என் மலர்
நீங்கள் தேடியது "schools"
- பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது.
- உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயசாந்தி வரவேற்றார். தலைமையாசிரியை பூங்கொடி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி, பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சோழ வந்தானில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர்- ஆசிரியர் கழக கவுரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், துணை சேர்மன் லதாகண்ணன் ஆகியோர் பரிசுவழங்கினர்.தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார். வரவேற்றார். ஆசிரியை பிரேம்குமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கினர். உதவி ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.
ராயபுரம் ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியை பணி மாதா, சோழவந்தான் ஆர். சி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி ஆசிர், பிர பாகர், மணிமேகலை, ஜாஸ்மின் ஜெனிபா ஆகியோர் பேசினர். உதவி ஆசிரியைகள் பிரேமா, அன்ன புஷ்பம், வனிதா, சாந்தகுமாரி, கிறிஸ்டிஜெய ஸ்டார் நிர்வாக ஆசிரியை அனிதா, இல்லம் தேடி கல்வியாசிரியைகள் ராக்கு, ரேகா, சத்துணவு அமைப்பாளர் முருகேசுவரி, உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
- எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை :
1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான 2022-23-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்று காரணமாக சற்று தாமதமாகத் தொடங்கினாலும், திட்டமிட்டபடி பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றன.
அதன்படி, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் (மார்ச்) 13-ந்தேதி தொடங்கி, கடந்த 3-ந்தேதியுடனும், பிளஸ்-1 வகுப்புக்கு கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி, கடந்த 5-ந்தேதியுடனும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி ஆரம்பித்து, 20-ந்தேதியுடனும் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
இதில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது.
ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆண்டு இறுதித்தேர்வுகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், பெரும்பாலான பள்ளிகளுக்கு இறுதித்தேர்வு நடத்தப்பட்டு, கோடை விடுமுறையும் விடப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கல்வித்துறையின் நாட்காட்டியின்படி, இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இறுதி வேலைநாள் ஆகும்.
அந்த வகையில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இன்று ஆண்டு இறுதித்தேர்வின் கடைசித்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை எழுதி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அப்போது பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது குறித்த அறிவிப்பை கல்வித்துறை முடிவு செய்து வெளியிடும் என்று பேசப்படுகிறது.
- தாசில்தார் தலைமையில் வருவாய்துறையினர் அடங்கிய குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடு முறை அளிக்கப் பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகள் திறப்பு
இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும், வகுப்பறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை துரித படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காகவும், அவற்றை சீரமைத்து சான்று வழங்கிடவும் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் செல்வராஜ் சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தாசில்தார்களுக்கு உத்தர விட்டார்.
குழு ஆய்வு
இதைதொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவிலும் தாசில்தார் தலைமையில் வருவாய்துறை யினர் அடங்கிய குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு பழுதடைந்த வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டிடங்களை பள்ளி திறப்பதற்கு முன்பாக சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளிலும், கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து தீயணைப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் மூலம் கூட்டுப் புலத்தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
மாணவர் சேர்க்கை
மேலும் ஜூன் மாதம் முதல் வாரம் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க மும்முரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக 6-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்து வருகின்றனர்.
தகவல் தெரிவிக்கலாம்
எனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கச் செல்லும் பெற்றோர், அந்தப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதும் இருப்பதை கண்டறிந்தால் கலெக்டர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 'வணக்கம் நெல்லை கைப்பேசி எண் -97865 66111 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுபான்மை பள்ளிகளுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
நெல்லை:
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லை வந்தார்.
ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மனு
அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொரு ளாளரும், நாங்கு நேரி சட்டமன்ற உறுப்பின ருமான ரூபி மனோகரன் நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மை பள்ளி களுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல அனைத்து அரசு நலத்திட்ட ங்களையும் சிறுபான்மை பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
7.5 சதவீத இடஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை போல, நீதியரசர் கலையரசன் பரிந்துரைப்படி அதை 15 சதவீதமாக உயர்த்தி, அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புதுமை பெண் திட்டம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் பெறுவது போல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
இதுவரை அரசால் மதிய உணவு திட்டம் அரசு பள்ளி மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டமானது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட வில்லை. எனவே அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையிலும் அந்த திட்டத்தை விரிவு படுத்திட வேண்டும்.
உதவித்தொகை
கடந்த 16 ஆண்டுகளாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஒன்றிய அரசால் வழங்கப் பட்டு வந்த சிறுபான்மை மாண வர்களின் கல்வி உதவித்தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை பள்ளிகளில் தகுதியான காலி இடங்களில் முறையான விதிமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்க ளுக்கு கடந்த 6 ஆண்டுகளாக அரசு ஒப்புதல் வழங்காத காரணத்தினால், அவர்கள் ஊதியம் பெறாமலேயே ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நியமன ஒப்புதல் வழங்கி அவர்களுக்கு ஊதியம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.
- நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 249 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,922 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது.
இதற்காக இணையதளம் வழியாக 4,963 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதியில் செயல்படும் 249 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதன்மைக்கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் இணையதளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் 24-ந் தேதி வெளியிடப்படும். இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.
2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.
- தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை :
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.எனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல பள்ளியில் அமைந்துள்ள மின் சாதனங்கள், இணைப்புகள், மின் பணியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படுகிறது. சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் இருந்தால் அவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு, கசிவு உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது.வகுப்பறைகள், மாணவர்களுக்கான இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
- நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடலூர்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் பதிவாகி வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருவதோடு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறுகள், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பழ வகைகள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மதிய வேளையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
இது மட்டும் இன்றி காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தூக்கமின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 -ந்தேதி 102.2, 2- ந் தேதி 104.5, 3- ந் தேதி 104, 4 -ந் தேதி 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. கடலூரில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 101.48 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் கடும் வெயிலால் கடுமையாக பாதிப்படைந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வழக்கத்தை விட அதிக அளவில் பதிவாகி வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகின்றது.
மேலும் கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் காற்று வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகின்றது. இது மட்டும் இன்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். ஆனால் இதனால் வரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகின்றது. இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று நிலை இதுவரை அடையாததால் சற்று காலதாமதம் ஆகும் என எண்ணப்படுகிறது. இது மட்டும் இன்றி அந்தமான் பகுதியில் தற்போது தான் தென்மேற்கு பருவ மழை நிலை கொண்டு தொடங்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதியில் தென்மேற்கு மழை தொடங்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதே போன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.
- தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.
இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.சில பள்ளிகளில், போதுமான தூய்மைப்பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தான் துவங்கப்பட்டுள்ளன.
பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள் விநியோகித்து கற்றல், கற்பித்தல் பணிகளை துவங்க வேண்டும். இதற்கு பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய, வட்டார கல்வி அலுவலர்கள், ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தெரி விக்கப்பட்டுள்ளது.
இது குறித்துகல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டாலும், மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கின்றன. புதிய கல்வியாண்டை துவங்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.
- ராமநாதபுரம்- விருதுநகர்-சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப் பட்டு வகுப்புகள் தொடங்கின.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புல்லாணி, மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, போகலூர், நயினார் கோயில், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் 157 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள், 36 அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகள், 22 தனியார் நடுநிலை பள்ளிகள் உள்ளன.
66 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி கள், 27 தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளிகள், 56 தனி யார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இங்கு படித்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்ட இருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்ததால் இன்று (12-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. ஒரு மாத காலம் விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் நண்பர்களை பார்த்து நலம் விசாரித்தனர். முதல் நாளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் அறிமு கப்படுத்தி கொண்டனர்.
இதேபோல் விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. 2 மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.
வருகிற 14-ந்தேதி அன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.
- நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
- பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் ஒரு மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.
இன்று 6 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன.
நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த வாரம் அந்தந்த பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் வரவேற்கப்பட்டனர்.
தஞ்சை கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் நாதஸ்வரம் ,தவில் உள்ளிட்ட இன்னிசை மேளங்கள் முழங்க பேரணியாக அழைத்து வரப்பட்டு, உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
- பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள்ளது.
திருப்பூர் :
கோடை விடுமுறை முடிந்து இன்று1 முதல், 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், பல்லடம் , உடுமலை உள்பட அனைத்து இடங்களில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். குழந்தைகள் என்பதால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 1-ம்வகுப்பு சேர்ந்த சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள் ளது. இவற்றில் 6முதல், பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து 673 பேர் கல்வி பயில்கின்றனர். பள்ளி திறந்த கடந்த 12ந்தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 545 பேர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 6,128 பேர் (5 சதவீதம்) பள்ளிக்கு வரவில்லை. நடப்பு வாரத்துக்குள் இவர்கள் பள்ளிக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 1-ம்வகுப்பில் 2,645 மாணவர்கள் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர். 2-ம் வகுப்பில் 220, 3-ம் வகுப்பில் 238, 4-ம் வகுப்பில் 241, 5-ம் வகுப்பில் 240, 6-ம் வகுப்பில் 532 பேர் இணைந்துள்ளனர். 7 மற்றும் 8-ம் வகுப்பில் முறையே 65 மற்றும் 62 பேர் என மொத்தம், 4,243 பேர் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர்.
தமிழை முதன்மை பாடமாக தேர்வு செய்து படிக்க 1,351 மாணவர், 1,290 மாணவிகள் என 2,641 பேர் இணைந்துள்ளனர். ஆங்கில மீடியம் படிப்பை 840 மாணவர், 762 மாணவிகள் என 1,602 பேர் தேர்வு செய்துள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலர் அமுதா கூறுகையில், இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவருக்கும் நோட்டு வழங்கப்படும். ஒரு வாரத்துக்குள் விடு பட்டவர்களுக்கு வழங்க தேவையான புத்தகம் பள்ளிகளில் இருப்பில் உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீருடை, காலணி உள்ளிட்ட நலத்திட்டங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றார்.
- பெற்றோர் தங்களது குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்.
- பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும்.
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஆலக்குடி கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அவர் மரக்கன்றுகள் நட்டு வைத்து பேசியதாவது:-
பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு செல்லும் பெண்குழந்தைகளிடம் வெளியில் நடக்கும் விஷயங்களை தாமாக முன்வந்து ஒரு நல்ல நண்பரை போல் அணுகி விசாரிக்க வேண்டும்.
தற்போதுள்ள சமூக சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கபடுவார்கள். பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும் .
பொதுமக்களுக்கு உண்டான பிரச்சனைகள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட மற்றும் தாலுக்கா அளவிலுள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தால் என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் செயலர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுந்தரராஜன், வக்கீல் பிரகாஷ், சமூக ஆர்வலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் பேசினர்.
இம்முகாமில் 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்அடைந்த னர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் செய்திருந்தார். முடிவில் ஆலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசாமி நன்றி கூறினார்.