search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள்"

    • வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.
    • இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

    ரஷ்யாவில் வார இறுதி நாளான [ஞாயிற்றுக்கிழமை] நேற்று [ஜூன் 23] யூத வழிபாட்டுத் தளங்கள் மீதும் போலீஸ் நிலையம் மீதும் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 1 மதகுரு, 14 போலீசார் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.

     

    நேற்று அப்பகுதியில் உள்ள சர்ச்களுக்குள்ளும் Synagogue எனப்படும் யூத வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த அந்த கும்பல் வழிபாட்டுக்காக கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.

    தாக்குதலினால் மகாச்காலா பகுதியில் உள்ள சர்ச் உட்பட இரண்டு சர்ச்கள் தீப்பற்றி எறிந்தன. சம்பவங்களின்போது அங்கு கூடியிருந்த மக்கள் உயிர்பிழைத்த நிலையில் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மேலும் தப்பிச் செல்லும்போது போலீஸ் போஸ்ட் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த மொத்த தாக்குதல்களிலும் இதுவரை 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் உடனடியாக நடந்த்து இல்லை என்றும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்னாள் ரஸ்ய தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹாலில் ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாதிகலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 133 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் உள்ள ஹடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.

    அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.

    • ஒரு வாரத்துக்குள் அடுத்த தீவிரவாத தாக்குதல் நேற்று நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
    • துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்கும்போது அருகில் இருந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டம் தோடா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான். தப்பிய மற்றோரு பயங்கரவாதியை தேடும் பணிகள் டிரோன்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     

    கடந்த ஜூன் 9 ஆம் தேதி காஸ்மீரின் ரைசி பகுதியில் பக்தர்கள் சென்ற பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வாரத்துக்குள் அடுத்த பயங்கரவாத தாக்குதல் நேற்று நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராணுவம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்கும்போது அருகில் இருந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட கிராம மக்கள் வீட்டின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்துகொண்டனர்.

    ராணுவம் பின்னாலயே துரத்தி வரும் நிலையில் விரக்தியிலும் கோபத்திலும் இருந்த அவர்கள் கண்மூடித்தனமாக வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற கிராமவாசி ஒருவரையும் சுட்டுள்ளனர். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்தனர்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து பேருந்து ஒன்றை வழிமறித்து, அதில் பயணித்த பயணிகளைச் சித்திரவதை செய்து பேருந்துக்குத் தீவைத்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    நேற்று (மே 26) கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திராசிண்டாவிலிருந்து தேரா இஸ்மாயில் கானுக்குச் செல்லும் பேருந்தை, தரபன் தெஹ்சில் என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய TTP பயங்கரவாதிகள், பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பேருந்தை தீவைத்து எரித்து சாம்பலாக்கிய பின் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அப்பகுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

     

    • அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.
    • போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் பயங்கரவாத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கடந்த 18-ந் தேதி அன்று தகவல் கிடைத்தது. ரெயில் அல்லது விமானம் மூலமாக குஜராத்துக்கு வந்து பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் விமானத்தில் குஜராத்துக்கு வர இருப்பது உறுதியானது.

    இதன்படி நேற்று முன்தினம் அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் எதிர்பார்த்த படியே இலங்கையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் குஜராத் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது பெயர் முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் என்பதும் தெரிய வந்தது. அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் வந்து இறங்கியதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    உடனடியாக 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் 4 பேரும் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தது உறுதியானது.

    இலங்கையை சேர்ந்த 4 பயங்கரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறு மொழிகள் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து தமிழ் தெரிந்த போலீசாரை வைத்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.

    ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக திகழும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரோடு இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், குஜராத்தில் தாக்குதல் நடத்துவதற்கு அவரது கட்டளைக்காக காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேரும் போலீசாரிடம் இதனை வாக்கு மூலமாக அளித்துள்ளனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுபக்கர் இது தொடர்பாக சில திட்டங்களை தீட்டி வைத்திருந்ததாகவும், 4 பேரும் கூறியுள்ளனர். குறிப்பிட்ட சில தலைவர்கள் மீது எப்போது எங்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நீங்கள் குஜராத்துக்கு சென்று தங்கிய பிறகு சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள் என்றும் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் 4 பேரிடமும் கூறி அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அதற்குள் பயங்கரவாதிகள் 4 பேரும் போலீசில் சிக்கிக் கொண்டனர். பயங்கரவாத சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து 4 பேரிடமும் குஜராத்தில் ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் அகமதாபாத்தில் நானா சிலோடா நகரில் ரகசிய இடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதில் 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்று குஜராத் டி.ஜி.பி. விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி மற்றும் தோட்டாக்களில் பாகிஸ்தான் பழங்குடியினரின் முத்திரை உள்ளது. இதன் மூலம் இந்த தாக்குதல் சதி திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தலைவரான அபுபக்கரோடு இ-மெயில் மூலமாக 4 பேரும் உரையாடிய தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தாக்குதலுக்கான நேரம் பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குஜராத்தில் பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களிலோ அல்லது அவர்கள் காரில் செல்லும்போதோ 4 பேரும் மனித வெடிகுண்டுகளாக மாறி நாட்டையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றவும் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

    குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் ஆகிய 4 பேரும் இலங்கையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் இணைந்தே முதலில் செயல்பட்டுள்ளனர்.

    2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரான அபுபக்கரை சந்தித்து ஐ.எஸ்.அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர்.

    குஜராத்தில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக அபுபக்கர் ரூ.4 லட்சம் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இது முன் பணமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைதான 4 பேரில் முகமது நஸ்ரத்திடம் பாகிஸ்தான் விசா இருந்துள்ளது. அதையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த விசாவை வைத்து நஸ்ரத் பாகிஸ்தான் சென்று வர திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

    4 பயங்கரவாதிகள் மீதும் கூட்டு சதி, நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல், ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்குள் 4 பேர் நாச வேலைக்கு திட்டம் தீட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதை தொடர்ந்து கடைசி கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


    • இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
    • காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அதில், 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

    காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பவம் நடந்த பகுதியில் ராணுவம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பந்திபோரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    • நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர்.
    • 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப் பகுதிகளில் பிணமாக கிடந்தனர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பஸ் பயணிகள் 9 பேரை கடத்திச் சென்றனர். பின்னர் அந்த 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப் பகுதிகளில் பிணமாக கிடந்தனர். அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருந்தனர்.

    அதே போல் அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்-மந்திரி மிர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், துணை ராணுவ படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள்.
    • அடுத்த 3 வாரங்கள் தேர்தல் களம் களை கட்டி காணப்படும்.

    சென்னை:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1½ லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயாராகி வருகிறார்கள்.

    இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், துணை ராணுவ படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்ட திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத செயல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தமிழக உளவு பிரிவு போலீசார், மாநில சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் துறையினர் ஆகியோர் மிகவும் உஷாராக செயல்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் பணிகளில் வேகம் காட்டியுள்ளனர்.

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் "ராமேசுவரம் கபே" ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பான தகவல்கள் 4 நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்த இருவரும் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டம் தீட்டிய தகவலை அடுத்தே தமிழகத்தில் உஷார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக உளவு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, தேர்தல் மற்றும் பண்டிகை காலங்களில் மத்திய அரசிடமிருந்து இதுபோன்ற எச்சரிக்கை தகவல்கள் எப்போதும் வருவது வழக்கம்தான். இருப்பினும் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

    சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ரஷிய தலைநகர் மாஸ்கோவிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்த வகையில் அவர்கள் இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கிறோம் என்றார்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அடுத்த 3 வாரங்கள் தேர்தல் களம் களை கட்டி காணப்படும். இதனால் தேர்தல் களம் இப்போது இருப்பதைவிட பரபரப்பாகவே காட்சி அளிக்கும்.

    இதனை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடக்கூடாது என்பதால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களிலும், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    • பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
    • பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருட்கள் கடத்தல், சதி செயலில் ஈடுபடுதல் என பல்வேறு குற்றச்செயல்களை அவர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்த பயங்கரவாத அமைப்புடன் இந்தியாவில் உள்ள சில மாபியா கும்பல்கள் தொடர்பில் உள்ளனர். பயங்கரவாதிகளுக்கு தேவையான உதவிகளை அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் சண்டிகரில் உள்ள 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.

    • மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
    • பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.

    ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.

    ×