என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school"

    • திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றதால், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைவாக இருந்தது.

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் திருப்பூரில் ஹோட்டல்கள் நடத்திய வருகிறார்கள். தற்போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

    இதுபோல் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பாத நிலையில் அவர்கள் குழந்தைகள் பல பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை குறைந்தது. பள்ளி வகுப்பறைகள் பலவும், மாணவ- மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    • லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்து சென்று பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது.
    • போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூர் மேல தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்று பாவூர்சத்திரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட முருகன் அங்கேயே ஆட்டோவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 1.42 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடை ஆய்வு.
    • பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.

    முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து அங்கிருக்கும் வருகை பதிவேடு மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடம் சரியாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

    அங்கு லேப்டாப், எக்ஸ்ரே கருவிகளை பார்வையிட்டார் மேலும் மருத்துவர் ராஜ்குமாரிடம் விபரங்களை கேட்டறிந்தார் பிறகு மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.

    அங்கு அரிசி எடை உள்ளிட்ட பொருட்களின் தரம் சரியாக இருக்கிறதா என்றும் அங்கு வாங்கும் நபர்களிடம் பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

    இதனை அடுத்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.

    பிறகு மதுக்கூர் வடக்கு பகுதியில் வயலில் நானோ யூரியா செயல் விளக்க ஆய்வு மேற்கொண்டார்.

    50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கினார்.

    இந்த ஆய்வு போது மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜி, பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் மதுக்கூர் உதவி வேளாண்மை இயக்குனர் திலகவதி மற்றும் அதிகாரிகள் பல கலந்து கொண்டனர்.

    • கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது.
    • உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த முன்னோடி திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப்பள்ளியில் பயிலும் 375 மாணவ- மாணவியர்களுக்கு திங்கட்கிழமை தோறும் சேமியா, உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் , செவ்வாய்க்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக சேமியா கேசரியும், வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளியில் பயிலும் 1067 மாணவ -மாணவியர்களுக்கும் திங்கட்கிழமை தோறும் ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் கோதுமை ரவை உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் கோதுமை ரவா, காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவா கேசரி வழங்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ -மாணவியர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கூட்டுறவு மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி காலனி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபுசிவகுருநான் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல், ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செய ல்படுத்தப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் கூறறினார்.

    இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்ட–த்தை சேர்ந்த மாணவி ஓவியதிலகம் கூறும்போது :-

    நான் தஞ்சாவூர் கூட்டுறவு காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறேன். நானும் என் நண்பர்க–ளும் தினமும் பள்ளியில் வழங்கப்படுகின்ற காலை உணவினை விரும்பி சாப்பிடுகின்றோம். சில சமயங்களில் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்ற சூழ்நிலை தற்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. தினமும் காலையில் வழங்கப்படுகின்ற சூடான உணவு வகைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இத்தகைய காலை உணவு திட்டத்தினை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.

    தஞ்சையை சேர்ந்த மாணவன் கதிரேசனின் பெற்றோர் கூறும்போது, எனது மகன் தஞ்சை ராஜப்பாநகர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். நான் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். சில நேரங்களில் வேலைக்கு கால தாமதம் ஆகி விடும் என்பதால் சமைக்க முடிவ–தில்லை. குழந்தைகள் பழைய உணவினை சாப்பிட்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். இப்போது முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்ப–டுத்திய பின்னர் என் குழந்தைகள் தினமும் காலை உணவை பள்ளியில் சூடாக சாப்பிடு–கின்றனர். இது என்னை போன்ற பெற்றோருக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு நன்றி என்றார்.

    • பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
    • பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொம்பேறிப்பட்டி மலை கிராமப் பகுதியான செம்மணாம் பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பல்வேறு கிராமங்களில் இருந்து குழந்தைகள் கல்வி பயில வருகின்றனர்.

    இப்பள்ளியில் சுமார் 70 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மற்ற தனியார் பள்ளிகள் எதுவும் இல்லாததாலும், பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களே உள்ளதாலும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கே ஆரம்ப கல்விக்காக அனுப்பி வந்தனர்.

    ஆனால் பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக ஏற்பாடாக அங்குள்ள கலையரங்கத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அதே கலையரங்கில் கடந்த சில மாதங்களாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    ஆனால் பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது கன மழை பெய்து வரும் சமயங்களில் கூட மாணவர்கள் வகுப்பறை வசதியின்றி திறந்தவெளி கலையரங்கில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கீழக்கரை வடக்கு தெருவில் மஸ்ஜித் கருணை பள்ளி திறக்கப்பட்டது..
    • சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபைக்கு பாத்தியப்பட்ட மஸ்ஜித் கருணை பள்ளி கட்டிடத்தை வடக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த தொழிலதிபர் அபூபக்கர் சித்தீக் தாயார் ஜைய்னுல் அரபு நினைவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு புது பொலிவுடன் கட்டப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரெத்தின முகம்மது தலைமையில், வடக்குத்தெரு ஜமாத் துணைத் தலைவரும் ராமநாதபுரம் மெர்லின் சீட் கவர் உரிமையாளருமான செல்ல வாப்பா (எ)அப்துல் ஹமீது, துணை செயலாளர் கவிஞர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் ஹுசைன் சித்தீகி தொழுகை நடத்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார். சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றி னார். வடக்குத்தெரு ஜமாஅத் மஸ்ஜித் மன்பஈ பள்ளி தலைமை இமாம் கலீல் ரஹ்மான் ஆலிம், ஜமால் ஆலிம், ஜகுபர் சாதிக், மஸ்ஜித் கருணை பள்ளி இமாம் புர்கான் ஆலிம், தெற்குத்தெரு ஜமாத் செயலாளர் சயீது இபுராஹிம், கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி முன்னாள் சேர்மன் பஷீர் அகமது, கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சுல்த்தான் சம்சூல் கபீர், மக்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், கீழக்கரை நகர் மன்ற உறுப் பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பழைமையான நாணயங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
    • வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் பாண்டியன் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் வரவேற்றார். 2-வது வார்டு கவுன்சிலர் மாலதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். மாற்றுத் திறனாளிகள் வாரத்தையொட்டி அந்த பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான இளம்ஞாயிறு என்பவரை கவுரவப்படுத்தும் வகையில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்தியாவின் பழைமையான நாணயங்கள் முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள நாணயங்களையும், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் நாணயங்கள் எங்கு தயார் செய்யப்படுகிறது? எந்த ஆண்டில் எந்தெந்த நாணயங்கள் தயார் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது என்பதையும், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், பகத்சிங், ரவீந்திரநாத்தாகூர் உள்பட முக்கிய தலைவர்கள் படத்துடன் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மாணவர்கள் விளக்கிக் கூறினார்கள். இதேபோல் வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கண்காட்சியை பார்வையிட்டு வெளியே வந்தவர்களிடம் மாணவர்கள் அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில் ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாணயங்களை பார்வையிட்டு, தகவல்களை அறிந்துக் கொண்டனர்.

    • பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
    • 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

    திருப்பூர் :

    இளைய தலைமுறையினர் தங்கள் மாநிலத்தின் பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.அதற்காக, மிஷன் இயற்கை திட்டம் பள்ளிகளில் உள்ள சுற்றுசூழல் மன்றங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுவதால், மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் மன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும்.

    இதற்காக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான செயல்முறை பயிற்சி நிறைவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆசிரியர்களுக்கு, இத்திட்டத்திற்கான வழிகாட்டு பயிற்சிகள் இணையவழியில் நடந்தது. நேரடியாக பயிற்சி வரும் 21-ந் தேதி முதல் 24ந் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்கீழ் ஒவ்வொரு பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம். பள்ளி வாரியாக, 5 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர்களை சுற்றுச்சூழல் ஆசிரியர் மற்றும் 'WWF india' வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 10ந் தேதி வரை வாரத்தில் 5 மணி நேரம் மாணவர்கள், ஆசிரியர்கள் இதுசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.இதன் வீடியோ ,அறிக்கைகள் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு 2023 பிப்ரவரி மாதம் மாநில விருது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு.
    • 12வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பெருமாநல்லூர் : 

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்கா செங்கபள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மற்றும் ஸ்ரீ குமரன் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளிகளின் 12வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி ரெயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன், கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். 

    விழாவிற்கு வந்திருந்தவர்களை ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளி வரவேற்றுப் பேசினார். மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். சிறப்பு அழைப்பாளராக தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ராஜசேகர் கலந்துகொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை இரு பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். 

    • தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திருப்பூர் மாவட்டம்சார்பாக மாவட்ட அளவிலான கலைப்பண்பாட்டு திருவிழா திருப்பூரில்நடைபெற்றது.
    • மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றார் .

    பெருமாநல்லூர் :

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திருப்பூர் மாவட்டம்சார்பாக மாவட்ட அளவிலான கலைப்பண்பாட்டு திருவிழா திருப்பூரில்நடைபெற்றது . இதில் வாய்ப்பாட்டுஇசை, கருவி இசை, நடனம், காட்சி, கலை, உள்ளுர் தொன்மை பொம்மைகள் மற்றும் நாடகம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அதில் ஒவ்வொன்றிலும் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவிகள்மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சினி நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றார் .

    அவரை பள்ளி தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன்,தாளாளர் பாலசுப்பிரமணியம்,பொருளாளர் சந்திரசேகர், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி,ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகஊழியர்கள் ஆகியோர் பாராட்டினர் . இத்தகவலை பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

    • 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

     அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக்குமார், பாண்டியன்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இதில் திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரி முஸ்ரத் பேகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் காற்றாலை மூலம் மின் உற்பத்தி, மருத்துவ தாவரங்கள், விவசாயம், மக்கும் குப்பை, மக்காத குப்பை, மூலிகை, தானிய வகைகள் மற்றும் இயற்கை உணவு வகைகள் உள்பட அறிவியல் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்திய மாணவர்கள், அவற்றின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டனர். கொரோனாவுக்கு பிறகு மாணவர்களின் அறிவு மற்றும் கல்வித்திறனை வளர்க்கும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக தலைமையாசிரியை நிர்மலா தெரிவித்தார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கண்டு களித்தனர்.

    ×