search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • துப்பாக்கி காட்டி மிரட்டி 20 பவுன் நகையை பறித்து சென்றது.
    • கொள்ளையில் ஈடுபடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே இங்கு வந்து தங்கி இருந்ததாகவும் கூறினார்.

    நாகர்கோவில் : 

    நாகர்கோவில் வேதநகர் மேல புதுத்தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் சாகிப்பிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி 20 பவுன் நகையை பறித்து சென்றது.

    இதுகுறித்து முகமது உமர் சாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலசரக்கல் விளையை சேர்ந்த தர்வீஸ்மீரான் ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரை தேடி வந்த நிலையில் ஷேக்முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம்.2 கோர்ட்டில் சரணடைந்தனர். 3 பேரையும் போலீசார் காவல் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்கள். முக்கிய குற்றவாளியான சார்லசை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று சார்லஸை கைது செய்தனர். கை செய்யப்பட்ட சார்லஸிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொள்ளைக்கு அமீர் மூளையாக செயல்பட்டதாக கூறியுள்ளார்.

    மேலும் கொள்ளையில் ஈடுபடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே இங்கு வந்து தங்கி இருந்ததாகவும் கூறினார். சம்பவத்தன்று காலையில் நாகர்கோவில் பகுதியில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்க சென்றபோது எங்களது முயற்சி பலிக்கா ததால் மாலையில் முகமது உமர் சாகிப் வீட்டில் கை வரிசை காட்ட சென்றபோது சிக்கி கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து சார்லசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.265 கோடி பயன்படுத்தப்படவில்லை.
    • பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.

    மதுரை

    மதுரையைச் சார்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் பழங்குடியினர் நலத்துறைக்கென்று பிரத்யேகமாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இயக்குநரகம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழங்குடி யினர் ஆன்றோர் மன்றத்தின் செயல்பாடுகள் மாற்றிய மைக்கப்பட்டு புதிய அர சாணை வெளியிடப் பட்டது.

    அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சர் தலைவராக கொண்டு அவரின் கீழ் செயலர், இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர்கள், பழங்குடியின அலுவல்சாரா உறுப்பினர்கள், பழங்குடியினர் அல்லாத அலுவல்சாரா உறுப்பினர்கள் என்று மொத்தம் 20 பேர் கொண்ட நிபுணர்கள் குழு 2018 பிப்ரவரி மாதத்தில் நியமிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1.2.2021 அன்று இந்த மன்றத்தின் பதவி காலம் முடிவடைந்து. அதன் பின்னர் 27 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இன்றுவரை ஆன்றோர் மன்றத்திற்கான கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனை தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்கு நரகத்தின் பொது தகவல் அலுவலர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

    வீட்டு மனைப்பட்டா, தாட்கோ கடன், குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வழி அமைத்தல், கல்வி நிலையங்கள் மருத்துவமனை அமைத்தல் போன்ற முக்கிய தேவை களை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குவது ஆன்றோர் மன்ற உறுப்பி னர்களின் பணியாகும்.

    இந்த நிலையில் ஆன்றோர் மன்றம் செயல் படாமல் உள்ளதால் பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.சான்றாக தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.265 கோடி நிதி பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கே திருப்பி ஒப்படைப்பு செய்யப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
    • வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து 104 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயிலில் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் காலை 11.30 மணி அளவில் 101.48 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வழக்கம் போல் அனல் காற்று வீசி வந்த நிலையில் மதியம் திடீரென்று வானிலை மாற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையாக மாறியது. மேலும் இடி மின்னல் மற்றும் காற்று வீசி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டன. இந்த மின்தடை சுமார் 4 முதல் 5 மணி நேரம் நீடித்தது.

    சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்திருந்த நிலையில், இந்த திடீர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடும் வெப்ப சலனம் மற்றும் வெயிலின் தாக்கம் 104 டிகிரிக்கு மேல் இருந்து வந்த நிலையில் ஏன் திடீர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது என வானிலையாளர் பாலமுரு கனிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட அதிக அளவில் வெப்ப சலனம் ஏற்பட்டு சுட்டெரிரக்கும் வெயில் இருந்து வந்தது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வெப்பம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று கேரள மாநிலத்தில் தொடங்காத காரணத்தினாலும் கடலில் ஈர பதக் காற்று நேரம் தவறி வருவதால் கடும் வெப்பம் நிலவி வந்தது. ஆனால் நேற்று மதியம் கிழக்கிலிருந்து வரக்கூடிய ஈரப்பத காற்று சரியான நேரத்திற்கு உள்ளே வந்தது. மேலும் அதிக வெப்ப சலனம் இருந்து வந்த நிலையில் , திடீரென்று ஈரப்பதற்காற்று உள்ளே வந்ததால் வானிலை மாற்றம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

    பலத்த காற்று ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் எப்போதும் மேற்கு திசையில் இருந்து வரக்கூடிய வறண்ட காற்று வெப்ப சலனமாக மாறி அனல் காற்று அதிகரிப்பதாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வெப்ப சலனம் அதிகமாக உள்ள நேரத்தில் திடீர் மழை ஏற்பட்டபோது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கதாகும் என தெரிவித்தார். கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வழக்கமான விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 500- க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேப்பூர் - 75.0 பண்ருட்டி - 71.0 கீழச்செருவாய் - 36.0 லக்கூர் - 19.4 கலெக்டர் அலுவலகம் - 18.0 கடலூர் - 16.4 குப்பநத்தம் - 12.8 மீ-மாத்தூர் - 12.0 வானமாதேவி - 11.2 பெல்லாந்துறை - 9.6 விருத்தாசலம் - 9.0 வடக்குத்து - 8.3 எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 6.0 காட்டுமயிலூர் - 5.0 தொழுதூர் - 4.0 கொத்தவாச்சேரி - 3.0 குறிஞ்சிப்பாடி - 3.0 பரங்கிப்பேட்டை - 2.8 அண்ணாமலைநகர் - 2.2 புவனகிரி - 2.0 சிதம்பரம் - 1.6 என மொத்தம் - 328.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது

    • முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் இயங்கி வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் கார்பரேசன்ஸ் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதலீட்டாளர்களுக்கு டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார்,வாக்காளர் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் குறைதீர்வு சிறப்பு அமர்வு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது என கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார்
    • ஆண்டிமடம் அண்ணங்காரங்குப்பம் அண்ணா பெரியார் திருமணமண்டபத்தில் இந்த குறைதீர்வு அமர்வு நடைபெற உள்ளது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள அண்ணங்கா ரங்குப்பத்திலுள்ள அண்ணா பெரியார் திருமண மண்டபத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு நடைபெறவுள்ளது என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதன் ஒரு மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றியத்தை தேர்வு செய்து வரும் 9 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணியளவில் ஆண்டிமடம் அண்ணங்காரங்குப்பம் அண்ணா பெரியார் திருமணமண்டபத்தில் இந்த குறைதீர்வு அமர்வு நடைபெற உள்ளது.

    இந்த அமர்வில் ஆணைய உறுப்பினர் முன்னிலையில், அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொது மக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் தங்களது பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்னைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள், உடல்ரீதியான தண்டனைக்கு உள்ளான குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை கோருவது, ஆதவற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த மனுக்களை இந்த குறைதீர்வு அமர்வில் நேரடியாக கொடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளை 100 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மதுரை தெற்கு மாவட்டத்தில் 100 நாள்கள் தொடர்ந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் மற்றும் தேனி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அல்லது கூட்டணி வேட்பா ளர்களின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட்டு அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் அவர்களை வெற்றி பெற செய்யவேண்டும். உறுப்பி னர் சேர்க்கையில் திருமங்க லம் தொகுதி தலைமை அறிவித்த இலக்கை தாண்டி சாதனை படைத்து உள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்தவர் களும் இலக்கை தாண்டி புதிய உறுப்பி னர்களை சேர்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்பாண்டி, துணை செயலாளர் லதாஅதியமான், திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, மதன்குமார் பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொருப்பாளர் பாசபிரபு, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், நகர துணை செயலாளர் செல்வம், இளைஞரணி கௌதம், ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதிதிராவிடர்-பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டத்தில் பயன்பெறலாம்.
    • பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோரின் பங்கு குறைவாக இருப்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர்களுக்கென பிரத்தியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழி யும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன், இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுபுழு வளர்ப்பு போன்ற தொழில்கள் தொடங்கலாம். ஆனால் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

    மேலும் அறுவடை எந்திரம் மற்றும் விவசாய உபகரணங்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் கல்யாண மண்டபம், தங்கும் விடுதி, சேமிப்பு கிடங்கு, எரி பொருள் விற்பனை நிலையம் போன்றவை அமைக்கலாம்.

    உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தயாரித் தல், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், நகரும் அலகுகள் கொண்ட சுற்றுலா ஊர்திகள், கலவை எந்திரங்கள், மருத்துவ அவசர ஊர்தி, குளிர்சாதனம் பொருத்திய ஊர்தி உள்ளிட்ட எந்த திட்டமா கவும் இருக்கலாம். இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரி வாக்கம், பல்துறையாக்கம், நவீன மாக்கல், தொழில் நுட்ப மேம்பாட்டு முன்மொழிவு களுக்கும் உதவி வழங்கப்படும்.

    மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 விழுக்காடு ஆகும். மானிய உச்ச வரம்பு ரூ.1.50 கோடி. இத்துடன் கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 விழுக்காடு வட்டி, மானிய மும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தனி நபர், பங்குதாரர் நிறுவனம், ஒரு நபர் கம்பெனி, தனியார் வரைய றுக்கப்பட்ட நிறுவனங்களும் (பிரைவேட் லிமிடெட்) இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற 18 வயது முடிந்து அதிகபட்சம் வயது 55 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65 விழுக்காடு வங்கி கடனாக பெறுவதற்கு 35 விழுக்காடு அரசின் பங்காக முன்முனை மானியமாக வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சிஒன்றியத்திற்கு உட்பட்ட நகரிக்காத்தான், நம்புதாளை மற்றும் பாண்டு குடி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புறங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என அறிந்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேன்மை அடைந்திடும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல் படுத்தி வருகிறார்.

    குடிநீர், போக்குவரத்து, மின் விநியோகம், நீர்ப்பாசனம், சாலைவசதி ஆகியவைகள் எந்த தடையுமின்றி மக்களுக்கு கிடைக்க தேவையான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.

    தமிழ்நாடுகுடிநீர்வடிகால் வாரியம் மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நக ராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சிஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    இதன் மூலம் அனைத்துகிராமத்திற்கும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும். இந்ததிட்டத்தின் மூலம் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது தண்ணீர் சீராக கிடைக்கப்பெறாமல் உள்ள பகுதிகளை கண்டறிந்து லாரிகளில் தண்ணீரை கொண்டு சென்று குடிநீர் விநியோகம் செய்ய தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வைத்திடும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், திருவாடானை ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் முகம்மதுமுக்தார், வட்டாரவளர்ச்சிஅலுவலர் ராஜேசுவரி, திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன், உதவிபொறியாளர்கள் செல்வக்குமார், பாலகுமார், வேதவள்ளி, ஜெயந்தி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • கடலூர் அருகே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த புதுக்கடை பகுதியில் 2 வாலிபர்கள் கையில் கத்தி வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்ததாக ரெட்டிச்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்கள் வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றனர்.

    சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சுதாரித்துக் கொண்டு 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் அவர்கள் கடலூர் செல்லஞ்சேரியை சேர்ந்த தேவா ( 26), மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்த சுமன் (27) என்பது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவா மற்றும் சுமன் ஆகியோரை கைது செய்தனர். சப்- இன்ஸ்பெக்டரை கத்தியால்  வெட்ட முயன்ற சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யானை வழித்தடத்தில் சாலை அமைத்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
    • பர்லியார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குன்னூர் வனப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் காப்பி மற்றும் மிளகு பயிரிடுவதற்காக கனரக வாகனத்தை பயன்படுத்த வழங்கப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதியின்றி சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி கடந்த 20-ந் தேதியே ரத்து செய்யப்பட்டு விட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் கனரக வாகனத்தின் உரிமையாளர் ஆகியோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி குன்னூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கடமைகளை செய்ய தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பர்லியார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சம்பந்தப் பட்ட வருவாய் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் செயலாளர், வனச்சரகத்தின் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. விவசாய பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் விதிமீறல்கள் இருக்கிறதா என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும்.

    மேற்கண்ட குழு உறுப்பினர்கள் தங்களது பணிகளை சரியாக செய்கிறார்களா? என்பதை சம்மந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர், ஆர்.டிஓ, தாசில்தார், வனச் சரக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்க. வேண்டும். மேற்கண்ட பணிகளில் ஏதேனும் சுணக்கம் காணப்பட்டு, புகார்கள் ஏதும் பெறப்படுமேயானால், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களின் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் ரூ.2928 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்படும்.
    • நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒபுளாபடித்துறை பாலம் திறப்பு விழா, அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், திருப்பரங் குன்றம், சேடப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் கட்டப்பட்டு உள்ள 1191 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட தொடக்க விழா ஆகி யவை இன்று மதுரையில் நடந்தது.

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மேற்கண்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி மதுரை மாவட்டத் தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வரு கிறது. அதன்படி ரூ.188 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள், ரூ.2.18 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால், ரூ.21.4 கோடி மதிப்பில் கல்வி வேளாண்மை திட்டப்பணிகள் நடை பெற்றுள்ளது.

    ரூ.15 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. ரூ.347.8 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.58.2 கோடி மதிப்பில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. ரூ.5 கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி கள் நடந்து வருகின்றன. ரூ.2.88 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.7 கோடி மதிப்பில் புதிய சந்தைகள் உருவாக்கப் பட்டுளது. ரூ.6.9 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ரூ.2.50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரூ.2.37 கோடி மதிப்பில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதர மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.54.8 கோடியில் நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சிக்கு இந்த அரசு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.217.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மதுரை மாவட்ட நகராட்சியான மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி யில் ரூ.27.25 கோடி செல வில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள், மயானங்கள், புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. திருமங்கலத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு ரூ.107.46 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாநகராட்சியில் ரூ.717 ேகாடி மதிப்பிலும், நகராட்சிக்கு ரூ.95 கோடி மதிப்பிலும், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்திற்கு ரூ.2008 கோடி என மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2928 கோடியே 30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழ கத்தின் 2-வது தலை நகரமாகவும், கோவில் நகர மாகவும் விளங்கும் மதுரைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், மதுைர மாவட்டத்தில் முத்தாய்ப் பான திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் நேருக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப் பன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி, நகராட்சி நிர்வாக இயக்கு னர் பொன்னையா, கலெக் டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, தி.மு.க. நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து பயனாளிக ளுக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது
    • 1,00,000 நபர்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணையிட்டுள்ளார்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, சமூக பாதுகாப்புத் திட்டத்தி ன்கீழ், தமிழ்நாட்டில் புதியதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வாயிலாக, தமிழ்நாடு அரசு சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களை பாதுகா க்கும் வகையில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிக ளுக்கும் மாதாந்திர ஓய்வூதி யத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது பல்வேறு மாவட்டங்களில், முதியோர் உதவித்தொகைக்கான அனுமதி பெற்று காத்திரு ப்போர் பட்டியலில் 64,098 நபர்கள் மற்றும் புதியதாக 35,902 நபர்கள் என மொத்தம் 1,00,000 நபர்களுக்கு வரும் ஜுன் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1,000 (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500) உதவித்தொகை பெறும் வகையில். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி 1,00,000 நபர்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் சிறுபா ன்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த 7 -ந்தேதி திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து ெகாண்டார். பின்னர், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில், 9 வட்ட த்திற்குபட்ட 950 பயனா ளிகளுக்கு உதவி த்தொகை பெறுவ தற்கான ஆணை ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் வழங்க ப்பட்டுள்ளது. என அவர் கூறியுள்ளார்.

    ×