என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டமளிப்பு விழா"

    • திருச்சியை அடுத்த சமயபுரம் கே.ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • வெற்றிக்கு ரகசியம் இல்லை, வெற்றி என்பது பயிற்சி மற்றும் செயலின் விளைவாகும் என்றும், பட்டதாரிகளே வாழ்நாள் முழுவதும் கொள்பவர்களாக இருங்கள் என்றும் சிறப்பு விருந்தினர் கேட்டுக்கொண்டார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனர் முனைவர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் முனைவர். எஸ்.குப்புசாமி, கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். டி.சீனிவாசன் மற்றும் கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, சென்னை இன்போசிஸ் லிமிடெட்டின் மேம்பாட்டு மையத்தின் இணை துணைத் தலைவர் மற்றும் தலைவர் சூர்யா பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

    இதில் முதல் 21 தரவரிசையாளர்களைத் தவிர, மொத்தம் 1,223 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி நிறுவனர் முனைவர் கே.ராமகிருஷ்ணன், மாணவர்கள் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை கூறும் வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றார்.

    மேலும், அவர் தனது எழுச்சியூட்டும் கதையுடன், பொறியியல் துறையில் சமீபத்திய போக்குகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன்களை மேம்படுத்தும் பழக்கத்தை வளர்க்கவும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சூர்யா தனது பட்டமளிப்பு உரையில், பட்டதாரிகள் தங்கள் தொழில் சூழலில் வெற்றிபெற உதவும் சில திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவர்களை வலியுறுத்தியதோடு, சரியான பாதையில் கவனம் செலுத்துவதன் மூலம், வாழ்வில் வெற்றியின் உச்சத்தை அடையலாம் எனவும், அதற்கு ஆரோக்கியமான சூழல் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

    வெற்றிக்கு ரகசியம் இல்லை, வெற்றி என்பது பயிற்சி மற்றும் செயலின் விளைவாகும் என்றும் கூறினார். பட்டதாரிகளே வாழ்நாள் முழுவதும் கொள்பவர்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    • திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது
    • விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 49 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் 2019-20 ம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற 588 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் டி.ஜி.பி., எம்.ரவி பட்டங்களை வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:-  மாணவா்கள் கவனத்தை சிதறவிடாமல் உணா்வுப்பூா்வமாகக் கல்வியைக் கற்றால் எளிதில் வெற்றி பெறலாம். பட்டம் பெற்றதுடன் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அதிலும் பெற்றோரைக் கவனிப்பது தலையாய கடமையாகும். இளைஞா்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்த பழக்கமானது இளைஞா்களின் குறிக்கோள், சமூகம் மற்றும் குடும்பத்தை விட்டே விலக்கிவிடும். ஆகவே மாணவா்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.  

    • விருதுநகர் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 20-வது பட்டமளிப்பு விழா நிறுவனர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இயக்குநர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் பல்கலை ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் தங்கராஜ், 511 இளங்கலை, 11 முதுகலை மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். முதல்வர் சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார்.
    • இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன் கலந்து கொண்டு 367 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில்

    23-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசி, ஆண்டறிக்கை வாசித்தார்.

    367 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

    சென்னை இன்போசிஸ் நிறுவன டெக்னாலஜி ஆர்க்கிடெக்ட் அதிகாரி முகமது முனாவர் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 367 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    'கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு' என்ற அவ்வையாரின் கூற்றிற்கு இணங்க, பட்டம் என்பது கற்றலின் ஆரம்பமே ஆகும். தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு மாணவ-மாணவிகள் மென்மேலும் கற்றுக்கொள்ள வேண்டும். நமது நாடு அதிகளவில் பொறியாளர்களை உருவாக்குவதன் மூலம் உலகளாவிய அதிகார மையமாக திகழ்கிறது. எங்கும் தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் முன்எப்போதும் இல்லாத வகையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயம், அறிவியல், உற்பத்தி, தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் நமது நாடு முன்னேறியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் ரிமோட் சென்சிங் பயன்பாடுகள் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறது.

    விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்

    தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் மூலமாக தொலைக்காட்சி, தொலைநிலை கல்வி, தொலை மருத்துவம், வானிலையியல் அனை வருக்கும் எளிதில் சாத்தியமாகிறது.

    வானிலை முன்னறிவிப்புகள், வானிலை கண்காணிப்பு மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

    நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாணவர்கள் சிறந்த லட்சியங்களை எதிர்கால கனவு களாக கொண்டு அதனை அடைய விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்க வேண்டும். முறையான கல்வியுடன் நேர்மை தவறாமலும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். அனைவரிடமும் மரியாதையுடனும், நன்றியுணர்வுடனும் இருக்க வேண்டும். மாணவர்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைய மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி டீன் நாகராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்
    • விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து போராசிரியர்களும், ஊழயர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள ராஜாஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கல்லூரியின் தாளாளருமான எஸ்.ஏ. ஜாய் ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் தருண் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி டீன் நாகராஜன் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து போராசிரியர்களும், ஊழயர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
    • ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும் என்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.

    இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வி சார் இயக்குநர் கோபால்சாமி வரவேற்றார். முதல்வர் சுந்தரராஜ் விழாவை தொடங்கி வைத்தார். டீன் மாரிச்சாமி வரவேற்றார்.

    பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 540 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பதக்கம், சான்றி தழ்களையும் வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமத்தில் இருந்து ஏழை, எளிய மாணவ, மாணவிகள், பயன்பெறும் வகையில் மூத்த தகப்பனாராக இருந்து தாளாளர் சோலைசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி கலை அறிவியல் துறையிலும் சிறந்து விளங்க முடியும். மனதிற்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகமாக மாறி வருவதால் மாணவ-மாணவிகள் அதை கவனத்தில் கொண்டு சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

    அரசு வேலை மட்டுமின்றி தொழில் முனைவோ ராகவும் மாணவர்கள் மாற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்.

    நகரம் மற்றும் கிராமத்தில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு வித்தியாசம் உள்ளது. நகரத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.

    அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பட்டம் பெறுவதை தமிழக அரசின் சார்பில் பாராட்டுகிறேன். கல்லூரி படிப்புடன் நிறுத்தி விடாமல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை புரிந்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் கடற்கரை ராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் ஒருங்கி ணைப்பாளர்கள் சிவகுமார், பிரேம்குமார், ஜெயபாலன் மற்றும் பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கீழக்கரையில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    உலகக் கல்வியுடன் திருக்குரானை மனப்பாடம் செய்து முடித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கீழக்கரை சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் நடந்தது. அதாயி கல்வி குழுமத்தின் சார்பில் சுப்ரீம் நிறுவனர் முஹம்மது நிசார் பாஜில் ஜமாலி, சென்னை மற்றும் கீழக்கரை அதாயி பெண்கள் ஹிப்ளு பள்ளி தலைவர் ஹபிபுல்லாகான், கீழக்கரை அதாயி இஸ்லாமிக் பள்ளி தலைவர் ஜஹுபர் கமால், கீழக்கரை சுன்னத்துல் ஜமாத் பவுண்டேஷன் ஒபூர் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர்-தொழிலதிபர் ஹபிபுல்லா கான் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இதில் குரானை மனப்பாடம் செய்த 25 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் தைக்கா அப்துல் ஓபுர் நன்றி கூறினார். விழாவில் கீழக்கரை பல்வேறு ஜமாத், சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கீழக்கரை சுன்னத்துவல் ஜமாத் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

    • பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • தாங்களும் உயர்நிலை அடையவேண்டும் என வாழ்த்திப்பேசி ஆண்டறிக்கையை வாசித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரியில் 30-வது மற்றும் 31-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இந்த விழாக்களுக்கு அதியமான் கல்வி குழும ஆலோசகரும், முன்னாள் துணைவேந்தருமான முத்துச்செழியன் தலைமை தாங்கினார்.

    எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர் முத்துமணி வரவேற்று பேசுகையில், இங்கு படித்து பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்களைப் போன்று தாங்களும் உயர்நிலை அடையவேண்டும் என வாழ்த்திப்பேசி ஆண்டறிக்கையை வாசித்தார்.

    30 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலை க்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசும்போது அப்துல்கலாமின் கனவுகாணுங்கள் எனும் வாசகத்தை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.

    மேலும், ஒவ்வொரு முறையும் சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் வெற்றியடையலாம் என்று அறிவுறுத்தினார்.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற 31-வது பட்டமளிப்பு விழாவில், முன்னாள் துணைவேந்தரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பெண்ணியல் துறை இயக்குநருமான மணிமேகலை, மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவ மாணவியர், நாளை செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்துமுடிக்க வேண்டும்,

    ஒவ்வொரு மாணவனும் உயர்கல்வி கற்க வேண்டும். இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. கல்வியில் உயர்நிலை அடையும் பொழுது ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக வழமுடியும், வீட்டின் பொருளாதாரமும், நாட்டின் முன்னேற்றமும் உயர்வடையும் என பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

    விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த வீடியோ வேகமாக பரவி மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
    • சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    பெங்களூரு :

    இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடி இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது. லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர்.

    அப்போது பட்டம் பெற வந்த கர்நாடகத்தை சேர்ந்த அதிஷ் என்ற மாணவர் ஒருவர், கலந்துகொண்டு பட்டமளிப்பு பெற்றார். அப்போது அவர் மூத்த ஆசிரியர்களுடன் கைகுலுக்கிய பின்னர், அவர் கன்னட கொடியை தனது கைகளில் பிடித்து பறக்கவிட்டப்படி கம்பீரமாக சென்றார்.

    இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில், நான் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் கன்னட கொடியை கையில் பிடித்தபடி பட்டம் பெற்றேன். இது எனக்கு பெருமையாக உள்ளது என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, கன்னட மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த பதிவை 1,550 பேர் மறுபதிவு செய்துள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடியோவை "லைக்" செய்துள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    • கல்லூரியில் 28-ந்தேதி அன்று பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும் மாணவ மாணவியர்களின் பெயர்ப் பட்டியலை வாசித்தனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28-ந்தேதி அன்று பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் வரவேற்புரை மற்றும் , கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார் . சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்ஜெகநாதன் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 12- வது பட்டமளிப்பு விழாவில் அறிஞர் அண்ணா கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பில் 1130 மாணவ, மாணவியர்களும், முதுகலை பட்டமேற் படிப்பில் 260 மாணவ , மாணவியர்களும், ஆய்வியல் நிறைஞர் ஆராய்ச்சி படிப்பில் 70 மாண,வ மாணவியர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.

    இதையடுத்து நேற்று 13-வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார்.

    விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் மற்றும் கல்விப் புல முதன்மையர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பட்டங்களை வழங்கினார்.

    அவருடைய சிறப்புரை யில், மாணவ மாணவி யர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாட அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர் கல்வியில் ஆராய்ச்சி அறிவில் சிறந்து விளங்க வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன் போல அறிவியல் துறையில் விஞ்ஞானியாக திகழ வேண்டும். பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.

    தேர்வுகளுக்கு முன் தயாரிப்பு மற்றும் திட்டமிடுதல் முக்கியமானதாகும் .கல்வியினால் வறுமை நிலையைப் போக்க முடியும். பட்டப் படிப்புகளுடன் பல்வேறு தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் இளங்கலைப் பட்டப்படிப்பில் 1500 மாணவ, மாணவி யர்களுக்கும் , முதுகலைப் பட்டப்படிப்பில் 500 மாணவ, மாணவியர்களுக்கும், ஆய்வில் நிறைஞர் ஆராய்ச்சிப் படிப்பில் 200 மாண,வ மாணவியர்களுக்கும் பட்டங்களை வழங்கினார். விழாவில் வேளாங்கண்ணி கல்விக் குழுமம் மற்றும் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளர் கூத்தரசன், கல்லூரியின் செயலாளர் சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் விஜயலட்சுமி மற்றும் வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் அனைத்து முதல்வர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும் மாணவ மாணவியர்களின் பெயர்ப் பட்டியலை வாசித்தனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக அளவில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்க பதக்கங்களைப் பெற்றனர். விழா இனிதே நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.

    • மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும், நாட்டிற்கும் சிறந்த ஆளுமைகளாக செயலாற்ற வேண்டும்
    • பிற மாநில மாணவர்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற்று உயர்கல்வி பயில்வது போல் நமது மாநில கிராமப்புற மாணவர்கள் முன்னேற வேண்டும்

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, கல்லூரியின் தாளாளர், பெருமாள் தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் வளர்ச்சிப் பற்றிய அறிக்கையை வாசித்தார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்து விழாப் உரையாற்றினார்.

    பின்னர் பல்கலைக்கழக அளவில் முதன்மைத் தேர்ச்சிபெற்ற மாண வர்களுக்கு பட்டம் வழங்கி பதக்கம் அணிவித்துப் பாராட்டினார்.

    தாளாளர் பெருமாள் தனது தலைமை உரையில், பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும், நாட்டிற்கும் சிறந்த ஆளுமைகளாக செயலாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.

    சிறப்பு விருந்தினர் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் பேசும்போது, பிற மாநில மாணவர்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற்று உயர்கல்வி பயில்வது போல் நமது மாநில கிராமப்புற மாணவர்கள் முன்னேற வேண்டும் என வாழ்த்தினார்.

    கலை, அறிவியல், மேலாண்மை, வணிகவியல் ஆகிய புலங்களில் தேர்ச்சிபெற்ற சுமார் 800 இளங்கலை, 400 முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.

    இவ்விழாவில், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், துறைத்தலைவர்கள், பேராசி ரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டி னை நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    • பட்டங்கள் வழங்கும் விழா விமர்சையாக நடந்தது.
    • யூ.கே.ஜி. படித்து முடித்த மழலையர்களுக்கு தாளாளர் பட்டங்கள் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வேலம்பாளையம் ரிங்ரோட்டில் ஜெய் சாரதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கும் விழா விமரிசையாக நடந்தது. பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி தலைமை தாங்கினார். யூ.கே.ஜி. படித்து முடித்த மழலையர்களுக்கு தாளாளர் பட்டங்கள் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாதிரி பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் என பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பள்ளி பொருளாளர் சுருதிஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×