search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
    • சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் கீழபுத்தரகம் பகுதியைச்சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி சுடர் (வயது30). இவர்களுக்கு சுஷ்மிதா (3), சுபிஷா (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றதாக சுகுமாரின் தாய் பானு, சுகுமாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். முன்னதாக, உறவினர் திவாகர் என்பவர் சுடரிடம் தனியாக பேசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளர். தொடந்து, சுகுமார் காரைக்கால் திரும்பி, காரைக்கால் மாவட்டம் முழுவதும் தேடியும் சுடர் மற்றும் குழந்தைகள் இருப்பிடம் தெரியாததால், நெடுங்காடு போலீசில் சுகுமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுடர் மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.

    • இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
    • தன்னிடம் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஸ்கூட்டியை பறித்து கொண்டதாகவும் புகார்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி வில்லு மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58). இவர் ஞாறான்விளையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜ்.இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் அவர் தம்பி விஜயகுமாரின் மகளை 18 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்தார். இந்நிலையில் பால்ராஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பின்பு அவரது மனைவி வசுமதி, வளர்ப்பு மகள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 4-ம் தேதி வசுமதியும் இறந்து விட்டார். இதனால் அவர்கள் தத்தெடுத்த மகள் தனியாக வசிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அண்ணன் பால்ராஜ் வீட்டில் தனியாக வசித்து வரும் மகளை அழைத்து செல்ல அவரது பெற்ற தந்தை விஜயகுமார் நேற்று இரவு 10 மணிக்கு, சென்றார். அங்கு இருந்த மகளை தன்னோடு அழைத்த போது அவரை அங்கிருந்த உறவினர்கள் அனுப்ப மறுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. இதில் விஜயகுமார் தாக்கப் பட்டார். இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அழைக்க சென்ற போது, கல்லு பாலத்தை சேர்ந்த பத்ரோஸ் ( 52 ), பயணம் பிரவீன்(22), சிதறால் ஜூலியட் (50), பயணம் விஜயகுமார்(52), நாகர்கோவில் ஐடா(42),கலா (43) உள்பட 10 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஸ்கூட்டியை பறித்து கொண்டதாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே விஜய குமார் மீது அவரது மகளும் தனியாக ஒரு புகார் கொடுத்தார். அதில் தான்,தனது வளர்ப்பு தாயார் வசுமதி வீட்டில் வசித்து வருவதாகவும், தற்போது பிளஸ் 2- முடித்து மேற்படிப்பு படிக்க இருப்பதாகவும், இந்த நேரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைக்க முயற்சித்ததோடு, தனது உறவினர் சுரேஷ் என்ப வரை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும், புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பெண்ணின் பெற்ற தந்தை விஜயகுமார், அபிஷேக் ,சசிகுமார், அனுஜ் உள்பட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.வளர்ப்பு தந்தையின் உறவினர்களுக்கு ஆதரவாக பெற்ற தந்தை மீது பெண் புகார் கொடுத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அரும நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அருமநல்லூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கும் சேலம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் என்னையும், என் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதைத்தொடர்ந்து அவரும் சேலத்தை சேர்ந்த சுகன்யா (34) என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டது. அவருடன் தற்பொழுது குடும்பம் நடத்தி வருகிறார். தற்பொழுது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நாகர்கோ வில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவரது மனைவி கனகா(வயது28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கனகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனநல பாதிப்பில் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஞானி பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (36). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதம் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதத்தி ற்கும், யுவராஜிக்கும் அவர்க ளது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து சம்பவத்தன்று வீட்டின் கழிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
    • கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பா ளையம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி வெண்ணிலா (24). இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளது.

    இந்த நிலையில் சந்தோஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சந்தோஷ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதற்கிடையே வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்த போது வெண்ணிலா கழுத்தின் துணிகள் சுற்றிய நிலையில் பிணமாக இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் கதறி அழுதனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது குடிபோதையில் இருந்த சந்தோஷ் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும். தான்தான் மின்விசிறியில் இருந்து உடலை கீழே இறக்கி வைத்ததாகவும் கூறினார். போலீசார் வெண்ணிலாவின் உடலை சோதனை செய்து பார்த்தபோது தற்கொலை செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

    எனவே சந்தோஷ் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் 15 வேலம்பாளையம் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காதலிகளுக்கு விதவிதமான நகைகளும், ஊட்டியில் நிலமும் வாங்கி கொடுத்து அசத்தினார்
    • யாரையும் கூட்டு சேர்ப்பதில்லை, தனியாக சென்று நோட்டமிட்டு கொள்ளை

    நாகர்கோவில் :

    தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள்.

    இதில் கொள்ளை அல்லது நகை பறிப்பில் ஈடுபடும் பெரும்பாலான குற்றவாளிகள் போலீசாரின் கைகளில் சிக்கி விடுவார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தும் போது, திருடியதற்கான காரணம் குறித்து அவர்கள் கூறும்தகவல்கள் போலீசாரை சிலநேரம் வியப்பில் ஆழ்த்தும்.

    பல நேரங்களில் அவர்கள் கூறும் காரணத்தை கேட்டு, இதற்காகவா? திருடினே என்று கேட்டு அவனை உண்டு, இல்லையென ஆக்கிவிடுவதுமுண்டு. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று குமரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்தது.

    நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் மகேஷ் கார்த்திக் என்பவர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.

    வடசேரி போலீசார் இந்த நகை திருட்டு பற்றி விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும் ஒரு நபரின் உருவம் ஒன்றை கைப்பற்றினர்.

    அந்த உருவ படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆனந்த் (வயது 24) என்ற வாலிபர் பிடிப்பட்டார். பார்க்க டிப்-டாப் உடையுடன் காட்சி அளித்த அந்த வாலிபர் மீது முதலில் போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை.

    பின்னர் அவரிடம் விசாரித்த போது அவரது பேச்சும், நடை, உைட, பாவனையும் சந்தேகத்தை ஏற்படுத்த அவரை தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் மகேஷ் கார்த்திக் வீட்டில் திருடியது, ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், திருடியதற்கான காரணத்தை கேட்டனர். அதோடு எப்படி திருடினாய்? திருடிய நகையை என்ன செய்தாய்? கூட்டாளிகள் யார்? என்றும் போலீசார் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர்.

    அனைத்து கேள்விகளுக்கும் எந்த சலனமும் இன்றி ஆனந்த் சிரித்து கொண்டே பதில் அளித்தார். அதன்விபரம்:-

    குமரி மாவட்டத்தில் தான் திருட்டு தொழிலை தொடங்கினேன். இதற்காக யாருடனும் கூட்டு சேரவில்லை. முதலில் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று அங்கு பூட்டிய வீடுகளை நோட்டமிடுவேன்.

    அந்த வீடுகளில் யார் வசிக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வேன். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளையும் பார்த்து கொள்வேன். பின்னர் அந்த வீட்டுக்கு இரவு நேரத்தில் கையுறை மற்றும் காலில் ஷூ அணிந்து செல்வேன். அங்கு கிடைக்கும் பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்துவிட்டு கம்பி நீட்டிவிடுவேன்.

    கொள்ளை அடித்த பணத்தை பெண்களுடன் உல்லாசமாக இருக்க செலவு செய்வேன். ஒரு பெண்ணிடம் மட்டும் இல்லை பல பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது.

    குறிப்பாக பணத்தேவையில் இருக்கும் பெண்களிடம் மட்டுமே தொடர்பு கொள்வேன். முதலில் அவர்களுக்கு முதலில் தேவையான பணத்தை கொடுப்பேன். அதன்பின்பு என் ஆசையை தெரிவிப்பேன். பணம் வாங்கியதால் அவர்களும் நான் கேட்பதை தருவார்கள். அப்போது அவர்களுக்கு நகைகளையும் வாங்கி கொடுப்பேன். இதில் அவர்கள் என்னிடம் மயங்கி விடுவார்கள்.

    இப்படி குமரி மாவட்டத்தில் மட்டும் 6 பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. இவர்களுக்கு திருடிய பணத்தில் விதவிதமான நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன்.

    பெண்களை சந்திக்க செல்வதற்கு ஒருபோதும் கூட்டு சேர்க்க மாட்டேன். அவ்வாறு சேர்த்தால் மாட்டி கொள்வோம். இதனால் நான் இந்த இடங்களுக்கு தனியாகத்தான் செல்வேன்.

    அவர்களிடம் நான் என்ன செய்கிறேன், எப்படி நகை வாங்கி வந்தேன் என்பது பற்றி கூறமாட்டேன், என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவரது அனுபவங்கள் போலீசாருக்கு புதிதாக இருந்தாலும் அவர் திருடிய பணத்தில் ஊட்டியில் நிலம் வாங்கியிருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆனந்த் எங்கெங்கு திருடியுள்ளார்? மொத்தம் எத்தனை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு உள்ளது? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    • உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
    • போலீசார் விரைந்து சென்ற , திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுவேதா (வயது 21), பி.காம். பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர்.

    அதன்படி சுவேதாவுக்கும், வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா மகன் எம்.பி.ஏ. பட்டதாரி லோகநாதன் (27) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் பேசி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

    இருவருடைய திருமணம் நேற்று காலை நடைபெறவிருந்த நிலையில், காதலன் கவியரசனுக்கு சுவேதா செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.

    உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.

    இதனால் காவல் துறையின் உதவி எண் 100-க்கு கவியரசன் தொடர்பு கொண்டு, தனது காதலிக்கு சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க உள்ளனர். எனவே உடனடியாக தடுத்து நிறுத்தி என்னையும், காதலியையும் சேர்த்து வையுங்கள் என தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து காவல் துறை கட்டுப்பாடு அறை மூலமாக வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம், விசாரித்தனர். இதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாழப்பாடி மகளிர் போலீசார், சுவேதாவை மீட்டு காதலன் கவியரசனுடன் சேர்த்து வைத்தனர். மேலும் பாதுகாப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதே சமயம் பாதிக்கப்பட்ட மணமகன் தரப்பினர், திருமணம் நிறுத்தப்பட்டதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். திருமணத்துக்கு நிறைய செலவு செய்துள்ளோம், என புகார் கொடுத்தனர். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

    கோவை:

    திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 17-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்த இளம்பெண், தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

    அப்போது வீட்டில் இருந்த 5 அரை பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு சென்றார். வீட்டில் இருந்த மகள் மாயமானதால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், நேராக அன்னூர் வந்து, தனது காதலனை சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று காதலர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்தபோது, ஏற்கனவே இளம்பெண் மாயமானதாக திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பெண்ணின் பெற்றோர் கொடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அன்னூர் போலீசார் காதலர்கள் 2 பேரையும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

    அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து வந்து, காதலருடன் நின்றிருந்த தங்கள் மகளை பார்த்து அழுதனர். பின்னர் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளிடம் சென்று பேசினர்.

    அப்போது அவரிடம், உன்னை எப்படி எல்லாம் வளர்த்தோம். நீ கேட்டதை எல்லாம் நாங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். உனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அப்படி இருக்கையில் நீ இப்படி பண்ணலமா? என கண்ணீர் விட்டு கெஞ்சி பாசப்போரா ட்டம் நடத்தினர்.

    முதலில் ஒன்றும் சொல்லாமல் இளம்பெண் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து பெற்றோர் மகளிடம் பேசினர். பெற்றோர் பேசிய பேச்சை கேட்டதும் இளம்பெண்ணின் மனது மாறிவிட்டது.

    அவர், தனது பெற்றோரிடம் நான் எனது காதலனை விட்டு, விட்டு உங்களுடனே வந்துவிடுகிறேன். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிய வேண்டாம்.

    ஏனென்றால் நகையை எடுத்து கொண்டு சென்றது நான் தான், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அப்படி என்றால் வருகிறேன் என தெரிவித்தார். பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர்.

    இதையடுத்து இளம்பெண் போலீசாரிடம் நான் எனது பெற்றோருடனே சென்று விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் தனது காதல் கணவர் கட்டிய தாலியையும், கழுத்தில் இருந்து கழற்றி காதல் கணவரிடம் கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றுவிட்டார்.

    இதையடுத்து போலீசார் வாலிபருக்கு அறிவுரைகளை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.
    • இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்திரபிரதேசம்:

    இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள்.

    ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒரு சிலர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடனம் ஆடுகின்றனர்.

    இதுபோல பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.15 ஆயிரம் இழந்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ள சிவிலியன் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.

    இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். மணப்பெண் போல் உடை அணிந்து சொகுசு கார் மீது முன்னால் அமர்ந்து பிரபலமான பாடலுக்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று வீடியோவை பதிவு செய்தார்.

    இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.

    ஒரு சிலர் இது குறித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரங்களை கண்டுபிடித்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறி இளம்பெண் முக்கிய சாலைகளில் காரின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • இளம்பெண் திடீரென மாயமானார்.
    • ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (வயது19). வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென மாயமானார்.

    கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அப்போது கொடுத்த புகாரின் பேரில் கருப்பசாமி என்பவருடன் தங்கியிருந்த அவரை போலீசார் மீட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தந்தை சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மகுண்டு பகுதியை சேர்ந்தவர் சாமி. இவரது மகள் ஜான்சி (வயது 21). இவர் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி போதம்பட்டி அருகே உள்ள வில்லாணியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த பாஸ்கரன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×