search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174123"

    • தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார்.
    • உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது தந்தை வாசு. தாயார் மணி (54). ஜீவா என்கிற தங்கை உள்ளார். பிரபு மற்றும் அவரது தங்கை ஜீவா ஆகியோர் சிறுவயதில் இருந்தபோதே தந்தை வாசு இறந்து விட்டார்.

    தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார். இதனால் பிரபுவுக்கு உயிருடன் உள்ள தனது தாயாருக்கு சிலை வடித்து கோவில் கட்ட வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆசையாக இருந்து உள்ளது.

    தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள தாயாரை பெருமைபடுத்தும் வகையிலும், நன்றி கடன் செலுத்தும் வகையிலும் தனது வீட்டிற்கு அருகே 1,200 சதுர அடி நிலம் வாங்கி, கோவில் போன்று கட்டி அதில் 3 அடி உயரத்தில் தனது தாயாருக்கு சிலை வைத்து உள்ளார்.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    இது குறித்து பிரபு கூறியதாவது:-

    நான் சிறுவயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்து விட்டார். பல்வேறு கஷ்டங்களை சந்தித்து என்னை வளர்த்த தாயாரை கவுரவப்படுத்த நான் எண்ணினேன். இறந்த பின்னர் பிண்டம் வைத்து திதி கொடுப்பதை விட, உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது.

    இத்தாலியன் மார்பிள்ஸ் கல் மூலம் ரூ.1.50 லட்சம் மதிப்பில் வெள்ளை நிறத்தில் செதுக்கப்பட்டு உள்ள இந்த சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக இறந்தவர்களுக்கு தான் சிலை வைப்பார்கள். ஆனால் உயிருள்ள ஒருவருக்கு சிலை வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாயின் சிலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    உயிருடன் இருக்கும் எனக்கு மகன் சிலை வைத்து இருப்பது பெருமையாகவும், நெகிழ்வாகவும் இருப்பதாக பிரபுவின் தாயார் மணி கூறினார்.

    • அனுமன் சிலை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செந்துறை வந்தது
    • பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று வழிபாடு செய்தனர்

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி பல கோடி மதிப்புள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது. இது குறித்து அப்போது கோவில் தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் செந்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    இந்த வழக்கை தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜாராமன் இணையதளம் மூலம் இந்த சிலை ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டதை கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அப்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமன் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் ஒப்படைத்தார்.

    10 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட இந்த சிலையை உடனடியாக மீட்டு தங்களது கிராமத்திற்கு கொண்டு வந்து கோவிலில் வைத்து வழிபாடு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளையும் கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வெள்ளூர் கிராமத்திற்கு வந்த சிலைத்தடுப்பு பிரிவு போலீசார் கோவிலை ஆய்வு செய்து விட்டு சிலையை கும்பகோணம் சிலைத் திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிலையை கோவிலில் வைத்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து நேற்று ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் கிராம மக்களிடம் ஒப்படைத்தார்.பின்னர் கிராம மக்கள் சிலையை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து புனித நீரால் அபிஷேகம் செய்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சைஷேஸ்குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2012 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஆஞ்சிநேயர் சிலை இன்று சொந்த ஊரில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டது.

    இந்த சிலை 16 ஆம் நூற்றாண்டான விஜய பேரரசு காலத்தை சேர்ந்தது. இச்சிலை ஐம்பொன் சிலை ஆகும். இது 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (41 லட்சம் ரூபாய்) விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இன்று அச்சிலை பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை தொடர்ந்து கோவிலில் வழிபாட்டிற்கு வைக்கப்படும். இதனுடன் கடத்தப்பட்ட மற்ற 3 சிலைகள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்க்கு கடத்தப்பட்ட 23 சிலைகள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 64 சிலைகள் மீட்க முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் உள்ள 15 சிலைகளை மீட்க இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார ஒப்பந்த சட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள சிலைகள் உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. அதனையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, சிலை கடத்தல் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான போலீசார் இருந்தனர்.

    • தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • அவரது சிலைக்கு அடிக்கல் நாட்ட முயன்ற பேரவை நிறுவனர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்

    தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்ட பாலம் ரவுண்டானா பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பரமக்குடி 5 முக்கு ரோட்டில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

    ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் பரமக்குடி ஒட்டப்பாலம் ரவுண்டானா பகுதியில் தடையை மீறி தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்காக திரண்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற எஸ்.ஆர்.பாண்டி யன் தலைமையில் அணி வகுத்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

    மண்டல செயலாளர் மங்களராஜ், செயலாளர் மருதகுமார் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்ட துரை பழனி, மாவட்ட செயலாளர் தவஅஜித், தமிழக தேசிய கழக மாநில இளைஞரணி செயலாளர் சண்முக பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் வனங்கை பாலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் மகாலில் வைத்தனர்.

    • ராமநாதபுரத்தில் அம்பேத்கர்-பெரியார் சிலை அமைக்க வேண்டும்.
    • தெருமுனை பிரசார கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண் மனை முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் அம்பேத்க ரின் 132-வது பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

    ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தை சிவா முன்னிலை வகித்தார். இந்திய இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார்.

    பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன், ஐந்திணை மக்கள் கட்சி மாநில ஒருங்கி ணைப்பாளர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாத புரத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை அமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம்,கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிசை படு கொலை ெசய்ததை வன்மையாக கண்டிக்கி றோம். அவரை கொலை செய்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பிர சாரத்தில் அருந்ததியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
    • 25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அமைப்பு செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

    மாநிலத் தலைவர் மூர்த்தி, வழக்கறிஞர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுப்ரமணியன், அன்பான ந்தம், வேலூர் முருகேசன், சங்கர், திருவண்ணாமலை சுப்பிரமணியம், தஞ்சை முனிசிபல் காலனி நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாநிலத் தலைவர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சையில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைக்க அனுமதி கொடுத்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கே .என். நேரு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பணிக்காக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த மேயர் சண். ராமநாதனுக்கும் நன்றி. மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிவு அடைந்ததும் சிலையை விரைவில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார்.

    • கொள்ளிடம் ஆற்றில் 2 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது
    • குளித்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு தட்டுப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது காலில் கடினமான ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த இளைஞர்கள் நீருக்குள் மூழ்கி காலில் தட்டுப்பட்டதை வெளியே எடுத்துள்ளனர்.

    அப்போது அது சாமி சிலை என்பது தெரிய வந்தது.இதனால் மீண்டும் நீருக்குள் மூழ்கி இளைஞர்கள் வேறு ஏதேனும் சாமி சிலை உள்ளதா என்று அலசியபோது, மேலும் ஒரு சாமி சிலை கிடைத்துள்ளது. நீரில் இருந்து வெளியில் கொண்டு வந்து பார்த்த போது சுமார் 3 அடி உயரம் கொண்ட தட்சணாமூர்த்தி, 2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலைகள் என்பது தெரியவந்தது. இது குறித்து வருவாய் துறையினருக்கு இளைஞர்களும், அப்பகுதி பொதுமக்களும் தகவல் தெரிவித்தனர்.


    • மதுரையில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு வெண்கல சிலை-மணி மண்டபம் அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    30 ஆண்டு காலமாக இந்த சட்டமன்றத்தில் பணியாற்றியவரும், ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் நின்று வெற்றி பெற்ற பசும்பொன் தேவர் தந்த பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா, தற்போது கொண்டாடப்படும் இந்த வேளையில் அவருக்கு இந்த அரசு வெண்கல சிலை அமைத்தும், மணிமண்டபம் உருவாக்கியும், அவரது பிறந்த பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    மதுரை மண்ணின் மைந்தன், இசை பேரரசர், பத்மஸ்ரீ. டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவர் சென்னையில் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியதற்கு, மதுரை மக்களின் சார்பாகவும், குறிப்பாக சவுராஷ்டிரா மக்களின் சார்பாகவும் தமிழக முதல்-அமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிலை

    மேலும் அவருடைய திருவுருவச்சிலை மதுரை யில் வைப்பதற்கு இடம் தேர்வு செய்திருப்பதாக கேள்விபட்டேன். அதே இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கி றேன்.

    அதே போலவே மதுரை மண்ணில் பிறந்த இசைக் குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியை கவுரவிக்கும் வகையில் சென்னையிலோ, மதுரையிலோ சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைத்து தர வேண்டும்.

    கூட்டுறவு வரலாற்றில் இல்லாத வகையில் ஜெய லலிதா, மாற்றுத்திறனாளி களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ஆணையிட்டதன் பேரில், 2011 முதல் 2021 வரை, 69 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 292 கோடி ரூபாய் கடன் வழங்கி 2 முறை தேசிய அளவில் குடியரசு தலைவரிடம் விருதை நானே பெற்று வந்துள்ளேன்.

    கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி நடத்தினர். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சி யர்கள், பணி நியமனம் செய்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் பாகு பாடின்றி உறுப்பினர்களை சேர்க்க அனுமதித்து, தேர்தலை எவ்வித புகார் களின்றி நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருப்பூர் நகரத்தின் மையமாகவும் அடையாளமாகவும் டவுன்ஹால் கட்டிடம் இருந்து வந்துள்ளது.
    • ஸ்மார்ட்சிட்டிக்காக பழைய கட்டிடத்தை இடித்து புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு வருகின்றது .

    திருப்பூர் :

    அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சவுடேஸ்வரி நற்பணி மன்றத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் குமாரனந்தபுரத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருப்பூர் மண்டல தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தேவராஜ் ,பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பூர் நகரத்தின் மையமாகவும் அடையாளமாகவும் டவுன் ஹால் கட்டிடம் இருந்து வந்துள்ளது.இதனை தேவாங்க சமூக வள்ளல் ரங்கசாமி செட்டியார் நினைவாக அவரது குடும்பத்தினர் தானமாக திருப்பூர் மக்களுக்காக வழங்கினர். 1955-ம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது ஸ்மார்ட்சிட்டிக்காக பழைய கட்டிடத்தை இடித்து புதுப்பொலிவுடன்கட்டப்பட்டு வருகின்றது .

    இந்த கட்டிடத்திற்கு ஏற்கனவே இருந்து வந்த ரங்கசாமி செட்டியார் நினைவு ஹால் என்ற பெயரினை மீண்டும் சூட்ட வேண்டும். மேலும் ரங்கசாமி செட்டியார் சிலை மற்றும் மணிமண்டபம் கட்டித் தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், நகராட்சி துறை அமைச்சர், திருப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

    • பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் உருவசிலை.
    • விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் தட்சிணபண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இங்கு விஸ்வ வித்யாலயா பாடசாலை செயல்படுகிறது.

    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர்.

    கோயில் மற்றும் பாடசாலை வளாகத்தில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திரு உருவம் பிரதிஷ்டை செய்து திறப்பு விழா நடந்தது.

    சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சதர் குத்துவிளக்கேற்றினார். பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    அம்மன் பேட்டை ராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சொரூபானந்தா மகராஜ் சுவாமி விவேகானந்தரின் லட்சியம் குறித்து பேசினார்.

    கும்பகோணம் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார்.

    இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க மாவட்ட தலைவர் சதீஷ்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அசோக்குமார், பா.ஜ.க மூத்த நிர்வாகி அண்ணாமலை, நகர பொருளாளர் வேதம் முரளி, வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விட்டல் ருக்மணி விஸ்வ வித்யாலயா மாணவர்களின் சார்பில் விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    நிர்வாக பொறுப்பாளர் பஞ்சாபிகேசன் நன்றி கூறினார்.

    • கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துள்ளது
    • சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

    கடல் நடுவில் இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் இந்த சிலை அடிக்கடி உப்பு காற்றினால் சேதம் அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

    133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

    அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மன்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்ட இரும்பு பைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த பணி நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து இயக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்று ஜெய் சிவராமர் கோவில் உள்ளது.
    • இக்கோவில் 12 அடி உயரத்தில் வீர அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்று ஜெய் சிவராமர் கோவில் உள்ளது.

    இக்கோவில் நிர்வாகி சந்திரசேகர் மற்றும் பக்தர்கள் முயற்சியால், 12 அடி உயரத்தில் வீர அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் ஆகம முறைப்படி கைதேர்ந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த வீர அனுமன் சிலை, அங்கிருந்து லாரியில் வாழப்பாடிக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று, சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பக்தர்கள் வழிபாட்டுக்கு பின், பிரத்தியேக செயற்கை குளம் அமைத்து

    இச்சிலை தண்ணீரில் வைக்கப்பட உள்ளது.

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேச்சு
    • வசதிகளை அதிகரித்தால் கன்னியாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்றத்தில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சமர்ப்பித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பி னர் விஜய்வசந்த் பேசிய தாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த தேவை யான நடவடிக்கை களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்க குஜ ராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்தது போன்று கன்னி யாகுமரியில் பெருந்தலைவர் காமராஜ ருக்கு சிலை அமைக்க வேண்டும்.

    மேலும் குமரி மாவட்டத் தில் தேவையான ரெயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி கள் இல்லாததால் கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வர பிற மாநில மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுற்றுலா பணிகள் பயன் பெறும் வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக கன்னி யாகுமரிக்கு வரும் ரெயில்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்தி குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும்.

    ஒரு புறம் கடலாலும் மற்றொரு புறம் மலைகளா லும் சூழப்பட்டு பச்சை பசேல் என இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத் தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தரு கின்றனர். ஆனால் வசதி களை அதிகரித்தால் கன்னி யாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும். மேலும் மிகப் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டு தலங்களை கொண்டி ருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வழி பாட்டுத் தலங்களை மேம்ப டுத்தி ஒரு ஆன்மீக சுற்றுலாத் தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும்.

    மகா சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் அமைந் துள்ள 12 சிவாலயங்க ளுக்கு இடையே சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் மூலம் இந்த கோவில்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தி மக்கள் அதிகமாக இந்த கோவில்களுக்கு சென்று வர கோவில்களின் சுற்று வட்டம் மற்றும் இணைப்பு சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளை சீர மைத்து மேம்படுத்தினால் இந்த கடற்கரைகள் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாறி லட்சக்க ணக்கான சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்க முடியும். மேலும் அழகான மலைத்தொடர்கள், அருவி கள், அணைகள் என சுற்று லாவுக்கு தேவையான அனைத்தையும் வரமாக பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிக கவனம் செலுத்தி சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு அது வேலைவாய்ப்புக்கான வழிவகையை செய்து தரும்.

    குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டே லுக்கு 600 அடி உயரத்தில் சிலை அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்த்தது போல கன்னியாகுமரியிலும் முன் னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜ ருக்கு வானளாவிய சிலை அமைத்து உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண் டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    ×