search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    • பரமக்குடியில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.
    • மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



    போகலூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடியில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை யில் அவரது அலுவ லகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர் செயலாளர் வடக்கு ஜீவரத்தினம், உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகி துரைமுருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரபா சாலமன், ராதா பூசத்துரை உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டஜனர்.

    போகலூர்

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின்படி போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் குமுக்கோட்டை கிராமத்தில் கருணாநிதி பிறந்தாநள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் பொட்டிதட்டி கிராமத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா தலைமையில் பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் முன்னிலையில் பஸ் நிலையம் அருகில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    மஞ்சூர் கிராமத்தில் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையிலும் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அரியக்குடி புத்தூர், தெய்வேந்திரநல்லூர், திருவாடி, கருத்தனேந்தல், மஞ்சக்கொல்லை, பாண்டிகண்மாய் உள்ளிட்ட மேற்கு ஒன்றிய ஊராட்சிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் அப்பாஸ் கனி, பொங்கலூர் ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன் உள்ளிட்ட கிளை கழக செயலாளர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
    • முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் கஜேந்திரன், ராமகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயகாந்தன், பேரூர் அவை தலைவர் திரவியம், சுந்தரபாண்டி, மணி, கலைஞர் தாசன் முரளி, வினோத், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கயம் :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளைெயாட்டி காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி கணபதிபாளையம் கிராமம், சிவன்மலை அடிவாரம், பாப்பினி பிரிவு, சிவன்மலை சத்தியாநகர் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், படியூர் சண்முகசுந்தரம், சிவன்மலை சிவகுமார், அருண்தீபக், சண்முகம், கந்தசாமி, மகேஷ்குமார், சிலம்பரசன், வடிவேல், பழனாத்தாள் மாரிமுத்து, முன்னாள் தலைவர் பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, முத்துக்குமார், விஸ்வநாதன், இளமதி பாலமுருகேசன், திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அம்பிகா கடந்த 2016 -ம் ஆண்டு முதல் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தினார்.
    • மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நிலவள வங்கி தெரு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி அம்பிகா (70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    அம்பிகா, கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாய் பகுதியில் வசிக்கும் தனது குடும்பத்தினரிடம் சொத்தில் சம உரிமை கேட்டார். இதற்கு அவரது 2 தம்பிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அம்பிகா கடந்த 2016 -ம் ஆண்டு முதல் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அவரது 7 வருட போராட்டத்திற்கு பின்னர் அவருக்கு 1 ஏக்கர்15 சென்ட் நிலத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த வாரத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து அம்பிகாவுக்கு பட்டா வழங்கினர்.

    இந்த நிலையில் இந்த இடத்திற்கான பட்டாவை அம்பிகா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த வீடிேயா தற்போது வைரலாக பரவிவருகிறது.

    இதுகுறித்து அம்பிகா கூறும்போது, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி தந்தார். எனவே அவரது நினைவிடத்தில் எனக்கு சட்டபோராட்டத்தினால் கிடைத்த பட்டாவை வைத்து அஞ்சலி செலுத்தினேன் என்றார்.

    • சோழவந்தானில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத்தலைவர் லதா கண்ணன், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், குத்தாலம், செந்தில், செல்வராணி, ஜெயராமச்சந்திரன், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கவுதம ராஜா, முத்து செல்வி சதீஷ், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, சுரேஷ், நகர் இளைஞர் அணி முட்டை காளி, தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன், சங்கங்கோட்டை ரவிசந்திரன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.

    இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதுடன், நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மைதானத்திற்கு" முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, நேற்று விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அந்த விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், திடீரென பெயர் பலகையில் கருணாநிதி பெயரை, கறுப்பு மை பூசி அழிக்கும் பணியில் பா.ஜ.க.வை சேர்ந்த இருவர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. பின்னர், பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், பெயர் பலகையில் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், எம்.எல்.ஏ. மற்றும் மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பெயர் பலகையில் கறுப்பு மை பூசி சேதப்படுத்தியதாக ஓசூர் தெற்கு மண்டல பா.ஜ.க.தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (வயது40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன.
    • என் மீதும், என் செயல்மீதும், வகிக்கும் பொறுப்பு மக்கள் சேவைக்கு எனும் என் உளப்பாங்கின் மீதும் கொண்ட நம்பிக்கையினால் இந்த வரலாற்றுச் சிறப்பைக் கருணாநிதி அன்று செய்தார்.

    தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள் எனும் தத்துவச் சொற்றொடர் உண்மைதான் என்று என் உள்ளம் உணர்த்துகிறது. திராவிட வரலாற்றின் திசைகளை வென்ற சூரியன், காவியம் போற்றும் நாயகர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியை நினைக்கிற போதெல்லாம் என் நெஞ்சம் உணர்ச்சிப் பெருக்கில் மூழ்குகிறது.

    தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாகவும் வாய்க்கப்பெற்று, வளர்ந்து, திராவிடப் புரட்சியின் சித்தாந்தமாக நிலைபெற்றிருக்கிற கருணாநிதியின் சாதனைகளையும், தமிழ்ச்சமூகத்திற்காய் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற சரித்திர சட்டங்களையும் ஏட்டில் உரைக்க முடியாது. அவரது இமயச் செயல்திட்டங்களை எண்ணிக்கையில் அளக்க முடியாது.

    எழுத்தையும், பேச்சையும், திராவிடத் திசைகள் எங்கும் கந்தக வெடிமருந்தாய் காட்சிப்படுத்தியவர். அடிமையின் கயிற்றை அறுத்து, தமிழினத்தை ஒரு குடையின்கீழ் ஆட்சிப்படுத்தியவர். அவரால் நான் கற்ற, பெற்ற அனுபவப் புதையல்களும், பொதுவாழ்வின் லட்சியக் கனவுகளும் ஏராளம், ஏராளம். அவர் பல்கலைக்கழகமாய் இருந்தார். அதை தூரத்தில் நின்றே தரிசிக்கும் ஒரு ஏழைச் சிறுவனாய் நான் இருந்தேன். அவர் சூரிய விளக்காய் சுடர்விட்டு ஒளிர்ந்தார். அந்த வெளிச்சக் கதிரில் ஒரு விதைபோல் நான் கண்விழித்தேன். அவர் வானமாய் இருந்தார். ஒரு துண்டுமேகம் போல் நான் அவர் தோள்பற்றிக் கொண்டேன்.

    கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன. அவர் ஒரு வேட்டிகட்டிய தாய்போல் எம்மை அரவணைத்தார். கண்டிப்பு நிறைந்த தந்தைபோல் நான் அரசியல் தொண்டாற்ற தடம் அமைத்தார். 1974-ம் ஆண்டு சைதாப்பேட்டை தியாகி அரங்கநாதன் சுரங்கப்பாதையை திறந்து வைப்பதற்காக கருணாநிதி வருகை தந்திருந்தார். 15 வயது சிறுவனாக இருந்த நான் என் அன்பு தந்தையுடன் அந்த நிகழ்வைக் கண்டுகளிக்கச் சென்றிருந்தேன். கட்டுக்கடங்காத கூட்டம் கடல்போல் ஆர்ப்பரித்தது.

    தந்தையின் விரல்பிடித்து ஒரு ஓரமாய் நெரிசலில் நின்றபடி, கருணாநிதியின் திருமுகம் காண ஆவலாய் நின்றிருந்தேன். என் கண்கள் கருணாநிதியை கண்டது. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினேன். கருணாநிதி கையசைத்த காட்சி என் கருத்தில் பதிந்து மீண்டும் மீண்டும் கண்முன் தோன்றியது. அவரின் அந்த 'கையசைப்பு' கழகப் பணி செய்ய வா! தம்பி! என்று என்னை கட்டளை இட்டதாய் அந்த சிறுவயதிலேயே நான் எண்ணிக்கொண்டேன். அந்த மாமேதையின் புன்முறுவல் என்னை மக்கள் பணி செய்ய வா! என்று அழைத்ததாய் நான் உள்வாங்கிக்கொண்டேன்.

    பிஞ்சு வயதில் பசுமரத்தாணிபோல் என் நெஞ்சில் பதிந்த இந்த நிகழ்வுதான் கருணாநிதியின்பால், இன்றைய தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின்பால் ஈர்க்கப்பட்டு அரசியல் தொண்டுக்கு என்னை அணியமாக்கியது என்றால் அதில் மிகையொன்றுமில்லை.

    சமத்துவமும், சமூகநீதியும் இரு கண்களாய் ஏற்று, ஏழை எளியவர் ஏற்றம் பெற, இன்னலுற்ற தமிழ்நாடு மாற்றம் பெற, நொடிதோறும் உழைத்தவர் நம் கருணாநிதி. தம்பிகளைத் தாயாகத் தாங்கவும், தடந்தோள் கொண்ட கழக வீரர்களை மேன்மை பெற வைத்து அவர்தம் துயர்கள் நீங்கவும், நெடுங்காலம் பாடாற்றிய நெஞ்சுக்கு நீதியின் நிறைகுடம் கருணாநிதி.

    கருணாநிதியின் விந்தைமிகு ஆற்றலுக்கு என்னளவில் நிகழ்ந்த மற்றொரு சம்பவமும் என் மனதில் நிழலாடுகிறது. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான ஓர் அற்புதக் காவியம் 'கண்ணம்மா' என்கிற திரைப்படம். அப்படத்தை இயக்கியவர் பாபாவிக்ரம். 'கண்ணம்மா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இளைஞனே இளைஞனே எழுந்து வா...' எனும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும் பாடல் காட்சியில் வெண்சீருடை அணிந்த 200 இளைஞர்களை அதில் பங்கேற்க செய்ய சென்ற நேரத்தில், நம்மையும் இறுதியாக வில்லன் கதாபாத்திரத்தை கைது செய்யும் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்க வேண்டும் என இயக்குனர் கேட்டுக்கொண்டபடி நான் ஒப்புக்கொண்டேன்.

    மறுநாள் பொங்கல் திருநாளில் கருணாநிதியை பார்த்து வாழ்த்து பெற அவர் இல்லம் சென்றபோது, நான் திரைப்படத்தில் நடித்த செய்தியறிந்த அவர் நான் பேசி நடித்த வசனங்களைச் சொல்லச் சொன்னார். நானும் வசனங்களை ஒப்பித்தேன். ஒப்பித்து முடித்தவுடன் 'இடையில் ஒரு வரியை விட்டுட்டியே' என்று சொல்லி விடுபட்ட வரியைச் சொன்னார். நான் ஆச்சரியத்தில் உரைந்து போனேன். 4, 5 மாதங்களுக்கு முன் தன்னால் எழுதி வழங்கப்பட்ட வசனத்தில் விட்டுப்போன வரியைக்கூட இன்னமும் நினைவில் வைத்து திருத்தும் அவரது நினைவாற்றல் கண்டு நெஞ்சம் வியந்து போனேன்.

    அதுமட்டுமன்று அப்படத்தின் வசனத்தையும் நானே 'டப்பிங்' பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நான் ஒப்புக்கொண்டு விடைபெற்று என் வாகனத்தை நோக்கி நடந்து சென்றபோதே, இயக்குனர் பாபாவிக்ரம் என்னை அலைபேசியில் அழைத்து, 'வசனத்தை தாங்களே பேசி விட வேண்டும்' என கருணாநிதி சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்து, ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வரச்சொன்னார். அப்போது வியப்பில் திகைத்துப் போனேன். அவருக்கு கிடைக்கும் கணங்களிலும் செயலையும், எடுத்த காரியத்தையும் முடிக்கும் கருணாநிதியின் ஆற்றலை எண்ணி பெருமிதம் அடைந்தேன். அதுவே எனக்கான தாரக மந்திரமாகவும் இன்றுவரை ஏற்று முடிந்தவரை செயலாற்றி வருகிறேன். கருணாநிதியின் உறுதிக்கும், ஒப்பிலா ஆற்றலுக்கும், தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்புக்கும் இன்னொரு நிகழ்வையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருள் பொதிந்ததாய் இருக்கும் எனக் கருதுகிறேன்.

    'நான் மேயராக பொறுப்பேற்று 2, 3 மாதம் முடிந்திருந்த நிலையில் 99 கவுன்சிலர்கள் புகாருக்கு உட்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் ஜெயலலிதா அன்று ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை மாநகராட்சி மன்றத்தில் முக்கிய தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றாமல் இருப்பது நல்லது என்று எடுத்துரைத்திருந்தனர்.

    இது சம்பந்தமாக பா.ஜ.க.வின் அன்றைய மாநில தலைவர் இல.கணேசன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் வரதராஜன் அறிக்கை விடுத்திருந்தனர். அதைக் கண்ட கருணாநிதி உடனடியாக 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்ய அறிவுறுத்தினார். அதன்படி நான் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்துவிட்டு, அன்று மாலை கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது எனக்கு ஆறுதல் சொன்ன அவர், மீண்டும் அப்பொறுப்புக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை தாய் உள்ளத்தோடு கூறினார். அப்போது அங்கிருந்த வக்கீல் 'இல்லை, இல்லை அது சாத்தியமில்லை அய்யா. ஏற்கெனவே தளபதி மு.க.ஸ்டாலினை மனதில் வைத்து இரு சட்ட மசோதாக்களை ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார். அதில் ஒன்று, ஒருவர் 2 முறை பதவி வகிக்க முடியாது என்றும், இன்னொன்று இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்கின்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    உடனடியாக குறுக்கிட்ட கருணாநிதி, அதனால் என்ன?, நாமும் சட்டத்தை திருத்தலாம் என்றுக்கூறி உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து நான் இரண்டாவது முறை மேயர் பொறுப்புக்கு நிற்பதற்கான வாய்ப்பை அளித்து, தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றி பெற்றபின், எம்மை இரண்டாம் முறையாய் 'மேயர் பொறுப்பில்' நியமித்து அழகுப் பார்த்தார்.

    என் மீதும், என் செயல்மீதும், வகிக்கும் பொறுப்பு மக்கள் சேவைக்கு எனும் என் உளப்பாங்கின் மீதும் கொண்ட நம்பிக்கையினால் இந்த வரலாற்றுச் சிறப்பைக் கருணாநிதி அன்று செய்தார். எந்த வசதி வாய்ப்பும், அரசியல் பின்புலமும் இல்லாத வறுமைப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகக் கட்டமைப்பைச் சார்ந்த எனக்காக அவர் செய்த இந்த சரித்திர நிகழ்வு என் வாழ்நாள் எல்லாம் நினைத்துப் பெருமை கொள்ளத்தக்கதாகும்.

    இவை மட்டுமன்று கருணாநிதியோடும், இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடும் நான் கற்றறிந்த சேதிகளும், நிகழ்வுகளும் ஆயிரம், ஆயிரம் உண்டு. அவை எல்லாம் இன்னும் எம்மை களப்பணியாற்ற, மக்கள் பணி செய்ய முடுக்கி விடும் கருவிகளாய் எண்ணி செயல்படுவேன்.

    14 வயதில் தந்தை பெரியாரின் கோட்பாட்டுக் கோட்டைக்குள் அடியெடுத்து வைத்து, திருவாரூர் தெருக்களில் கொடியேந்தி கொள்கைக் களமாடிய ஓய்வறியாச் சூரியன் கருணாநிதிக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு சாதனைகளை போற்றும் வண்ணம் அமைந்திருக்கிறது.

    5 முறை நாடாண்ட அருந்தமிழ்ச் சூரியன் கலைஞர் கருணாநிதியின் அளப்பரிய செயல்களை, அரசியல் மேன்மையை, ஆளுமையை, எழுத்தாற்றலை, இதிகாசம் போற்றும் சாதனைகளை, வரலாற்று முன்னெடுப்புகளை நினைவுகூரும் இந்த ஆண்டில், அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதிலும், அவர் அமைத்துத் தந்த 'திராவிட இயல்' பாதையில் பார் போற்றப் பயணிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்திட்டங்களை நிறைவேற்றவும் எப்போதும் உறுதுணையாகவும், சிறு துரும்பாகவும் இருப்பேன் என இந்த நூற்றாண்டு தொடக்க நாளில் சூளுரைக்கிறேன். வாழ்க கலைஞர் கருணாநிதி புகழ்! வெல்க சமூகநீதி!! ஓங்குக என்றென்றும் திராவிட மாடல் ஆட்சி!!!

    - மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

    • உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள், தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனையும் தட்டி எழுப்பின.
    • தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஓடி... ஓடி... அவர் உழைத்தபோது தென்றலாகவும், புயலாகவும் இருந்தார்.

    கலைஞர்...

    தமிழ் பேசும் மக்கள் இந்த உலகில் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ... அங்கெல்லாம் ஒலிக்கும் மந்திர சொல். தமிழ்நாட்டின் அரசியல் வரலாறை, இவர் பெயரைக் குறிப்பிடாமல் யாருமே எழுத முடியாது.

    அரசியலில் கருணாநிதி அளவுக்கு ஆழம் கண்டவர்கள் இந்த உலகிலேயே நிச்சயமாக யாரும் கிடையாது. அரசியலில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் வரலாறாக மாறியது. அரசியல் ரீதியிலான அவரது கொள்கை முடிவுகள், அவரை நாடே போற்றும் "ராஜதந்திரி" என்று பேச வைத்தது.

    அரசியல் வானில் அவர் இமயம். அந்த இமயத்தை எந்த ஒரு சக்தியாலும் இன்று வரை நெருங்க இயலவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

    அவர் காட்டிய வழியில் தமிழகம் மிளிர்ந்தது. இன்று இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தனித்துவம் கொண்டதாக உள்ளதென்றால், அதற்கு கருணாநிதி செய்த அளப்பரிய சேவைகளே அடித்தளமான காரணமாகும்.

    அந்த அடித்தளம் இருக்கும் வரை அரசியலில் கருணாநிதி பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    தமிழ் இலக்கிய உலகம், இவர் எழுத்துக்களை தவிர்த்து விட்டு, நிச்சயம் இயங்க முடியாது. கை வலிக்க... வலிக்க அவர் எழுதினார். அந்த எழுத்துக்கள் எல்லாம் பூமாலையாக மாறி மணம் வீசின, வீசிக் கொண்டிருக்கின்றன.

    அவர் எழுதிய புத்தகங்களை அடுக்கியபோது அவை கருணாநிதியின் உயரத்தை விட அதிகமாக இருந்தன. இதில் இருந்தே அவர் எழுத்தின் ஆற்றலை உணரலாம்.

    உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள், தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனையும் தட்டி எழுப்பின. இது தமிழக தலைவர்கள் யாருமே செய்ய முடியாத சாதனை.

    காலத்துக்கு ஏற்ற கற்பனை வளம், கட்டுக்கடங்காத வேகம் ஆகியவற்றை அவரது ஒவ்வொரு வரியிலும் காண முடியும். கலைஞரின் பலமே இந்த எழுத்து என்றால் மிகையாகாது.

    இலக்கியம் தவிர திரை உலகில் அவர் செய்த சாதனைகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. எப்போதும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பம்பரமாக சுழன்ற அந்த மனிதருக்கு எப்படி இப்படி பல துறைகளில் சகலகல வல்லவனாக முத்திரை பதிக்க முடிந்தது என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியம் அகல நீண்ட நேரம் பிடிக்கும்.

    அரசியல், சினிமா, பத்திரிகை என்று எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் கலைஞரின் சாதனை... இன்று கலங்கரை விளக்காக மாறி நிற்கிறது.

    தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஓடி... ஓடி... அவர் உழைத்தபோது தென்றலாகவும், புயலாகவும் இருந்தார்.

    வயோதிகம் காரணமாக அவர் சில காலம் அமைதியாக இருந்தார். அளவற்ற அருமைகளையும் அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆழ்கடல் எப்போதுமே அமைதியாகத்தான் இருக்கும். கலைஞரும் அத்தகைய பெருமை பெற்றவர்.

    94 வயது காலம் வாழ்ந்த அந்த பன்முக வித்தகருக்கு எத்தனையோ தனித்துவமான சிறப்புகள் அமைந்திருந்தாலும், அவர் 'தமிழாக வாழ்ந்த தலைவர்' என்ற சிறப்பு மணி மகுடமாக உள்ளது. தமிழ் அவரிடம் குறைவின்றி நிறைந்திருந்தது. அதனால்தான் அவர் தமிழோடு ஆடினார், பாடினார், விளையாடினார், தமிழையே மூச்சாக சுவாசித்தார். கடைசி மூச்சு உள்ள வரை தமிழாகவே வாழ்ந்தார்.

    அவர் தமிழாக வாழ்ந்ததால்தான் இன்றைய அறிவியல், மாபெரும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப புரட்சிக்கு மத்தியிலும் இளைய தலைமுறையினர் தமிழ் உணர்வுகளுடன் திகழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்தது. இந்திய அரசியல் தலைவர்களில், எந்த தலைவராலும் நினைத்துப் பார்க்க முடியாத, ஏற்படுத்த முடியாத நிகரற்ற சாதனை இது.

    இந்த மாபெரும் சாதனையின் பின்னணியில் கலைஞரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு... முயற்சி, முயற்சி, முயற்சி, தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை அடங்கியுள்ளது. இவையெல்லாம் ஒன்றிணைந்து கொடுத்த பலன்களால் தமிழ் சமுதாயத்தின் தடமே மாறியது. இதை போற்றும் வகையில்தான் கலைஞருக்கு சட்டசபையில் படத்திறப்பு விழா நடத்தப்பட்டது.

    இது கலைஞருக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை.

    தமிழ் வளர்ச்சிக்கு செய்த தெண்டு

    தமிழ்நாட்டில் தமிழ் மொழி செழுமை பெற கருணாநிதி செய்துள்ள சேவை ஏராளம். வடமொழி ஆதிக்கத்தை முறியடித்த அவர் தமிழர்களோடு தமிழ் இரண்டற கலப்பதற்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளார். அதோடு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு சிறப்புகளை மக்கள் என்றென்றும் நினைவில் கொள்வதற்காக அடையாள சின்னங்களை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றிய ஒரு கண்ணோட்டம்.

     * மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராருங் கடலுடுத்த" என்ற பாடலை 1970- ம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அறிவித்தார்.

    * 1974-ம் ஆண்டு "அகர முதலி" திட்டத்தை கொண்டு வந்து தமிழ்ச்சொற்கள் தொகுப்பதற்கு வழிவகுத்தார்.

    * வயது முதிர்ந்த தமிழர்களுக்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    * சென்னை பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழி கல்வியை தமிழில் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

    * மாவட்டங்களில் அரசு அருங்காட்சி யகங் கள் தொடங்கி பண்பாட்டு பொருட்களை பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.

    * ஆசியவியல் நிறுவனத்தை தொடங்கி தமிழியல் ஆய்வுக்கு உதவினார்.

    * தமிழ்நாடு முழுவதும் ஆட்சி மொழி கருத்தரங்குகள் நடத்தினார்.

    * தமிழ்நாடு முழுவதும் இசைப்பள்ளிகள் தொடங்க உத்தரவிட்டார்.

    * அய்யன் திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என அறிஞர்கள் வரையறுத்த முடிவின்படி, 1971- ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழ்நாடு அரசிதழிலும் திருவள்ளுவராண்டு எண்ணை குறிக்கச் செய்தார்.

    * சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார். குமரிமுனையில் உலகம் வியக்குமாறு 133 அடி உயர அய்யன் திரு வள்ளுவர் சிலை நிறுவினார்.

    * ஆண்டு தோறும் பொங்கல் விழாவிற்கு அடுத்த நாளில் திரு வள்ளுவர் நாள் கொண்டாடும் வழக்கத்தை கொண்டு வந்தார்.

    * தைத்திங்கள் முதல் நாளே, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் என சட்டமியற்றி நடைமுறைப்படுத்தி தமிழ் பண்பாட்டு பெருமைகளை தரணியில் உயர்த்தினார்.

    * பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம் வடித்தார்.

    * தமிழ் மன்னர்களுக்கும், புலவர்களுக்கும், சான்றோர் களுக்கும் திரு உருவச் சிலைகள், மணி மண்டபங்கள், நினைவிடங்கள் அமைத்தார்.

    * தமிழ்மொழி வளர்ச்சிக் கெனத் தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.

    * பள்ளிகளிலும், கல்லூரி களிலும் முதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுவதுடன் இன்று தமிழகத்தில் உள்ள 53 ஆயிரத்து 548 பள்ளிகளின் வாயி லாக பயிலும் 1 கோடியே 49 லட்சம் மாணவ-மாணவி யரில் ஏறத்தாழ 75 விழுக்காடு, அதாவது 1 கோடியே 10 லட்சம் மாணவ- மாணவியர் தமிழ் வழிக் கல்வி கற்கும் சூழ்நிலைகளை மேலும் மேம்படுத்திட, பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என சட்டம் கொண்டு வந்தார்.

    * தமிழறிஞர்களை ஊக்குவித்திட தமிழறிஞர்களின் பெயர்களில் அரசு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

    * பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவாணர், திரு.வி.க., மறைமலை அடிகள், புலவர் குழந்தை முதலான 110 தமிழறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கினார்.

    * ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுதுவதற்காக தமிழ் மொழி வரலாறு நூல் எழுதி வெளியிடச்செய்தார்.

    * இயல், இசை, நாடக மன்றம் உருவாக்கி நலிந்த கலைஞர்களுக்கு உதவ வைப்பு நிதி ஏற்படுத்தினார்.

    * புதிய இலக்கண நூலை வல்லுனர் குழு ஒன்று அமைத்து எழுதி வெளியிடச்செய்தார்.

    * உலக தமிழர் அமைப்புகளை ஒருங்கி ணைத்தார்.

    * மொரிசியஸ், சிங்கப்பூர், யாழ்ப்பாணம் உள்பட 22 நாடுகளுக்கு தமிழ் நூல்களை வழங்கினார்.

    * உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதிகளை வாரி வாரி வழங்கினார்.

    * வாகனங்களில் பதிவு எண் பலகைகளில் தமிழில் எழுதிக்கொள்ள அனுமதித்தார்.

    * கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் பட்டியலை தமிழில் தயாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

    * நாடகக் கலை களஞ்சியம், தமிழ் இசை களஞ்சியம், மருத்து கலை களஞ்சியம் ஆகியவற்றை தமிழில் எழுதி வெளியிடச் செய்தார்.

    * ரூ.10 லட்சம் செலவில் குழந்தைகளின் கலை களஞ்சியம் தயாரிக்க செய்தார்.

    * மெட் ராஸ் என்னும் பெயரை சென்னை என 30.9.1996 அன்று மாற்றி னார்.

    * தமிழ் தட்டச் சுக்கள் பரவ செய்தார்.

    * தமிழ் சுருக்கெழுத்து நூலை அதிக அளவில் அச்சிட்டு வெளியிட்டார்.

    * தமிழ் வளர்ச்சி துறைக்கு கூடுதல் அலுவலர்களை நியமித்தார்.

    * சென்னை அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி வளாகம் ஏற்படுத்தினார்.

    * தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவர 15 பல்கலைக்கழகங்களுக்கு ரூ.64 லட்சம் கொடுத்தார்.

    * தமிழில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    * மருந்து சீட்டுக்களை தமிழில் எழுத உத்தரவிட்டார்.

    * சிறப்பு சொல் துணை அகராதி கொண்டு வந்தார்.

    * தமிழ்நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கவும், ரெயில்களுக்கு தமிழில் பெயர் சூட்டவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்றார்.

    * வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் அகழாய்வு செய்து தமிழர்களின் பாரம்பரிய சிறப்பை வெளிப்படுத்த உதவினார்.

    * விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி நூல் வெளியிட உதவினார்.

    * சேலம், தஞ்சை, விருதுநகர், காஞ்சீபுரத்தில் மண்டல கலை பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தினார்.

    * மழலையர் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக சொல்லித்தர உத்தரவிட்டார்.

    * மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினார்.

    * தமிழக வரலாறு முழுவதையும் ஒரே தொகுதியாக வெளியிட்டு சாதனை படைத்தார்.

    * வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதற்காக 515 சொற்கள் அடங்கிய நூல் வெளியிட்டார்.

    * கொல்கத்தா, மும்பையில் தமிழ் மையம் அமைத்தார்.

    * திருவனந்த புரத்தில் நூலக கட்டிடம் ரூ.10 லட்சம் செலவில் கட்டினார்.

    * மலேசிய பல்கலைக் கழகத்தில் ரூ.50 லட்சம் செலவில் தமிழ் இருக்கை நிறுவ உதவினார்.

    * வானொலியில் நாளொன்று பிறக்க சொல்லொன்று அறிவோம் என்ற நிகழ்ச்சியை தொடங்க உறுதுனையாக இருந்தார்.

    * தமிழில் தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்த சிவலிங்க னாருக்கு நிதியுதவி செய்தார்.

    * மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு கட்டிடம் கட்ட உதவினார்.

    * தமிழ் அறிஞர்களின் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடினார்.

    * தமிழ் சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவரது குடும்பங்களுக்கு நிதியுதவி செய்தார்.

    * தமிழ் அறிஞர்களின் பெயரில் விருதுகள் உருவாக்கினார்.

    * மாணவ-மாணவிகளுக்காக குறள் பரிசு அறிமுகம் செய்தார்.

    * சிறந்த படைப்பிலக்கிய செம்மல் ஒருவருக்கு குறள் பீட விருது ரூ.2 லட்சம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    * கல்வி மொழி வளர்ச்சிக்கு உதவும் இளம் எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார்.

    * அரசு அறிவிப்பு பலகைகளில் திருக்குறள் எழுத உத்தரவிட்டார்.

    * தமிழ் அறிஞர்களின் வீடுகளை நினைவகங்களாக மாற்றினார்.

    * தமிழுக்காக பாடுபட்ட சான்றோர்களுக்கு சிலை அமைத்தார்.

    * காந்தி மண்டபம் வளாகத்தில் மொழிப்போர் காவலர்களுக்காக மணி மண்டபம் கட்டினார்.

    * தமிழில் ஆகம நூல்கள் வெளியிட உத்தரவிட்டார்.

    * தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக தமிழ் போற்றி நூல்களை வெளியிட செய்தார்.

    * தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டார்.

    * தமிழில் சிவவேள்வி நடத்திட அறிவுறுத்தினார்.

    * தமிழ்நாடு முழு வதும் 75 கோவில் களில் திருக்குறள் வகுப்புகள் நடத்த புதிய திட்டம் கொண்டு வந்தார்.

    * 1999-ல் உலக இணைய தமிழ் மாநாடு நடத்தினார்.

    * கணினி தமிழ் வளர்ச்சிக்கு உலக இணைய தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார்.

    * தமிழ்மொழி வளர்ச்சியில் ஒரு முத்திரை சாதனையாக தமிழ் செம்மொழி என்பதை மத்திய அரசு ஏற்று அறிவித்திட செய்தார்.

    * செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையிலேயே அமைக்கின்ற முயற்சியில் வெற்றி பெற்றார்.

    * வெளிநாடுகளிலும், இந்திய அளவிலும் புகழ் பதித்துள்ள தமிழ் அறிஞர்களுக்கு குடியரசு தலைவரின் "குறள் பீட விருது", "தொல் காப்பியர் விருது" ஆகியவை வழங்கிட வகை செய்தார்.

    * செம்மொழித் தமிழின் சிறப்பினை நிலை நாட்டிடும் வகையில், கோவை மாநகரில் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் நோக்கில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்தினார்.

    காலத்தை வென்றவர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    காலத்தை வென்றவர் தலைவர் கலைஞர்! சூரியன் உதிக்கும் முன் விழித்தெழுந்து, ஓயாது உழைக்கும் ஓய்வறியாச் சூரியன் தலைவர் கலைஞர்.

    அரசியலில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். தனக்கெனத் தனி பாணியை எழுத்திலும், பேச்சிலும் வகுத்துக் காட்டியவர்.

    தலைவர் கலைஞர், ஈடுஇணையற்ற பேச்சாளர், கட்டுரையாளர், வலிமையான எழுத்தாளர், சிறந்த கவிஞர் பத்திரிகையாளர், நாடகக் கலைஞர், இலக்கியப்படைப்பாளி, திரைப்படத்துறை வித்தகர், சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவாதி, நூலாசிரியர்-அரசியல் ஞானி-மிகச் சிறந்த நிர்வாகி எனப் பல துறைகளில் சிறந்து விளங்குபவர். அவர் தொடாத துறையில்லை. தொட்டுச் சிறப்படையாத துறையும் இல்லை.

    "தன் பிறந்த நாள்-தன் திருமண நாள்-தான் முதன் முதலாக அருமைத் தலைவர் அண்ணாவைச் சந்தித்தநாள்-மொழிகாக்கும் போரில் முதன் முறை யாகச் சிறையேகிய நாள், அத்தனையும் தனக்கு இன்பம் தருபவை. நினைத்து மகிழத்தக்கவை" எனத் தலைவர் கலைஞர் அவர்களே, குறிப்பிட்டுள்ளார்கள்.

    தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது, "எனக்குத் தாய், தந்தை, மனைவிகள், பிள்ளைகள், சகோதரர்கள் என்றிருந் தாலும், அவர்களில் சிலர் என்னை விட்டுபிரிந்தாலும், அல்லது என்னுடன் வாழ்ந்தாலும் நான் குடும்பம் என்று கருதுவது என்னையும் ஓர் அங்கமாகப் பிணைத்துக்கொண்டிருப்பதும், இந்த இயக்கம் ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை" என நெஞ்சுக்கு நீதி கட்டுரையிலே தலைவர் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

    "The Pen is Mightier than the Sword" என்பார்கள். தலைவர் கலைஞர் அவர் களின் பேனா முனை, வாள் முனையை விட வலியது. அதனால் தான் கழக உடன் பிறப்புகள் தலைவரிடம் கட்டுண்டு கிடக்கின்றனர்.

    வாள் முனை, பேனா முனை என்ற வலிமையான சக்தியையெல்லாம் தன் நாவன்மையால் வென்று காட்டியவர் தலைவர் கலைஞர். தோல்வியே காணாத வரலாறு படைத்தவர் தலைவர் கலைஞர். ஐந்தாவது முறையாக, தமிழக முதல்- அமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்று, அதில் இந்தியாவுக்கு பாராட்டு கின்ற தலைவராக கலைஞர் விளங்கிக்கொண்டிருக்கிறார்.

    "நான் கழகத்தின் வரலாற்றின் முற்பகுதியை எழுதுகிறேன். அதன் பிற்பகுதியை தம்பி கருணாநிதி தொடர்வார்" எனத் தீர்க்கதரிசி போல் பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே குறிப்பிட்டார்.

    கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்கள்:-

    * அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

    * ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

    * இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

    * வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

    * மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.

    1970-ம்அண்டு திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் தலைவர் கலைஞர் இந்த முழக்கங்களை பிரகடனம் செய்தார். அவற்றைச் செயல்படுத்திக்காட்டி வெற்றி கண்டவர் தலைவர் கலைஞர்.

    இந்திய வரலாற்றில் கண்டிராத அளவில் தன் நெடிய பயணத்தில் சட்டமன்றப்பொன்விழா கண்டவர் தலைவர் கலைஞர்.

    80 ஆண்டு காலத்திற்கும் மேலாக சமூகப்பணி, பொதுப்பணிக்கு சொந்தக்காரர். 70 ஆண்டு காலம் கழகத்தைக் கட்டிக்காத்து வருகின்ற பெருமைக்குரியவர். 60 ஆண்டு காலம் சட்டமன்றப் பணியாற்றியவர்.

    சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாகத் தி.மு.கழகத்தலைவராக வீற்றிருப்பவர்.

    13 முறை சட்டமன்ற உறுப்பினர், 18 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நடத்துபவர். 5-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பெருமையும் பெற்றவர். தேர்தல்களில் வெற்றி மட்டுமே கண்டவர்-தோல்வியே காணாத வரலாறு படைத்த தலைவர்.

    பேரறிஞர் அண்ணா ஏற்றிய லட்சிய தீபத்தைக் கையில் ஏந்தி, நாட்டில் அரசியல் நெருக்கடிகள் பல ஏற்பட்டபோது அந்த லட்சிய தீபத்தை அணையாது காத்து, தமிழ் மக்களை வழி நடத்திச் செல்லும் தகுதிமிக்கத் தலைவராக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் தலைவர் கலைஞர். கழகம் எனும் இயக்கத்தை சிதறாமல், கட்டிக்காத்து வழிநடத்தி வருபவர் தலைவர் கலைஞர் ஆவார்.

    வள்ளுவர் கோட்டம்- குமரியில் வான்புகழ் வள்ளுவர்க்குச்சிலை-இப்படி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியவர். தனது ஆட்சிக் காலத்தில் சரித்திரச் சாதனைகளாகப் படைத்து வருகிறார். புதிய வரலாறு படைத்தவர்! ஏழைகளின் ஏந்தல்! வருங்காலம் வாழ்த்தும்! எக்காலமும் வாழ்வார்!

    தலைவர் கலைஞர் அடியொற்றிக் கடமையாற்றிட உறுதி ஏற்போம்.

    (கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் முன்பு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது)

    கலைஞரைக் கவர்ந்த ஐந்து

    தமிழ்நாட்டின் நிகரற்ற முதல்வராக திகழ்ந்த டாக்டர் கலைஞருக்கும், 5-ம் எண்ணில் வருகிற பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைஞரின் வெற்றிப் பின்னணியில் உள்ள பெரும்பாலான பெயர்களின் கூட்டுத் தொகை எல்லாமே ஐந்தாகவே வரும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

    தாயைத் தெய்வமாகக் கருதும் கலைஞரின் அன்னையின் பெயர் 'அஞ்சுகம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞரின் பெயர் 'கருணாநிதி'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    கலைஞர் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையின் பெயர் 'குடியரசு'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் திராவிட கழகத்தில் இருந்து விலகிய ஆண்டு 1949 (1+9+4+9=23=2+3=5) இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி 'குளித்தலை'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி 'தஞ்சாவூர்'. இதன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    தி.மு.க. தேர்தல் நிதிக்காக அவர் நடத்திய நாடகம் 'காகிதப் பூ'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    தி.மு.க. அமோக வெற்றி பெற்று கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆன ஆண்டு 1967. இதன் கூட்டுத் தொகையான 23&ன் கூட்டுத் தொகையும் ஐந்து.

    கணக்கு கேட்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். வகித்த பதவி 'பொருளாளர்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    தி.மு.க. அமைச்சரவை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆண்டு '1976'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ஏறக்குறைய 23 ஆண்டு காலம் கலைஞரின் எதிர்ப்பை பெற்ற அரசியல் கட்சியின் பெயர் 'காங்கிரஸ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    1989 மற்றும் 1991-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்ற தொகுதி 'துறைமுகம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞருடன் கூட்டணி சேர்ந்து மாபெரும் வெற்றி அடைந்த தேசிய தலைவர் 'மூப்பனார்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் ஆசிரியராக இருந்த ஒரு பிரபல வார இதழின் பெயர் 'முத்தாரம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    திரை உலகில் கலைஞருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திரைப்படங்களான, 'பராசக்தி', 'பூம்புகார்', 'மர்மயோகி', 'ராஜகுமாரி' இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    'தென்பாண்டி சிங்கம்' என்ற இலக்கியத்திற்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கலைஞருக்கு வழங்கிய விருதின் பெயர் 'ராஜராஜன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் சேவை செய்த ஆண்டுகளின் எண்ணிக்கை 50. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    திரை உலகம் அவரது கலை உலக சேவையைப் பாராட்டி வழங்கிய தங்க 'எழுதுகோல்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் எப்போதும் விரும்புகின்ற ஒரே பாடல் வரி 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்'. இதன் கூட்டுத் தொகை 14=1+4=5.

    கோவலன், கண்ணகிக்காக கலைஞர் கலைக்கூடம் அமைத்த கடற்கரை நகரத்தின் பெயர் பூம்புகார். இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகத்தின் பெயர் 'அண்ணாமலை'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    மிகவும் உணர்ச்சி வசப்படும் நிலையில் கலைஞர் உபயோகிக்கும் வார்த்தை 'சும்மா இரு'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் தன் உயிர் மூச்சாகக் கடைப்பிடிக்கும் கொள்கை 'திராவிடம்' இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞருக்கு பிடித்த கிரேக்க அறிஞர் 'சாக்ரடீஸ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞரை கவர்ந்த சோழநாட்டு மன்னன் 'கரிகாலன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ஒருமுறை தேர்தலில் தனது 100 சதவீத ஆதரவை கலைஞருக்கு வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இயற்பெயர் 'சிவாஜிராவ்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ரஜினிகாந்த் சார்பில் கலைஞரிடம் தூது சென்ற பத்திரிகையாளர் 'சோ.ராமசாமி'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    தி.மு.க.வின் மூலம் ஆட்சியைப் பறிகொடுத்தவர் ஜெயலலிதா. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ஜெயலலிதாவை பர்கூரில் வென்ற தி.மு.க. வேட்பாளர் 'சுகவனம்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    ஒரு தேர்தலில் முதல் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை வழங்கிய தொகுதி 'துறைமுகம்', இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    அதில் வென்ற பேராசிரியர் அன்பழகன் சட்டசபையின் முன்னவர் ஆக இருந்தார். இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    நான்காவது முறையாக கலைஞர் முதல்வராக பதவியேற்ற மாளிகையின் பெயர் 'ராஜ்பவன்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞர் என்ற பட்டம் கிடைக்கக் காரணமாக இருந்த நாடகம் 'தூக்கு மேடை'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு 'கிரிக்கெட்'. இதன் கூட்டுத் தொகை ஐந்து.

    நாடே திரும்பிப் பார்க்கும் நலத் திட்டங்கள்

    பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், கண்ணொளி திட்டம், முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம், இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டம், கைரிக்ஷாக்களை ஒழித்தது, குடிசை மாற்று வாரியம், குடும்ப நலத்திட்டம், பெண்களுக்கும் சம சொத்துரிமை சட்டம், ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 20,000 திருமண உதவி, கலப்புத் திருமணத்திற்கும் விதவைத் திருமணத்திற்கும் ஊக்கத் தொகை, ஏழைப் பெண்களுக்கு பிரசவ உதவி, ஏழைப் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, ஆதி திராவிடர் இலவச வீட்டுத் திட்டம், பிற்பட்டோர் நலனுக்கு தனித்துறைகளைத் தோற்றுவித்தது.

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி ஒதுக்கீடு. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, சிறுபான்மை யினருக்கு தனி இட ஒதுக்கீடு.

    பெரியார் நினைவு சமத்துவபுரம், உழவர் சந்தை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், வருமுன் காப்போம்.

    ரூ.2-க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி. இலவச எரிவாயு அடுப்பு. ஏழைகளுக்கு இலவச நிலம், சத்துணவில் வாரம் மூன்று முட்டை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை.

    • கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

    சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

    பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

    இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார். பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார்.

    கதர் ஆடை அணிந்து நாடு முழுவதும் சுற்றினார். காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார் பெரியார். கோட்சாவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    அண்ணாவும் காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கருணாநிதியும் காந்தி மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தார்.

    திராவிட இயக்கத்தின் மதிப்பு கொண்டவர் காந்தியின் பேரன் போபால கிருஷ்ண காந்தி. பெரியாரின் லட்சிய அரசியலை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது அண்ணா, கருணாநிதி என சொன்னவர் காந்தி பேரன்.

    காந்தியின் பேரன் திமுக அரசை பாராட்டி இருப்பது வாழ்நாளில் கிடைத்த மாபெரும் பெயர். தமிழக அரசே கருணாநிதி தான். திமுக ஆட்சியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கிறோம்.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதி சாதனைகளை விளக்கும் விழாவாக நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.

    தொலைநோக்கு பார்வை, மக்கள் மீது பற்றும் கொண்ட தலைவராக கருணாநிதி இருந்தார். கருணாநிதி தொடாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். கருணாநிதி வகுத்த பாதையில் தான் அனைத்து துறையும் பயணிக்கிறது.

    உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

    தலைநகர் சென்னையில் உலகதரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். 25 ஏக்கர் பரப்பளவில், 5000 நபர்கள் அமரும் வகையில் மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்ஷன் சென்னை அமையவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி.
    • இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்றார் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

    சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

    பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறி பொது வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன் என கருணாநிதி எழுதினார்.

    நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை. கருணாநிதி சன்னதியில் உண்மையை பேச வேண்டும். தற்போது, இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • புளியந்தோப்பில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    சென்னை:

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலச்சினையை நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு பேசுகிறார்.

    தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளை மக்கள் பயன்பெறும் வகையில் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சென்னை புளியந்தோப்பில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதன் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் நாளை (2-ந் தேதி) கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலச்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த விழாவில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

    • தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராஜ ரத்தினம் தலைமை தாங்கி னார். மாவட்ட செய லாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

    மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்றார். பொருளாளர் கேட்சன், குளச்சல் சட்டமன்ற பார்வையாளர் அருண், துணை செயலாளர் கரோலின் ஆலிவர் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சற்குரு கண்ணன், லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், பிராங்கி ளின், பாபு, ரமேஷ்பாபு, செல்வம், சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தொழில் முதலீட்டை பெருக்குகின்ற வகையில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய மேலை நாடுகளுக்கு சென்று வெற்றி வாகை சூடி வருகை தரவுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மனதார வாழ்த்துவது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை வருகிற 3-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் 3-ந் தேதி வரை சிறப்பாக கொண்டாடு வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம், நகரம், பகுதி, ஒன்றியம், வட்டம் பகுதி களில் நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள், ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்குதல், நோட்டுப்புத்தகம், எழுது பொருள் வழங்குதல், கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், பட்டி மன்ற கலை நிகழ்ச்சி கட்டுரை போட்டிகளை நடத்துவது. நூற்றாண்டு விழா தொடக்க நாளான வருகிற ஜூன் 3-ந்தேதி குமரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் கிளை கழகங்களிலும் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை விரிவுபடுத்தி புதிய உறுப்பினர்களை தீவிரமாக சேர்ப்பது, ஜூன் 3-ந்தேதி சென்னையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்டம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஜவகர், துரை, ஜீவா மற்றும் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×