என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106327"

    • இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    • ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அரசு விடுமுறை முடிந்ததால் பக்தர்கள் கூட்டம் குறையும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

    இருப்பினும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை முதல் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்தனர்.

    இதனால் வாகன சோதனை நடைபெறும் அலிபிரி சோதனை சாவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனைக்காக சுமார் 1 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தனர். தரிசனத்திற்கு வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வைகுந்தம் காம்ளக்ஸ் 30 அறைகளும் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 20 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,748 பேர் தரிசனம் செய்தனர். 39,086 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • காவல்துறை, போக்கு–வரத்துத்துறை, சுகாதா–ரத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறை அதிகாரிகள்‌ கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விவாதித்தனர்.
    • வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.

    நாகப்பட்டினம்:

    உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இம்மாதம் 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதி குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் காவல்துறை, போக்கு–வரத்துத்துறை, சுகாதா–ரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள்‌ கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விவாதித்தனர். மேலும் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவாக செய்திட வேண்டும் என அனைத்துதுறை அதிகாரிகளுக்கும், கலெக்டர் உத்தரவிட்டார்.

    பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் அளித்த பேட்டியில், வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருவிழா நாட்களில் வேளாங்க–ண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்த்திடும் பொருட்டு கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    திருப்பதி மலைப் பாதையில் ஆந்திர அரசு பஸ் கவிழ்ந்து பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.

    திருமலை:

    திருப்பதியிலிருந்து திருமலைக்கு 2-ம் மலைப்பாதை வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு ஆந்திர அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    திடீரென கட்டுபாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி சுற்று சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து மரங்கள் இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இன்றி 10 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.

    பஸ் மரத்தில் சிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #BadrinathTemple #CharDhamYatra
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் 4 புனித தலங்களில் இக்கோவிலும் ஒன்று. 

    நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். 

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு இன்று அதிகாலை 4.15 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவில் நடையை தலைமை பூசாரி ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி திறந்தார். அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆளுநர் பேபி ராணி மயூர்யா, முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் போன்ற முக்கிய பிரமுகர்களும் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

    இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான சார்தாம் யாத்திரை அட்சய திருதியை தினத்தில் (மே 7) தொடங்கியது. அன்றைய தினம் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கிய நிலையில், இன்று பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

    யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு சார்தாம் யாத்திரையை நிறைவு செய்வார்கள். #BadrinathTemple #CharDhamYatra
    ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி, உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் செல்வமுத்து குமாரசாமி, செவ்வாய் அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். செவ்வாய் தோ‌ஷம் பரிகார தலமான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 2-ம் செவ்வாய்கிழமை நகரத்தார் பாத யாத்திரையாக வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    கையில் மஞ்சள் பூசிய குச்சியில் வேப்பிலைகளை கட்டி கொண்டு வந்த பக்தர்கள் அதனை வைத்தீஸ்வரன் கோவில் கொடி மரத்து முன்பு போட்டு விட்டு சென்று சாமி தரிசனம் செய்தனர். சித்திரை மாதம் 2-ம் செவ்வாய் கிழமையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்கு மாட்டு வண்டிகளிலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியை சேர்ந்த ஒருவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது கனவில் தோன்றிய தையல் நாயகி அம்மன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும்படி கூறியுள்ளார். அதனை ஏற்று அவர் பாதயாத்திரையாக வந்து தையல் நாயகி அம்மனை தரிசனம் செய்ததும் அவரின் நோய் குணமாகி விட்டது.

    இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தையல் நாயகி அம்மனை தங்களது குல தெய்வமாக வழிபட தொடங்கினர். அவர்கள் சித்திரை 2-வது செவ்வாய் கிழமை கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை உருவாக்கினர். அன்று முதல் இந்த வழிபாடு காலம் காலமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரியில் மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், வடக்குரதவீதியில் உள்ள முத்தாரம்மன் கோவில், வடக்கு தெருவில் உள்ள பிரானோபகாரி தர்ம மடம் சுப்பிரமணியசாமி கோவில், கற்பக விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    இந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அஞ்சுகிராமம், செட்டிகுளம், கூடங்குளம், நவலடி, திசையன்குளம், உடையன்குடி வழியாக திருச்செந்தூர் கோவிலை சென்றடைகிறார்கள்.
    திருவண்ணாமலை அருகே ஜெயின் மதத்தை சேர்ந்த 72 வயது பெண் துறவி ஜீவ சமாதி அடைந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமலை கிராமத்தில் ராஜராஜசோழன் சகோதரி குந்தவை நாச்சியார் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில் உள்ளது.

    இங்கு ஸ்வஸ்தி ஸ்ரீடாக்டர் தவளகீர்த்தி சுவாமிகள் ஜெயின் மடம் ஒன்றினை நிறுவி ஆசிரமம் நடத்தி வருகிறார்.

    ஏராளமான துறவிகளும், முனிவர்களும், மாதாஜிகளும் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது 2 நிர்வாண முனிவர்களும், 10 பெண் துறவிகளும் தங்கி உள்ளனர்.

    அவர்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஸ்ரீசுகுந்தன் மதிமாதாஜி (வயது 72) என்ற பெண் துறவியும் தங்கியிருந்தார். அவர் ஜீவ சமாதி அடைவதற்காக கடந்த 6 நாட்களுக்கு முன்பு உணவு மற்றும் தண்ணீரை குருசன்னிதானத்தின் முன்னிலையில் தியாகம் செய்தார். அவரது உடல் நிலையை அங்குள்ள பெண் துறவிகள் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் 6-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் ஸ்ரீசுகுந்தன் மதி மதாஜி ஜீவ சமாதி அடைந்தார்.

    கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அவரது உடலை பரிசோதனை செய்து மரணம் அடைந்ததை உறுதி செய்தார். இதையடுத்து 500 சமண பக்தர்கள் முன்னிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

    ஓமலூர் அருகே பழமையான நீர் மாரியம்மன் கோவில் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டியப் பட்டி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஏரியில் பழமையான நீர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா வருடா வருடம், தை மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இதே போன்று இந்த ஆண்டு கடந்த செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்று, தினமும் சாமிக்கு அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து மாலை அலகு குத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெண்கள் நாக்கு அலகு, கடவாய்ப்பூட்டு அலகு, உள்ளிட்டவைகள் குத்தி வந்தனர்.

    அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகள் சிலர் திடீரென அருள் வந்து சாமி ஆடினர். தொடர்ந்து அந்த பகுதி பெரியவர்கள் அவர்களை பிடித்த போதும் அவர்கள் தொடர்ந்து சாமி வந்து ஆடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமி கோவிலை சுற்றி வந்த அவர்கள் அலகுகளை பிடுங்கிய பின் திரு நீர் இட்ட பின் மாணவ, மாணவிகள் சாமி அருள் நீங்கி ஆடுவதை நிறுத்தினர். அந்த பகுதியில் வான வேடிக்கை மற்றும் வண்டி வேடிக்கை நடைபெற்றது.

    இதில் பத்ரகாளியம்மன் வேடமிட்டு வந்தவருக்கு அருள் வந்து ஆடு மற்றும் கோழிகளை கடித்து பலியிட்டார். இதில் அம்மன்வேடம், முருகன், ஈஸ்வரன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட வேடமணிந்து வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது. #Tirupati #TirupatiTemple

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி பிரசித்திப் பெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது. இங்குள்ள விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22½ கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 22-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று 6-வது நாளாக யாகசாலை பூஜைகள் நடந்தது. மேலும் அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 4 புனித நீர் குடங்கள் திருப்பதி குடைகள் புடைசூழ மேளதாளங்களுடன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சரியாக காலை 7.15 மணிக்கு இங்குள்ள மூலவர் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள் ஆகிய 3 சன்னதிகளிலும் மூலஸ்தான கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

     


     

    அதை தொடர்ந்து 7½ அடி உயரமுள்ள ஏழுமலையான், 3½ அடி உயரமுள்ள பத்மாவதி தாயார், 3½ அடி உயரமுள்ள ஆண்டாள் அம்மாள் ஆகிய 3 சன்னதிகளிலும் விசே‌ஷ அபிஷேகங்கள் நடந்தது.

    பால், பன்னீர், எண்ணை போன்ற பொருட்களை பயன்படுத்தி இந்த அபிஷேகங்கள் நடந்தது. கருடாவாழ்வார் சன்னதியிலும் அபிஷேகங்கள் நடந்தது. மேலும் தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

     


     

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மூலவர் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பகல் 12.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கம்பிகள் கட்டப்பட்டிருந்தது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் மற்றும் புளியோதரை, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பயணிகளும் திரளாக கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் உள்ள மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெறுகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு இதே விவேகானந்தபுரம் கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்துதான் தற்போது கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்துள்ளது. #Tirupati #TirupatiTemple

    தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்கள் மட்டுமே பங்கேற்று வடம் பிடித்த சிவசுப்பிரமணியசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.
    தர்மபுரி:

    தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 17–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சாமி திருகல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும், விநாயகர் தேரோட்டமும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை பெண்கள் மட்டுமே வடம் பிடித்த சிவசுப்பிரமணியசாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர். அதைத் தொடர்ந்து மாலை வாண வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி பாரிமுனை நண்பர்கள், வாரியார் அன்னதான அறக்கட்டளை மற்றும் ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) பிச்சாண்டவர் உற்சவம் மற்றும் குதிரை வாகன உற்சவமும், நாளை (வெள்ளிக்கிழமை) விழா கொடி இறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், நாளை மறுநாள்(சனிக்கிழமை) சயன உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, செயல் அலுவலர் முருகன், செங்குந்த சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது இருதரப்பு கருத்திலும் நியாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார். #Sabarimala #RahulGandhi

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை.

    இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் இருப்பது கோவில் ஆச்சாரம். அதை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்களும், பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகளும் கூறி வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்தார். அதே நேரம் கேரள மாநில காங்கிரசார் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இத்தீர்ப்பு தொடர்பாக கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நடத்தி வந்த போராட்டத்திலும் பங்கேற்றனர். கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக துபாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வாழும் கேரள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு ஆதரவான கருத்தையும், எதிர்ப்பான கருத்தையும் அறிந்து கொண்டேன். இரு தரப்பினரும் கூறுவதில் நியாயம் இருக்கிறது.

    ஒரு பிரிவினர் கோவிலின் ஆச்சாரத்தை ஒரு போதும் மீறக்கூடாது என்கிறார்கள். இன்னொரு பிரிவினர் அனைத்து வயது பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    பெண்களுக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் கோவிலின் ஆச்சாரங்களை மீறக்கூடாது என்பதிலும் நியாயம் இருக் கிறது.

    எனவே இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது. என்ன நேர்ந்தாலும் காங்கிரஸ் கட்சி கேரள மக்களின் உணர்வுகளுக்கு, விருப்பத்திற்கு மாறாக செயல்படாது. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதன்படி தான் செயல்பட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #RahulGandhi

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து அமெரிக்க பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து அமெரிக்க பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசமும், பங்குனி உத்திர திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வரும் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் தற்போதே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர்.

    அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் டக்ளஸ் புரூக்ஸ். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். சமஸ்கிருதம் மற்றும் இந்துத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு போதித்து வருகிறார்.

    தமிழ் கடவுளான முருகப் பெருமான் மீது பக்தி கொண்ட இவர் ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள நண்பர்களுடன் பழனி கோவிலுக்கு வருவது வழக்கம்.

    முருகப் பெருமான் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை சுந்தரமூர்த்தி என மாற்றிக் கொண்டார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நியூயார்க் நகரைச் சேர்ந்த 18 பேருடன் சென்னை வந்தார்.

    பின்னர் அங்கிருந்து தனது நண்பர் ஜெகன்நாத்பாபு என்பவரை வழிகாட்டியாக கொண்டு பழனி கோவிலுக் வந்தார். இதில் ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டி, பட்டு சட்டையும் பெண்கள் பட்டுச் சேலையும் அணிந்து இந்திய பாரம்பரிய முறைப்படி வந்தனர்.

    உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த அவர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பி வழிபட்டனர். அமெரிக்கர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பியதை பார்த்து கோவிலில் இருந்த பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். முன்னதாக இவர்களுடன் வந்த பேர்கிளாத் என்ற பெண் பக்தர் மயில் காவடி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். கோவில் நிர்வாகம் சார்பில் அளித்த திருநீரையும் நெற்றியில் பூசிக் கொண்டனர். அதன் பின்னர் திருப்பரங்குன்றம் செல்லப் போவதாக கூறி விட்டு சென்றனர்.
    ×