search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல்"

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.

    சென்னை:

    வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது.

    இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் நேற்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை கணிப்பின் படி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று இன்று மாலைக்குள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை ஒடிசா புரி மற்றும் சத்தீஷ்கர் இடையே கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் புயல் காலை 8 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குயதாகவும், மேலும் 11 மணி அளவில் வடகிழக்கு பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் வேளையில் புவனேஸ்வர் மற்றும் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி உள்ளது.

    இதனால் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    • வங்கக் கடலில் அவ்வப்போது புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவது வழக்கம்.
    • ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    மதுரை:

    தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 20-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை மூலம் 47 சதவீத மழை கிடைத்து வருகிறது. சராசரியாக 90 சென்டி மீட்டர் மழை வரை இந்த பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழையின் போது வங்கக் கடலில் அவ்வப்போது புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவது வழக்கம்.

    இதனால் சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புயல் சேதம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் அதி கன மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்வதாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் இந்த பருவ மழையின் போது பெரும் சேதமடைகிறது. பருவ நிலைகளை முன்கூட்டியே கண்காணிக்கும் வகையில் ஏற்கனவே சென்னை, காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் அதிநவீன ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    ஆனாலும் சில சமயங்களில் இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் கனமழை மற்றும் புயல் காரணமாக அதிக பாதிப்புகளை தென் மற்றும் வட மேற்கு மாவட்டங்கள் சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது ஆனாலும் இது தொடர்பாக இந்திய மாநில மையம் சரியான முன்னெச்சரிக்கை உத்தரவுகளை மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பருவ காலநிலைகளை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வசதியாக ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் அதிநவீன ரேடார்களை அமைக்க மாநில பேரிடர் மேலாண்மை துறை நடவடிக்கையில் இறங்கி உள்ளது .

    இதற்கான டெண்டர் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை துறை புதிய ரேடாரர்களை அமைக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    இந்த அதிநவீன ரேடார்கள் மின்காந்த அலைகள் மூலம் பருவ, காலநிலையில் நிலவும் திட மற்றும் திரவ மூலக்கூறுகளின் தன்மைகளை துல்லியமாக ஆராய்ந்து மழை மற்றும் புயலின் தன்மையை முன் கூட்டியே துல்லியமாக கணிக்க முடியும். மேலும் இந்த ரேடார்கள் புயல் மற்றும் கடலில் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் மையம் கொள்ளும் பகுதிகள், கடக்கும் பகுதிகளையும் துல்லியமாக கணித்து எச்சரிக்கை செய்யும்.

    இது தொடர்பாக இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்தியூஜாய் மோகபத்ரா கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக அதிநவீன ரேடார்கள் நிறுவும் பட்சத்தில் தமிழகத்தின் தென்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து முழுமையாக தடுக்க முடியும். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே சென்னையில் எஸ்-பாண்ட், எக்ஸ்-பாண்ட் வகையான 2 ரேடார்களும், காரைக்கால்-ஸ்ரீஹரிகோட் டாவில் எஸ்-பாண்ட் ரேடார்களும் நிறுவப்பட்டு உள்ளன.

    கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நிலவும் பருவ நிலைகள் ஒரளவுக்கு கண்காணிக்கப்படுகிறது ஆனாலும் பல பகுதிகளை இதன் மூலம் கண்காணிப்பதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனை சரிசெய்யும் வகையிலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவும் பருவநிலைகளை முன்கூட்டியே கண்காணிக்க வசதியாகவும் 2 புதிய ரேடார்கள் நிறுவப்படுகின்றன.

    இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவ நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முடியும். மேலும் ராமநாத புரத்தில் நவீன புதிய ரேடார் நிறுவப்படுவதால் கிழக்கு கடலோர பகுதிகள்,தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பருவ நிலை மாற்றங்களை முன் கூட்டியே கணிக்க முடியும். எஸ்-பாண்ட் வகை ரேடார் கள் மூலம் 500 கிலோமீட்டர் சுற்றளவையும், எக்ஸ்-பாண்ட் ரேடார்கள் மூலம் 150 கிலோமீட்டர் சுற்றளவையும் கணிக்க இயலும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது உள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் நிலவும் பருவ நிலைகளை கண்காணிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தவிர்க்க வசதியாக ராமநாதபுரத்தில் அமைகின்ற ரேடார் மூலம் கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதிலும் பருவ நிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க இயலும். மேலும் ஏற்காட்டில் நிறுவப்படும் ரேடார் மூலம் வட மேற்கு மற்றும் வடபகுதி மாவட்டங்களின் நிலவும் பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க இயலும் என்று இந்திய வானிலை மைய மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிநவீன 2 ரேடார்கள் ராமநாதபுரத்திலும் ஏற்காட்டிலும் நிறுவ மாநில பேரிடர் மேலாண்மை துறை எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக வடகிழக்கு பருவமழையின் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் வெள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகளை தடுக்கவும், பொது மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்கவும் பேருதவியாக இருக்கும் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
    • சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரம்.

    வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.

    அதன்படி, நேற்று இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரீமால் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110- 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.

    மேலும், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

    ரீமால் புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.

    தொடர்ந்து, சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றது.
    • சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும்.

    மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருந்தது.

    அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'ரீமால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.

    ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடையும்.

    இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (22-ந்தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

     கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவந்தபுரம் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இந்த எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை கடலோர மற்றும் மலை மாவட்ட மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிகனமழையின் போது 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.

    நீர்வீழ்ச்சி, நீர்நிலைகள் தொடர்பான சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகனமழை எச்சரிக்கையால், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, அதை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

    தொடர் மழையால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.

    • தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.
    • இன்று அதிகாலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது

    தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வெயில் தாங்காமல் சென்னை வாசிகள் சில்லென இருப்பதற்கு சுற்றுலா தளத்திற்கு சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது தற்பொழுது சென்னையே குழுகுழுவென்று மாறிக் கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே அப்பப்ப மழை பெய்த வண்ணம் தான் உள்ளது. மற்ற தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருவதால்  சென்னையில் வானம் மந்தமாகவும் மேக மூட்டதுடனே காணப்படுகிறது. இவ்வளவு நாள் சுட்டெரித்த வெயிலிற்கு அடுத்து  மழை பெய்வதால் சென்னை மக்களுக்கு சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    இன்று அதிகாலை சென்னையில் பெருமபாலான இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

     

    இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.

     

    நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

     

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
    • ரேசன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல்-வெள்ளப் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வெள்ள நிவாரணமாக டோக்கன் கொடுத்து ரேசன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக ரேசன் கடைகளில் விண்ணப்பித்த பொது மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

    5.55 லட்சம் பேர் நிவாரண நிதிக்காக விண்ணப்பித்துள்ள நிலையில் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்களது வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது அவர்களது உடைமைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

    இதன் அடிப்படையில் அரசு இப்போது புதிதாக ஒரு செயலியை (ஆப்) உருவாக்கி உள்ளது. அதில் விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேசன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    அதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண்களை பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேசன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுத்தவர்களை வீட்டு அருகே நிறுத்தி போட்டோ எடுக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணியில் கிராம நிர்வாக அதிகாரி, அவரது உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த பிறகுதான் அவரவர் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட உள்ளது. அப்போது தான் யார்-யாருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்கும் என்பது தெரியவரும்.

    • பாதிக்கப்பட்ட வணிகர்களை கணக்கெடுத்து உதவி கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
    • மாவட்ட பொருளாளர் சத்திய ரீகன் நன்றி கூறினார்.

    சென்னை:

    சென்னையில் மிச்சாங் புயல் மழையால் பெரும் பாதிப்பு அடைந்த சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு கைகொடுக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அல்லது ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானித்து செயல்பட்டு வருகிறது.

    மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட வணிகர்களை கணக்கெடுத்து உதவி கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி அயனாவரத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் அயனாவரம் எஸ். சாமுவேல் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு உதவித் தொகையை வழங்கினார். முதற்கட்டமாக மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள வணிகர்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் 100 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

    பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் ஜோதி லிங்கம், தலைமை நிலைய செயலாளர் ராஜ்குமார் மாநில இணைச்செயலாளர் பால சண்முகம், அயன்புரம் வியாபாரிகள் ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் அருள்குமார் பொருளாளர் சுயம்பு, இளம் தொழில் முனைவோர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கேவி கதிரவன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஷேக் முகைதீன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சத்திய ரீகன் நன்றி கூறினார்.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
    • சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாமண்டூர் பாலத்திலும் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு மழையால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலைகளை மழைநீர் அடித்து சென்றது. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக, பள்ளமாக உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் மழை நின்று பல வாரங்கள் கடந்த நிலையிலும் இந்த சாலை இன்னும் சீரமைக்கப்பட வில்லை. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சாலையில் வாகனம் ஓட்டவே திணறுகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் வேதனையுடன் கூறியதாவது:-

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் தொடங்கி செங்கல்பட்டு பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை வரை 4 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த 4 சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல நூற்றுக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறார்கள். ஆனால் சுங்க கட்டணம் செலுத்தி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சீரமைக்கப்படாத குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகனங்களில் பழுது ஏற்படுகிறது.

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழை நின்ற பகுதிகளிலாவது போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களால் விபத்து நிகழும் ஆபத்து உள்ளது. அதனை கவனத்தில் கொண்டு சாலை பள்ளங்களை விரைந்து சரி செய்ய வேண்டும்.

    சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை பராமரிப்பதிலும், சீரமைப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

    எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாமண்டூர் பாலத்திலும் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது. இதனால் இந்த பகுதியில் 10 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிகிறது. எனவே தமிழக அரசு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அழுத்தம் கொடுத்து பணிகளை உடனே தொடங்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.
    • மணி, லட்சுமி அம்மாள், ஸ்ரீதர், ஜெயபால் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சமீபத்தில் சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்து பாதிப்படைந்த பகுதிகளுக்கு வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன் ஒவ்வொரு நாளும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பொது மக்களுக்கு உதவி செய்து வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட வேளச்சேரி மேற்கு பகுதி கழக செயலாளர் எம்.ஏ. மூர்த்தி ஏற்பாட்டில் 1000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    அரிசி, பெட்ஷீட் மற்றும் நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட செயலாளர் அசோக், பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் எஸ்.பி.முல்லை செல்வம், சா.சங்கர் வட்டச் செயலாளர் கே.ஆர்.மணி, ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர், குட்டி உள்பட ஏராளமான பகுதி வட்ட நிர்வாகிகள், மகளிரணி, வடிவேலு, ஜிம்பாபு, ஆறு, மணி, லட்சுமி அம்மாள், ஸ்ரீதர், ஜெயபால் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×