search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிச்சடங்கு"

    • தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார்.
    • 'ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை கொள்ளையடித்தது'

    ஷோரூமிற்கு வெளியே ஓலா [OLA] மின்சார ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்ற அந்த நபர் மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஆனால் அடிக்கடி ஸ்கூட்டர் பழுதாகி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஓலா நிறுவனத்தின் மீது அதிருப்தியிலிருந்த சாகர் சிங், தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார். ஷோரூமின் முன்னாள் நின்றுகொண்டு மைக்கில் சோகப் பாடல்களைப் பாடத்தொடங்கினார்.

    இதனால் அவரை சூழ்ந்து மக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். சல்மான் கான் படத்தில் வரும் பிரபல சோகப் பாடலான Hum Dil De Chuke Sanam பாடலை சோகமான குரலில் ஓலா ஸ்கூட்டரை நோக்கி அவர் பாடியது அங்கிருந்தவர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

    'ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை தண்டித்தது, கொள்ளையடித்தது' என்று பொருள்படும்படி அவர் அந்த பாடலை பாடியதே மக்களின் சிரிப்பலைக்குக் காரணம் ஆகும். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மின்சார வானங்கள் பழுது பட்டும், திடீரென வெடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பாராளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.
    • குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 67). திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர். இவருக்கு கமலவதனம் என்பவருடன் திருமணம் முடிந்து செல்வப்பிரியா, தர்ஷினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில், இவர் தனது சிறுவயதில் இருந்தே கம்யூனிஸ்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட தொடங்கினார். மேலும், மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும், மாவட்ட, மாநில பொறுப்புகள், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், மாநிலக்குழு உறுப்பினர், தேசியக்குழு உறுப்பினர், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்தார். இவர் திருவாரூர் மாவட்ட துணை செயலாளர், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இப்படி பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்ட இவர் கடந்த 1989-ம் ஆண்டு நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று, முதல்முறையாக மக்களவைக்கு சென்றவர். அதனைத் தொடர்ந்து, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பாராளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.

    இப்படி தனது தொகுதி மக்களுக்காக குறள் கொடுத்து போராடி வந்த இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்ளும் சிகிச்சையும் பெற்றுள்ளார். அந்த நிலையிலும் கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதி பிரச்சினைகளிலும் ஓய்ந்து விடாமல் முனைப்போடு செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

    இந்நிலையில் செல்வராசு எம்.பி.க்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.40 மணி அளவில் திடீரென காலமானார். இந்த செய்தி அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

    இவரது இறுதிச்சடங்கு திருவாரூர் மாவட்டம், சித்தமல்லி கிராமத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

    • புற்றுநோய் பாதிப்பு காரணமாக சஜனா இறந்துவிட்டார்.
    • சஜனாவின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அசோக் நாயரையும் கவலையில் ஆழ்த்தியது.

    திருவனந்தபுரம்:

    உடல் உறுப்பு தானம் பற்றி மக்களிடம் தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளைச்சாவு நிலைக்கு சென்ற பலரின் உடல் உறுப்புகளை அவர்களது குடும்பத்தினர், உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்குகிறார்கள்.

    இதன் காரணமாக உடல் உறுப்புகள் பாதித்து அவதிப்படும் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், நுரையீரல் உள்ளிட்ட மனிதன் வாழ அவசியமான முக்கிய உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. அது மட்டுமின்றி எலும்புகள், எலும்பு மஜ்ஜை, தோல் உள்ளிட்டவைகளும் தானமாக வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு உடல் உறுப்பு தானம் பெற்றதன் மூலம் மறுவாழ்வு பெறுபவர்கள், தங்களுக்கு உடல் உறுப்பு வழங்கியவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்துவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். ஆனால் அதனையும் தாண்டி சில உணர்வு பூர்வமான சம்பவங்களும் அரங்கேறும்.

    அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. தனக்கு இதய தானம் வழங்கிய ஒரு வாலிபரின் தாய் இறந்து விட்ட நிலையில், அவருக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்குள் அனைத்தையும் மகன் ஸ்தானத்தில் இருந்து செய்துள்ளார்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி ஷாஜி-சஜனா. இவர்களது மகன் விஷ்ணு, மகள் நந்தனா. இந்நிலையில் விஷ்ணு விபத்தில் சிக்கினார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு நிலைக்கு சென்றார்.

    இதனால் அவரது குடும்பத்தினர் துடித்து போகினர். விஷ்ணு தங்களு டன் வாழப்போவதில்லை எனபதை நினைத்து மனம் உடைந்தனர். அந்த நேரத்தில் விஷ்ணுவின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவுக்கு வந்தனர். அதன்படி விஷ்ணுவின் சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் கீழ் தானமாக வழங்கப்பட்டது.

    மேலும் உறுப்புகளை தானம் பெறுபவர்கள் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விஷ்ணுவின் குடும்பத்தினர் வைத்தனர். விஷ்ணுவின் உடல் உறுப்பு கள் 4 பேருக்கு பொருத்தப்பட்டன. விஷ்ணுவின் இதயம் பத்தினம்திட்டாவை சேர்ந்த அசோக் நாயர்(வயது44) என்பவருக்கு பொருத்தப்பட்டது.

    அவர் அறுவை சிகிச்சை நாளில் விஷ்ணுவின் தாய் சஜனாவை சந்தித்தார். அப்போது தான், சஜனா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததை அசோக் நாயர் அறிந்துகொண்டார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையிலும், தனக்கு தன்னுடைய மகனின் இதயத்தை தானமாக வழங்கியதை நினைத்து அசோக் நாயர் நெகிழ்ந்து போனார்.

    தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து வழக்கம்போல் வாழ தொடங்கிய அசோக் நாயர், சஜானாவை தவறாமல் சந்தித்து வந்தார். மேலும் தனக்கு இதயத்தை தானமாக வழங்கிய விஷ்ணு பற்றிய விவரங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

     

    சஜனா மற்றும் அவரது மகன் விஷ்ணு

    சஜனா மற்றும் அவரது மகன் விஷ்ணு

    அப்போது விஷ்ணுவுக்கு அவரது தாய் சஜனாவை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்துகொண்டார். இதனால் சஜனாவுக்கு தேவையான அனைத்தையும் செய்து மகனாகவே அசோக் நாயர் மாறினார். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சஜனா இறந்துவிட்டார்.

    சஜனாவின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அசோக் நாயரையும் கவலையில் ஆழ்த்தியது. சஜனாவுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை மகன் ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டும் என்று விஷ்ணுவின் தந்தை கேட்டுக்கொண்டார்.

    அதன்பேரில் சஜனாவின் இறுதிச்சடங்கை மகன் ஸ்தானத்தில் இருந்து அசோக் நாயர் செய்தார். மேலும் சஜனாவின் உடலுக்கு அவரே தீ மூட்டினார். இது சஜனாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற விஷ்ணுவின் குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரையும் கண்கலங்க செய்தது. 

    • இளம்பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டாக அனாதையாக இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்துவருகிறார்.
    • டெல்லியில் இதுவரை சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்தவர் பூஜா ஷர்மா. இவர் ஷாஹ்தரா பகுதியில் வசித்து வருகிறார். மருத்துவமனைகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருக்கும் பல உடல்களுக்கு பூஜா ஷர்மா இறுதிச் சடங்குகளைச் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

    கடந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பம் அல்லது உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்துள்ளேன்.

    30 வயதான எனது மூத்த சகோதரர் ஒரு சிறிய சண்டையில் என் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும் என் தந்தை கோமா நிலைக்குச் சென்றார். தனது சகோதரனுக்கான இறுதிச்சடங்குகளை நானே செய்தேன். அப்போதிருந்து இந்த சேவையை செய்துவருகிறேன்.

    ஆரம்பத்தில் குடும்பங்கள் அல்லது இருப்பிடம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற நான் காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டேன். அதன்பின் இப்போது காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகள், உரிமை கோரப்படாத உடல்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்கின்றன.

    இறுதிச்சடங்குகள் செய்ய சுமார் 1,000 முதல் 1,200 ரூபாய் வரை ஆகும். நான் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் தங்கியிருக்கிறேன். எனது தந்தை கோமாவில் இருந்து விடுபட்டு தற்போது டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராகப் பணிபுரிகிறார். எனது தாத்தாவின் ஓய்வூதியத்தில் நான் இவற்றை செய்து வருகிறேன்.

    இந்தப் பணிகளை செய்வதற்காக பல சவால்களை எதிர்கொண்டு வருகிறேன். நான் செய்யும் வேலையை பலர் தடையாகப் பார்க்கிறார்கள். என்னைச் சந்திக்க விடாமல் என் நண்பர்களை அவர்களின் குடும்பத்தினர் தடுக்கின்றனர். இந்தப் பணிகளைச் செய்வதால் எனது திருமணத்திற்கும் பல தடைகள் வருகின்றன என தெரிவித்தார்.

    உரிமை கோரப்படாத உடல்களுக்கு ஒரு பணியாக தன் சொந்த செலவில் மனமுவந்து இறுதிச்சடங்கு செய்து வரும் இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • செட்டிக்குறிச்சி ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி காலமானார்.
    • அவரின் இறுதிச்சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும்.

    மதுரை

    மதுரை காவேரி மஹால் மறைந்த கே.வி.கே.ராஜேந் திரபிரபுவின் மைனத்துன ரும், அசோகா பேலஸ் உரி மையாளர் மறைந்த செட்டிக் குறிச்சி எஸ்.ஏ.ஜே.ராஜேந்திரனின் மனைவியும், எஸ். ஏ.ஜே.ஆர்.அசோக்குமா ரின் தாயாரும், மதுரை பி.டி.ஆர். அகாடமி மற்றும் பி.ஆர்.பி. ஏஜென்சி டாக்டர் ஆர்.பி.திருப்பதி ராஜின் பெரியம்மாவும், மதுரை சரஸ்வதி பவனம் லாட்ஜிங் வி.வி.பி.எம்.செல்வராஜின் சகோதரியும், மதுரை காமரா ஜர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் டாக்டர் எஸ்.பிரவின் குமாரின் அத்தையுமான ஆர்.ராஜேஸ்வரி நேற்று (23-ந்தேதி, திங்கட் கிழமை) மதியம் 12 மணியளவில் காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் உறவினர்கள் அஞ்ச லிக்காக மதுரை காக்கா தோப்பில் சுப்புராயன் அக்ராயம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக் கப்பட்டுள்ளது. இதில் மறைந்த ஆர்.ராேஜஸ்வரியி ன் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட் சியினர், கல்வியாளர்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    மறைந்த ஆர்.ராஜேஸ்வ ரியின் இறுதிச்சடங்கு இன்று (24-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 

    • ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி கொலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு.
    • குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்

    இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • இறந்ததாக நினைத்து இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
    • டாக்டர் வந்து பரிசோதனை செய்துபார்த்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது.

    மத்திய பிரதேசத்தில் இறந்ததாக நினைத்த நபர் இறுதிச்சடங்கு செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30ம் தேதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர். அவருக்கு இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    மாலை போட்டு அஞ்சலி செலுத்தியபோது திடீரென அவர் கண்விழித்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் பயந்து அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். உடனே டாக்டருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டார். அவர் வந்து மாலையும் கழுத்துமாக அசைவற்று கிடந்த ஜீது பிரஜாபதியை பரிசோதனை செய்துபார்த்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தி உள்ளார். உடனடியாக மேல் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று இறந்ததாக நினைத்த நபர் உயிருடன் எழுந்த நிகழ்வுகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. 

    • தமிழ் உள்பட பல மொழிகளில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
    • பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் இருதய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.

    சென்னை:

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. பல படங்களை டைரக்டு செய்துள்ளதோடு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    மனோபாலாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் இருதய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் மனோபாலா நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. இவரது சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள மரும்பூர். மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.

    மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவர் இறந்த தகவல் அறிந்ததும் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மனோபாலா உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கலைப்பிரிவு தலைவர் இயக்குனர் லியாகத் அலிகான் உள்ளிட்டோர் மனோபாலாவின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

    இதுதவிர திரையுலகினர் சார்பில் மனோபாலா உடலுக்கு நடிகர்கள் விஜய், ஆர்யா, சிவகுமார், மோகன், ராதாரவி, டெல்லிகணேஷ், ரமேஷ் கண்ணா, மோகன் ராமன், ஜெயபிரகாஷ், நடிகை வித்யுலேகா, இயக்குனர்கள் மணிரத்னம், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ், சேரன், நாஞ்சில் அன்பழகன், பேரரசு, தயாரிப்பாளர் முரளி ராமசாமி, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், கார்த்திக் ராஜா, கவிஞர் சினேகன் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர்கள் சார்லி, சரவணன், சம்பத் ராம், மதன் பாப், இசையமைப்பாளர் தினா, தாமு, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, ஏ.சி.சண்முகம், மன்சூர்அலிகான், கோவை சரளா, நடிகர் பாக்யராஜ் அவரது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோரும் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'பிரபல இயக்குனரும், நடிகருமான அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்'' என்று கூறியுள்ளார்.

    கஜினி, அரண்மனை, கலகலப்பு, தலைவா, பிகில், காஞ்சனா, வரலாறு, வாத்தியார், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆதவன், சிங்கம், சிறுத்தை, நண்பன், சகுனி, அரண்மனை உள்ளிட்ட படங்களில் மனோபாலாவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. தமிழ் உள்பட பல மொழிகளில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

    1982-ம் ஆண்டு கார்த்திக் நடித்த ஆகாய கங்கை படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார். நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, டிசம்பர் 31, சிறை பறவை, தூரத்து பச்சை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான், மூடுமந்திரம், மல்லுவேட்டி மைனர், வெற்றிப்படிகள், பாரம்பரியம், கருப்பு வெள்ளை, அன்னை உள்பட 24 படங்களை டைரக்டு செய்துள்ளார்.

    1987-ல் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் படத்தையும் மனோபாலா இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.

    தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார். எச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை, பாபிசிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.

    அனைத்து நடிகர், நடிகைகளுடன் நட்புறவோடு பழகினார். நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

    மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.

    • அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார்.
    • தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலிதொழிலாளி. இவருக்கு கவுண்டமணி (30), செந்தில் (28) என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சுப்பிரமணி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தந்தை காணாமல் போன நிலையில் கடந்த 3 நாட்களாக கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சுப்பிரமணியை பல இடங்களில் தேடி உள்ளனர்.

    சுப்பிரமணியின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் புதுச்சேரியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடிச் சென்றனர்.

    இதற்கிடையே கள்ளக் குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் முதியவர் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இது குறித்து தியாகதுருகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அங்கு வந்த தியாகதுருகம் வனத்துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த முதியவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடையாளம் காண முயற்சி செய்தனர். கிட்டத்தட்ட காணாமல் போன சுப்பிரமணியின் உருவமும் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடல் அமைப்பும் ஒரே மாதிரி இருந்ததால் தியாகதுருகம் வனப்பகுதியில் கிடந்த பிணம், தனது தந்தை தான் என முடிவு செய்த கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை காட்டுப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எலவனாசூர்கோட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

    தந்தை உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு அவர்கள் தகவல் சொல்லவே, இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கினார்கள்.

    தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்ற நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க எலவனா சூர்கோட்டைக்கு சென்றார்.

    அப்போது கடைவீதியில் முதியவர் சுப்பிரமணி நடந்து வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியின் உறவினர் நீ இறந்துவிட்டதாக கூறி உனது மகன்கள் அங்கே பிணத்தை வைத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

    இதில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார். கதையில் மிகப்பெரிய திருப்பமாக சுப்பிரமணி மீண்டும் உயிரோடு வந்ததை பார்த்து கவுண்டமணி, செந்தில் அதிர்ச்சி அடைந்த னர். இந்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.
    • சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும், அமெரிக்க அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் தனி விமானத்தில் புறப்பட்ட அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார். இதேபோல், இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ள நிலையில், பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகள் மட்டுமின்றி பூங்காக்கள், சதுரங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் சடங்கு நிகழ்வுக்கான காட்சிகளை காண்பிக்க திரைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது.

    வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்படும் என்று கலாச்சாரத் துறை அறிவித்துள்ளது.

    1997-ல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உள்பட சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றின் பிற முக்கிய நிகழ்வுகளை விட கூட்டம் அதிகம் இருக்கும் எனவும் இறுதிச்சடங்கிற்கு அரசாங்கம் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.

    • பாஞ்சாலை யின் மாமியார் இறந்து இறந்துவிட்டதாக வேல்முரு கனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சொர்க்க ரதம் வாகனம் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் வந்து அயோத்தி என்பவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    விருத்தாசலம் மாவட்டம் சின்ன பரூர் தாலுக்கா புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அயோத்தி (வயது 67). இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும் பாஞ்சாலை என்ற மகளும் உள்ளனர் பாஞ்சாலையை மேலூர் கிராமத்தில் சேர்ந்தவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் பாஞ்சாலை யின் மாமியார் இறந்து இறந்துவிட்டதாக வேல்முரு கனுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. பாஞ்சாலை யின் இறுதி சடங்கில் பங்கேற்ப தற்காக மேலூர் வந்துள்ளார். பிறகு பாஞ்சாலையின் இறுதி சடங்கு முடித்துவிட்டு மேலூரில் இருந்து இந்திலி செல்லும் சாலையில் முருகா பாலிடெக்னிக் அருகே இடது ஓரமாக நடந்து சென்றுள்ளார்.

    அதே திசையில் வந்த சொர்க்க ரதம் வாகனம் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் வந்து அயோத்தி என்பவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு அதிக அளவில் காயம் ஏற்பட்டது இதனால் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் பொது மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 11ஆம் தேதி அன்று பரிதாபமாக இறந்தார். வேல்முருகன் கொடுத்த புகாரில் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    பணியில் பிஸியாக இருந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத மகள், அஸ்தியை கொரியரில் கேட்டு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக இறுதிச்சடங்கை பார்த்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அருகே உள்ள மனோர் கிராமத்தை சேர்ந்த நீராபாய் படேலின் மனைவி தீரஜ் படேல் உடல்நலக்குறைவால் சமீபத்தில் இறந்துள்ளார். தாய் இறந்த செய்தியை குஜராத்தில் வசிக்கும் மகளிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

    அதற்கு தான் வேலையில் ரொம்ப பிஸியாக இருப்பதால் ஊருக்கு வர முடியாது என மகள் பதில் கூறியுள்ளார். அதோடு வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தாயின் முகத்தை காட்டுமாறும் ஊரில் இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அதே போல தாய்க்கு நடந்த இறுதிச் சடங்கை அவர் வாட்ஸ் அப்பிலேயே பார்த்தார்.

    அவரது இந்த நடவடிக்கையால், ஊர் மக்கள் கடும் கோபமடைந்தனர். இதனிடையே, இறுதிச் சடங்கில் தான் பங்கேற்க முடியவில்லை, அஸ்தி கரைப்பதற்காக வர வேண்டும் என்று அவர்கள் அழைத்துள்ளனர். அதற்கு அவர், அஸ்தியை கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று பதில் கூறியுள்ளார்.

    இதனை அடுத்து தாயின் உடலை தகனம் செய்த கிராம மக்களே, அவரது அஸ்தியையும் மகளுக்கு கேட்டதுபோல கொரியரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
    ×