search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    • விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
    • நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து காலியாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

    இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் இருந்த 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களுக்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் ஸ்ட்ராங் ரூமிற்கு இன்று காலை 11.45 மணிக்கு சீல் வைக்கப்பட்டது. தேர்தல் பொது பார்வையாளர் அமித் சிங் பன்சால், மாவட்ட கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

    தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    • பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.
    • 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவானது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.

    இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.

    5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவானது.

    இதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் 1,95,495 லட்சம் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.

    இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவானது.

    இந்நிலையில், 5 மணி நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    பின்னர், 276 வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. இது இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.

    மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    276 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. இது இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.

    மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.
    • இன்று இரவில் இருந்து 13-ந்தேதி காலை வரை சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார். பாமக வேட்பாளர் சி. அன்புமணியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மாம்பழப்பட்டு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு செய்வது தாமதமானது. அதன்பிறகு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில், இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 29.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.

    இன்று மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது. பின்னர் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. இன்று இரவில் இருந்து 13-ந்தேதி காலை வரை சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார்.
    • இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தினார். பாமக வேட்பாளர் சி. அன்புமணியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    இந்நிலையில், இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன.

    • திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரது குடும்பத்தினருடன் அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தார்.
    • மாண்புமிகு முதலமைச்சரின் சாதனைகளின் அடிப்படையில் நான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரது குடும்பத்தினருடன் அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் என்ற முறையில் நான் வாக்களித்துள்ளேன்.

    * விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    * மாண்புமிகு முதலமைச்சரின் சாதனைகளின் அடிப்படையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

    • உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்த தேர்தலில் உறுப்பினர்களின் மரணம் மற்றும் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்கள் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    பீகாரில் ரூபாலி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ராய்காஞ்ச், ராணிகஞ்ச், பாக்தாத் மாணிக்தலா தொகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதிக்கும், மத்தியபிரதேசத்தில் அமர்வாரா, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலபிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் உட்பட பல புதுமுகங்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது.

    • மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

    ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

    அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது.

    தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதுமாக 552 வாக்குப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் கருவிகள் (வி.வி.பேட்) 276-ம் பயன்படுத்தப்படுகின்றன.

    தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று அவர்கள் பணிபுரிய உள்ள இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தார்.

    மதியம் 2 மணிக்கு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்ட வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். அப்போது வாக்குச்சாவடிக்கு தேவையான 66 பொருட்கள் அடங்கிய பையையும் உடன் எடுத்து சென்றார்கள்.

    இந்த வாகனங்களில் ஏற்கனவே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அந்த கருவியின் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வாக்குச்சாவடிகளுக்கு சென்றடைந்ததா? என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.

    வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர 110 வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன்நாயர் மேற்பார்வையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் மத்திய துணை ராணுவப்படையினர் 220 பேர் உள்பட 2,651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

    அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    • விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது.
    • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

    இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை (ஜூலை 10-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது. நாளை விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,010 பெண் வாக்காளர்களும், 29 இதர பாலினத்தவர் என மொத்தம் 2,37,011 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்காக 138 மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பனையபுரம், குண்டலபுலியூர், ராதாபுரம் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மிக பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பதற்றமானதாக 42 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி.நரேந்திர நாயர் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்.பி.க்களின் கண்காணிப்பில் 700 சிறப்பு போலீஸ் படையினர், 220 துணை ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை முதல், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினமான 13-ந் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியையொட்டி உள்ள புதுவை மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றினாலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.

    * 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    * பதற்றமான வாக்குச்சாவடி 45 உள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்

    ×