என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief"

    • கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல.
    • ஈரப்பதம் நிரந்தரமாக 22 சதவீதம் என மத்திய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றிய மாநாடு இன்று நடைபெற்றது. ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார்.

    மாநாட்டினை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரமோகன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்வைத்தார்.

    இந்த மாநாட்டில், தற்போது பெய்த பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    நெல் கொள்முதலில் ஈரப்பதம் நிரந்தரமாக 22 சதவீதம் என மத்திய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, விவசாய சங்க தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநில குழு உறுப்பினர் பாஸ்கர் , இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகர செயலாளர் பிரபாகரன் , ஒன்றிய செயலாளர் ஜார்ஜ்துரை, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.
    • வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.

    இந்த சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வனவர்கள், மோப்ப நாய், ட்ரோன் கேமரா, கூண்டுகள், மயக்க மருந்து செலுத்தும் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் இதுவரை சிறுத்தை புலியை கண்டு பிடிக்க முடியாத நிலையில், தற்போது சிறுத்தைப்புலி வந்து செல்லும் வழித்தடம் கண்டறியப்பட்டு 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள், 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிறுத்தை புலி தாக்கி பலியான கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தி ருந்தனர். இதையடுத்து, வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பிரவின்குமார் வழங்கினார்.

    • பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
    • அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.

    இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    மேலும், தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரண தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.

    பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்த பின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது.

    எனவே, அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
    • ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமாக நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    மழை சேத பாதிப்புக்கு அரசு நிவாரணம் அறிவித்தது.

    இந்த நிலையில் சம்பா, தாளடி நெல் பயிர்கள் இழப்பீட்டிற்கு முழு காப்பீட்டு திட்ட இழப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமாக நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராஜாராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தின் போது நிவாரண தொகையை உயர்த்தி வழங்ககோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து வேளாண் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு செல்லப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர்சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.
    • நிவாரண உதவியை தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அறிவுறுத்தல்

    சென்னை:

    தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 112 கோடியே 72 இலட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    நடப்பாண்டு ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டு 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூ.20 ஆயிரமும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் 6-2-2023 அன்று அறிவித்தார்.

    அவரது அறிவுரையின்படி அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர்சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இதில் 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இதர பயிர்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமடைந்துள்ளதெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பருவம் தவறிய கனமழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில், 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு, உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து 112 கோடியே 72 இலட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    இந்த நிவாரண உதவியை தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரையும் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உளுந்தூர்பேட்டை அருகே உள்ளஎறஞ்சி காலனியில் அமராவதி கூரை வீடு உயர்மின்னழுத்தத்தின் காரணமாக முற்றிலுமாக எரிந்துவிட்டது
    • எடைக்கல் போலீஸ் நிலையம் சார்பில் நிவாரணம் (அரிசி, காய்கறிகள், பாத்திரம், துணி மற்றும் படுக்கை விரிப்புகள்) வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளஎறஞ்சி காலனியில் அமராவதி கூரை வீடு உயர்மின்னழுத்தத்தின் காரணமாக முற்றிலுமாக எரிந்துவிட்டது . இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமராவதி குடும்பத்தினரை வரவழைத்து எடைக்கல் போலீஸ் நிலையம் சார்பில் நிவாரணம் (அரிசி, காய்கறிகள், பாத்திரம், துணி மற்றும் படுக்கை விரிப்புகள்) வழங்கப்பட்டது.

    • சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்ததால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்து விழுந்தன.
    • மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ,காடாம்பு லியூர், பாவைகுளம்,சிறுதொண்டமாதேவி, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்தது.இதனால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்துவிழுந்தன. 100 ஏக்கருக்கு மேற்பட்ட மா, பலா, வாழை மரங்கள் சாய்ந்தது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிப்படைந்த இடங்களை மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கடலூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கைமனுவில்கோரியுள்ளார்.

    • அருப்புகோட்டை சண்முகவேல் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும்.
    • நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பணிச்சுமையால் மரணம் அடைந்த மதுரை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலக உதவியாளர் அருப்புகோட்டை சண்முகவேல் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதில் வடக்கு வட்ட செயலாளர் ஜெய்ராஜ், மாநில செயலாளர் கோதண்டபாணி, முன்னாள் மாநில தலைவர்பன்னீர்செல்வம், முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • படைப்புழு தாக்குதல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரதான சாகுபடியான மக்காச்சோ ளத்தில் படைப்புழு தாக்கு தல் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தாயகமாகக்கொண்டு பரவிய பால் ஆர்மி வார்ம் எனப்படும் படைப்புழுவால் கடந்த சில ஆண்டுகளாக உடுமலை பகுதியில் மக்கா ச்சோள சாகுபடி கடும் சேதத்தை சந்தித்து வரு கிறது. விவசாயிகளுக்கு 2018ல் அரசு நிவாரணம் வழங்கி யது. 2019ல் நோய்தடு ப்புக்கான மருந்து களும், வேளாண்துறை வாயிலாக மானியத்தில் வழங்கப்ப ட்டது.கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள விவசா யிகளின் பிரச்னை யை தமிழக அரசு கண்டுகொ ள்ளவில்லை. உடுமலை வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள சாகுபடி படைப்புழு தாக்குதலால் பாதிக்க ப்பட்டுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்தில் மட்டு மல்லாது, மக்காச்சோள கதிர்களையும் இப்புழுக்கள் உண்பதால், 70 சதவீத விளைச்சல் பாதிக்கிறது. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்து பாதித்தவ ர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். 

    • கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது.
    • அசோக்குமார் எம்.எல்.ஏ. காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சி ஒத்தக்கடையில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது.

    வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டது. தகவலறிந்த அசோக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூ. 5,000-ம் நிவாரணம் வழங்கினார்.

    சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீது, தனபால், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா ராஜேந்திரன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.

    • கூரை வீடு மின் கசிவால் தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.
    • ரூ.5 ஆயிரம் நிவாரணம், காய்கறி மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளியான நடேசன் என்பவரின் கூரை வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகிவிட்டது.

    இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் படி, பேராவூரணி தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நேரில் சென்று பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிவாரணத் தொகையும், காய்கறி மற்றும் அரிசி வழங்கினார்.

    இந்நிகழ்வில் கட்டையங்காடு ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வ குமார், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராசு, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன் கூட்டுறவு சங்க தலைவர் வே.கூத்தலிங்கம், இளைஞரணி செயலாளர் கே.எஸ்.வினோத் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சத்யராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
    • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அரவிந்தராஜ்(வயது22).

    இவர் மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இவர் சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரில் மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இறந்த அரவிந்த்ராஜின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரது உயிரிழப்பிற்க்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×