என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shooting"

    • புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    வாஷிங்டன்:

    சீன நாட்காட்டியின்படி நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72) என்ற முதியவர் என தெரிய வந்தது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

    • அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    தகவலறிந்த போலீசார் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் அந்த பள்ளியில் வேலை செய்யும் ஊழியராவார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக 3 சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • 2022-ல் அமெரிக்காவில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் 2 நாட்கள் சீனாவின் சந்திர புதுவருட திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.

    இதேபோன்று நடந்த முதல் நாள் திருவிழாவின்போது, அந்த ஓட்டலில் சமீபத்தில் சீன புதுவருட தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வந்தது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். பலர் மேடையில் உற்சாக நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அதிரடியாக பல ரவுண்டுகள் சுட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதில் 10 பேர் பலியானார்கள்.

    தகவலறிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72), என்ற முதியவர் என தெரிய வந்தது. வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இது அங்குள்ள தற்கொலை எண்ணிக்கையில் இரு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் மிசிசிபி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

    • தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார்.
    • திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (45). இவரது உறவினர் கருப்பையா (46). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அகஸ்தியர் புரம்-தென்மலை ரோட்டில் உள்ளது.

    இவர்களுக்கும் காரைக்குடியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி முன்விரோதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தனபால் மற்றும் அவரது உறவினர்கள் சிறுமலைக்கு வந்து ராஜாக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார். இதனை தடுக்க வந்த கருப்பையா மீதும் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் சுருண்டு விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் ஒன்றுகூடவே தனபால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமலைக்கு விரைந்து வந்து காயமடைந்து உயிருக்கு போராடிய ராஜாக்கண்ணு, கருப்பையா ஆகிய 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவு நாட்டுத்துப்பாக்கி பயன்பாட்டில் உள்ளது. போலீசார் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு அதனை கைப்பற்றினாலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கிகளை பலர் பதுக்கி வைத்துள்ளனர். எனவே இச்சம்பவத்திற்கு பிறகாவது துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படவேண்டும். விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் முன்னாள் ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்காவின் நாஷ்வில்லேவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
    • இந்த தாக்குதலில் 3 மாணவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின.

    தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலிப் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்தலாவை சேர்ந்தவர் அவினாஷ். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம். பி. ஆக உள்ளார்.

    இவரது உதவியாளராக இருப்பவர் பாரத் குமார் யாதவ். இவர் கடப்பா மாவட்டத்தில் சூதாட்டம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட இடங்களில் பணம் வசூல் செய்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த திலீப் குமார் என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் திருமண செலவுக்காகபாரத் குமாரிடம் பணம் வாங்கி உள்ளார். திலிப் குமார் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு திலிப் குமார் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பி தருவது தொடர்பாக அதிரடி மகபூப் பாஷா என்பவர் முன்னிலையில் திலீப் குமாரும் பாரத்குமாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பாரத் குமார் வீட்டிற்கு சென்று துப்பாக்கி எடுத்து வந்து திலீப்குமார் மற்றும் மகபூப் பாஷாவை நோக்கி 3 ரவுண்டு சுட்டார். இதில் திலீப் குமார் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    மகபூப் பாஷாவுக்கு கை மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக கடப்பா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடப்பா போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலிப் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாரத் குமார் யாதவை கைது செய்தனர்.

    பாரத் குமார் அவினாஷ் எம்.பி யின் உதவியாளராக இருந்ததால் அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது லைசன்ஸ் வாங்கிக் கொடுத்தது யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
    • இரவு என்பதால் பாடல் ஒலிபரப்பை நிறுத்தும்படி கூறினார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் சிரஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ். இவரது வீட்டில் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

    இரவில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பட்டதற்கு ஹரிசின் அண்டை வீட்டைச் சேர்ந்த ரஞ்ஜு என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்தார். தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு ஹரிசிடம் பாடல் சத்தத்தைக் குறைக்கும்படியும், இரவு என்பதால் பாடல் ஒலிபரப்பை நிறுத்தும்படியும் ரஞ்ஜூ கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஹரிஸ் தனது நண்பன் அமித் வைத்திருந்த துப்பாக்கியால் ரஞ்ஜூவை நோக்கி சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு ரஞ்ஜூவின் கழுத்தில் பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் ரஞ்ஜூ சரிந்து விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ரஞ்ஜூவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஸ், அவரது நண்பர் அமித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார்.
    • தாக்குதல் சம்பவம் முன்னாள் கிராம தலைவர் வீடு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

    பாங்காங்:

    தாய்லாந்தில் தெற்கில் உள்ள சூரத் தானி மாகாணம் கிரி ராட் நிகோம் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் முன்னாள் கிராம தலைவர் வீடு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

    தாய்லாந்தில் சமீபகாலமாக வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் நாங் புவாலாம் பு மாகாணத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி நடத்திய தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.

    • அமெரிக்காவில் வீட்டுக்குள் புகுந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
    • இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஜசிண்டோ நகரை சேர்ந்த நபர் ஒருவர், இரவில் தனது வீட்டின் முன் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதனால் அந்த வீட்டில் இருந்த நபர்கள் சிலர் வெளியே வந்து, அந்த நபரிடம் அதை நிறுத்தும்படி கூறினர். அவர்கள் அந்த நபரை திட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டனர்.

    அதன்பின் அந்த நபர் துப்பாக்கியுடன் அண்டை வீட்டுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத் தள்ளினார். இதில் 3 பெண்கள், 8 வயது சிறுவன் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தப்பிச் சென்ற அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. மசூதிகள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.

    இந்த தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ் தான் எல்லையில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்க தலைவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் தளபதி அப்துல் ஜபா ஷா கொல்லப்பட்டார். மேலும் இரண்டு தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர். மேலும் சட்ட அமலாக்க முகவர் மதக்குழுக்களை மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • துருக்கியில் டீக்கடையில் ஒரு தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தோர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    டீக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×