என் மலர்
நீங்கள் தேடியது "ராஜீவ் காந்தி"
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- இதில் பங்கேற்க ராகுல் காந்தி வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார்.
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
- ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி நாளை வருவதாக இருந்தது.
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாளை (மே 21-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை வருவதாக இருந்தது. ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.
- மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.
இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.
- நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
- ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி எம்.பி, ராகுல் காந்தி எம்.பி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றார்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதமர் மோடி எக்ஸ் வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள் என தெரிவித்துள்ளார்.
- ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
- நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றார்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்தச் சூழலில் தனது தந்தை ராஜீவ்காந்தியுடன் தான் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். மேலும் "அப்பா உங்களது கனவுகள், எனது கனவுகள், உங்களின் ஆசைகள், எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள் இன்றும், என்றும் எனது நெஞ்சில் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
पापा,
— Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2024
आपके सपने, मेरे सपने,
आपकी आकांक्षाएं, मेरी ज़िम्मेदारियां।
आपकी यादें, आज और हमेशा, दिल में सदा। pic.twitter.com/lT8M7sk7dS
- வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு சற்று பின்னடைவு இருப்பதாக தகவல்.
- 6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் வடமாநிலங்களில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
மதுரை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் வைத்திருந்த உறவை தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க. முறித்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர்கள் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வின் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து பேசியது அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.
இன்று ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ராகுல்காந்தியின் வீடியோவை பதிவேற்றம் செய்து, அவர் குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் நான் பார்த்து, நெகிழ்ந்து, ரசித்த இளம் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி மக்களுடன் மக்களாக சகஜமாக உரையாடுகிறார்.
- ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன்.
- எக்ஸ் தள பதிவை பாராட்டி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் செல்லூர் ராஜூவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதாவது, ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, `நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவுடன் கூடிய கருத்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதனையடுத்து, பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய நிலையை அறிந்து காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. ஆதரிக்க தொடங்கி விட்டதோ என்று கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்றார். அவருடைய இந்த பதிவானது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரது எக்ஸ் தள பதிவை பாராட்டி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் செல்லூர் ராஜூவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் இன்று திடீரென, ராகுலை பற்றி புகழ்ந்த பதிவை செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார். ஒருவேளை அ.தி.மு.க. தலைமை கொடுத்த அழுத்தத்தால் செல்லூர் ராஜூ, ராகுல் காந்தி குறித்த பதிவை நீக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
- ராஜீவ்காந்தியின் 80-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
- இந்தியாவுக்கான உங்களது கனவை நிறைவேற்றுவேன்.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 80-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரது மகனும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். கொட்டும் மழையில் அவர் நடந்து சென்று மரியாதை செலுத்தினார்.
இந்த புகைப்படத்தை அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் அப்பா ராஜீவ் இந்தியாவுக்கான உங்களது கனவை நிறைவேற்றுவேன், உங்கள் கனவுகள், எங்கள் கனவுகள். உங்கள் போதனைகள் உத்வேகம் அளிக்கிறது.
உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொள்வேன். இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம், நல்லெண்ணத்தின் சின்னம் ராஜீவ் என்று கூறி உள்ளார்.
- ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.
- தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை மறுமலர்ச்சியின் பாதையில் வழிநடத்தி, நவீன இந்தியாவை உருவாக்கிய எழுச்சி நாயகன் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தில் அவரை போற்றி வணங்குவோம்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி.
- ராஜீவ் காந்தி தனது பதவிக்காலத்தில் தேசத்தின் நலனுக்காக உழைத்த உணர்வுப்பூர்வமான பிரதமர்.
- மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை தீர்க்க எந்த எல்லைக்கும் செல்ல அவர் தயாராக இருந்தவர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பம்பாய் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ராஜிவ் காந்தி குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
"ராஜீவ் காந்தி தனது பதவிக்காலத்தில் தேசத்தின் நலனுக்காக உழைத்த உணர்வுப்பூர்வமான பிரதமர். அவர் மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை தீர்க்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தவர்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "80களில், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக, நான் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தேன். சில தனியார் நிறுவனங்கள், அரசு விதித்த அதிகப்படியான கலால் வரியை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. தனியார் நிறுவனங்களின் அந்த கோரிக்கையை நான் நிராகரித்தேன்.
நான் வழங்கிய இந்த தீர்ப்பின் காரணமாக என்னை சந்திக்க நள்ளிரவு 2 மணிக்கு அவரது இல்லத்திற்கு வருமாறு ராஜிவ் காந்தி அழைத்தார். நான் வழங்கியது ஒரு சிறந்த தீர்ப்பு என்று அவர் என்னிடம் தெரிவித்தார்" என்று கோல்சே பாட்டீல் கூறினார்.
- சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.
- விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜரானார்.
கடந்த 2019-ம்ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
- நடிகர் விஜய் நடித்த ‘கோட்' திரைப்படத்தில், மறைந்த விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் திரையில் தோன்றினார்.
- ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்கள், பிரபலங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை:
உலகம் நவீனமயமாக்கலில் வீறுநடை போடுகிறது. புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. இதில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கிறது. இறந்து போன தலைவர்கள், பிரபலங்களை நம் கண்முன்னே தோன்றி பேசுவது போன்று இந்த தொழில்நுட்பத்தால் நிகழ்த்திக்காட்ட முடிகிறது.
நடிகர் விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில், மறைந்த விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் திரையில் தோன்றினார். தி.மு.க. முப்பெரும் விழா- பவள விழாவில், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி தோன்றி தனது கணீர் குரலில் உரையாற்றி தி.மு.க.வினரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.
அதே போன்று ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவில் இதே தொழில் நுட்பத்தில் எம்.ஜி.ஆர். திரையில் தோன்றியதால் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பரித்தனர். மறைந்த தலைவர்கள் மீண்டும் தங்கள் முன்னே தோன்றுவது அரசியல் கட்சி தொண்டர்களை உற்சாகம் அடைய வைக்கிறது. எனவே ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்கள், பிரபலங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சட்டமேதை அம்பேத்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொழில் அதிபர் ரத்தன் டாடா, மைக்கேல் ஜாக்சன் போன்ற மறைந்த பிரபலங்கள் மூலம் தோன்றும் கேரல்ஸ் பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
அதுபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள ஏ.ஐ. தொழில் நுட்ப படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன், அவருடைய பேரனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இருப்பது போன்ற ஏ.ஐ. படமும் வைரலாகி வருகிறது.