்(பொது) சிவகுமார், 116 கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூன்று நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் முன்னிலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

    2-வது நாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் காலை, மதியம், மாலை திருப்பலி மற்றும் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இரவு கலை நிகழ்ச்சிகள் வான வேடிக்கை முழங்கிட மணங்கமலும் மலர்கள் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனே கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது.

    முன்னதாக பாபநாசம் மேல வீதியில் புனித செபஸ்தியாருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    3வது நாள் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி முன்னிலையில் திருவிழா திருப்பலி மற்றும் திருப்பலி நடைபெற்றது மாலை கொடி இறக்கம் நடைபெற்றது திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் , இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் அருள் சகோதிரிகள் பங்கு பேரவை அன்பியங்கள் , பங்கு இறை மக்களை, பங்கு கிளை கிராம இறை மக்கள் செய்திருந்தனர்.

    • தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்..

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது. 11-வது வார்டு பகுதிகளில் நகர்மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவை தலைவர் குணா, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், தொ.மு.ச நிர்வாகி சரவணன், மண்ணெண்ணை கடை செல்வம், பட்டறை சரவணன், இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி மற்றும் டிரைவர் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் போது திமுகவில் இணைந்த அனைவருக்கும் நகர திமுகவைத் தலைவர் குணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகம், இலவச சேலை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.

    • எழுத்தர், சீட்டு விற்பனையாளர், தட்டச்சர், காவலர், தோட்டக்காரர், உதவி மின் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
    • இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வழக்கு எழுத்தர்-1, சீட்டு விற்பனை யாளர் -2, தட்டச்சர் -1, காவலர் -4, தோட்டக்காரர் -1, திருவலகு -2, கூர்க்கா-1, உதவி மின் பணியாளர் -1 என 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர், எழுத படிக்க தெரிந்தவர்கள், மின் கம்பி பணியாளர் பயிற்சி பெற்றவர்கள், மின்வாரிய த்தில் 'எச்' சான்று பெற்றவ ர்கள், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவம், தகுதி உள்ளிட்ட விவரங்களை, https://sivanmalaimurugan.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து படிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் அல்லது நேரில் வழங்கலாம். பணிகளின் பெயரை தபால் கவர் மீது எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, தகுதியான விண்ணப்பதாரர் மே 17 ந் தேதி மாலை 5:45 மணிக்குள் கோவிலுக்கு கிடைக்கும் வகையில் ஆவண நகல்கள் மற்றும் சுய விலாசமிட்ட தபால் உறையு டன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடைபெற உள்ளது.
    • ( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்)

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசரகால மருத்துவ உதவியாளர் பணி யிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடைபெற உள்ளது.

    மருத்துவ உதவியாளர்க ளுக்கு பி.எஸ்.சி. நர்சிங், அல்லது ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, அல்லது ( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) லைப் சையின்ஸ் பட்டதாரி, பிஎஸ்சி ஜுவாலஜி, பாட்டனி பையோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். ஆண் பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம்.

    மருத்துவ உதவியா ளர்கான பணிக்கு எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூரியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். ஊதியம் ரூ.15,435 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்பட்ட வர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • 19 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக அவினாசி, குடிமங்கலம், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள 19 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும். முன் அனுபவம் குறிப்பிட்டுள்ள காலத்தில் நற்பணியாற்றியிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். வருகிற 6-ந் தேதி எழுத்துத்தேர்வும், 9-ந் தேதி நேர்முகத்தேர்வும் நடககும். தகுதி வாய்ந்தவர்கள் இணை இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், எண்.42, கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் 641 601 என்ற முகவரிக்கு வருகிற 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

    • (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கல்வி தகுதி ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ைஹட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்.சி. படித்து முடித்திருக்க வேண்டும். வயது 1.7.2023 அடிப்ப டையில் பொதுப்பிரிவினர் 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் ேதர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 23-ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு ஆள் தேர்வு நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, தேசிய மாணவர் படைக்கான மாணவர் சேர்க்கை கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியரும், தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளருமான கணேஷ்பாபு மற்றும் விருதுநகர் பயிற்சியகத்தை சேர்ந்த பெருமாள், பிரபு ஆகியோர் இணைந்து சேர்க்கை முகாமை நடத்தினர். மேலும் உடல்நிலை குறித்த புரிதல் வேண்டும் என்றும், இன்றைய பெருந்தொற்று காலத்தில் உடல்நிலை பேணிக்காத்தலின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இந்த சேர்க்கை முகாமில் மாணவர்களுக்கு 1200 மீ ஓட்டமும், மாணவிகளுக்கு 800 மீ ஓட்டமும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குத் தண்டால் மற்றும் உடல் தகுதி சோதனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர். இறுதியில் 30 மாணவர்களும், 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முடிவில் ஏஞ்சல் ராணி நன்றி கூறினார்.

    ×