என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scam"

    • சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பு.
    • அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்படி, மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை நடந்த அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த மனுவில், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ, ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    ஐதராபாத்தில் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயில் பெயரை வைத்து ரூ.2.8 கோடி மோசடி செய்ததாக சகோதரன் மீது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார். 

    அவரது புகாரில், "2019-ல் காபி தூள் தயாரிக்கும் தொழிலை தொடங்கவுள்ளதாகவும், லாபத்தில் 4% பங்கு கொடுப்பதாகவும் சகோதரன் என்னிடம் உறுதியளித்தான். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    சகோதரனின் பேச்சை நம்பி நானும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன். மேலும், தனது சுற்றுவட்டாரத்தில் இருந்தும் மொத்தம் ரூ.5.7 கோடி திரட்டிக் கொடுத்தேன்.

    ஆரம்பத்தில் எனக்கு லாபம் என பணம் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை சகோதரன் நிறுத்தியுள்ளான். பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லையே என நான் சகோதரனிடம் கேட்டபோது, என்னை தகாத வார்த்தைகளில் அவன் திட்டினான். மொத்தமாக ரூ.5.7 கோடி கொடுத்ததில் ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நன் ஆளாகியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வாலிபர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
    • தனியார் டிரேடிங் நிறுவனத்தில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி அறிவிப்பு வெளியிட்டனர்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மசூதி வீதியை சேர்ந்தவர் சல்மான் கான்(வயது 23). இவர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி அறிவிப்பு வெளியிட்டனர். இதனை பார்த்து நான், எனது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தோம்.

    ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் குறைந்த விலைக்கு நகைகள் தரவில்லை. முதலீட்டு தொகையையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டனர்.

    பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதில் அளிக்கவில்லை. நிறுவனத்தினர் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டனர். தற்போது சில தினங்களுக்கு முன்பு செல்போனில் அழைத்து பேசிய போது அந்த மோசடி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நான் தற்போது என்.ஐ.ஏ விசாரணையில் உள்ளேன்.

    நீங்கள் அடிக்கடி எனக்கு போன் செய்தால் உங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என மிரட்டல் விடுக்கிறார். எனவே எங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். 

    • கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
    • இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், இதுகுறித்து கிச்சிபாளையம் மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கூலி வேலை செய்து நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • தனியார் நிதி நிறுவன காசாளர் கைது செய்யப்பட்டார்.
    • 2 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரத்தை பெற்றார்.

    கோவை,

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 38). என்ஜினீயர். இவருக்கு பணத்தேவை ஏற்பட்டது. அதனால் தங்க நகையை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார்.

    அங்கு தனது 2 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரத்தை பெற்றார். அதன் பின்னர் மாதாமாதம் பணத்திற்கு வட்டியை செலுத்தினார். இந்தநிலையில் நேற்று பணத்தை திருப்பி செலுத்தி நகையை மீட்க அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார்.அப்போது அந்த நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் நிதி நிறுவன காசாளருக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பல முறை அைழத்தும் அவர் போனை எடுக்காததால் பிரான்சிசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் அந்த நிதி நிறுவனத்தை குறித்து அங்கிருந்தவர்களிடம் அவர் விசாரித்தார். அப்போது அவர்கள் அந்த நிதி நிறுவனத்தினர் மோசடியில் ஈடுப்படுவதாக தெரிவித்தனர்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நிதி நிறுவன காசாளர் நல்லாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு நகை கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறேன்.
    • ரூ. 6 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்தேன்.

    கோவை,

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரசிம். இவரது மனைவி மும்தாஜ் (வயது 30).

    இவர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் ஒரு நகை கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். எனக்கு கோவை செட்டி வீதியை சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார். அவர் என்னிடம் ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் வரும் என்றார்.

    அதனை நான் உண்மை என நினைத்து என்னிடம் இருந்த ரூ. 6 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்தேன். அதன் பின்னர் அவர் எனக்கு எந்த பணமும் தறவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஆன்லைனில் இருந்து இன்னும் பணம் வரவில்லை வந்தவுடன் தருவதாக கூறினார்.

    சில மாதங்கள் கழித்து மீண்டும் கேட்டபோது பணம் தராமல் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார். அப்போது தான் அவர் என்னை ஏமாற்றி வருவது தெரியவந்தது. உடனே நான் எனது பணத்தையும், நகையையும் திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் அதையும் அவர் தராமல் ஏமாற்றி வந்தார்.

    எனவே ஆனந்த் பாபு மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தையும், நகையையும் அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு சீட் பெற்று தருவதாக கூறினார்.
    • கணவன்-மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு

    கோவை, பிப்.28-

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அழகர் ராஜா(வயது30). இவர் ராணுவத்தில் வேலைக்கு சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அழகர் ராஜாவுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அறிமுகமானார். அவர் உள்பட 5 பேர் தங்களுக்கு அரசு துறையில் அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அவர்களிடம் பேசி உங்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வாங்கி தர முடியும். அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய அழகர் ராஜா அவர்களுக்கு பணம் கொடுக்க முன் வந்தார். மேலும் தனது பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களுக்கும் வேலை பெற்று தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து முதல் தவணையாக 4 பேரிடமும் கடந்த ஆண்டு ரூ. 19.50 லட்சத்தை மனோஜ் குமார் உட்பட 5 பேர் வாங்கியதாக தெரிகிறது. மேலும் பல கட்டங்களாக ரூ.30.85 லட்சம் பெற்றுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் ராணுவத்தில் வேலை வாங்கி கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 30.85 லட்சம் மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த மது மோகன், அவரது மனைவி சுஜாதா, மனோஜ் பிரபாகர், ரவி, மற்றும் ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை வெள்ளலூர் திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது54). இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையை சேர்ந்த இளங்குமரன் (40) என்பவர் அறிமுகமானார். அவர் தான் கனடா உட்பட பல நாடுகளில் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுத்துள்ளதாகவும், உங்களது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு சீட் பெற்று தருவதாக கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய நாகராஜ் தனது மகனுக்கு கனடாவில் படிக்க சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், ரூ. 16 லட்சத்து 43 ஆயிரத்து 933 பணத்தை இளங்குமரனின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    ஆனால் அவர் சொன்னபடி சீட் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் இது குறித்து நாகராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் இளங்குமரன் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வேயில் வேலை வழங்கியதாக லாலு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
    • விரிவான விசாரணைக்கு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது வேலைக்கு நிலம் என்ற மோசடியில் ஈடுபட்டு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி தகவல்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 4 ஆயிரம் பேரிடம் நிலம் பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக லல்லு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவான விசாரணைக்கு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • கோமதி நாயகம் என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா, கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

    நெல்லை:

    பாளை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது42), வியாபாரி. இவர் தனக்கு சொந்தமான 246 பவுன் தங்க நகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து கே.டி.சி. நகரை சேர்ந்த கோமதி நாயகம் (41) என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார். இதனால் கோமதி நாயகம் நகைகளை மீட்டு ரமேஷ்குமாரிடம் கொடுக் காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    பலமுறை ரமேஷ்குமார் தன்னிடம் நகைகளை தருமாறும், அதற்குரிய பணத்தை தருவதாக கூறியும் அவர் கொடுக்கவில்லை. மேலும் நகைகளை கொடுக்க மறுத்த கோமதி நாயகம் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையாவிடம் விவரம் கூறினார்.

    பின்னர் சகோதரர்கள் சேர்ந்து ரமேஷ்குமாரை மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தர வின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் அவரது சகோதரர் கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணை யாவை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். 

    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கணக்காளராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
    • நோட்டீஸ் அனுப்பியது முதல் மகேஸ்வரி பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக மேலாளராக ராதா (வயது 47) என்பவர் பணியாற்றி வருகின்றார்.

    அலுவலக கணக்காளராக ராமலிங்கபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு சங்கரன் கோவிலில் உள்ள ஒரு வங்கியில் 2 நிரந்தர வைப்புத்தொகை கணக்கும், தமிழ்நாடு கிராம வங்கியில் நிர்வாக செலவுகளுக்காக பணம் எடுக்கும் வகையில் ஒரு வங்கி கணக்கும் இருந்துள்ளது.

    இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உள்ள கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர்.

    அதில் தமிழ்நாடு கிராம வங்கியில் கணக்கில் இருந்து ரூ. 18 லட்சத்து 70 ஆயிரம் கணக்கில் வராதது தெரியவந்தது. மேலும் அனைத்து நிரந்தர வைப்பு நிதிக்கான ஆதாரங்களையும் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து விளக்கம் அளிக்க கணக்காளர் மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸ் அனுப்பியது முதல் அவர் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அலுவலக மேலாளர் ராதா, சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அலுவலக கணக்காளரை தேடி வருகின்றனர்.

    • சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார்.
    • சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றார்.

    தென் மேற்கு டெல்லியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் சவிதா சர்மா. இவர் வங்கியில் மூத்த நிர்வாகியா பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று சவிதா பேஸ்புக் பக்கம் மூலம் ஒரு தாலி (உணவுத் தட்டு) வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையால் ஈர்க்கப்பட்டார். இந்த சலுகை பற்றி அறிந்துக் கொள்வதற்காக அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்புக் கொண்டார்.

    ஆனால் அவர்கள் போன் எடுக்கவில்லை. என்றாலும் சில மணி நேரத்திற்கு பிறகு சவிதாவிற்கு அழைப்பு வந்துள்ளது. சாகர் ரத்னா என்கிற பிரபல உணவகத்தில் இருந்து இலவச உணவுத் தட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த சலுகையை பெற லிங்க் உள்ளே நுழைந்து பதிவு செய்யவும் கூறியுள்ளனர். 

    அதன்படி சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார். செல்போன் ஹேக் செய்யப்பட்டு அவரது கணக்கில் இருந்து முதலில் ரூ.40 ஆயிரமும், இன்னும் சில வினாடிகளில் மீண்டும் ரூ.50 ஆயிரம் எடுத்ததாக குறுச்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக தனது கிரெடிட் கார்டு பயன்பாட்டை புகார் மூலம் ரத்து செய்துள்ளார்.

    இதையடுத்து மே 2ம் தேதி அன்று, சவிதா சர்மா இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற மோசடி சலுகைகளின் வலை இணைப்புகள் வாட்ஸ்அப் மூலம் இன்னும் மக்களிடையே பரவி வருவதாகவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றும் சர்மா கூறியுள்ளார்.

    • கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை பெற்று வந்துள்ளார்.
    • சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    ரோட்டை சேர்ந்தவர் நிலா (வயது 44). இவர் முதல் கணவரால் கைவிடப்பட்டதால் புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவியை கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெற்று வந்தார்.

    இதற்கிடையே நிலா, 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதை மறைத்து கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை அவர் பெற்று வந்துள்ளார்.

    இதற்கிடையே நிலா வுக்கு 2-வதாக திருமணம் ஆகி கணவர் இருப்பது தெரிய வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை அரசு நிறுத்தியது.

    அதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிலா அரசிடம் இருந்து பெற்ற ரூ.82 ஆயிரத்து 200-யை திரும்ப செலுத்தும்படி துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் நிலா மீது புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் இயக்குனர் முத்து மீனா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×