என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை"

    • சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
    • திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஷேர்லின்பெல்மா (வயது 44). இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆசிரியை தனது தாயார் மேரியுடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி ஷேர்லின்பெல்மா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார்.

    இதனால் மேரி வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரையும், போலீசார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் நெல்லை டவுன் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் (34), கார்த்திக் (25), அம்பாசமுத்திரத்தை சேர்ந்த துர்காநம்பி (25) ஆகியோர் என தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிரியை ஷேர்லின்பெல்மா வீட்டில் 100 பவுன் நகை, பணத்தை திருடியதும், பிரபல கொள்ளையர்கள் என்பதும், 3 பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, கார், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும்.
    • ஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த நபர் நுழைந்தார்.

    "அங்காடியா" என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.

    இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

    டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தார்.

    அந்த நபர் வர்த்தகரை பின்தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்து செல்வதன்முன் பல முறை தனது துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார்.

    இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா? என தேடிப் பார்த்தனர்.
    • பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர்.

    திட்டக்குடி, அக்.28-

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி (45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள், பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா என தேடிப் பார்த்தனர். நகை ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கு பிரிட்ஜ்யில் வைத்திருந்த கறி குழம்பு, சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிட்டு தட்டுகளை பின்புறம் உள்ள வயலில் எறிந்து விட்டு சென்றுள்ளனர். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் மனைவி விஜயலட்சுமி (27), கை குழந்தையுடன் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் இருக்கும் தனது அம்மா வீட்டுக்கு சென்றார். பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே விரைந்து வந்த விஜயலட்சுமி வீடடின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் அரை கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த 1¾ பவுன் தங்க நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதேபோல் வீட்டிற்கு பின்புறம் இருந்த மற்றொரு வீட்டிலும் பீரோவை உடைத்துள்ளனர். அங்கு பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருதத்தூர் கிராமத்தில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பாகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாண் செல்வன் (வயது 58).

    இவர் பார்வதிபுரத்தி லிருந்து அழகம்பாறை செல்லும் சாலையில் பல சரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலையில் ஜாண் செல்வன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பின் பக்க சுவரில் துளை போடப் பட்டு இருந்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் பல சரக்கு பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக ஜாண் செல்வன் தெரிவித்தார். அப்போது பக்கத்தில் உள்ள வெல்டிங் கடை ஒன்றில் இருந்து குத்து விளக்கை மர்மநபர்கள் திருடி இருந்தது தெரிய வந்தது. அந்த குத்து விளக்கு அந்தப் பகுதியில் கிடந்ததை போலீசார் கைப்பற்றினார்கள்.

    மேலும் வெல்டிங் கடையில் இருந்து ட்ரில்லிங் மெஷின் ஒன்றை எடுத்து வந்து பல சரக்கு கடையில் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்து உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. காமிராவில் 2 கொள்ளையர்கள் உருவம் சிக்கியது
    • தனிப்படை போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் செல்வன் (வயது 58).

    இவர், பார்வதிபுரம் சாரதா நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் கடைக்கு வந்தபோது கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பக்கத்தில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பிலும் மர்ம நபர்கள் திருடி இருப்பது தெரிய வந்தது.

    சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை யர்கள் உருவம் சிக்கியது. இரண்டு கொள்ளையர்கள் மளிகை கடையில் உள்ள பொருட்களை 2 சாக்கு பைகளில் எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கடையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வாலிபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை தனிப்படை ஆய்வு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கீழ் குப்பம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகி ராமன். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு தீபா என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    மகனை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யா வீட்டை பூட்டிக் கொண்டு குடும்ப த்துடன் சென்னைக்குச் சென்றார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்க ப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ‌.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை யடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வித்யா அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அரக்கோணம் ஏ எஸ் பி யாதவ் கிரீஸ் அசோக் மற்றும் போலீசார் கொள்ளை போன வீட்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    இதே போல அரக்கோணம் சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மனைவி நிர்மலா வயது (49). இவர் சம்ப வத்தன்று அரக்கோணம் கணேஷ் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் இரவு தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது கணேஷ் நகர் பகுதி அருகே வரும்போது ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் நிர்மலாவின் கழுத்தில் இருந்த தாலி செயின் உள்பட 10 பவுன் நகைகளை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா கூச்சலிடவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் நகைகளை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.

    இது சம்பந்தமாக அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் இந்த 2 சம்பவங்கள் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது46). விவசாயி. இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு வேலை சென்றார். வேலைமுடிந்து மதியம் 12.30மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்பி ன்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த பீரோஉடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பிரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ20,000 பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து விவசாயி குமார் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • சி.சி.டி.வி. ேகமராவில் கொள்ளையர்களின் உருவம் சிக்கியது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த சராதிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(வயது65). குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது50). தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இவர்களின் ஒரே மகன் மோகன்ராஜ். மாற்று திறனாளியான இவர் கரடிகுடி பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகின்றார்.

    மனோகர் மற்றும் அவரது மனைவி மகன் என 3 பேரும் தினமும் காலை 7.30 மணிக்குள்ளாக பணிக்கு சென்று விட்டு, இரவு தான் வீடு திரும்புவார்களாம்.

    ேநற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு மோகன்ராஜ் தனது கடையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டி இருந்த கேட் திறந்து உள்ளே போன மோகன்ராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சிய டைந்துள்ளார்.

    மேலும், உள்ளே சென்று அறையில் இருந்த 2 பீரோக்களில் பார்த்தபோது அதில் இருந்த துணிகள், பொருட்கள் எல்லாம் அறை முழுவதும் சிதறிக்கிடந்துள்ளது.

    மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக மோகன்ராஜ தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். தொடர்ந்து பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, வீட்டின் வெளிப்புற பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் 2 பேர் வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. ஆனால் மறுபடியும் வெளியே வரும் காட்சிகள் பதிவாகவில்லை.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர்.
    • கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியங் கொண்டான் நகரை சேர்ந்தவர் ஜான். இவர் திண்டிவனம் காந்திசிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இதேபோல அந்த பகுதியில் ஆனந்த் என்பவர் செல்போன் சர்வீஸ் சென்டரும் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் மையத்தின் பூட்டுகளை உடைத்தனர். இதேபோல செல்போன் சர்வீஸ் மையம், அருகில் உள்ள பேன்சிஸ்டோர் ஆகி யவற்றின் பூட்டுகளையும் உடைத்தனர்.

    அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை ஜான் உள்பட 3 பேரும் கடைகளை திறக்க வந்தனர். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. ேபாலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
    • மேலும் பல திருட்டு வழக்குகளின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38), தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த மாதம் 7-ந் தேதி சங்கரநாராயணன், பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்தார். அவரது மனைவி பிருந்தா, தனது குழந்தையுடன் வில்லுக்குறியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இதனை அறிந்த யாரோ சிலர் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 62¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நட மாடி யது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் துைண சூப்பிரண்டு நவீன்குமார் மேற்பார்வையில் போலீசார், அந்த நபர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் பகுதி யைச் சேர்ந்த சாந்தகுமார் (29), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிவ குமார் (25) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். அதன்படி 2 பேரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் கைதான சாந்தகுமார், சிவகுமார் பற்றி தீவிரமாக விசாரித்த போது, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் திருட்டு வழக்கு களில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உறவுகாரர் போல் பேசி மர்ம நபர் கைவரிசை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் சுரேஷ் குமார் தத்தனூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர், ஆசிரியர் வீட்டிற்கு வந்து, ஆசிரியர் மனைவி எழிலரசியிடம் , உறவுக்காரர் போல் பேசியுள்ளார்.

    மேலும் புதுமனை விழாவிற்க்கு மா இலை வேண்டும் கொஞ்சம் ஒடித்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆசிரியர் மனைவி எழிலரசி எதிர் வீட்டில் மா இலை பறித்து வந்து கொடுத்த நிலையில் மர்ம நபர் வாங்கி கொண்டு சென்றுள்ளார்.

    சிறிது நேரம் சென்ற எழிலரசி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த சுமார் 1.60 லட்சம் மதிப்பிலான 8 பவுன் நகையை திருடு போயிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரூ.1000 பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி ராமசாமி (வயது 62) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×