என் மலர்
நீங்கள் தேடியது "scholarship"
- தமிழக அரசின் உதவித்தொகைக்கு கல்லூரி மாணவிகள் நவம்பர் 11-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழக முதல்-அமைச்சரால் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல்படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைபெண்திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள்இந்த திட்டத்தில் உதவி
தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது, இந்த வலைதளத்தில் (https://www.pudhumaipen.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும்மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
இந்த வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும்சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரைபதிவுசெய்யலாம்.
அரசு பள்ளிகளில்பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
இந்த திட்டதின்கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும்கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகிற 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள்நடைபெறும். மாணவிகள் தவறாமல் தங்களது ஆதார்அட்டை மற்றும் (கல்விமேலாண்மை தகவல்திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4-ம்ஆண்டுகளில்படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநிலஅளவில் செயல்படும் உதவிமையத்தினை திங்கள்முதல் வெள்ளிவரை, காலை 10 மணிமுதல்மாலை 5 மணிவரை (91500 56809), (91500 56805), (91500 56801) மற்றும் (91500 56810) எண்களி ல்தொடர்புகொள்ளலாம். மேலும், mraheas@gmail.com என்றமுகவரிக்குமின்னஞ்சல்அனுப்பலாம்.
தொழில்நுட்பபடிப்புகளில்முதலாம்ஆண்டுபயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பமுறையினை சரியாகதெரிந்துகொண்டு, கடைசிதேதிக்கு முன்பாகதவறாமல்விண்ணப்பிக்குமாறுகேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 15-ந்தேதி வரையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ந்தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான சிறு பான்மையின மாணவ- மாணவிகள், பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30-ந்தேதி வரையிலும் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 12-ம் வகுப்பு படித்து முடித்து நீட் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார்.
- பள்ளி சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்- பவானி தம்பதியினர்.
விவசாயக் கூலிகளான இவரது மகள் ராஜேஸ்வரி.
இவர் ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் வெற்றிப் பெற்றார்.
அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
அவருக்கு அவர் படித்த பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைப்பெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் துரைமுருகு தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவி ராஜேஸ்வரியை வெகுவாக பாராட்டினர்.
- மகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பணம் வந்துள்ளதாக கூறுகின்றனர்.
- இதன் மூலம் பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை முறைகேடான பரிவர்த்தனை மூலம் எடுத்து விடுகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கல்வி உதவித்ெதாகை
நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தொலைபேசி எண்ணை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, தங்கள் மகன் அல்லது மகள் படிக்கும் அரசு அல்லது தனியார் பள்ளி, கல்லூரிகளில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பணம் வந்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் அந்த பணத்தை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக பெற்றோரின் வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்டு, கூகுள்பே க்யூ ஆர் கோடுகள் மற்றும் பின் நம்பர்களை ஸ்கேன் செய்து அனுப்புமாறு கேட்கிறார்கள்.
முறைகேடு
இதன் மூலம் பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை முறைகேடான பரிவர்த்தனை மூலம் எடுத்து விடுகின்றனர்.
இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் சைபர் கிரைம் பிரிவில் பெறப்பட்டு விசாரணையில் உள்ளது. இது குறித்து நடந்த விரிவான விசாரணையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் தமிழில் பேசி மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
பெற்றோர்கள் உஷார்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்கள் மோசடிக்காரர்களிடம் இருப்பதாக தெரிகிறது.
ஆகவே மாணவ, மாணவி–களின் தனிப்பட்ட தகவல்களை முன் எச்ச–ரிக்கையுடன் பாதுகாத்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மோசடிக்காரர்களால் கல்வி உதவித் தொகை பணம் ரூ.14,500 என குறிப்பிட்டு சொல்வதாக கூறப்படுகிறது.
பெற்றோர்களுக்கு கல்வி உதவித்தொகை பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் இதுபோன்ற மோசடி குறித்து விழிப்பு–ணர்வு ஏற்படுத்த வேண்டும். ஸ்காலர்ஷிப் சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் மூலம் தெரிந்து கொள்ள அறிவுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்பட்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பி த்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட தொடங்கும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes -யிலும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
- தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் சார்பில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடை பெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு கடந்த மாதம் மீனவர்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களு க்கான தீர்வுகளை துறை அலுவலர்கள் மூலமாக தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. ரோச்மா நகர் மீனவர்கள் கிராமத்தில் கடலில் கல் நிரப்பும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணி விரைவில் நிறைவடையும். மீனவர்களுக்கான மீன்பிடி அடையாள அட்டை வழங்கு வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இனி அந்தந்த பகுதி உதவி இயக்கு னர்கள் மூலம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை புதிய பயனாளிகளுக்கு அவர்க ளுடைய வங்கி கணக்கில் தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மகாத்மா என்ற கார்த்திக் என்ற மீனவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். அவரது தாயார் கலைய ரசிக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்க ப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான நிவாரண உதவித் தொகைக் கான ஆணை யினை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
- மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தை அணுகவும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதிதொழி ற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் தொழிற்க ல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச்சேர்ந்த மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இலவச கல்வித்திட்ட த்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்ப டிப்பு பயிலும் மாணவ- மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க ப்பட்டு வருகின்றது. பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் முதுகலை பட்டப்படிப்பு, 3 ஆண்டு பாலி டெக்னிக், தொழிற்க ல்வி போன்ற பிற படிப்புக ளுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்ப ட்டு வருகிறது.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 06.12.2022- க்குள் இணைய தளம்மூலம் கோட்புகள் சமர்ப்பிக்க ப்படவேண்டும். புதிய இனங்களுக்கு இணையதளம் 15.12.2022 முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தை அணுகவும். அரசு இணையதளத்தில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளன. மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்க ளில் தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ண ப்பித்து பயனடையலாம். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
- தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை அறிவிப்பு.
மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்காக sdat@tn.gov.in என்கிற இணைய்தள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- கல்வித்துறை மற்றும் வங்கியில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல் தனியார் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து பின்னர் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவிகளும், தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி படிக்கும் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை படிக்கும் மாணவிகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக http://penkalvi.tn.gov.in வழியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி - திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முதல்கட்டமாக மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் 40 கல்லூரிகளில் இருந்து 3 ஆயிரத்து 257 மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 வீதம் வருடத்துக்கு மொத்தம் ரூ.3 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாவது கட்டமாக மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 3 ஆயிரத்து 91 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெற அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். கல்வித்துறை மற்றும் வங்கியில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- வேளாண்மை துறை அலுவலர் மூலம் நிலம் சரிபார்த்து பணி செய்த விவசாயிகள் ஆதார் எண்ணை புதுப்பிக்காமல் உள்ளனர்.
- விவசாயிகளும் உடனடியாக ஓரிரு நாட்களில் இப்பணியினை செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காங்கயம் :
காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காங்கயம் வட்டாரத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதித்தொகை பெற அனைத்து விவசாயிகளும் ஆதார் எண்ணை உறுதி செய்யும் பணியினை உடனடியாக வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலோ அல்லது பொது சேவை மையம் மூலமாகவோ செய்திட வேண்டும்.
4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால் ஆதார் எண்ணை புதுப்பிக்காத விவசாயிகள் இந்த செய்தியை கண்டவுடன் உடனடியாக இப்பணியை செய்தால் தான் அடுத்த காலாண்டுக்கான தவணைத் தொகை தங்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஏற்கனவே வேளாண்மை துறை அலுவலர் மூலம் நிலம் சரிபார்த்து பணி செய்த விவசாயிகள் ஆதார் எண்ணை புதுப்பிக்காமல் உள்ளனர். காங்கயம் வட்டாரத்தில் 1,800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதார் எண்ணை பிரதம மந்திரி கிஷான் திட்டத்துடன் இணைக்காத நிலையில் உள்ளனர். அனைத்து விவசாயிகளும் உடனடியாக ஓரிரு நாட்களில் இப்பணியினை செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
- முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சஹானா, ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் மாதவன் ஆகியோா் முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அந்த பள்ளிகளின் பராமரிப்பு செலவுக்காக தலா ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினாா்.
இதனை அப்பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஆயக்காரன்புலம் பழனியப்பன், தாணிக்கோட்டகம் தமிழ்ச்செல்வன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
- மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
- தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கணைகளுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்பட உள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் , வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்கள வருகிற 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே அஞசல் வழியில் , நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதி யாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்ப டுவர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.