என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரண தண்டனை"

    • குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து கடத்திச் சென்றார்.
    • ஒன்றரை மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    ஆனந்த் மாவட்டத்தின் காம்பட் கிராமப்புற பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் அக்டோபர் 28, 2019 அன்று வெளிச்சத்துக்கு வந்தது.

    குஜராத்தி புத்தாண்டின் போது பிஸ்கட் கொடுத்து சிறுமியை தாதோ என்கிற அர்ஜுன் அம்பலால் கோஹெல் (24) கடத்திச் சென்று வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒன்றரை மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த தீர்ப்பு வந்துள்ளது.

    குஜராத்தின் நீதித்துறை மற்றும் காவல் அமைப்பின் செயல்திறனையும், குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டையும் இந்த முடிவு குறிக்கிறது என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பாராட்டினார்.

    இரட்டை மரண தண்டனை என்பது மேல்முறையீடு மூலம் உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றத்தில் அவர் விடுவிக்கப்பட்டாலும், அவர் மரண தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இந்த இரட்டை மரணதண்டனை தீர்ப்பு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • ஐதராபாத்தில் தில்சுக் நகரில் கடந்த 2013, பிப்ரவரியில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது.
    • இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லபட்டனர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் தில்சுக்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோனார்க் மற்றும் வெங்கடதிரி தியேட்டர்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 130 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுதொடர்பான வழக்கு தேசிய புலானாய்வு கோர்ட்டில் நடைபெற்றது இந்த வழக்கில் யாஷின் பதக்கல் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.

    இந்திய முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாஷின் பதக்கல் மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேந்ர்த ஷியா உர் ரஹ்மான் மற்றும் 3 பேருக்கு மரணதண்டனை வழங்கி சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து யாஷின் பத்கல் உள்பட 5 பேரும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு அங்கு நடந்து வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கே.லட்சுமணன், நீதிபதி பி.ஸ்ரீசுதா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டது.

    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • இந்த கொடூர சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி நடந்தது.
    • சிறுவனை கொன்றதாக தான் தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த ஜமுக்கா கிராமத்தை சேர்ந்தவர் தான் தேவி (வயது 33). தான் தேவிக்கு குழந்தை இல்லை. எனவே அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மந்திரவாதியை சந்தித்து தனது குறையை கூறினார்.

    அந்த மந்திரவாதி, தான் தேவிக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் சிறுவன் ஒருவனின் ரத்தத்தை முகத்தில் பூசி கொள்வதோடு, அதனை குடிக்கவும் வேண்டும் எனக் கூறினார்.

    மந்திரவாதி கூறியதை அப்படியே நம்பிய தான்தேவி, தான் குழந்தை பெற சிறுவன் ஒருவனை கொன்று ரத்தம் குடிக்க முடிவு செய்தார்.

    இதையடுத்து தனது பக்கத்து வீட்டில் வசித்தவரின் 10 வயது சிறுவனை கடத்தி அவனை கொன்றார். பின்னர் அந்த சிறுவனின் ரத்தத்தை உடலிலும், முகத்திலும் பூசியதோடு, அதனை குடிக்கவும் செய்தார்.

    இந்த கொடூர சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி நடந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பரேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் சிறுவனை கொன்றதாக தான் தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2  பேரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு பரேலி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண் தான் தேவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இத்தீர்ப்பு பற்றி சிறுவனின் பெற்றோர் கூறும்போது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி இருக்க வேண்டும். கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு போதுமானதாக இல்லை, என்றனர்.

    • தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.
    • மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கொலை, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா உருவாக்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.

    இதற்கு முன்பு கொலை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம், கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின்படி, கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சில ஆயுத வழக்குகளில், மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம். 

    இந்த சட்டம் தொடர்பாக சட்டத்துறை இணை மந்திரி ராம்கர்பால் சிங் கூறுகையில், 'இந்த சீர்திருத்தங்கள் மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். அதேசமயம், சில குற்றங்களுக்கு தண்டனையை மறுஆய்வு செய்து 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், குற்றவாளிகள் தங்கள் தண்டனையை மறுஆய்வு செய்யும்படி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்' என்றார்.

    மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய கடந்த ஆண்டு சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விசாரணையில், ஆசிரியை வாங் யுன், உணவில் கலந்த ரசாயனம்தான், குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.
    • மரண தண்டனைக்கான உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் ரசாயனத்தை கலந்து ஒரு குழந்தையை கொன்று, 24 பேருக்கு பாதிப்பை உண்டாக்கிய முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    வேங் யுன் எனும் 39-வயது ஆசிரியை வாங் யுன், 2019ம் வருடம் மார்ச் மாதம், உடன் பணி செய்யும் ஒரு ஆசிரியருடன் ஏற்பட்ட ஒரு தகராறுக்கு பிறகு சோடியம் நைட்ரைட் எனும் ரசாயனத்தை வாங்கியுள்ளார். மறுநாள் அவர் பணிபுரிந்த மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வைக்கப்பட்ட பாத்திரங்களில் அதனை கலந்து விட்டார்.

    அதன்பின்னர் ஜனவரி 2020 மாதவாக்கில் ஒரு குழந்தைக்கு பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் பலியானது. இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. விசாரணையில், ஆசிரியை வாங், உணவில் கலந்த ரசாயனம்தான், குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.

    இந்த வழக்கை விசாரித்த ஹெனன் மாகாணத்தின் ஜியாவ்ஜுவோ நகர நீதிமன்றம் கடந்த 2020 ஜனவரி மாதம் அந்த ஆசிரியைக்கு மரண தண்டனை வழங்கியது. மரண தண்டனைக்கான உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனையடுத்து நேற்று, அதே நீதிமன்றம் அவருக்கு தண்டனையை நிறைவேற்ற அவர் அடையாளத்தை உறுதி செய்தது. பின்பு அவர் தண்டனைக்கான மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    சமீப காலமாக சீனாவின் மழலையர் பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறை மரணங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த தீர்ப்பை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்தனர்.

    வருடாவருடம் ஆயிரக்கணக்கான குற்றவாளிகளுக்கு சீனா மரண தண்டனை வழங்கி வருவதாக மனித உரிமைகளுக்கான என்.ஜி.ஓ. அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவிக்கிறது.

    • இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.
    • 8 இந்தியர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

    கத்தாரில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு நேற்று அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    தனியார் நிறுவனமான அல் தஹ்ராவில் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது புது டெல்லியோ பகிரங்கப்படுத்தவில்லை.

    கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களையும் இந்தியா திரும்பக் கொண்டுவர சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிவதாகவும் கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்களும் நடப்பதை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டப் போராட்டம் நடத்துவோம். சர்வதேச நீதிமன்றம் உள்ளது.

    இந்திய அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
    • கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியது.

    புதுடெல்லி:

    கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அதுதொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் பணியாற்றி வந்தனர்.

    இவர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்களை இஸ்ரேலுடன் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் தோஹாவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது விவரம் இந்திய அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில்தான் தெரிவிக்கப்பட்டது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் அவர்கள் பேச வைக்கப்பட்டனர்.

    அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தூதரகத்தின் மூலம் மத்திய அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அண்மையில் 8 பேருக்கும் மரண தண்டனையை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு ரகசியமாக வைக்கப்பட்டு சட்டக் குழுவுடன் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கத்தார் அதிகாரிகளுடன் நாங்களும் தொடர்பில் உள்ளோம் என தெரிவித்தார்.

    • நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார்.
    • தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது33). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ம்ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார். ஏமனுக்கு செல்ல தனக்கு அனுமதி வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. இதனால் நர்சு நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • 8 அதிகாரிகளும் இந்திய கடற்படையில் உயர் பதவி வகித்தவர்கள்
    • விரைவில் கத்தார் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு தேதி நிர்ணயிக்கும்

    கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இந்திய கடற்படையை சேர்ந்த 8 அதிகாரிகள், அந்நாட்டிற்கு எதிராக உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த 8 அதிகாரிகளும் பல முறை ஜாமின் மனு அளித்தும் அவை அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.

    கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளும், இந்திய கடற்படையில் 20 வருடத்திற்கும் மேல் உயர் பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்பதும், அவர்களில் சிலர் கடற்படையில் பயிற்சியாளர் பதவியும் வகித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கடந்த மாதம், கத்தார் நாட்டின் முதல் நிலை நீதிமன்றம், அந்த 8 அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமின்றி, இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை விடுவிக்க சட்டபூர்வ வழிமுறைகளில் தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இப்பின்னணியில், இந்திய அரசாங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் ஏற்று கொண்டுள்ளது. இது குறித்த அடுத்த கட்ட விசாரணைக்கு கத்தார் நீதிமன்றம் விரைவில் தேதி நிர்ணயிக்கும் என தெரிய வந்துள்ளது.

    மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்ட செய்தி வெளியானதில் இருந்து 8 அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 2022 ஜனவரி முதல் 4 பேரும் கண்காணிக்கப்பட்டு வந்தனர்
    • பெரிய திட்டத்திற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது

    இஸ்ரேல் நாட்டின் மொசாட் (Mossad) உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆள் கடத்தல், அச்சுறுத்துதல், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்தல், மொபைல் போன்களை திருடுதல் உட்பட பல குற்றங்களில் இவர்கள் இஸ்ரேலுக்காக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    "ஈரானுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2022 ஜனவரி மாதம் முதல் நால்வரும் ஈரான் உளவு துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிக பெரிய திட்டத்திற்காக இஸ்ரேலால் தயார் செய்யப்பட்டனர்" என ஈரான் நீதிமன்ற செய்திகளை வெளியிடும் மிசான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை பெற்ற நால்வர் - வஃபா ஹனாரெ, அரம் ஒமாரி, ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி (பெண்) ஆவர்.

    கடந்த பல மாதங்களாக, தங்கள் நாட்டிற்குள் சதி வேலைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக ஈரான் குற்றம் சாட்டி வந்ததும், அந்த குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் ஒப்பு கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • எலிசபெத் 8 முறை மார்பிலும், 1 முறை கழுத்திலும் குத்தி கொல்லப்பட்டார்
    • 2022ல் ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 27 மாநிலங்களில் கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது.

    மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டில் விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு, தூக்கு மற்றும் துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறைகளாகும்.

    1988 மார்ச் 18ல் அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவின் கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett) சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சார்ல்ஸ், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்ததாகவும், அதனை சமாளிக்க மனைவியின் காப்பீடு தொகையை பெற விரும்பியதாகவும், அதற்கு இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சொல்லி அமர்த்தியிருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போது சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2022ல் அலபாமாவில், தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகளை தேட முடியாமல் போனதால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவருக்கு "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தண்டனை ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என தற்போது 58 வயதாகும் ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    நேற்று, இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.

    அலபாமா, மிசிசிபி மற்றும் ஓக்லஹாமா ஆகிய மாநிலங்கள் இந்த முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதுவரை எந்த குற்றவாளிக்கும் இது பயன்படுத்தப்பட்டதில்லை.

    மரண தண்டனையை இந்த முறையில் நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல் என ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் கூறினர். புதிய முறையை எதிர்த்து ஸ்மித் தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படலாம் என தெரிகிறது.

    ×