என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reels"

    • ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
    • விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

    அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

    ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

    இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

    ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

    இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

    அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.
    • டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில், டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கைதான நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் அருகே ஒரு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து அந்நபர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் ரீல்ஸ் எடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

    • காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது.
    • லைக்ஸ் வாங்குவதற்காக எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் வெளியாகி வருகின்றன.

    திருச்சி:

    சமூக வலை தளங்களில் 'ரீல்ஸ்' மூலம் காணொளி களை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் ரீல்சுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இந்தச் சூழலில் ரீல்சுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    திருச்சியில் 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். சிக்கென ஜீன்ஸ், கவர்ச்சி பொங்கும் கருப்பு பனியன் அணிந்து அவர்கள் நடனம் ஆடும் ரீல்ஸ் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

    மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் பின்னணியில் இளம்பெண்களின் அமர்க்களமான நடனம் தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

    தாளம் தப்பாமல் 3 இளம் பெண்கள் ஆடும் வீடியோவை இளைஞர்கள் ரசித்து வந்தாலும், இதனை கண்ட திருச்சி ரெயில்வே போலீசாருக்கு சுருக் என்றது. காரணம் அவர்கள் நடனமாடி வீடியோ எடுத்தது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில்.

    மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் புகைப்படம் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அதற்குரிய முன் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி படம் பிடிக்க வேண்டும் என்பது விதிமுறை.

    குறிப்பாக பேருந்து, ரெயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள ரெயில் நிலையத்தில் யார் அனுமதி பெற்று 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடனம் ஆடினார்கள்? என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது.

    எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர் இந்த இளம் பெண்கள் யார்? அனுமதி இன்றி வீடியோ எடுக்கும் வரை இதனை பார்த்த ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
    • பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி:

    சமீப காலமாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்துவிட்டது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு லைக்குகளை பெறுவதற்காக எல்லை மீறிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ், பனியன் அணிந்து மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடலுக்கு கவர்ச்சிகரமாக ஆடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது. பொதுவாக பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் இது போன்ற வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கவர்ச்சி நடனம் சர்ச்சையானதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்கள் திருச்சி தில்லை நகரை சேர்ந்த நடன பள்ளி மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதி இன்றி நுழைந்தது தொடர்பாக அந்த 3 பேருக்கும் சம்பவத்தன்று ரூ.1120 அபராதம் விதித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அவர்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ரெயில்வே போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதை அறிந்த அந்த நடன பெண்கள் தங்கள் பதிவுகளை நீக்கி உள்ளனர்.

    • ஆசிரியை கேமராவை பார்த்து சைகை செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
    • வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு ஆசிரியை ஒருவர் உருவாக்கிய ரீல்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பீகாரில் பிபியூ தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதில், விடைதாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ஒருவர் விடைகளை கூட பார்க்காமல் ரீல்ஸ் வீடியோ தயாரிப்புக்காக விடைத்தாள்கள் தரப்படுத்தும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோவில் விடைத்தாள் திருத்தும் அறையில் சர்ச்சைக்குரிய ஆசிரியை மற்றும் சில ஆசிரியைகள் அமர்ந்துள்ளனர்.

    அதில், சம்பந்தப்பட்ட ஆசிரியை கேமராவை பார்த்து சைகை செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் அந்த ஆசிரியை விடைத்தாள்களை கவனிக்காமலேயே அதனை திருத்துவது போன்று பாவனை செய்யும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • இளம்பெண் காரை பின்னோக்கி ஓட்டும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
    • ரீல்ஸ் மோகத்தில் காரை ஓட்ட முயற்சி செய்து காதலன் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அனுமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேதா சுர்வாசே(வயது23). இவர் சுரஜ் முலே(25) என்ற வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவருடன் இளம்பெண் காரில் அவுரங்காபாத், சுலிபஞ்சன் மலைக்கு சென்றார். மதியம் 2 மணியளவில் தத்தாதாம் கோவில் அருகில் சுவேதா சுர்வாசே, காதலனின் காரை பின்னால் நோக்கி ஓட்டினார்.

    சரியாக கார் ஓட்ட தெரியாத போதும், சமூகவலைதளத்தில்(ரீல்ஸ்) பதிவிட கார் ஓட்டுவது போல இளம்பெண் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

    சுவேதா சுர்வாசே பின்னால் நோக்கி காரை ஓட்ட, காதலன் சுரஜ் முலே செல்போனில் படம் பிடித்து உள்ளார். அப்போது இளம்பெண் காரை சற்று வேகமாக ஓட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் 'பிரேக்கை' பிடிக்குமாறு இளம்பெண்ணை எச்சரித்தப்படி, காரை நோக்கி வேகமாக ஓடினார். ஆனால் இளம்பெண் காரை நிறுத்த பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாக தெரிகிறது. இதனால் வேகமாக பின்நோக்கி சென்ற கார், 50 மீட்டர் தூரத்தில் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மலையில் வேகமாக கீழே உருண்ட கார் சுக்குநூறாக நொறுங்கியது.

    சில வினாடிகளில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து, அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மலை பள்ளத்தாக்கில் இறங்கி காரில் படுகாயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

    சம்பவம் குறித்து குடாபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இளம்பெண் ஓட்டிய கார் பின்னோக்கி வேகமாக சென்று, தடுப்பு வேலியை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உள்ளது. கார் விழுந்த இடத்தை கண்டுபிடித்து செல்லவே மீட்பு குழுவினருக்கு 1 மணி நேரம் ஆகிவிட்டது" என்றார்.

    இளம்பெண் காரை பின்னோக்கி ஓட்டும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ரீல்ஸ் மோகத்தில் காரை ஓட்ட முயற்சி செய்து காதலன் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மழையில் ரீல்ஸ் தயாரிப்பது ஆபத்தில் முடிந்துவிடும் என பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். லைக்குகளை குவிக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான செயல்களை செய்து அதன்மூலம் ரீல்ஸ் வீடியோ தயாரித்து வெளியிடுகின்றனர்.

    அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் விபரீதமாகவும் முடிந்து விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

    அங்குள்ள சீதாமர்ஹி பகுதியில் சிறுமி ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தபடி நடனம் ஆடுவது போன்று ரீல்ஸ் வீடியோ தயாரித்து கொண்டிருந்தார். மொட்டை மாடியில் நின்று அவர் மழையில் நனைந்தவாறு நடனமாடி வீடியோ எடுத்த போது அவரது அருகில் மின்னல் தாக்கி உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி உயிர் தப்பி உள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் மழையில் ரீல்ஸ் தயாரிப்பது ஆபத்தில் முடிந்துவிடும் என பதிவிட்டு வருகின்றனர்.

    • முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.
    • ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது.

    இந்திய திரையுலகில் தற்போது பெயர் சொல்லும் முன்னனி நடிகைகளில் ஒருவர் தன்னா. நடிகை, மாடல் மற்றும் டேன்ஸர் என பல பாத்திரங்களை தன்னுள் கொண்டு திரைவானில் மின்னும் நட்சத்திரங்களில் ஒருவர் இவர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மும்மொழிகளிலும் தனது முத்திரையை பதித்தவர். கதாபாத்தரத்தை முழுமையாக ஏற்று நடிப்பதிலும் , ஒரே படத்தில் பல குணங்களை வெளிக்காட்டி நடிப்பதிலும் கைதேர்ந்தவர்.இவரது திரைபயணம் 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமன்னா. இதுவரை மூன்று மொழிகளிலும் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.

    நடிகை தமன்னா சமீப காலமாக வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- "சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதை நிறைவேற்றும் விதமாகவே எனது முடிவுகளும் இருந்தன. அதுதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

    சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனாலும் நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதற்காக 100 சதவீதம் உழைத்தேன். இப்போது சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது.

    ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. அதுமட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸை கூட ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.

    ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர், நடிகைகளுக்கு பெரிய சவாலாகி இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குறுகிய சாலையில் பெண் நடனம் ஆடும் போது பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வருகின்றனர்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்ணின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.

    சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காக இளைஞர்களும், இளம்பெண்களும் 'ரீல்ஸ்' வீடியோக்களை உருவாக்கி வெளியிடுகின்றனர். திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவது தொடங்கி சாகசங்கள் செய்வது வரை ஏராளமான 'ரீல்ஸ்' வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டு பாடல் வரிகளுக்கு ஏற்ப நடனம் ஆடி 'ரீல்ஸ்' தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. குறுகிய சாலையில் பெண் நடனம் ஆடும் போது பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வருகின்றனர். அவர்களுக்கு வழிவிடாமல் அந்த பெண் தொடர்ந்து நடனம் ஆடுகிறார்.

    எனவே அவர் மீது மோதாமல் இருப்பதற்காக வாகன ஓட்டிகள் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தும் போது, ஒரு வாகன ஓட்டி தடுமாறி கீழே விழுகிறார். அப்போது அந்த பெண் தொடர்ந்து நடனம் ஆடும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்ணின் செயலை விமர்சித்து பதிவிட்டனர்.

    • வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
    • இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கருவியாகும். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

    அப்போது இந்த அருவி இந்தியாவில் எங்குள்ளது என்று தமிழர்கள் பலரும் இணையத்தில் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் 6 மணி நேரம் போராடி அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

    பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல நண்பர்களுடன் சேர்ந்து கரண் ரீல்ஸ் எடுத்துள்ளான்.
    • உண்மையறிந்து கரணின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஒட்டியுள்ளனர்.

    மத்தியபிரதேச மாநிலம் மோனேரா மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ரீக்ரியேட் செய்ய முயன்றபோது கழுத்தில் கயிறு இறுக்கி 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை செய்து கொள்வது போல் இன்ஸ்டாகிராமில் வந்த ரீல்ஸை கரண் என்ற மாணவன் பார்த்துள்ள்ளான். இம்மாதிரி தானும் ரீல்ஸ் செய்து வெளியிட்டால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் என்று கரண் எண்ணியுள்ளான்.

    ஆகவே தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல நண்பர்களுடன் சேர்ந்து கரண் ரீல்ஸ் எடுத்துள்ளான். அப்போது கழுத்தை கயிறு இறுக்கி கரண் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது அவன் நடிப்பதாக நினைத்துள்ளனர்.

    பின்னர் உண்மையறிந்து கரணின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஒட்டியுள்ளனர். பின் உண்மையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்தில் ரீல்ஸ் எடுத்த மொபைல்போனை கைப்பற்றிய போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 115 அடி உயரமான நீர்வீழ்ச்சிக்கு பைரவா என்ற இளைஞர் குளிக்க சென்றுள்ளார்.
    • மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளிக்க சென்ற 3 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மேனல் நீர்வீழ்ச்சிக்கு 26 வயதான பைரவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

    கிட்டத்தட்ட 115 அடி உயரமான அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்த பாறையில் நின்று தனது நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது நிலை தடுமாறி பைரவா கீழே விழுந்துள்ளார்.

    அங்கு கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த நண்பர்களும் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் கன மழையினால் நீரோட்டம் அதிகமாகி அந்த இளைஞன் இழுத்து செல்லப்பட்டு 115 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ×