என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் கல்லூரி"

    • என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகள் குரு பிரியா (வயது 17). இவர் புளியங்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்கொலை

    சம்பவத்தன்று குரு பிரியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குரு பிரியா அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அங்கு தனியறைக்கு சென்று கதவை பூட்டி கொண்ட குரு பிரியா வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது சேலையில் குருபிரியா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    விசாரணை

    தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர்.
    • ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் தருவைக்குளம் எப்.எக்ஸ். தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர்.

    இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ், காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.
    • பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் கோவில்பாளையம் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு எங்களது கல்லூரியில் சிங்காநல்லூரை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பணியில் சேர்ந்தார். அவர் தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் நடந்து வருகிறார். மேலும் அவர் கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியைகளின் செல்போன் எண்களை அவர்களுக்கு தெரியாமல் பெற்று இரவு நேரங்களில் ஆபாச குறுந்தகவல் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.

    இதேபோல பேராசிரியர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களையும் வாங்கி அவர்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச தகவல் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.

    இதனால் பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் என்னிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். நான் அவரை நேரில் அழைத்து கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதல்வர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வரும் பேராசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது.
    • 2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 2019-ம் ஆண்டில் 2 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் 17 தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருந்தன.

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் 7 ஆயிரம் பி.டெக். இடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு சென்டாக் கவுன்சிலிங்கில் 10 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே பங்கேற்றுள்ளது.

    இதில் 3 கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரம்புமா? என்பதே சந்தேகமாக உள்ளது. எனவே இந்த 3 கல்லூரிகளும் விரைவில் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. பி.டெக். படிப்புகள் மீது மாணவர்களிடையே மோகம் குறைந்துள்ளது.

    2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொருளாதார மந்த நிலையின்போது வேலை வாய்ப்பு குறைந்தது. தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தவர்கள் ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனால் என்ஜினியரிங் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்தது. அதேநேரம் கலை, அறிவியல் படிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் சில என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டன.

    இதனால் கடந்த 5 ஆண்டில் 7 என்ஜினீயரிங் கல்லூரிகள் கலை கல்லூரிகளாக மாறிவிட்டன. இந்த ஆண்டு 3 அரசு என்ஜினீயரிங் கல்லூரி, 10 தனியார் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 264 இடங்கள் உள்ளன.

    இதில் 50 சதவீத இடங்களாவது நிரம்பினால்தான் கல்லூரிகளை நடத்த முடியும். இல்லாவிட்டால் கல்லூரிகளை நடத்த முடியாது. இதனால் அரசு ஒதுக்கீடு இடங்களும் குறையும். மாதந்தோறும் தொழில்நுட்பம் மாறுகிறது.

    அதற்கு ஏற்ப மாணவர்களை கல்லூரிகள் தயார்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோரிடம் எழுந்துள்ளது.

    • வழக்கம் போல இ.சி.இ., இ.இ.இ. என்ஜினீய ரிங் பாடப் பிரிவுகளுக்கும் மவுசு குறையவில்லை.
    • பொறியியல் கல்லூரிகளில் காலத்திற்கேற்ப புதிய பாடப்பிரிவுகளை தொடங்குகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 10 நாட்களாக பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றும், வீடுகளில் இருந்தும் விண்ணப்பித்து வருகின்றனர்.

    நேற்று மாலை வரை 91,877 பேர் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளனர். 55,324 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், பாடப்பிரிவுகளில் சேர ஆர்வமாக உள்ளனர். வேலைவாய்ப்புக்கு எளிதாக வழி வகுப்பதால் இந்த பாடங்களை தேர்வு செய்கிறார்கள்.

    அதே நேரத்தில் வழக்கம் போல இ.சி.இ., இ.இ.இ. என்ஜினீய ரிங் பாடப் பிரிவுகளுக்கும் மவுசு குறையவில்லை. பொறியியல் கல்லூரிகளில் காலத்திற்கேற்ப புதியபாடப்பிரிவுகளை தொடங்குகிறார்கள்.

    இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 20-ந்தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டை விட இந்த வருடம் 3 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தனியார் சுயநிதி கலைக்கல்லூரிகளில் பி.காம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. தமிழ், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

    அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். வணிகவியல் பாடத்தில் சதம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பி.காம், பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு கலைக்கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிக்கவே விரும்புகின்றனர்.

    சட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பி.ஏ., எல்.எல்.பி. 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். 22 சட்டக் கல்லூரிகளில் 2,043 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இதுவரையில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

    சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., எல்.எல்.பி. (ஹானர்ஸ்) 5 ஆண்டு படிப்பு உள்ளது. இதில் உள்ள 624 மொத்த இடங்களுக்கு இதுவரையில் 3,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க 31-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
    • பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர் அமைப்பு மற்றும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து கல்லூரி நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமை நடத்தியது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நாகநாதன் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் செய்திருந்தனர். அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி அவரது 10 கட்டளைகளை கடைபிடிப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    • 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது.
    • மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும்1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது.

    இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு சுற்று கலந்தாய்விலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், ஒதுக்கீடு செய்தல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், கல்லூரிகளில் சேருதல், காத்திருத்தல் என்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

    அதன்படி, ஒரு சுற்று கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு, 2 வாரங்கள் வரை ஆகிறது. முதல் சுற்று கலந்தாய்வை பொறுத்தவரையில் கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 10 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்கள் விருப்ப இடங்களில் சேர்ந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. இதில் 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, இதில் 18 ஆயிரத்து 521 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்.

    அவர்களில் 13 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அடிப்படையிலான 2-வது சுற்று கலந்தாய்வில், 1,426 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்த நிலையில், 1,207 பேர் உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

    ஆக மொத்தம் 2-வது சுற்று கலந்தாய்வில், 14 ஆயிரத்து 404 மாணவ-மாணவிகள் கல்லூரிகள் சேர்ந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்து 543 பேர் இடங்களை உறுதி செய்து, முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருப்பதாகவும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த 2 சுற்றுகள் கலந்தாய்வு முடிவில், மொத்தம் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து, என்ஜினீயரிங் 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் நாளை (சனிக்கிழமை) வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்ச்சி விகித பட்டியலில் 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

    என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

    2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

    இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.



    தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

    59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூரியில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
    காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு ‘லிப்டில்’ செக்ஸ் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். #Arrested
    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழக வளாகத்திலேயே மாணவ-மாணவிகள் தங்குவதற்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பி.இ. இன்பர்மே‌ஷன் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இந்த படிப்புக்கான தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிர்வாகம் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆண்கள் விடுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் செட்டி புண்ணியம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் பெண்கள் விடுதியில் உள்ள கழிவு பொருட்களை எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அவர் ‘லிப்ட்’ மூலமாக ஏறினார். அந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவியும் அதே லிப்ட்டில் ஏறினார். லிப்ட் சென்று கொண்டிருந்த போது அர்ஜூன் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    மேலும் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். இதற்குள் அந்த லிப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து திறந்தது.

    உடனடியாக மாணவி அலறியடித்தபடி வெளியே ஓடினார். இதனைக்கண்ட மற்ற மாணவிகள் தொழிலாளி அர்ஜூனை பிடிக்க முயன்றனர். இதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார்.

    மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மறைமலை நகர் போலீசிலும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நேற்று நள்ளிரவு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி சாலையில் வந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வை ஜனவரி மாதத்தில் நடத்தவும், மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Arrested
    அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்யப்பட உள்ளதாக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தெரிவித்தார். #PlasticBan
    சென்னை:

    சுற்றுச்சூழல் கருதி தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்யப்பட உள்ளதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா நேற்று தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அண்ணாபல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்ப உள்ளது.

    இதேபோன்று பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். #PlasticBan
    தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #TNMinister #Anbazhagan
    நெல்லை:

    நெல்லையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அகில இந்திய அளவில் உயர்கல்வி பயில்வோர் 25.2 சதவீதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு உயர்கல்வி பயில்வோர் 46.8 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அது மேலும் 2.1 சதவீதம் உயர்ந்து 48.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து, அடுத்த கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களை விட விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. எனவே எல்லோருக்கும் இடம் கிடைக்கும்.

    வருகிற செப்டம்பர் 1-ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்கவும், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் அதிகம் மாணவர் சேர்கைக்கும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதம் அதிகம் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க தனியார்கள் சார்பாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க பரிசீலனை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Anbazhagan
    என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டாததால் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் அதிகளவு கலைக் கல்லூரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். #artscolleges
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து உயர் படிப்பிற்காக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆன்லைன் மூலமாக கல்லூரி களுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

    என்ஜினீயரிங் படிப்பிற்கு கடந்த சில வருடங்களாக மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லை. பி.இ., பி.டெக் முடித்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் அலைந்து திரிகிறார்கள்.

    உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டதால் பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் படிப்படியாக குறைந்து விட்டது.

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த ஆண்டு மூடப்படுகிறது.

    பல லட்சம் செலவு செய்து 4 ஆண்டுகள் பொறியியல் படித்து முடித்தாலும் அதற்கான வேலையோ, ஊதியமோ கிடைக்காததால் பொறியியல் படிப்பிற்கு பதிலாக கலை-அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்கள் நாடிச் செல்கிறார்கள்.

    ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்து போட்டித் தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மாணவர்கள் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. போன்ற படிப்புகளை தேர்வு செய்கிறார்கள்.

    டி.என்.பி.எஸ்.சி., ரெயில்வே, வங்கி உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் அடிப்படை கல்வித்தகுதி பட்டப்படிப்பாகும். அதனால் இன்றைய மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள்.

    தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட கலை-அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மிக குறைந்த கல்வி கட்டணம் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் ஏழை-எளிய நடுத்தர மாணவர்கள் படிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 7அரசு பி.எட் கல்லூரிகளும், 162 அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளும், 17 பி.எட். கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் இடையே பி.ஏ. ஆங்கிலம், பி.காம் (பொது) பட்டப்பிடிப்பிற்கு அதிக மோகம் ஏற்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வில் 1000 மதிப்பெண்ணுக்குமேல் எடுத்த மாணவ-மாணவிகள் கூட கலைக்கல்லூரிகளில் பி.காம். படிக்கவே விரும்புகிறார்கள். குறிப்பாக சென்னையில் உள்ள மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான உடனே ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கினர்.

    ஸ்டெல்லா மேரி, கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி (எம்.சி.சி.), லயோலா கல்லூரி, அண்ணா ஆதர்ஷ் கல்லுலூரி உள்ளிட்ட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

    அரசு கல்லூரிகளில் ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கின்றனர்.



    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வருவதற்கு முன்பே விண்ணப்பம் வினியோகம் தொடங்கி விட்டது.

    கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் அதிகளவு கலைக் கல்லூரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தனியார் கலைக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெறுவதற்கு போட்டி போடுகிறார்கள். பட்டப்பிடிப்புகளுக்கு மாறி வரும் மாணவர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு தனியார் கல்லூரிகளில் என்ஜினீயரிங் கல்லூரியை போல அதிக கட்டணம் வசூலிக்கவும் செய்கிறார்கள்.

    சென்னையில் மாநில கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, அம்பேத்கார் கலைக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கலைக் கல்லூரிகளிலும் மாணவர்களின் கூட்டம் திருவிழா போல காணப்படுகிறது. #artscolleges
    ×