என் மலர்
நீங்கள் தேடியது "salary hike"
- பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் 25 சதவீத கூலி உயர்வு வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
- பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
திருப்பூர்:
பித்தளை மற்றும் காப்பர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு 22.5 சதவீதம் சம்பள உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டதைஅடுத்து, பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பளப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பித்தளை மற்றும் காப்பர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது. தொழிற்சங்க தரப்பில், வேலுச்சாமி (எல்.பி.எப்.,), ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), தேவராஜ் (ஏ.டி.பி.,), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.,), அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.,), அசோக்குமார் (ஐ.என்.டி.யு.சி.,), சீனிவாசன் (பி.எம்.எஸ்.,), அர்ஜூனன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோரும், உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் துணை தலைவர் மனோகர், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார், துணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் 25 சதவீத கூலி உயர்வு வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். உற்பத்தியாளர் சங்கத்தினர் 22.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாக கூறினர். தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்தனர். உற்பத்தியாளர் சங்கத்தினர் இதற்கு மேல் தர முடியாது என கூறவே 22.5 சதவீதத்தை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொண்டனர்.
பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. புதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கத்தினர் உற்பத்தியாளர் சங்கத்துடன்3 மாதமாக நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்தது.இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சப் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு முடிவுக்கு வந்தது.
அதுபோல் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் பித்தளை மற்றும் காப்பர் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வில் தீர்வு ஏற்பட்டது. கூலி உயர்வு முடிவுக்கு வந்ததையொட்டி பாத்திர தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய கூலி உயர்வு தொடர்–பான ஒப்–பந்–தம் நாளை மறு–நாள் (புதன்–கி–ழமை) கையெழுத்தாக உள்ளது. மேலும் இந்த கூலி உயர்வு கடந்த 1.1.2023 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுக்க 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
- மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
இவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
இல்லம் தேடி கல்வி மைய ஆலோசகர் லெனின் பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்விசார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை 2 ஆயிரமாக உயர்த்தி தர ஆவண செய்ய வேண்டும் என்றார்.
- மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வருவாரா? என முன்னாள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
- இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்றார்.
மதுரை
திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பிரமுகருமான டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
நாட்டின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தரமான மருத்துவ சிகிச்சையை குறைந்த செலவில் பெறபலரும் தமிழகத்திற்கு வருகிறார்கள்.
நமது மாநிலம் சுகாதாரத் துறையில் முன்னணி மாநில மாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு பலரது பாராட்டையும் பெற்று தந்தார். தமிழக மக்களுக்கும் குறைந்த கட்ட ணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதிய, பதவி உயர்வுக்காக தொடர்ந்து போராட வைக்கப்படுகிறார்கள். இது நியாயமா? தற்போதுள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடித்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11, 12 ஆண்டு கள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் கருணா நிதி ஆட்சியின்போது அர சாணை பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசு மருத்து வர்கள் 4, 9, 13, 20 ஆண்டுகள் கழித்து ஊதிய, பதவி உயர்வு பெறுகின்றனர். அவர்க ளுக்கு 7-வது ஊதிய குழுவில் 14-வது ஆண்டில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் அடிப்படை ஊதியமாக பெறுகிறார்கள். மத்தியஅரசு மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் குறைந்தது 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பெறுகின்ற நிலை உள்ளது. இதன் காரணமாக மாநில அரசு மருத்துவர் ரூ.86 ஆயிரம் மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகிறார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர், எனது கோரிக்கைக்கு ஆவண செய்யப்படும் என பதில் அளித்தார். ஆனால் கொரோனா காரணமாக காலதாமதமானது. கடந்த 2009-ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் மருத்துவர்கள் உண்ணா விரத போராட்டம் நடத்தி னர்.
அப்போது மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சி அமைந்தவு டன் கோரிக்கை நிறைவேற் றப்படும் என உறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சி அமைத்து 1½ வருடம் ஆகியும் மருத்துவர்களின் நியாயமான ஊதிய, பதவி உயர்வு நிறைவேற்றப்படவில்லை. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
- அங்கி அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில், பி. பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங்கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் ஏறத்தாழ 2 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதேநேரத்தில், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 16-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றனர்.
- ஐஐடி சென்னை மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 3 பேருடன் உருவாக்கியது பெர்ப்லெக்சிடி
- 300 சதவீதம் ஊதிய உயர்வு ஆச்சரியம் அளிப்பதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்
இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்".
கடந்த 2022 இறுதியில் தோன்றிய "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022ல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், "பெர்ப்லெக்சிடி ஏஐ" (Perplexity AI).
பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன "தேடல்" (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
ஆனால், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது.

ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து கொண்டது.
இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
பணிநீக்கங்களை பொறுத்தவரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது.
இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார்.
கடந்த 2023 ஜனவரி மாதம் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களையும், சில தினங்களுக்கு முன் 1000 ஊழியர்களையும் கூகுள் நீக்க போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்ட செய்தியை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.
- வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும்.
புதுடெல்லி:
வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீதம் ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.
இவற்றை அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் அமலுக்கு வரும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்பட பல்வேறு படிகளைச் சேர்த்து புதிய ஊதிய நிர்ணயம், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒரு முறை விடுமுறை எடுக்கலாம் உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புக்கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன. இது வங்கித் துறையில் மைல் கல்லாகும்.
வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளர்கள் பலனடைவர்.
- சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
- 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்.
ஒரு சில சமயங்களில் நமக்கு பிடித்த வேலையை பெறுவதற்காக பிடிக்காத வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அத்தகைய சூழல்களில் வெறுப்பாகவும், வேலையை முழு ஈடுபாடு இல்லாமலும் செய்ய நேரிடும். சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு. அதிலும் முக்கியமாக ஊதிய உயர்வு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பதால் அது கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். அதிலும் 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம். ஆனால், இங்கு ஒருவர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார் அன்கேத். கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலையை ராஜினாமா தானே செய்துள்ளார் என்றால் சரி. அதனை கொண்டாடும் விதமாக இசைக்குழுவுடன் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் தற்போது பேசுபொருளாகியுள்ளார்.
ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அன்கேத், பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். இதையடுத்து தனது நண்பர்கள் மற்றும் இசைக்குழுவை அழைத்து அன்கேத், நிறுவனத்தின் மேலாளர் அலுவலகம் முடிந்து வெளியில் வந்த போது வாசல் முன்பு மகிழ்ச்சியுடன் மேளம் அடித்து ஆடிப்பாடி நடனம் ஆடி கொண்டாடினார். இதனால் எரிச்சலடைந்த நிறுவனத்தின் மேலாளர், அன்கேத் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 7-வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை கர்நாடக சட்டசபையில் இன்று முதல்-மந்திரி சித்தராமையா வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான குழுவினர் 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் அடிப்படை சம்பளத்தில் இருந்து 27.5 சதவீதம் அளவிற்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் மாநில அரசு தற்போது 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17,440.15 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2025 ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியோடு 7ஆவது ஊதியக்குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது
- 8 ஆவது ஊதியக்குழுவின் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக்குழுவை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
2025 ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியோடு 7ஆவது ஊதியக்குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய அமைச்சரவையில், ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் தரப்பட்டது.
- 7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.
- 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என சிஐடியூ சௌந்தரராஜன் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ரூ.2,012, அதிகபட்சமாக ரூ.7,981ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ.1,965, அதிகபட்சம் ரூ.6,640ஆக உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், சிஐடியூ, ஏஐடியூசி ஒப்பந்தம் இறுதி செய்யதை ஏற்கவில்லை. இதனால், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.
மேலும், 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என சிஐடியூ சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு உட்பட்ட பஞ்சாலைகள் தமிழகத்தில் கோவையில் 5 இடங்களிலும் காளையார் கோவில், கமுதக்குடி ஆகிய 2 இடங்கள் உள்பட மொத்தம் 7 ஆலைகள் இயங்கி வருகின்றது.
இங்கு 4000-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளார்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தொழிற் சங்கத்தினர் கடந்த 20-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இன்று 6-வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் அவினாசி மேம்பாலம் அருகே உள்ள சி.எஸ். டபிள்யு. மில் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.