என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள்"

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தடை செய்த புகையிலை பொருட்களை எஸ்கேஎம் வளாகம் அருகில் உள்ள கடைகளில் வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண் டேவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது குப்பக்குடியைச்சேர்ந்த சரலப்பள்ளம் நடராஜன் மகன் சண்முகம் (வயது 52) தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை பார்த்த, தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.2600 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீசில் ஒப்படைத்தனர்.ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். மேலும் அவர்களிடம் ஒரு மூட்டையும் இருந்தது.

    இதைப்பார்த்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த மூட்டையை சோதனையிட்டனர். அப்போது அதில் 30 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிங்கநேரியை சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 25), வேல்கண்ணன் (27) தூத்துக்குடியை சேர்ந்த வீரபத்ரன் (32) என்பது தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யனார் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் அய்யனார் தப்பியோட முயன்றுள்ளார்.

    நெல்லை:

    சுரண்டையை அடுத்த வேலப்ப நாடாரூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார்(வயது 32). இவர் நேற்று சேர்ந்தமரத்தில் உள்ள பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனடியாக சேர்ந்தமரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அய்யனார், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 18 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
    • 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின்பேரில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ், பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாலசேகர், பாசில், குணதீபன்(பயிற்சி) ஆகியோரை கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். தொடர்ந்து எஸ்.வி. பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் வந்தது
    • டீக்கடையில் சோதனை செய்து 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தன

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை விற்பனை, லாட்டரி விற்பனை கள்ளச் சந்தையில் மது விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் வந்தது.

    இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடையில் சோதனை செய்து 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பூதாமூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜெயபாண்டியன். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற விருத்தாசலம் காவல்துறையினர் சோதனை செய்ததில் அவரது மாருதி ஆம்னி வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பூதாமூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக் தலைமையிலான வருவாய்த்துறையினர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயபாண்டியணின் கடைக்கு சீல் வைத்தனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திக் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் எடுத்து வந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி வந்ததாகவும் அதனை தனித்தனி குடோன்களில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் கோடங்கிபாளையம் பகுதியில் வேனில் வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் பாப்பம்பட்டி, பெரியகுயிலி மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியம் பூசாரிபாளையம் ஆகிய பகுதிகளில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் 5 வேன்களை கைப்பற்றினர்.இதில் சம்பந்தப்பட்ட பல்லடம் மாணிக்காபுரம் கோல்டன் சிட்டி சுயம்புலிங்கம் மகன் அரவிந்த்ராஜ்(25) , கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜான்சன் மகன் ஜான் சஜு(30), திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த மணி மகன் கவின்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 2109 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருமங்கலம்

    பேரையூர் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது41), லட்சுமிபுரம் பெருமாள் (55) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஞான பிரகாசத்தின் கடைக்கு புகையிலை பொருட்களை இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம்இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    • புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமை யிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

    சோதனையில் கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, அரசு ஆண்கள் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 5 பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 5 கடைகளின் உரிமையா ளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமை யாளர்களை எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாசில், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் குணதீபன், ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புகையிலை பொருட்கள் விற்ற பெட்டி கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பெட்டிகடை உரிமையாளர் பாண்டியராஜனை(33) போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அருப்புக்கோட்டை- மதுரை ரோடு ராமலிங்கா நகரில் உள்ள பெட்டி கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 808 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெட்டிகடை உரிமையாளர் பாண்டியராஜனை(33) போலீசார் கைது செய்தனர்.

    புகையிலை பாக்கெட்டுகளை சப்ளை செய்த சீனி என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் பாலவனத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது தெற்கு பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (32) என்பவர் புகையிலை பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது ஒத்தகுதிரை பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் கோபி செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் மற்றும் போலீ சார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீ சார் அந்த மளிகை கடையில் இருந்த 2.42 கிலோ எடை உள்ள 11 பாக்கெட் புகை யிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் (38) என்ப வரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
    • அந்த கடையில் பரமசிவம் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த கடையில் பரமசிவம் (68) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கடையில் இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் பரமசிவத்தை கைது செய்தார்.

    ×