search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103912"

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.
    • 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருகே, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் காயத்துடன் நேற்றிரவு மயங்கி கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, விசாரணை நடத்தினர்.

    இதில், மயங்கி கிடந்த வாலிபர் மணியனூர் கந்தாயம்மாள் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்தி (வயது 33) என்பது தெரியவந்தது. கார்த்தி 2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வைத்து அவரது தாய் வைரத்தை கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளியே வந்து சுற்றிதிரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கார்த்தி தவறி விழுந்து காயம டைந்தாரா? அல்லது வேறு யாராவது தாக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயற்சி நடந்தா என்பது குறித்து வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை அருகே உள்ள செக்காரப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி சகுந்தலாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. சகுந்தலாவும், அவருடைய குழந்தையும் ஆஸ்பத்திரியில் தங்கி உள்ளனர்.

    நேற்று மதியம் ஆஸ்பத்திரிக்கு வெளியில் சகுந்தலா, அவருடைய கணவர் கந்தசாமி மற்றும் உறவினர்கள் உட்கார்ந்து இருந்தனர். சகுந்தலாவின் மாமியார் மாரியம்மாள், குழந்தையை வைத்து கொண்டு உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் சகுந்தலா குடும்பத்தினரை பார்த்து, தள்ளி உட்காருங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த வாலிபர் சகுந்தலாவின் குழந்தையின் அருகில் உட்கார்ந்து கொண்டார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சகுந்தலா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    உடனே இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயன்றாரா? என்பது பற்றி பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பொள்ளாச்சி மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் சரணடைந்த வாலிபரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார் நாகராஜ், செந்தில், வசந்தகுமார், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (28) கடந்த 25-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மணிவண்ணனை 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதன்பேரில் மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க மனுவை விசாரித்த நீதிபதி நாகராஜன் அனுமதி வழங்கினார். இதையடுத்து மணிவண்ணனை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் வழக்கில் கைதான பைனாஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகியோருடன் மணிவண்ணனுக்கு எந்தெந்த வகைகளில் பழக்கம் இருந்தது என்று விசாரித்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜிடமும் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் மணிவண்ணனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசின் நண்பர்கள் சிலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரது நண்பர்கள் சிலருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்த பெண்கள் யார்-யார்? பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசுவதாக வெளியான ஆடியோவில் பேசிய பெண் யார்? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். #PollachiCase #CBCID

    காதல் திருமணம் செய்த கொண்ட வாலிபருடன் கல்லூரி மாணவி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட். இவருடைய மகள் மோனிஷா (வயது21). இவர் கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு மோனிஷா திடீரென மாயமானார். அவர் நகை, பணத்துடன் மாயமாகி விட்டதாக அவருடைய தாய் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்து இருந்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் மோனிஷா தன்னுடன் படிக்கும் வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் விக்னேஷ் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோனிஷா, தனது காதல் கணவர் விக்னேசுடன் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் மோனிஷா, விக்னேஷ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த காதல் ஜோடி, பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக மோனிஷா கூறியதை அடுத்து, இருவரையும் விக்னேசின் தந்தை ரங்கசாமியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். #tamilnews
    கேரளாவில் விபத்தில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த வாலிபரை கல்லூரி மாணவி கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா சீதாதேடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பகரன். இவரது மகள் நீது (வயது 18). கல்லூரி மாணவி. இவருக்கும் கோழிக்கோடு நாதாபுரம் நரிப்பாறையை சேர்ந்த நானு என்பவரது மகன் ஸ்ரீகாந்த் (24) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.

    பரஸ்பரமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஸ்ரீகாந்த் ஒரு விபத்தில் சிக்கியதில் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகளை இழந்தார். அதன்படி இடுப்புக்கு கீழ் செயல் இழந்து அவதியடைந்தார்.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நீது திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பத்தினம்திட்டா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி நீதுவை தேடினர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடியபோது நீதுவின் போன் சிக்னல் நாதாபுரம் நரிப்பாறையில் இருப்பதை காட்டியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் நாதாபுரம் டி.எஸ்.பி. ஆபிரகாம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியை மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    நீதிமன்றம் விசாரித்தபோது தனக்கு 18 வயது முடிந்து விட்டது. பேஸ்புக் காதலர் ஸ்ரீகாந்த் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் இல்லாமல் செயல் இழந்துபோனாலும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். வழக்கை விசாரித்த கோர்ட்டு திருமணத்துக்கு தடை ஏதும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

    இதனையடுத்து நேற்று பெற்றோர்கள் சம்மதத்துடன் நீதுவுக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

    மகாராஷ்டிராவில் பப்ஜி கேம் விளையாடிய போது சார்ஜ் தீர்ந்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் , தங்கைக்கு நிச்சயிக்கப்பட்டவரைக் குத்தியுள்ளார். #PUBGgame
    மும்பை:

    உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் ஆன்லைன் கேமிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த ஆன்லைன் கேம்கள் பெரியவர்கள் , சிறியவர்கள் என அனைத்து வயதினரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அடிமையாக்கியும் உள்ளது.

    மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினீஷ் ராஜ்பாய். இவர் தனது செல்போனில் பப்ஜி  விளையாடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து விளையாடவே, செல்போனின் சார்ஜ் வேகமாக குறைந்து , ஆப் ஆகி விட்டது. விளையாட்டில் தீவிர முனைப்புடன் இருந்த இவர், செல்போன் சார்ஜரை தேடியுள்ளார்.



    வீடெங்கும் தேடியதில், அந்த சார்ஜர் அறுந்த நிலையில் இருப்பதைக் கண்டார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ரஜினீஷ் , தனது சகோதரிதான் இவ்வாறு செய்திருப்பார் என நினைத்து அவரிடம் சண்டைப் போட்டுள்ளார். அப்போது அவரது சகோதரி தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஓம் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    இதனையடுத்து ரஜினீஷ்க்கும் ஓமிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் கைகலப்பாகியது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினீஷ் , அருகிலிருந்த கத்தியினால் , ஓமின் வயிற்றில் குத்தினார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் ரஜினீஷின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட  ஓம் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

    மும்பையில் வாலிபர் ஒருவர் பப்ஜி விளையாடுவதற்கு செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PUBGgame  





    ஒரத்தநாடு அருகே போலீஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் மீது உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் புதுவளைவு பகுதியை சேர்ந்த ஆசைதம்பி மகன் ஜெயச்சந்திரன் (வயது 35). திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தென்பறையை சேர்ந்தவர் தமிழ்மாறன். இவர்கள் 2 பேரும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் தமிழ்மாறன் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தனது உறவினரும் போலீஸ் அதிகாரியுமான ஒருவர் மூலம் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஜெயச்சந்திரன் மீது புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, ஏட்டு சதீஷ் ஆகியோர் ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது ஜெயச்சந்திரனை தாக்கி அவரது செல்போனை பறித்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் சென்ற ஜெயச்சந்திரன் நீண்ட நேராமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஆசைதம்பி மற்றும் உறவினர்கள் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு வந்து பார்த்த போது ஜெயச்சந்திரனை போலீசார் தாக்கி செல்போனை பறித்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய போவதாக ஜெயச்சந்திரனின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில் வாலிபரை விசாரணைக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    2 கைகளை இழந்த வாலிபருக்கு மூளைச்சாவு அடைந்தவரின் கைகளை பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த போடிக் காமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (30). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    கொத்தனாரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி சித்தையன் கோட்டை என்ற இடத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் வயரில் அந்த கம்பி உரசியது. இதில் அவரது 2 கைகளும் முழங்கைக்கு கீழே கருகியது. கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருந்தும் பலனில்லை. 2 கைகளையும் இழந்துவிட்டார். அவரால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியது.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.ஜி. வினய்யை சந்தித்தார். அப்போது அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.

    அவரது உதவியுடன் கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களை சந்தித்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தானமாக பெற்று உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் 2 கைகளையும் மீண்டும் பொருத்த முடியும் என நம்பிக்கை அளித்தனர்.

    இதற்கிடையே மரணம் அடைந்த ஒருவரின், 2 கைகளையும் தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன் வந்தனர். உடனே கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி மதுரையில் இருந்து விமானம் மூலம் நாராயணசாமி சென்னை வந்தார்.

    அங்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வி.ரமாதேவி தலைமையில் 75 பேர் அடங்கிய குழுவினர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 13 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அவருக்கு தொடர் சிகிக்சையும், தொடர் கண்காணிப்பும் அளிக்கப்பட்டது. தற்போது பூரண குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பினார்.

    அது குறித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமாதேவி கூறியதாவது:-

    ஸ்டான்லி ஆஸ்பத்திரி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நிலை மையமாகும். இருந்தாலும் மூளை சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அரசு மருத்துவமனையில் இதுவே முதல் முறையாகும்.உலகம் முழுவதும் 87 ஆஸ்பத்திரிகளில் இதுவரை 110 பேருக்கு இந்த வகை அறுவை சிகிச்சை மூலம் மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

    உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பொருத்தப்பட்ட நாராயணசாமியால் சில பணிகளை சிறப்பாக செய்ய முடியும். பிசியோ தெரபி சிகிச்சையை கட்டாயம் அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் மூலம் தான் அவரது கைகள் சரியாக செயல்படுத்த முடியும்.

    தற்போது அவரால் கைகளை உயரே தூக்க முடியும், செல்போன் மற்றும் டெலிபோனில் கால் செய்ய முடியும். கோப்பை உள்பட பாத்திரங்களை எடுக்க முடியும். தமிழ்நாட்டிலேயே இவருக்குதான் முதன் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் இத்தகைய ஆபரேசன் மூலம் மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்றார்.

    ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமசிவாயம் கூறும் போது, “முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. அது தொடர வேண்டுமெனில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் கைகளை தானம் செய்ய பொதுமக்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கைகள் துண்டிக்கப்பட்ட சுமார் 6 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு பொருத்த வேண்டும். தாமதம் ஏற்பட்டால் மீள்சி திறன் குறையும் என்றார்.

    இதற்கிடையே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பெற்ற நாராயணசாமிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

    அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியிடத்திற்கான அரசாணையை வழங்கினார். அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். #tamilnews
    ஆன்லைன் பொருட்கள் கொடுக்க சென்றபோது பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    பெருங்குடி, திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்ய சென்ற போது தி.நகரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி அவரது வீட்டுக்கு பொருட்கள் கொடுக்க சென்றதால் ஹரிக்கும், அந்த பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இதனை அறிந்த பெண்ணின் கணவர், மனைவியையும், ஹரியையும் கண்டித்தார்.

    இந்த நிலையில் ஹரியை மர்ம கும்பல் ஆட்டோவில் செங்கல்பட்டு அருகே கடத்தி சென்றனர். பழவேலி அருகே சென்றபோது ஹரியை அவர்கள் அரிவாளால் வெட்டினர்.

    பலத்த காயம் அடைந்த ஹரி அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அந்த நேரத்தில் ரோந்து வந்த போலீசார் அவரை மீட்டனர்.

    மேலும் ஒருவரை கைது செய்தனர். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பலத்த காயம் அடைந்த ஹரி சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறு காரணமாக வாலிபரை தாக்கியதாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பாய்ச்சல் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் மோனிஷ்குமார் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று மோனிஷ்குமார் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மேகநாதனுக்கும் மோனிஷ்குமாருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    பின்னர் அங்கிருந்து சென்ற மேகநாதன் தனது உறவினர்களுடன் மோனிஷ்குமார் வீட்டிற்குள் புகுந்து சரமாறியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் மோனிஷ்குமார் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து மோனிஷ்குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் மேகநாதன், ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, யுகேஷ், கிஷோர், சசிகலா, உமா, தனலட்சுமி, சரஸ்வதி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கன்னியாகுமரி லாட்ஜில் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியில் பெண் பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த காதலன் இன்று உயிரிழந்தார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் இங்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் வருகை தருகிறார்கள்.

    இவர்கள், இங்குள்ள லாட்ஜுக்கள், தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள். காதல் ஜோடிகள், கள்ளக்காதலர்களும் இங்குள்ள சில விடுதிகளில் தங்கி ஜாலியாக பொழுதை கழிப்பதால் இங்கு தங்குபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

    லாட்ஜுகளில் அறை எடுப்பவர்கள் தங்களது முகவரி சான்று நகலை அளிக்க வேண்டும். மேலும் சந்தேகப்படும் வகையில் இங்கு தங்குபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். போலீசாரும் அடிக்கடி சோதனை நடத்துவார்கள்.

    ஆனாலும் கன்னியாகுமரியில் சில லாட்ஜுகளில் காதல் ஜோடி, கள்ளக்காதலர்கள் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 27). கோபி செட்டிப்பாளையம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்த கார்த்திகா (26) ஆகிய கள்ளக்காதல் ஜோடி கன்னியாகுமரி லாட்ஜில் அறை எடுத்து தங்கி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

    கார்த்திகாவுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு திருமணம் ஆகவில்லை. சதீஷ் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கார்த்திகா ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    கள்ளக்காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது உறவினர்களுக்கு தெரிய வந்ததால் சதீசும், கார்த்திகாவும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். கன்னியாகுமரி வந்து லாட்ஜில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    எப்படியும் தங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் வி‌ஷத்தை குடித்தனர். அதன் பிறகு தங்களது கைகளையும் பிளேடால் வெட்டிக் கொண்டனர்.

    இதில் கார்த்திகா, லாட்ஜ் அறையிலேயே இறந்து விட்டார். உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்த சதீஷை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததனர்.

    அங்கு சதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணிக்கு சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இறந்த கார்த்திகாவின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் உள்ளது. அவர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைகளும் இன்று நடக்கிறது. இதையொட்டி சதீஷ் மற்றம் கார்த்திகாவின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
    திருமங்கலம் அருகே 2 வாலிபர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் வீரமணி (வயது 34). இவரது பக்கத்து வீட்டுக்காரர் விருமாண்டி (35). இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் வீரமணி போதையில் வந்து விருமாண்டியிடம் சண்டை போட்டார். தகராறு முற்றவே வீரமணி ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விருமாண்டியின் வயிற்றில் குத்தினார். இதைத் தடுக்க வந்த முத்தையா (32) என்பவரது கையிலும் கத்திக்குத்து விழுந்தது.

    கத்திக்குத்தில் காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கத்திக்குத்து குறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

    ×