என் மலர்
நீங்கள் தேடியது "road works"
- ராஜபாளையம்-தென்காசி சாலையை செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- இதனை எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு செய்து வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேருசிலை முதல் காந்திசிலை வரை செப்பனிடும் பணி முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதற்கடையே பழைய பஸ்நிலையம் தொடங்கி சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி மெயின் ரோடான தேசிய நெடுஞ்சாலையில் செப்பனிடும் பணி தொடங்கியது. தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் சாலையில் இறங்கி நடந்து சென்று இந்த பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி னார்கள்.
அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், குறிப்பிட்ட தேதி க்குள் செப்பனிடும் பணியை முடிக்க அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் புதியதாக தார்ச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையிடமிருந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி அலுவ லகத்தில் கொடுக்க ப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற்று விரைவில் டெண்டர் விடப்பட்டு புதிய தார்ச்சாலை அமைக்கப்படும். இப்பணி மேலும் விரைவுப்படுத்த அடுத்த வாரத்தில் மதுரையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மண்டல அதிகாரியிடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, திட்டப்பணியின் பொறி யாளர் ராஜாமணி, தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
- திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் - பல்லடம் ரோடு தென்னம்பாளையம், டி.எம்.சி., காலனி அருகே ரோட்டின் குறுக்கில் சிறுபாலம் கட்டி மழை நீர், கழிவு நீர் ஆகியன அருகேயுள்ள ஓடைக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இச்சூழலில் ரோட்டின் ஒரு புறம் இப்பணிகள் முடிந்து, மறுபுறம் நடந்து வருகிறது.
தற்போது திருப்பூரை நோக்கி செல்லும் ரோடு முழுவதுமாக இப்பணிக்காக பேரிகார்டு தடுப்பு கொண்டு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஏ.பி.டி., ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து சென்று வருகிறது. மாலை, இரவு நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருப்பூர் - காங்கயம் கிராஸ் ரோட்டிலிருந்து நல்லூர்,விஜயாபுரம் வழியாக இந்த ரோடு அமைந்துள்ளது.இந்த ரோட்டில் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் நகரப்பகுதியில், ஏராளமான பஸ் நிறுத்தம், முக்கிய ரோடு பிரிவுகள், நான்கு முனை ரோடு சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களும் அமைந்துள்ளன.
இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலையாக உள்ள நிலையிலும், அகலமாக அமைந்துள்ளது. இருப்பினும் முக்கிய சாலை சந்திப்பு மற்றும் சிக்னல் பகுதிகளில் இதன் தற்போதைய அகலம் பயன்பாட்டுக்கு ஏற்ற அளவில் இல்லாத நிலை இருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த ரோட்டில் வளைவான பகுதி மற்றும் சிக்னல் அமைந்துள்ள இடங்களில் ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் பள்ளக்காட்டு புதூர்,ராக்கியாபாளையம் பிரிவு, காசிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு அகலப்படுத்தப்படுகிறது.இதற்காக ரோடு அமையும் இடத்தில் தார் ரோடு போடும் வகையில் பணி மேற்கொள்ளப்படுகிறது.இதனால், சிக்னல் பகுதிகளில் ப்ரீ லெப்ட் முறையில் வாகனங்கள் கடந்து செல்ல ஏதுவாக அமையும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
- புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது
- கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
- உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆய்வு மேற்கொண்டு விரைவில் சாலை பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது ஏலகிரி மலையில் பல்வேறு பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மூலம் நடைபெற்று வருகிறது.
இதனை நேற்று ஏலகிரிமலை ஊராட்சியில் ராயனேரி முதல் கீழ்காடு வரையும், அத்தனாவூர் முதல் கோட்டூர், பள்ளக்கணியூர், ஐயம்பாறை வரையும், பாடனூர் முதல் புத்தூர், தாயலூர் வரையும் சாலை அமைக்க திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், துணைத் தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, சங்கர், மணிமேகலை, ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொடக்க விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார்.
- புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம்அருகே மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதன் பணி தொடக்க விழா நடந்தது.
பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முக ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு ரூ.12 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பட்டியில் இருந்து காமராஜ் நகருக்கு புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் தொழிலதிபர் மணிகண்டன், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலவிநாயகம், துணைத் தலைவர் வேல் துரை, ஓடைமறிச்சான் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் திராவிட மணி, ஒன்றிய பொருளாளர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் சங்கீதா, இயேசுராஜன், சிவலார்குளம் முத்தையா, மருதம்புத்தூர் கிளை செயலாளர் அருணாச்சலம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.
- நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமனோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளில் 5 தொகுப்புகளாக தமிழ்நாடு கிராமப்புற சாலை அபிவிருத்தி துரிப் திட்ட மூலம் (2022-2023) ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 13.745 கி.மீ அளவிலான 133 சாலை பணிகள் செயல்படுத்த திட்டம் தொடக்க விழா திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு 14 வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அனைவரையும் நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
133, சாலை பணிகளை பூமி பூஜை போட்டு பணிகளை திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி தொடங்கி வைத்தார்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் சேர்மன் நகர கழக செயலாளர் எஸ். ராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அகால் சுந்தர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் நகராட்சி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
- கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
கந்திலி ஊராட்சி ஒன்றியம் சுந்தரம்பள்ளி கிராமத்தில் பிரதம மந்திரி சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சுந்தரம்பள்ளி முதல் நத்தம் காலனி வரையும், சின்னாரம்பட்டி ஊராட்சி, தோரணபதி முதல் மைக்கா மேடு வரை ரூ.55 லட்சத்திலும், கொரட்டி ஊராட்சி தண்டுக் கானுர், மோழிகடை மங்கலப்பள்ளி வரை ரூ.1 கோடியே 44 லட்சத்திலும், மட்றப்பள்ளி ஊராட்சி, காடவல்லி ஏரி மேற்கத்தியானூர் புதுப்பட்டி வரை ரூ.2 கோடியே 12 லட்சத்திலும், ஜவ்வாது மலையில் மேலூர் யாம சாலை, சின்னவட்டானூர் கிராம சாலை என ரூ.19 கோடியே 33 லட்சம் செலவில் கிராம தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை சி.என்.அண் ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜி ஆகியோர் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்து பேசினர்.
கந்திலி ஒன்றிய பகுதிகளில் முதல்முறையாக 17 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.19 கோடியே 33 லட்சத்தில் ஒரே நாளில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
- புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
- புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட பல்வேறு தரப்பினரும் திணறி வருகின்றனர்.
தென்காசி:
நெல்லை-தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் நகர்புற பகுதியில் தற்போது தான் பழைய தார் சாலைகளை பெயர்த்து அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சி யம் காட்டி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் ஆலங்குளம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு, தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர்.
பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் தண்ணீரை பீச்சி அடித்து சாலை அமைக்கவும் வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
- விஜயாபதி பஞ்சாயத்தில் முடிவடைந்த பணிகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் திறந்து வைத்தார்.
- ஆவுடையாள்புரத்தில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
திசையன்விளை:
ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி பஞ்சாயத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.மேலும் முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தார்.விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார். மேலும் ஆவுடையாள்புரத்தில் ரூ. 4.80 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கும், தோமையார்புறத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் சாலைக்கும், விஜயாபதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி,ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவுடை பாலன், மெளலின், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சகாயராஜ்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,மாவட்ட பிரதிநிதி கோவிந்தன்,வேலப்பன்,தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப் பாளர் கேனிஸ்டன், நவ்வலடி சரவண குமார், கஸ்தூரிரெங்கபுரம் பாலன், ராதாபுரம் அரவிந்த்,சிதம்பரபுரம் முருகன், சந்தியாகு, ராஜேஷ், ரீகன், யேசுதாஸ், சிவசுப்ரமணியம், அய்யப்பன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், எழில் ஜோசப், குமார், காமில், சாகுல் ஹமீது, முத்தையா, கோகுல், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
- கழிவுநீர் கால்வாய் பழுதடைந்துள்ளதால் அதை சீரமைத்து தரவேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சி லரும், ம.தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.நாகராஜ் மேயர் தினேஷ்கு மாரை நேரில் சந்தி த்து அடிப்படைவசதிகள் தொடர்பாகமனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :- 24-வது வார்டுக்குட்பட்ட அம்மன் வீதிகள் முழுவதும் 4-வது குடிநீர்திட்ட குழாய் அமைக்கும் பணி நிறைவ டைந்துள்ள நிலையில் சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த பகுதியில் வீடுகளுக்கு இன்னும் பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்க ப்படவில்லை.அந்த பணிகளும் நிறைவடை ந்தால் சாலைகள் மேலும் பழுதடையும். எனவே வீடுகளுக்கான பாதாள சாக்கடைஇணைப்பு பணியை விரைந்து முடித்து அம்மன் வீதிகள் முழுவது ம்சாலையை சீரமைத்து தர வேண்டும்.மேலும் அம்மன் வீதிகளில் 70 சதவீதத்திற்கு மேல் கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து இருப்பதாலும், சாலைகள் குறுகிய சாலைகளாககாணப்படு வதாலும்கூடுதல் கவனம் செலுத்தி கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல் வார்டுக்குட்பட்ட திருமலைநகர்,சத்யாநகர், அறிவொளிவீதி, டி.என்.சேஷன் வீதி,லட்சுமி தியேட்டர் பிரதான சாலை, ராமர் வீதி, சண்முகாநகர், ஆர்.பி.கே.கம்பெனி வீதி, முருங்கை தோட்டம், செல்லம்மாள் காலனி, திருநீலகண்டர்வீதி, அம்சவிநாயகர்கோவில் கிழக்கு பகுதி, ஆர்.ஜி.பி. குடோன் வீதி ஆகிய பகுதிகளில்கழிவுநீர் கால்வாய்பழுதடை ந்துள்ளதால்அதை சீரமைத்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.முன்னதாக 24-வது.வார்டு க்குட்பட்ட பகுதிகளில் காணப்படும்அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை படத்துடன் கூடிய தொகுப்பாக கவுன்சிலர் நாகராஜ், மேயர், கமிஷனர் ஆகியோ ரிடம் வழங்கினார்.
- சாலை விரிவாக்க பணிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
- நேற்று நள்ளிரவு திடீரென்று வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது
கடலூர்:
கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நெல்லிக்குப்பம் பகுதியிலும் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக முதற்கட்டமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. நேற்று மதியம் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல், ஒரு சிலருக்கு ஆதரவாக பணிகள் மேற்கொண்டு வருவதால் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுதைகள் கட்சிமாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பணிகளுக்காக அளவீடு செய்த அளவில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இப்பணியை உடனடியாக நிறுத்தி, உரிய அளவீடு செய்த பின்னர் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உரிய முறையில் விசாரணை நடத்தி பணிகள் நடைபெறாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர் இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பணிகள் மேற்கொண்டு இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் நெடுஞ் சாலைத்துறை யின் மூலம் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ் சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடை வெளி தடத்திலிருந்து இருவழிச்சாலை அகலப் படுத்தும் பணி நடை பெறுவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வை யிட்டார். அப்போது பணிகளை காலதாமதமின்றி முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23-ம் ஆண்டிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 28பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60.300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் இருவழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துக்கள் நடை பெறும் பகுதியை கண்ட றிந்து சாலைகளை ேமம்படுத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 பணிகள் 49.470 கி.மீ. தூரம் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணிகளை சீரமைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் அதிகமாக விபத்துக்கள் நடை பெறக் கூடிய பகுதிகளை கண்ட றிந்து தொழில்நுட்ப முறையுடன் வடிவமைக்கப் பட்டவுடன் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதுவும் வாகன ஓட்டி களுக்கு பாது காப்பாக இருக்கும்.
இதே போல் நடப்பாண்டிற்கு பொது மக்களின் தேவையை அறிந்து கூடுதலாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.