என் மலர்
நீங்கள் தேடியது "school holiday"
- கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.
இதற்கிடையே, மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கனமழை எதிரொலியால் தஞ்சையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.
மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
- மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் கரையை நோக்க நகர்ந்து வருகிறது
- புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல், இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை நெருங்கி வருவதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
- சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்தது
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.
திருவாரூர்:
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு - திரிகோணமலை இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது.
- திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- துரதிர்ஷ்டவசமாக நகரில் உள்ள வடிகால் அமைப்பு இதுபோன்ற தீவிர மழையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
டெல்லியில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் கனமழையால் பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், கனமழை எதிரொலியால் நேற்று டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இன்று கன முதல் மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று 5ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிவுறுத்தலை தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
6ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு வழக்கம் போல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் சனிக்கிழமை 153 மிமீ மழையும், திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை 107 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மழையின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 40 ஆண்டுகளில் டெல்லியில் இவ்வளவு கடுமையான மழை பெய்தது இதுவே முதல்முறை என்று கூறினார். கடந்த 1982-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 169 மி.மீ., மழை பெய்துள்ளது. எனவே, இது வரலாறு காணாத மழை மற்றும் துரதிர்ஷ்டவசமாக நகரில் உள்ள வடிகால் அமைப்பு இதுபோன்ற தீவிர மழையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
நகரின் பல்வேறு பகுதிகளில் 680 பிடபுள்யுடி வடிகால் பம்புகள், 326 தற்காலிக பம்புகள் மற்றும் 100 நடமாடும் பம்புகளுடன் வேலை செய்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை அல்லது டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன.
- தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூத்தாலி ஊராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் செல்பவர்களை அது துரத்தி சென்று கடித்தபடி இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன. இதனால் சாலைகளில் சிறுவர்-சிறுமிகள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்த படி இருந்ததால் கூத்தாலி பகுதியில் 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கடந்த மாதம் கண்ணூரில் 9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியது. அதேபோல் வீட்டின் முன் விளையாடிய ஒரு குழந்தையை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- இரவில் இருந்து மழை இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
- மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்த போதிலும், இன்று காலை மழை இல்லை.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னை, கோவை, நாமக்கல், ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
- சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு
- திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை மற்றும் காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என அறிவிப்பு.
- தொடர்ந்து கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவள்ளூர் மாட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.