என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy"

    • அசோக்குமார் கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டியது ஏன்? என்று கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
    • போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தலைமறைவாக இருந்து வந்த கொக்கி குமார் தற்போது சிக்கியுள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் சிவஞானபுரத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக் குமார்(வயது28). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. கேணிக்கரை போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

    ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சந்துரு சிவஞானபுரத்தில் உள்ள பால் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 13-ந் தேதி கடையில் இருந்த சந்துருவை, அசோக்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    இந்த வழக்கில் கைதான அசோக்குமார் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தினமும் ராமநாதபுரம் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். அதேபோல் நேற்றும் கையெழுதிடுவதற்காக வந்த அசோக்குமார் கோர்ட்டின் அறையில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சந்துருவின் உறவினரான ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ரவுடி குமார் என்கிற கொக்கிக்குமார்(26), சண்முகநாதன்(22) ஆகியோர் வந்தனர். அவர்கள் கோர்ட்டின் அறையில் நின்று கொண்டிருந்த அசோக் குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.

    இதில் படுகாயமடைந்த அசோக்குமாரை கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை அசோக்குமார் கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டியது ஏன்? என்று கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அசோக் குமாருக்கும் கொக்கி குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தனது உறவினராக சந்துருவை தாக்கிய தகவல் அறிந்த கொக்கி குமார், அசோக்குமாரை பழி தீர்க்க திட்டமிட்டு கோர்ட்டுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய தகவல் தெரியவந்தது.

    தப்பி சென்ற கொக்கி குமார், சண்முகநாதனை பிடிக்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொக்கி குமார் உச்சிப்புளி பிரப்பன் வலசையில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்ததை அவரது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு கொக்கி குமார் தப்பியோட முயன்றார். இதனால் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கொக்கி குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். முதலில் சுடப்பட்ட போது கொக்கி குமார் மீது படவில்லை. இதனால் இன்ஸ்பெக்டர் 2-வது முறையாக துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் கொக்கி குமாரின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் தொடர்ந்து ஓட முடியாமல் கீழே விழுந்தார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொக்கிகுமார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மேலும் அவர் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்தனர். அவர்களும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கொக்கி குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். திருப்பூர் பகுதியில் பதுங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்திருக்கிறார்.

    அன்றைய தினமே ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரை வெட்டி விட்டு தப்பினார். பின்பு கொத்தர் தெருவை சேர்ந்த சூர்யா என்பவரை தாக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சூர்யா வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    இதனால் கொக்கி குமாரின் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று கோா்ட்டுக்குள் புகுந்து அசோக்குமாரை வெட்டி விட்டு கொக்கிகுமார் தப்பினார்.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் கொக்கி குமாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அங்கு சென்று கைது செய்ய முயன்ற போது இன்ஸ் பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி னார்.

    இதனால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தலைமறைவாக இருந்து வந்த கொக்கி குமார் தற்போது சிக்கியுள்ளார். 

    • வசந்தகுமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார்.
    • கருணா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது 18). இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார். அதே ஊரை சேர்ந்த கருணா (28), வசந்தை மது குடிக்க அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டு விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூருக்கு சென்று மதுஅருந்தினர். போதையில் லாரி டிரைவரான கருணா அந்த வழியே சென்றவர்களிடம் வம்புச் சண்டையிழுத்தார்.

    இதில் கருணாவை சமாதானப்படுத்த வசந்த் முயற்சித்தார். கருணா சமாதானம் ஆகாததால் அவரை அங்கேயே விட்டுவிட்டு, கருணாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வசந்த் வீடு திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் கருணா வசந்த் வீட்டுக்கு வந்தார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த வசந்த் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்தத புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரிடிரைவர் கருணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது.
    • 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 30), பெயிண்டர். இவர் மீது கொலை முயற்சி, அடி தடி, வழிப்பறி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும், ராஜேஷ் என்பவருக்குமிடையே 'யார் பெரிய ரவுடி' என்ற முன்விரோத மோதல் உள்ளன. இதன் காரணமாக தினேஷ்குமாரை கொல்ல ராஜேஷ் திட்டமிட்டார்.

    நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், தினேஷ்குமார் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர். அப்போது ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது. உடன் வந்த நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து முன்விரோதம் தொடர்பாக சமாதானப் பேச்சு நடத்தலாம் என கூறி தினேஷ்குமாரை கே.என்.பி., சுப்ரமணியம் நகருக்கு அழைத்து சென்றனர். காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மீண்டும் இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் ராஜேஷ் உட்பட, 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், (28), கண்ணன் (25), தினேஷ் (26), பாலாஜி சரவணன் (28), தமிழரசன், (25), பாலகிருஷ்ணன், (25) என 6 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 ேமாட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ், ராம்குமார் உட்பட 4 பேரை போலீசார் தேடி வந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வெளியூர் தப்பி செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி ராஜேஷை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து நள்ளிரவு கைது செய்தனர்.அவரிடம் நல்லூர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் 6பேர் மீது கஞ்சா, கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்கு உள்ளன. ஜாமீனில் எடுக்க உதவி செய்யாதது தொடர்பாக தினேஷ்குமார், ராஜேஷிடம் முன்விரோதம் இருந்தது. 'யார் பெரிய ரவுடி' என்ற பிரச்னை முற்றி போய், தற்போது கொலையில் முடிந்தது.

    6 பேரில் பாலாஜி சரவணன், மணிகண்டன் மற்றும் தலைமறைவாக உள்ள ராம்குமார் ஆகியோர் மீது கடந்த, 2022 திருப்பூர் எம்.பி., நகர் காட்டு பகுதியில் சதீஷ் என்ற வாலிபரை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டித்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார்.
    • அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரபு (வயது 38). இவர் மீது, காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

    இந்த நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி உமாராணி (25) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து உமாராணி தன் கணவர் சுரேசிடம் தெரிவித்தார். நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவின் தலையில் அறிவாளால் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை அந்த பகுதியினர் மீட்டு சேலத்தில் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவுடியை வெட்டி விட்டு தப்பி ஓடிய சுரேஷ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • மர்ம நபர்கள் கொடூரமாக ெகாலை செய்துள்ளது என்பது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தொடங்கினர்.

    சேலம்:

    சேலம் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அருள். இவர் கோரிமேட்டில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் பாதையில் மரம் அறுக்கும் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் மில்லில் விளக்கு போடுவதற்காக அருள் அங்கு வந்தார்.

    இந்த நிலையில் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரஞ்சித்குமார் (வயது 45) தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அங்கு பிண மாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அருள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்சித்குமார் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கோரிமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவரை மர்ம நபர்கள் கொடூரமாக ெகாலை செய்துள்ளது என்பது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தொடங்கினர்.

    விசாரணையில் ரஞ்சித்குமார், அவரது நண்பர் கொல்லப்பட்டியை சேர்ந்த கோகுல்நாத் (30), கோபிநாதன் ( 33) ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதும்அ வர்கள் தான் ரஞ்சித்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறை வான 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோகுல்நாத் மாமியார் ரஞ்சித்குமாரிடம் பணம் வாங்கியதாக கூறப் படுகிறது. அந்த பணத்தை கோகுல் நாத்திடம் உடன டியாக வாங்கி கொடுக்க தருமாறு மாமியார் கூறி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. கோகுல்நாத் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    • சேலம் மத்திய சிறையில் சாதாரண கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • இத னால் அழகிரியை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சேலம் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிந்துரைத்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் சாதாரண கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலில் அடிக்கடி போலீசார், சிறை வார்டன்கள் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து ஜெயிலில் தீவிரமாக கண்காணித்தும் வருகிறார்கள். இந்த நிலை யில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி (வயது 40) என்பவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இவர் செல்போனை பயன்படுத்தி, ஆள் கடத்த லில் ஈடுபட்டு வருவது சிறை அதிகாரிகள் விசா ரணையில் தெரிய வந்தது.

    மேலும் அழகிரி மீது

    20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இத னால் அழகிரியை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய சேலம் ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் பரிந்துரைத்தார். இதையடுத்து சிறை துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவின்பேரில் நேற்று அழகிரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பிரபல ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.
    • ஆத்திரமடைந்த அறிவு பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நியூ பார்த்திமா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது 58) தொழிலாளி.

    இவர் சைக்கிளில் விளார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    ஒரு தனியார் மண்டபம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த பிரபல ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.

    அப்போது அவர் குடிக்க தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு மைக்கேல் ராஜிடம் கேட்டார்.

    அதற்கு அவர் என்னிடம் தண்ணீர் பாட்டில் இல்லை என்று கூறினார்.

    இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அறிவு மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த மைக்கேல்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து ரவுடி அறிவை தேடி வருகிறார்.

    • பல்வேறு வழக்குகள் தொடர்புடைய சந்தனராஜ் என்ற சாண்டல் , இந்திரா நகர் செல்வம் ஆகிய இருவரது நடவடிக்கைகளையும் போலீசார் விசாரித்தனர்.
    • போலீஸ் விசாரணையால் ஆத்திரமடைந்த சந்தனராஜ் மற்றும் செல்வம் 2 பேரும் போலீசாரை அவதூறாக பேசி அரிவாளல் வெட்ட முயன்றதாக தெரிகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகில் அரசன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    வெட்ட முயற்சி

    அப்போது பெரியகடை தெரு வழியாக செல்லும் போது அந்த பகுதியில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய சந்தனராஜ் என்ற சாண்டல் (வயது42), இந்திரா நகர் செல்வம் (47) ஆகிய இருவரது நடவடிக்கைகளையும் போலீசார் விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையால் ஆத்திரமடைந்த சந்தனராஜ் மற்றும் செல்வம் 2 பேரும் போலீசாரை அவதூறாக பேசி அரிவாளல் வெட்ட முயன்றதாக தெரிகிறது.

    2 பேர் கைது

    இதில் சுதாகரித்து கொண்ட போலீசார், உடனடியாக அவர்களிடம் இருந்த அரிவாளை பறித்து 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப் பட்டவர்கள் மீது தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்கள் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரவுடி பட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் அடுத்த காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரபாலன். இவரது மகன் ராஜதுரை (25).

    இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

    செல்போன் பறிப்பு

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ராஜதுரை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் அரிசிபாளையம் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் லோகேஷ் (18), பள்ளப்பட்டி நாராயணசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்து.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
    • மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார்.

    கடலூர்:

    காடாம்புலியூர் பேர்பெரியான்குப்பம் கந்தன் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 23) ரவுடி. அப்பகுதியில் நடைபெற்ற திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசா ரிடம் வாக்குவாதம் செய்த அசோக்குமார், தான் வைத்திருந்த பிளேடால் கையை கிழித்து க்கொண்டார். சந்தேகத்தின் பேரில் என்னை கைது செய்ய துடிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையம் முன்பு நின்று கூச்சலிட்டார். மேலும், பிளேடால் மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின் அசோக்கு மாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார்.
    • மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

    சேலம்:

    சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவர் நேற்று மணிகண்டன் காரை வாடகைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மணிகண்டன் காருக்கு டீசல்போட்டு தயாராக வைத்துள்ளார். ஆனால் மகாவிஷ்ணு , மணிகண்டன் காரை எடுக்காமல் வேறு நபரிடம் வாடகை காரை எடுத்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மகாவிஷ்ணுவின் சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினார். இது குறித்து மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படு காயம் அடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சமீபத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோழி அருளை தேடி வந்தனர்.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் என்ற கோழி அருள். இவருக்கு சொந்த ஊர் சுரண்டையை அடுத்த பங்களா சுரண்டை ஆகும்.

    இவர் மீது கொலை, கொலை முயற்சி, சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவிட்டல் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், சில வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

    சமீபத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றில் அவரை போலீசார் தேடி வந்தனர். அவரை பிடித்து வந்து ஆஜர்படுத்துமாறு நெல்லை மாவட்டம் அம்பை கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கோழி அருளை தேடி வந்தனர்.

    அவர் ஓசூர் பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு முகாமிட்டு தனியார் விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று இரவில் ஒரு விடுதியில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். தொடர்ந்து இன்று காலை கோழி அருளை பாதுகாப்புடன் நெல்லை மாவட்டத்திற்கு ஜீப்பில் அழைத்து வந்தனர்.

    ×