என் மலர்
நீங்கள் தேடியது "ஊழல்"
- வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த யஸ்வந்த வர்மா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். டெல்லியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில், நீதிபதி யஸ்வந்த வர்மா வீட்டில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தனர். அப்போது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பணம் இருப்பதுபற்றி உச்சநீதிமன்றத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டு, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஊழல் முறைகேடு தொடர்பான புகாரில் சிக்கிய நிலையில், நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, "நீதித்துறையில் ஊழல் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனை. மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையை சார்ந்தவர்கள் இதுப்பற்றி பேசுவது முதல்முறை அல்ல. இது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது"
"நியமனங்கள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை கண்காணிக்க உச்சநீதிமன்றத்திற்கு இதுதான் தக்க தருணம். நியமன விவகாரங்கள் வெளிப்படையாகவும், மிகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் மிகவும் தீவிரமான விவகாரம், பிரதமர் மோடி என்ன கூறினாலும் ஊழல் அதிகரித்துவிட்டது," என்று கூறினார்.
- குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு.
- அப்போது அங்கு நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் கூடி அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.
ரெயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கில் விசாரணைக்கு அஜ்ரரகுமாறு ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
லாலு பிரசாத் நாளை (புதன்கிழமை) பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முன் ஆஜராகுமாறும், மனைவி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன் தெரிவித்தது.
அதன்படி இன்று பட்லிபுத்ரா மக்களவை எம்பி, மூத்த மகள் மிசா பாரதியுடன், ராப்ரி தேவி வங்கி சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவகத்தில் ஆஜரானார். அப்போது அங்கு கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.

லாலு பிரசாத் யாதவ், 2004 -2009 காலகட்டத்தில் UPA அரசில் மத்திய ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரெயில்வேயில் குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிபிஐ அறிக்கையின்படி , ரெயில்வேயில் வேலைகளுக்கு ஈடாக நிலத்தை லஞ்சமாக எழுதித்தருமாறு கூறி தேர்வர்களிடம் லஞ்சம் பெறப்பட்டது.
கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களான மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர், குரூப் D அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் குடும்பத்தினரிடமிருந்து நிலப் பட்டாக்களைப் பெற்றனர் என்று குறிப்பிடடுள்ளது.
இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு நாளை லாலு பிரசாத் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது.
- பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக இன்று நடத்திய போராட்டத்தில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறையின் அறிக்கையால் ஆடிப்போயுள்ள திமுக அரசு, இது தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊழலை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று, உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி.
இதனால் ஆத்திரமடைந்துள்ள திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது. டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள 1000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட முயன்ற பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் சகோதரர் அண்ணாலை, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி, மாநில துணைத் தலைவர் @KaruNagarajan
அவர்கள், மாநிலச் செயலாளர் @VinojBJP
உள்ளிட்ட, தமிழக பாஜக-வின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார். அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை.
வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மீதும், முக்கிய நிர்வாகிகள் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகச் செயலை, உடனடியாக தமிழக காவல்துறை கைவிட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது.
- ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மண்டல தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் கன்னியாகுமரியில் ஊழல் தடுப்புவிழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் சென்று நிறைவடைந்தது. அங்கு ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல உதவி பொதுமேலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.இதில்வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுலா காவலர்கள் திரளாக கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
- தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை
கடலூர்:
சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியலுக்காக ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். 10 ஆண்டுகளாக இருந்த அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. பா.ஜ.க கட்சியினரே அண்ணாமலை ஊழல் பற்றி தெரிவிக்கின்றனர். அண்ணாமலை மீது தி.மு.க. கட்சி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் வழக்கு தொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் அவர் அரசியல் நாகரீகத்தை பின்பற்றவில்லை. மிகப்பெரிய பதவியான ஐ.பி.எஸ் ஆகி ஊதியம் வாங்கியவர், அதை விட்டு எந்த நோக்கத்தில் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். எந்த கனவோடு அரசியல் கட்சியில் இணைந்தாரோ? அதை ஆருத்ரா கோல்டு பைனான்ஸில் அந்த கனவை நிறைவேற்றி விட்டார். தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை. தன்னை பதவியை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளார் என்பதை காட்டுகிறது . இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
- டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதியுள்ள பில்லை காண்பிக்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டாக்டர் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது : பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினர்களின் ஒரு லட்சம் கோடி சொத்து பட்டியலை வெளியிட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு இது ஒன்றும் புதியதாக சொன்னது இல்லை. எல்லாமே தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச்க்கு பில் கேட்டு வருகின்றனர். அந்த பில்லை கூட சரியாக காண்பிக்கவில்லை. இந்த டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதியுள்ள பில்லை காண்பிக்கின்றனர். அதில் சீரியல் நம்பர் மாறி உள்ளது.இரண்டு சீரியல் நம்பர் உள்ளது. ஐபிஎஸ்., படித்தவர் யோசனை செய்து செய்வதை சரியாக செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்து இருக்கலாம். வாட்ச் பில்லில் மாட்டிகிட்டாரு. அவர் சொன்னதற்கு நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. ஊழல் என்பது ஒரு சமூக நோய். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. மேலும் இதில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் விதிவிலக்கு அல்ல.
மேலும் ஊழல் சமூக நோயாக மாறி இருப்பதால் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையே மாறி உள்ளது. எதிர்காலத்தில் எந்த அளவிற்கு மாறும் என்பதை மன வருத்தத்துடன் எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழல் நிலவி உள்ளது. லஞ்ச ஊழலை ஒரு வியாதியாக எடுத்துக் கொள்ள வேண்டும் .அண்ணாமலை சொல்வதில் புதியது ஒன்றுமில்லை அதானி தொடர்பாக கேள்வியை ராகுல் காந்தி எழுப்பியதால் மோடியிடம் பதில் இல்லை. வாட்சுக்கும் சரியாக பில் காண்பிக்கவில்லை.
ஓசியாகத்தான் வாங்கினேன் என தெரிவிக்க வேண்டும். நேர்மை இல்லாத அண்ணாமலையால் அவர் சொல்லக்கூடிய பில்லை மக்கள் நம்ப மாட்டார்கள். ஊழல் என்பது ஒழிக்கப்பட வேண்டும். எதிர்கால சமுதாயம் இதுதான் நாடு இதுதான் வழிமுறைகள் என கெட்டுப் போய் விடக்கூடாது. கெட்டுப் போனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிந்து விடும். சமூக சீர்கேடு நடக்கும். அதனால் ஊழல் என்கிற நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
- நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ள தகவல்கள் தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர்களை கோரி உள்ளனர் என சிஏஜி தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையிலும் முறைகேடு நடந்துள்ளது.
60:40 என்ற மத்திய மாநில அரசுகளின் நிதியில் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு.
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை அதிமுக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது.
5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது.
தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீடிக்கிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய பிரதேச மாநில வீட்டுவசதித் துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
- இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு அலுவலர் வீட்டில் 5 முதல் 7 ஆடம்பர கார்கள் உள்பட மொத்தம் இருபது வாகனங்கள், 20 ஆயிரம் சதுர அடி நிலம், விலை உயர்ந்த இரண்டு டசன் கிர் இன மாடுகள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 98 இன்ச் டாப் எண்ட் டிவி மாடல் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் சோதனையின் போது கண்டறிந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் வீட்டுவசதித்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார் 36 வயதான ஹேமா மீனா. பணியில் சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஊழல்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஹேமாவின் வீட்டில் நடத்திய திடீர் ஆய்வின் போது, அவரின் வீட்டில் இருந்த கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட பொருட்களை கண்டு பிடித்தனர். இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை, மொபைல் ஜாமர்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் முதல் நாளிலேயே ரூ. 7 கோடி மதிப்பிலான சொத்துக்களை கண்டறிந்தனர். இது ஹேமா வாங்கும் மாத சம்பளத்தை விட 232 சதவீதம் வரை அதிகம் ஆகும். ஹேமா முதலில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை தனது தந்தை பெயரில் வாங்கி, அதில் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளார்.
ஆடம்பர வீடு மட்டுமின்றி ரைசன் மற்றும் விதிஷா மாவட்டங்களிலும் நிலம் வைத்திருக்கிறார். முதற்கட்ட ஆய்வுகளின் படி இவர் வீட்டுவசதி வாரிய பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட பொருட்களை கொண்டு தனது வீட்டை கட்டியிருக்கிறார் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இத்துடன் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- தமிழ்நாடு முழுவதும் எத்தனை பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
- தமிழக மக்களை அழிப்பதற்குப் பெயர்தான் 'திராவிட மாடல்' ஆட்சி போலும்! தமிழ்க் குடியை கெடுக்க வந்த தி.மு.க. அரசிற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதும், இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்து இருப்பதைச் சுட்டிக்காட்டினால், இந்தப் பணம் அவர்களுக்குத்தான் செல்கிறது என்றும், தான் ஒவ்வொரு கடையாக வந்து வாங்கிச் செல்கிறார்கள் என்று கடையில் உள்ள விற்பனையாளர் தெரிவிப்பதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் எத்தனை பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். இந்தக் கூடுதல் வருமானம் யாருக்கு செல்கிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
கள்ளச்சாராய கலாச்சாரத்தை, விஷச்சாராய விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றிருக்கிற நிலையில், அரசே சயனைடு கலந்து மதுவை விற்பனை செய்வது என்பது மக்களை அழித்தொழிக்கும் செயல். மொத்தத்தில், டாஸ்மாக்கில் மிகப் பெரிய குளறுபடி, மிகப் பெரிய ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
தமிழக மக்களை அழிப்பதற்குப் பெயர்தான் 'திராவிட மாடல்' ஆட்சி போலும்! தமிழ்க் குடியை கெடுக்க வந்த தி.மு.க. அரசிற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது.
- கடையின் ஊழியரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுபானம் வாங்க சென்ற குடிமகன் கூடுதலாக ரூ.10 கேட்டதால் தன்னிடம் பணம் இல்லை என்றும், நாளை வரும்போது தருகிறேன் என கூறி உள்ளார்.
ஆனால் ரூ.130 மதுபான பாட்டிலுக்கு ரூ.140 கொடுத்தால்தான் சரக்கு கிடைக்கும் என்றும், இல்லையெனில் தர முடியாது எனவும் டாஸ்மாக் ஊழியர் கூறினார். எதற்காக ரூ.10 கூடுதலாக கேட்கிறாய் என கேட்டதற்கு ஒரு சில அதிகாரிகளின் பதவிகளை கூறி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. அதற்காகத்தான் நாங்கள் ரூ.10 கூடுதலாக வாங்குகிறோம்.
அனைத்து அதிகாரிகளுமே பணம் வாங்குகின்றனர். யார்? யார்? பணம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை நான் உனக்கு விளக்கமாக வெளியில் வந்து சொல்கிறேன் என கூறினார். அவர் பேசிய இந்த உரையாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட கடையின் ஊழியரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான்.
- சாதாரண மக்களின் வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது.
குலசேகரம் :
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ரப்பர் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்க பேச்சிப்பாறைக்கு சென்றார். அங்கு கடம்பன்மூடு சந்திப்பில் ரப்பர் கழக பெண் தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் உள்பட ஏராளமானோர் அவருக்கு வரவேற்பு அளித்து கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை வளம் அழிக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையால் தான் குமரி மாவட்டம் செழிப்பாக உள்ளது. அந்த மலையை தகர்த்து கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் குமரி மாவட்டம் இன்னும் சில வருடங்களில் பாலைவனமாக மாறி விடும். இதற்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கூட அரசு கண்டு கொள்ளவில்லை.
அரிக்கொம்பன் யானை தற்போது குமரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் ரப்பர் கழக தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது. அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் தங்களுக்கு 40 ரூபாய் ஊதிய உயர்வுக்கு வருடக்கணக்கில் போராட வேண்டியிருக்கிறது. 5700 ஹெக்டர் பரப்பளவில் இருந்த அரசு ரப்பர் தோட்டத்தை தற்போது பாதிக்கும் கீழாக குறைத்துள்ளனர்.
ரப்பர், தேயிலை தோட்டங்கள் மூலம் கிடைத்த வருவாயை குறைத்து டாஸ்மாக் கடை மூலம் வருவாயை பெருக்க அரசு திட்டமிடுகிறது. மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு கூட போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது. இதனால் மக்களின் மனநிலை கொதிநிலையில் உள்ளது.
அதே வேளையில் மக்களின் நலன் குறித்து கவலைப்படாதவர்களுக்கே மக்கள் வாக்குகளை கொடுத்து வருகின்றனர். மக்கள் கூறும் பிரச்சினைகளை எங்களால் கேட்க தான் முடியும். தீர்வு ஏற்படுத்தும் இடத்தில் தற்போது நாங்கள் இல்லை. ஆனால் நிலைமை ஒரு நாள் மாறும். மக்கள் உண்மையை புரியும் நாள் மிக விரைவில் வரும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சம்பாதிப்பவர்களும், ஊழல் செய்து பணம் சம்பாதிப்பவர்களும் தண்டனை பெற வேண்டும். ஆனால் தற்போது பா.ஜனதா அரசு மேற்கொள்வது தங்களுக்கு பங்கு கேட்டு நடத்தும் சோதனை தான். தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான்.
ஆனால் ஊழல் செய்பவர்களை விமர்சிக்கும் தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை. நமது பக்கத்து கர்நாடகாவைக் கூட உதாரணமாக கூறலாம். ஆவின் நிர்வாகத்தில் குழந்தை தொழிலாளர் விஷயத்தில் அமைச்சர் தவறை திருத்துவதை விட்டு, தவறை மறைக்க முயற்சிக்கிறார். அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் காலம் விரைவில் வரும். மக்களின் புரட்சியால் அது சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சில ஊழல்களை நீதித்துறை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது.
- மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
பெங்களூரு :
கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து எந்த அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து முடிவு செய்வோம். வெவ்வேறு வகையான ஊழல் புகார்கள் உள்ளதால், வெவ்வேறு ரீதியில் குழுக்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. பிட்காயின் முறைகேடு குறித்து விசாரிக்க சைபர் குற்றத்தை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேண்டும்.
சில ஊழல்களை நீதித்துறை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தலுக்கு முன்பு நாங்கள், முந்தைய பா.ஜனதா ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அந்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம். முந்தைய ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின், சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம், மின்துறை என்ஜினீயர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்த இருக்கிறோம்.
மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம். கங்கா கல்யாண் திட்ட முறைகேடு குறித்து விதான சவுதா போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. கல்யாண கர்நாடக வாரிய நிதியிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும்.
விசாரணைக்கு பிறகு ஊழல் செய்தவா்கள் யார் என்பது தெரியவரும். ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.